என் மலர்
நீங்கள் தேடியது "மின்வாரிய அதிகாரிகள்"
- விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
- கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.
சிபிஐ விசாரணைக்காக மின்வாரிய அதிகாரிகள் 2 பேர் நேரில் ஆஜராகியுள்ளனர்.
கரூர் மின்வாரிய அதிகாரி கண்ணன் சிபிஐ முன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார்.
கரூரில் நடைபெற்ற தாவெக கூட்டத்தில் விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
விஜய் பேசி கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என மின்வாரியம் தரப்பில் கூறியிருந்தது.
இந்நிலையில், மின்வாரிய அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
- பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.
- கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு திருத்திய மின்வாகன கொள்கையை வெளியிட்டது. இதன்படி மின்வாகன உற்பத்தி துறையில், ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி மின்சார வாகனங்களுக்கு சாலை வரிவிலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி போன்ற சலுகைகளை இந்த ஆண்டு இறுதிவரை வழங்க அனுமதிக்கப்பட்டது.
மேலும் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மின்னேற்ற (சார்ஜிங்) நிலையங்கள், பொது மின்கல (பேட்டரி) மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் தனிநபர் மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும், போக்குவரத்து சேவைகளில் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் முதற்கட்டமாக 120 மின்சார பஸ்கள் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து இன்னும் புதிய பஸ்கள் வர இருக்கிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொது போக்குவரத்தில் ஆட்டோ, கார்கள் போன்ற சேவைகளில் மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்க நகரங்களில் பேட்டரி மாற்று நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
டெல்லி போன்ற நகரங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளோம்.
ஏற்கனவே தனியார் சார்ஜிங் நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரத்யேக குறைதீர் மையங்களும் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட உள்ளது.
- சீர்திருத்தம் என்ற அடிப்படையில் மின்வாரியத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன
திருப்பூர் :
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட உள்ளது.இதனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் மத்தியில், நிதிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சீர்திருத்தம் என்ற அடிப்படையில் மின்வாரியத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 1டி எனப்படும் சீர்த்திருத்தம், கட்டட உரிமையாளர், வாடிக்கையாளர்களை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நான்கிற்கும் அதிகமான வீடுகள், அறைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்கள், அந்த வீடுகள் அறைகளுக்கு போர்வெல் தண்ணீர் இறைத்து வழங்குவதற்கென பொதுவான இணைப்பு (காமன் சர்வீஸ்) என்ற பெயரில் கூடுதலாக ஒரு மின் இணைப்பு பெற்றிருப்பர். அந்த இணைப்புக்கான கட்டணம் வீட்டு இணைப்புக்குரிய கட்டணத்தின் அடிப்படையில் தான் வசூலிக்கப்பட்டு வந்தது.தற்போதைய மாற்றத்தின் அடிப்படையில் அந்த காமன் சர்வீஸ் 1டி என வகைப்படுத்தப்பட்டு, ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பழைய கட்டணத்தை விட 3 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் இந்த நடைமுறை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1டி மாற்றத்தால் காமன் சர்வீஸ்க்கான இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்தாகும்.மின் கட்டணம் உயரும்.மற்றபடி தனித்தனி மின் இணைப்பு பெற்று மோட்டார் உள்ளிட்ட மின் சார்ந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வருவோருக்கு உயர்த்தப்பட்ட வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணமே வசூலிக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றனர்.






