என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர்"

    • விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
    • கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

    கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.

    சிபிஐ விசாரணைக்காக மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் நேரில் ஆஜராகியுள்ளனர்.

    கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.

    கரூரில் நடைபெற்ற தாவெக கூட்டத்தில் விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

    விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என மின்வாரியம் தரப்பில் கூறியிருந்தது.

    இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்.
    • ரூ.20 லட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27-ந்தேதி நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினரை பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

    த.வெ.க. சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். மேலும், அவர்களது குடும்பத்தினரை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். அப்போது விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திப்பதாகவும் கூறினார்.

    இதனையடுத்து கடந்த 17-ந் தேதி விஜய் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நிவாரண தொகை வழங்குவதாக கூறப்பட்டது. ஆனால் அந்த சந்திப்பானது நடைபெறவில்லை. இதனிடையே கடந்த 18-ந்தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.20 லட்சம் நிவாரண தொகையானது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனால் கரூருக்கு எப்போது சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டது. ஆனால், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் சந்திப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

    இதனிடையே, த.வெ.க. தலைவர் விஜய் விரைவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, அவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் தெரிவித்து, அவர்களை அழைப்பதற்காக த.வெ.க. நிர்வாகிகள் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேற்று நேரில் சென்றுள்ளனர்.

    பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விரைவில் சென்னைக்கு சென்று விஜய்யை சந்திக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், இந்த சந்திப்பு நிகழ்ச்சியின் தேதியானது விரைவில் தெரிவிக்கப்படும் எனவும், போக்குவரத்து ஏற்பாடுகள் த.வெ.க. சார்பில் செய்து தரப்படும் எனவும் த.வெ.க. நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்பட்டது.

    கரூரில் நெரிசலில் சிக்கி இறந்த 41 பேரின் குடும்பத்தினரை மொத்தமாக நாளை மறுநாள் மாமல்லபுரத்துக்கு வரவழைத்து த.வெ.க. தலைவர் விஜய் சந்தித்து ஆறுதல் கூற உள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது சந்திப்பு திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் கரூர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களையும் 41 அறைகளில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும், பின்னர், விஜய் ஒவ்வொரு அறைக்கும் சென்று அவர்களை தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்காக, தவெக நிர்வாகிகள் தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.
    • ரூ.20 லட்சத்தை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயரிழிந்தனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதன்படி, கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய், "அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாக சந்திப்போம்" என தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விஜய் மேலும் கூறியதாவது:-

    கரூர் மக்களை சந்திக்க சட்டரீதியான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறோம். அனுமதி கிடைத்ததும் கரூர் மக்களை நிச்சயமாகச் சந்திப்போம்.

    நாம் அறிவித்தபடி குடும்பநல நிதியாக ரூ.20 லட்சத்தை ஆர்டிஜிஎஸ் வழியாக அனுப்பி வைத்துள்ளோம். ரூ.20 லட்சத்தை நமது உதவிக்கரமாக ஏற்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

    கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வினால் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். குடும்ப உறவுகளை இழந்து தவிப்பவர்களுக்கு ஆறுதலாகவும், ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம்.

    இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

    கரூரில் விஜய் பங்கேற்ற த.வெ.க. பரப்புரைக் கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயரிழிந்தனர். உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தவெக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக வெற்றிக் கழகம் இழப்பீடு வழங்கியது.

    அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தவெக சார்பில் தலா ரூ.20 லட்சம் அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.

    • தவெக சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும்.
    • 41 பேரில் படங்களுக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி.

    கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடத்த வேண்டும் என விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், 41 பேரில் படங்களுக்கு மலர்தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    • எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார்.
    • ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.

    திருவண்ணாமலையில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக் பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க கூட்டணிக்கு விஜய் வருவது என்பது நடக்காத காரியம். தமிழக உரிமையை விட்டுக்கொடுக்க கூடாது என்பதற்காக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு மற்றும் கரூரில் 41 பேர் உயிரிழந்த வழக்கு ஆகியவற்றை சி.பி.ஜ விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    தமிழக போலீஸ்துறை மீது உள்ள நம்பிக்கை போய்விடக் கூடாது என்பதற்காக சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.

    தி.மு.க ஆட்சி மட்டும் அல்ல தமிழகத்தில் எந்த ஆட்சி நடந்தாலும் சி.பி.ஐ விசாரணைக்கு எதிராக மனு செய்திருப்பார்கள். இந்த கருத்தை சொல்வதால் நான் தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிடுவேன் என நீங்கள் கருத வேண்டாம். கரூர் சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சதித்திட்டம் தீட்டி இருக்க வாய்ப்பு இல்லை.

    இதுபோன்ற கொடூர எண்ணம் செந்தில் பாலாஜிக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி தனக்கு தானே புரட்சி தமிழர் என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டிருக்கிறார். அ.தி.மு.க.வில் பொறுப்பில் உள்ளவர்கள் எல்லாம் எடப்பாடி பழனிசாமியின் பயனாளிகள்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையும். டாஸ்மாக் மூலம் 22 ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாடு அரசு ஊழல் செய்துள்ளது என குற்றம்சாட்டும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நீதிமன்றத்துக்கு செல்லாமல் ஊர், ஊராக சென்று பேசுவது ஏன்? ஊழலை பற்றி பேச எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
    • மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 27ம் தேதி அன்று, தவெக சார்பில் நடைபெற்ற விஜயின் பரப்புரையின்போது கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனார்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    நீதிமன்றங்களில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், 41 பேர் உயிரிழந்த கரூர் வேலுச்சாமிபரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவரும் எம்பியுமான கமல்ஹாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் சென்று சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.

    • மக்களை கூட்ட பகுதிக்கு அனுமதித்தது ஏன்? அப்படி அனுமதித்து நெரிசலை ஏற்படுத்தியது ஏன் ?
    • மக்கள் பல மணி நேரமாக நின்றிருந்ததால் குழந்தைகள் மயக்கம் அடைந்ததாக கூறுகிறார்.

    கரூர் துயர சம்பவம் விபத்து அல்ல என பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி அவரது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 27ஆம் தேதி நடந்த கரூர் துயரத்திற்கு காரணமான ஸ்டாலின் அரசை கண்டிக்க திராணியில்லாமல் ஏதோ இந்த சம்பவத்தில் அரசுக்கு தொடர்பே இல்லை என்பது போல பக்கவாத்தியம் வாசிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஊடகங்களுக்கும், அக்டோபர் 4ஆம் தேதி இந்து பத்திரிக்கையில் 'In Karur Where there was no way out' என்ற தலைப்பில் வெளியான செய்தியை கண்டிப்பாக படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த செய்தியில் என்ன சொல்லப்பட்டுள்ளது?

    "Many residents insist that the disaster was neither accidental nor unforeseen and that it was the outcome of poor planning and official neglect"

    அதாவது "கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ, கூற முடியாது. சரியாக திட்டமிட தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறையாளும் ஏற்பட்டது" என அப்பகுதி மக்கள் கூறியதாக செய்தி கூறுகிறது.

    'இந்த செய்தியில் இருந்து தெரிவது என்னவென்றால், இந்த நிகழ்வை அரசு முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கையாண்டிருந்தால் இந்த துயரச் சம்பவத்தை தடுத்திருக்க முடியும் என்பது தானே'.

    மேலும் இந்தச் செய்தியில் கூறுவது 'கடந்த சனிக்கிழமை காலை 10 மணிக்கே பலர் வந்துவிட்டனர்.

    மதியம் 3:00 மணிக்கு யாரும் சாலையில் வாகனங்களில் போக முடியவில்லை. மாலை அப்பகுதியில் திரும்ப கூட இடமில்லை' என அப்பகுதியில் வசிக்கும் திரு. சீதாராம் என்பவர் தெரிவித்ததாக சொல்லப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பல மணி நேரம் தாமதம் ஏற்பட்ட நிலையில் மேலும், மேலும் மக்களை கூட்ட பகுதிக்கு அனுமதித்தது ஏன்? அப்படி அனுமதித்து நெரிசலை ஏற்படுத்தியது ஏன் ? என்ற பல கேள்விகள் அரசு நிர்வாகத்தின் மீது எழுவது நியாயம் தானே.

    இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட லில்லி' என்பவர் கூறும் போது, விஜய் பேச ஆரம்பித்தவுடன் மின்தடை ஏற்பட்டதாகவும், மைக் வேலை செய்யவில்லை என்றும், கூட்டம் அமைதியிழந்தது என்றும், அந்த நெரிசலில் இரண்டு குழந்தைகளுடன் கீழே விழுந்துவிட்டதாகவும் கூறுகிறார்.

    லில்லி என்பவர் கூறியதில் உண்மை இல்லை என்று கூறிவிடமுடியாது. அப்பகுதியில் வசிக்கும் சித்ரா என்பவர் மக்கள் பல மணி நேரமாக நின்றிருந்ததால் குழந்தைகள் மயக்கம் அடைந்ததாக கூறுகிறார்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழா ஏற்பாட்டாளர்களிடம் ஏன் கேட்கப்படவில்லை. ஜெனரேட்டராலோ, மின்துறை மூலமோ, மின்தடை ஏற்பட்டாலும், கூட்டம் பதட்டம் அடையத்தானே செய்யும். இதுபோன்ற நிகழ்வுகளுக்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட்டம் போட்டாரா?

    இதில் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் பற்றி விவாதிக்கப்பட்டதா? இது பற்றி எந்த விபரமும் இல்லை. இது பற்றியெல்லாம் எந்த பாதுகாப்பு திட்டமும் இல்லை என்றால், இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டும் என ஆளும் கட்சி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழத்தானே செய்யும்.

    எல்லாவற்றிற்கும் மேலாக அனுமதிக்கப்பட்ட இடம் 10,000 பேர் மட்டுமே கூட வசதியுள்ள நிலையில், 25,000 மக்கள் கூடுவதை காவல்துறை ஏன் தடுக்கவில்லை? மக்கள் அதிக அளவு கூடுவதை காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை ஏன் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது.

    இந்தச் செய்தியில் ஈரோட்டில் இருந்து வந்து உயிர் தப்பிய கார்த்திக் என்பவர் கூறுவது 'ஒரு சில காவலர்களே சாலையோரம் நின்று இருந்தனர். பல காவலர்கள் வெளி வளையத்தில் போக்குவரத்தை சரி செய்தனர். 10 முதல் 15 காவலர்கள் வரை மட்டுமே வாகனத்தை ஒட்டியும், முன்னும் நடந்து வந்தனர். அதிக அளவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருந்திருந்தால், இந்த துயர சம்பவம் தவிர்த்திருக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

    எனவே கள நிலவரப்படி கூட்ட இடத்தில் போதுமான காவலர்களை கொண்டு ஆரம்பம் முதலே கூட்டத்தை ஒழுங்குப்படுத்த அரசு தவறிவிட்டது என்பது தான் இதன் பொருள். மேலும் விஜய் வாகனத்தை கூட்ட நெரிசலில் காவலர்கள் உள்ளே கொண்டு வரவும் அதை பாதுகாக்கவும் காட்டிய அக்கறையில் பொதுமக்களை பாதுகாப்பதில் காட்டவில்லை என்பது தானே இதன் மூலம் தெரிகிறது.

    ஆனால் கூடுதல் காவல்துறை தலைவர் தேவ ஆசீர்வாதம் 20 நபர்களுக்கு ஒரு காவலர் போடப்பட்டதாக கூறுகிறார். இது ஒரு வேலை norms ஆக இருக்கலாம். ஏனெனில் 500 காவலர்கள் பாதுகாப்பில் இருந்ததாக ஆரம்பத்தில் இவர் கூறினார். அதன் பிறகு எண்ணிக்கையை அவர் குறிப்பிடவேயில்லை.

    மேலும் உண்மையில் எவ்வளவு காவலர்கள் கூட்ட நிகழ்வுக்கு பணியமர்தப்பட்டனர் என்பதை ஏன் வெளிப்படையாக கூறவில்லை. இந்தச் சம்பவ நிகழ்வின் போட்டோக்களிலும், வீடியோக்களிலும் குறிப்பாக கூட்டம் நடந்த இடத்தில் அதிகமாக காவலர்கள் காணப்படவில்லை என்று தான் மக்கள் பேசுகின்றனர். இது எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களாலும், சம்பவ இடத்தில் இருந்தவர்களாலும் கூறப்படும் உண்மைகள். இவற்றை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

    இந்த துயர சம்பவத்திற்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திட தவறிய மாநில அரசின் தவறுகளை மறைத்து இந்த அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்க வாத்தியங்கள் இந்த செய்தியை மீண்டும் படித்து உண்மையை உணர்ந்து நடுநிலையோடு பேச வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதில் குளறுபடி செய்த அரசின் நடவடிக்கைகளை, ஒரு நபர் விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • விசாரணை முடிந்த பின்பு இறுதி அறிக்கையில் என்ன வருகின்றது என்பதை பார்த்து பேசுவோம்.
    • டிசம்பரில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஏன் முன்கூட்டியே நடத்தினீர்கள் என பல கேள்விகள் உள்ளது.

    கோவையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    கரூர் சம்பவம் தொடர்பாக அரசின் சார்பில் முழு விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மாவட்டத்தில் நடந்த நிகழ்வு குறித்து, கரூரிலிருந்து நான் முழு விளக்கம் கொடுத்துள்ளேன். தற்போது இது தொடர்பாக எஸ்.ஐ.டி. நிறுவப்பட்டு, விசாரணை சென்று கொண்டிருக்கிறது.

    விசாரணை முடிந்த பின்பு இறுதி அறிக்கையில் என்ன வருகின்றது என்பதை பார்த்து பேசுவோம். அதுதான் சரியாக இருக்கும்.

    உங்களைப் போன்ற ஒரு பத்திரிகையாளரிடம் நான் கேட்டேன். அரசின் மீது கேட்கக்கூடிய கேள்விகள், இன்னொரு பக்கம் ஏன் திரும்பி போகவில்லை என்று கேட்டேன். அதனை தான் உங்களிடமும் கூறுகிறேன். யாரை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறதோ, அதை நீங்கள் தவிர்த்து விடுகிறீர்கள். நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.

    ஏன் 2 மணி நேரம் லேட் ஆக வந்தீர்கள். 500 மீட்டருக்கு முன்பாக ஸ்கிரீன் போட்டு லைட்டை ஏன் ஆப் செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். 12 மணிக்கு அறிவித்துவிட்டு ஏன் 7 மணிக்கு வந்தீர்கள்.

    டிசம்பரில் நடத்த வேண்டிய கூட்டத்தை ஏன் முன்கூட்டியே நடத்தினீர்கள் என பல கேள்விகள் உள்ளது. இதெல்லாம் பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வருவதில்லை விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதில்லை.

    யாரை நோக்கி நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இருக்கிறதோ அதை எல்லாம் தவிர்த்து விடுகிறீர்கள். ஒரு கணம் நீங்களே உங்களை சுய பரிசோதனை செய்து பாருங்கள்.

    எதார்த்த சூழ்நிலையை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நம்மிடம் இருக்கிறது. என்ன நடந்தது?. எப்படி நடந்தது?. இதில் யாரெல்லாம் இருக்கிறார்கள். ஒரு கேள்வி என்னிடம் கேட்டால் எதிர் முகாமிலும் ஒரு கேள்வி கேட்க வேண்டும் அல்லவா?.

    அதற்கு கேள்விகள் வந்தால் பரவாயில்லை. ஒரே தரப்பில் உங்களுடைய கேள்விகள் இருக்கிறது. கரூர் சம்பவம் சம்பந்தமாக எந்த கேள்வியும் வேண்டாம். விசாரணை முடிந்த பின்பு அறிக்கை வந்த பிறகு மீண்டும் சந்திப்போம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் விமர்சிப்பதற்கு எந்த தடையும் இல்லை.
    • மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நிலையை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் மணப்பாறையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கரூர் சம்பவம் நடக்கக்கூடாத ஒன்று. ஆனால் அந்த சம்பவத்திற்கு விஜய் தான் தார்மீக பொறுப்பேற்றிருக்க வேண்டும். அந்த சம்பவத்தில் முதல்வர் உடனே கரூருக்கு சென்று அனைத்து விதமான பணிகளையும் துரிதப்படுத்தி னார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இந்த சம்பவத்தில் அரசியல் செய்கிறார்.

    எண்ணூர் சம்பவத்தில் புலம் பெயர்ந்த தொழி லாளர்கள் உயிரிழந்ததை நாங்கள் நேரில் சென்று பார்த்து சம்பவம் குறித்து கேட்டறிந்தோம். தொழி லாளர்கள் நலனில் அரசு அவர்களுக்கு தேவை யானவற்றை செய்து தர வேண்டும் என்று முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளோம். எங்கள் கூட்டணிக்குள் எந்த பிரிவும் இல்லை. கூட்டணியில் இருக்கும் தலைவர்கள் விமர்சிப்பதற்கு எந்த தடையும் இல்லை.

    கூட்டணியில் அவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆகவே கரூர் சம்பவத்தில் திருமாளவன் அவர் கருத்தை கூறி உள்ளார். இருப்பினும் எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது. 2026 தேர்தலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். கூட்டணிக்கு அப்பால் தேசம்-தேசத்தின் நலம் மீது நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

    விஜய் எந்த கூட்டணியில் இருந்தாலும் அந்த கூட்டணியை கண்டிப்பாக தோற்கடிப்போம். நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்டம் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளது. மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் இரட்டை ஆட்சி நிலையை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகின்றது.

    தனிப்பட்ட முறையில் கவர்னர் மீதோ, பா.ஜ.க. மீதோ எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. கவர்னர் என்கிற பதவியை வைத்துக் கொண்டு முதல்வரையே கடந்து செல்ல முயற்சிப்பது என்பது ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படுகின்ற பயங்கர தாக்குதல். இதை நாங்கள் எதிர்கிறோம். இதற்கு எதிராக தமிழக அரசு ஒரு போரை தொடுத்திருக்கிறது. அது ஜனநாயகத்திற்காக போர்.

    இதில் முதல்வருடன் துணை இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது மோசம், பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது.
    • தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை.

    பதவி வெறியில் கரூர் துயரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட கரூர் துயரம் குறித்து நிதானமாக பேசுகிறார், ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பதவி வெறியில் பேசுகிறார்.

    தலைகீழாக நின்றாலும் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வரமுடியாது, எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வர அமமுகவும் விடாது. கரூர் துயரத்தில் ஆளுங்கட்சியை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது மோசம், பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது.

    இபிஎஸ்-க்கு இணையாக பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை.

    கரூர் துயர சம்பவத்தை சதி என அண்ணாமலை கூறியது வருத்தம் அளிக்கிறது. வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமி பேசுவது அநாகரீகமாக தான் உள்ளது. கூட்டணி குறித்து பேசும் நேரமா இது.

    புரட்சி வெடிக்கும் என்ற தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் பதவி பொறுப்பற்றது. கரூர் விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதானமாக கையாளுகிறார்.

    கரூர் விவகாரத்தை முதலமைச்சர், காவல்துறை சரியாக கையாண்டுள்ளனர். எந்த தலைவனும் தனது கட்சி தொண்டன் இறப்பதை விரும்ப மாட்டார் என்ற முதல்வரின் கருத்து சரியே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் யார் என அடையாளம் காட்டிவிட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே உணர்த்திவிட்டது.

    கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கரூர் விபத்து மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு. இந்தக் கொடிய சம்பவம் தமிழ்ச் சமுதாயத்திற்கு உழைப்பவர் யார், தமிழ்ச் சமுதாயத்தைத் தமக்காக தவறான வழியில் அழைத்துச் செல்பவர்கள் யார் யார் என அடையாளம் காட்டிவிட்டது.

    இந்தியத் திருநாட்டில், தம்முடைய அயராத உழைப்பால் ஒவ்வொரு நாளும் பாடுபட்டு, புதிய புதிய திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தி தமிழ்நாட்டை "இந்திய அளவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு" எனும் புகழை நிலைநாட்டியுள்ள முதலமைச்சரை தமிழ்நாட்டு மக்கள் மனதாரப் பாராட்டி, வாழ்க வாழ்க என வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

    தீமை வந்தால் அதிலும் ஒரு நன்மை உண்டு. அந்தத் தீமைதான் நண்பர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அளந்து காட்டும் கருவியாகிறது என்று கலைஞர் ஒரு குறளுக்கு உரை வகுத்துள்ளார்.

    இந்தத் திருக்குறள், கரூர் பேரிடரின் மூலம், துன்பம் வருகின்றபோது, நம்மைக் கைவிடுவோர் யார்? நம்மைக் காப்பவர் யார்? காப்பவர் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல உலகுக்கே உணர்த்திவிட்டது.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×