என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makkal Needi Maiam"

    • நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
    • மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று, தவெக சார்பில் நடைபெற்ற விஜயின் பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 41 பேர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சென்று சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

    • உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்பது அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபடுவதே ஆகும்.
    • சரியான கேள்விகளை கேட்பது முக்கியமான பல பதில்களுக்கு வழி வகுத்துள்ளது.

    சென்னை:

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசிய பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உதயநிதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:- உண்மையான ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு என்பது அதன் குடிமக்கள் கருத்து வேறுபாடு மற்றும் விவாதத்தில் ஈடுபடுவதே ஆகும். சரியான கேள்விகளை கேட்பது முக்கியமான பல பதில்களுக்கு வழி வகுத்துள்ளது. சனாதனத்தை பற்றி கருத்துக் கூற உதயநிதிக்கு உரிமை உள்ளது. அந்த கருத்துடன் உடன்படாதவர்கள் விவாதத்தில் ஈடுபடலாம்.

    ஆனால் அவரது வார்த்தைகளை திரித்து கூறி அரசியல் ஆதாயத்துக்காக அச்சுறுத்தி மிரட்டல் விடுப்பது சரியானது அல்ல. இணக்கமான சமூகத்தை வளர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமான விவாதங்களை ஏற்றுக்கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×