என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kamalhassan"

    • இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.
    • டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி..

    இந்திய திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    "எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்

    எல்லாரும் இந்திய மக்கள்,

    எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை

    எல்லாரும் இந்நாட்டு மன்னர்"- என அனைவரையும் உள்ளடக்கிய வலிமையான இந்தியாவைக் கனவு கண்ட மகத்தான கவிஞன் பாரதியின் பிறந்த நாள் இன்று.

    டிசம்பர் குளிரில் இந்தியத் திருநாட்டின் நாடாளுமன்ற வளாகத்தில் நின்றபடி மகாகவியின் சொற்களை மனதில் ஏந்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.
    • பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யாக கமல்ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்," தமிழ்நாடு துணை முதல்வர், எப்போதும் இனியவர், என் அன்பிற்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் நீடு வாழ்க.

    பொன்றாப் புகழுடனும் குன்றாப் பெருமையோடும் நிலைத்து வளர்க" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி கமல்ஹாசன் இன்று மாலை நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இததுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் புகைப்படங்களுடன் நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    • ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார்.
    • 1997ல் ரஜினிகாந்தின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கியவர் சுந்தர்.சி.

    தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினர்.

    அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

    கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் முதல் படமாக இது அமைய உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவங்கவுள்ளது. இந்நிலையில் படத்தின் துவக்கம் தொடர்பாக ரஜினி- கமல் - சுந்தர்.சி சந்தித்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

    இப்படம் 2027 பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    1997ல் ரஜினிகாந்தின் 'அருணாச்சலம்' படத்தை இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கமல் ஹாசனின் அன்பே சிவம் படத்தையும் சுந்தர் சி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான்.
    • பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.

    நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துள்ளார்.

    இதுதொடர்பாக கமல்ஹாசன் வௌயிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான். பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர்.

    பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.

    தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி.

    நீடு வாழ்க இளவல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியானது. பின்னர் கமல்ஹாசனும் ரஜினிகாந்தும் இதை உறுதிப்படுத்தினார்.

    ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் இயக்குவார் என்று தகவல் வெளியானது. இப்படத்தின் கதையை எழுதுவதற்கு நெல்சனுக்கு நேரம் தேவைப்படுவதால் 2027 இல் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை கமல்ஹாசனே தயாரிப்பார் என்று சொல்லப்பட்டது.

    இதற்கிடையே, ரஜினி- கமல் கூட்டணியில் வெளியாக இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

     அதன்படி, ரஜினியின் 173வது படத்தை இயக்குநர் சுந்தர் சி இயக்கவுள்ளார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

    இத்தகவலை ராஜ்கமல் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ரஜினி- கமல்- சுந்தர் சி கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் அறிவிப்பு ரசிகர்களை குதூகலப்படுத்தி உள்ளது.

    1997ல் ரஜினிகாந்தை முதல் முறையாக 'அருணாச்சலம்' படத்திற்காக இயக்கிய சுந்தர்.சி. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினியின் 173வது படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

     

    • நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
    • மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று, தவெக சார்பில் நடைபெற்ற விஜயின் பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 41 பேர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சென்று சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

    • முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம்.
    • இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெற்றது.

    தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக கடந்த சனிக்கிழமை அன்று திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.

    நேற்று இரண்டாவது கட்ட பிரசாரம் நாகை மற்றும் திருவாரூரில் நடைபெற்றது.

    அப்போது பேசிய விஜய்," இந்த கூட்டம் ஓட்டாக மாறாது என்கிறார்கள். அப்படியா..?" என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.

    இந்நிலையில், விஜயின் பரப்புரை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

    அப்போது அவர் கூறுகையில்," கூடும் கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. அது விஜய்க்கு மட்டும் அல்ல, எனக்கும் பொருந்தும்.

    நல்ல பாதையில் செல்ல வேண்டும், தைரியமாக முன்னேறுங்கள், மக்களுக்காக செய்யுங்கள்" என விஜய்க்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கியுள்ளார்.

    • இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
    • 'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு குறைவு.

    இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.

    இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

    இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு மக்களிடம் இருந்து நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது.

    இந்தியன் 2 திரைப்படத்தின் முடிவில் இந்தியன் 3 திரைப்படத்திற்கான டிரெய்லர் இடம் பெற்றிருக்கும். இந்த எதிர்மறை கருத்தினால் இந்தியன் 3 திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள், திரையரங்கில் வெளியாக வாய்பில்லை போன்ற செய்திகள் பரவின.

    இந்நிலையில், இந்தியன் 3 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் 'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது.

    மேலும், லைகா நிறுவனம் இப்படத்தில் இருந்து பின்வாங்கியதாகவும், Netflix தங்களது ஒப்பந்தத்தை திரும்பப்பெற்றுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இந்தியன் 3 கைவிடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    • ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம் பிடித்த பிறகே நான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்.
    • பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நலன்கருதி தவெக ஆட்சி செயல்படும் என்றார்.

    மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது அவர் கொள்கை எதிரி , அரசியல் எதிரி என நேரடியாக திமு.க மற்றும் பா.ஜ.க வை விமர்சித்து பேசினார். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நலன்கருதி அவரது ஆட்சி செயல்படும் என கூறினார்.

    மேலும்," அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரே வரவில்லை. இவர் எங்கு வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம் பிடித்த பிறகே நான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்" என கூறினார்.

    இந்த வாக்கியம் அரசியலுக்கு வருவேன் என வராமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், மார்கெட் இல்லாமல் அடைக்களம் தேடி வந்தவர் என கூறியது நடிகர் கமல்ஹாசனை குறிப்பிட்டு பேசினாரா? என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடிகரும், எம்.பி.,யுமான கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த கமல்," அவர் என் பெயரை சொன்னாரா? அல்லது வேறு யார் பெயரையாவது சொன்னாரா? அட்ரெஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா?" என்றார்.

    • பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டுமென முதலில் கூறியது எங்கள் கட்சி தான்.
    • சாதிதான் என்னுடைய முதல் எதிரி என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் விழா, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடந்தது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசியதாவது:

    திருமாவளவனின் 40 ஆண்டு கால அரசியல் வாழ்வு சாதாரணமானது அல்ல. அதில் பல தழும்புகள் இருக்கிறது. சாதி பிரிவினைகள் தான் இந்தியாவின் பலவீனமாக உள்ளது. சாதியை நீக்கினால் தான் நாம் ஒரே தேசமாக, ஒரே மக்களாக இணைய முடியும். ஒடுக்கப்பட்ட மக்களை அரசியல்மயப்படுத்துவது எளிதான காரியம் அல்ல.

    அவர்களை அரசியல் மயப்படுத்தும் நபர்கள் அற்புதமானவர்கள். அவர்கள் அடிக்கடி வரமாட்டார்கள். அவர்கள் களத்திற்கு வரும்போது நீங்கள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். ஒரு கட்சியை ஆரம்பித்து அங்கீகாரம் வாங்குவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு தெரியும். அரசியலில் அங்கீகாரம் பெறுவதே சிரமம்.

    என்னுடைய சாதியை சொல்லி என்னை கிண்டல் செய்வார்கள். எனவே, சாதி தான் என்னுடைய முதல் எதிரி. என்னுடைய எதிரி யார் என்று கேட்பவர்களிடம் இதை தான் பதிலாக சொல்கிறேன். பிறப்பினால் நாம் யாருக்கும் தாழ்ந்தவர் இல்லை. நம்மை விட உயர்ந்தவர் யாரும் இல்லை.

    ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தை வைத்துத்தான் அளவிட முடியும் என அம்பேத்கர் கூறியுள்ளார். பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுக்க வேண்டுமென முதலில் கூறியது எங்கள் கட்சி தான் என தெரிவித்தார்.

    • அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சியான தருணம்.
    • கல்வி என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் வாழும் சான்றுகள்.

    நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் நற்பணிகளையும், சாதனைகளையும் பாராட்டி, எம்.பி. கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

    சூர்யா, ஜோதிகா, கார்த்தி, பிருந்தா, உங்கள் மதிப்பிற்குரிய தந்தை சிவகுமார் அண்ணா மற்றும் தாய் லட்சுமி அண்ணி ஆகியோர் எல்லா வகையிலும் எனது பெரிய குடும்பத்தின் ஒரு பகுதியினர்.

    அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டு விழாவில் பங்கேற்றது என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்த மகிழ்ச்சியான தருணம்.

    அகரமிலிருந்து வெளிவரும் மருத்துவர்கள், புதுமைப்பித்தர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் வெறும் தனிப்பட்ட வெற்றிகள் மட்டுமல்ல, இரக்கம் மற்றும் பொது சேவை உணர்வால் வளர்க்கப்படும் போது கல்வி என்ன சாதிக்க முடியும் என்பதற்கு அவர்கள் வாழும் சான்றுகள்.

    நீங்களும் அகரமில் உள்ள குழுவும் ஒரு அமைதியான புரட்சியை ஏற்படுத்தி, ஒரு குழந்தையை, ஒரு கனவை, ஒரு நேரத்தில் வளர்த்து வருகிறீர்கள்.

    உங்கள் அறக்கட்டளையின் பணி முணுமுணுப்புகளில் அளவிடப்படாது, ஆனால் அது தூண்டிய நீடித்த மாற்றங்களில் அளவிடப்படும்.

    அகரம் மூலம் அதிகாரம் பெற்ற ஒவ்வொரு குழந்தையும் குணமடையவும், சமூகங்களை வழிநடத்தவும், எண்ணற்ற பிறரை உயர்த்தவும், வரவிருக்கும் தலைமுறைகளில் மாற்றத்தின் அலைகளை உருவாக்கவும் திறனைக் கொண்டுள்ளன.

    உங்கள் முயற்சிகள் நீதியான மற்றும் முற்போக்கான இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்துகின்றன. கல்வியின் ஒளி, உறுதியான கைகளில் வைக்கப்படுவதால், பிறப்பு மற்றும் சூழ்நிலையின் வேரூன்றிய தடைகளை எவ்வாறு கலைக்க முடியும் என்பதை அவை நிரூபிக்கின்றன.

    வெறும் உயிர்வாழ்வைத் தாண்டி கனவு காண பலத்தையும், கண்ணியம், நோக்கம் மற்றும் சிறப்பைத் தொடர தைரியத்தையும் நீங்கள் பலருக்கு வழங்கியுள்ளீர்கள்.

    உங்கள் லட்சியத்திலும் உறுதியிலும் உங்கள் உறவினராக, மக்களின் பிரதிநிதியாக, இந்த குடியரசின் சக குடிமகனாக, இந்த உன்னத முயற்சியில் நான் எப்போதும் உங்கள் சேவையில் இருக்கிறேன். நம் அன்பான தமிழ்நாடு மாநிலம் உங்கள் மீது பொழிந்த அன்பை உங்கள் குடும்பம் கனத்த குரலில் திருப்பி அனுப்பியுள்ளது.

    நிச்சயமாக, காலத்தின் முழுமையிலும், உங்கள் பெயர் திரைகளிலும் மேடைகளிலும் ஒளிரும் அதே வேளையில், நீங்கள் உயர்த்தியவர்களின் அமைதியான வெற்றிகளில், நீங்கள் ஏற்றி வைத்த ஒளியை முன்னோக்கிச் செல்லும் தலைமுறைகளில் அது இன்னும் நிலையாக பிரகாசித்தது என்று சொல்லப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நான் ஒரு சமூகத்திற்காக அல்ல, பொது நன்மைக்காகப் பேசுவேன்.
    • டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன்.

    திமுக கூட்டணி சார்பில் தேர்வான மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் மாநிலங்களவையில் எம்.பி.யாக தமிழில் பதவியேற்றார்.

    பதவியேற்றுக் கொண்டு கமல்ஹாசன் உறுப்பினர் பதவியேற்பு ஆவணங்களில் கையெழுத்திட்டார்.

    கமல்ஹாசன் எம்.பி பதவியேற்ற நிலையில், எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது-

    நமது நாட்டை பிரிவினை ஆபத்துகளில் இருந்து மீட்க வேண்டும்.

    எம்.பி என்ற இந்த அத்தியாயத்தை ஒரு முடிவாக அல்ல, ஒரு தொடக்கமாகவே தொடங்குகிறேன்.

    அரசமைப்பின் மீதான மரியாதையுடன், ஜனநாயகம் மீதான நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

    நான் ஒரு சமூகத்திற்காக அல்ல, பொது நன்மைக்காகப் பேசுவேன்.

    அரசியலமைப்பின்படி மனசாட்சியுடன் சேவை செய்வதற்கு ஒரு உறுதியான சபதம் எடுத்துள்ளேன்.

    டெல்லியில் தமிழ்நாட்டின் உறுதியான குரலாக ஒலிக்க பாடுபடுவேன்.

    குறுகிய ஆதாயத்திற்காக அல்லாமல் தேசிய வளர்ச்சிக்காக பாடுபடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×