search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electricity Charges"

    • தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10:00 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது.
    • உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், மின்சார நிலை கட்டண உயர்வு, மற்றும் பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இது குறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ், முத்துரத்தினம், சுருளிவேல், ஸ்ரீகாந்த்,கோபிபழனியப்பன், கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது : -

    தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் "எல்.டி 111பி "என்ற மின் இணைப்பை பெற்று தொழில் செய்து வருகிறோம். எங்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள், மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார் ஜெனரேட்டர் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் எங்களிடம் இல்லை.

    இதற்கிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10:00 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டண உயர்வை வாபஸ் வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

    அரசின் கவனத்தை ஈர்க்க இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 70 அமைப்புகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் நிறுவனங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,கலந்து கொண்டு பேசினார்.

    • கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப தீா்மானிக்கப்பட்டுள்ளது.
    • 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை சோ்ந்த உரிமையாளா்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தொழில் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இதுகுறித்து நாடா இல்லா தறி நெசவாளா் சங்க (சிஸ்வா) ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜ் கூறியதாவது:- மின் கட்டண உயா்வால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தென்னை நாா் உற்பத்தி சாா்ந்த தொழிற்சாலைகள், நிட்டிங், ஓ.இ. மில்கள், ஸ்பின்னிங் மில்கள், கல்குவாரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்களை சோ்ந்த உரிமையாளா்களுடனான ஆலோசனை கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது.

    இதில் மின் கட்டணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப தீா்மானிக்கப்பட்டுள்ளது என்றாா். 

    • இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர், தற்போது பொருளாதார மந்த நிலையில் உள்ளது.
    • நிலுவையில் இருக்கும் மின்கட்டணத்துக்கான வட்டி அபராத தொகையை ரத்து செய்து மேலும் நிலுவையில் உள்ள மின் கட்டணத்தை செலுத்த தவணை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர்,ஜூலை.24-

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அலுவலக திறப்பு விழாவுக்கு தமிழக தொழில்துறை அமைச்சர் ராஜா வந்திருந்தார். விழாவில், அனைத்து பனியன் தொழில் அமைப்புகள் சார்பில் பொது கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.

    தொழில் அமைப்பினர் அளித்த கோரிக்கை மனு விவரம் வருமாறு:-

    இந்தியாவின் பின்னலாடை மையமான திருப்பூர், தற்போது பொருளாதார மந்த நிலையில் உள்ளது. திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி சரிந்துள்ளது. கடந்த ஆண்டு நூல்விலை அபரிமிதமாக உயர்ந்ததால், பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டது.

    வங்கதேசம், வியட்நாம், சீனா போன்ற நாடுகளுடன் போட்டியிட்டு ஏற்றுமதி ஆர்டர்களைப் பெற முடியவில்லை. பின்னலாடை உற்பத்தி மட்டுமல்லாது, நிட்டிங், சாயத்தொழில், காம்பாக்டிங், ரைசிங் போன்ற சார்புடைய தொழில்களும் பாதித்தன.திருப்பூரில் இயங்கும் நிறுவனங்களில் 75 சதவீதம் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்.

    சங்கிலி தொடர் போன்ற ஜாப் ஒர்க் சேவை கிடைத்தால் மட்டுமே தரமான ஆடைகளை தயாரிக்க முடியும். திருப்பூர் ஆடைத் தொழிலின் நிலைமை மாறுபட்டுள்ளதால் தேவையான உள்கட்டமைப்பு, மின்சாரம், தண்ணீர் போன்ற வசதிகள் சலுகை விலையில் வழங்கப்பட வேண்டும்.

    ரஷ்யா - -உக்ரைன் போர் காரணமாக ஜவுளி உற்பத்தி நடவடிக்கை மந்தமாகி விட்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், பொருளாதாரம் மந்தமாக இருப்பதால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். இக்கட்டான இந்நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தியது கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    தொழில்நிலை மந்தமாக இருக்கும் போது மின்கட்டணம் உயர்ந்தது ஸ்தம்பிக்க செய்துள்ளது. நிலை கட்டண உயர்வும், பீக் ஹவர் கட்டணமும், தொழிலை சரிவு நிலைக்கு தள்ளிவிடும். மின்சாரத்தை பயன்படுத்தாத நேரத்திலும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. எனவே மின் கட்டணத்தை குறைத்து தொழில் சீராக இயங்க உதவிட வேண்டும். தமிழக அரசு கோரிக்கையை பரிசீலித்து திருப்பூர் பனியன் தொழிலை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    விசைத்தறிகள்

    கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந்தேதி அனைத்து வகை மின்கட்டணமும் உயர்த்தப்பட்டது. இதில் விசைத்தறிகளுக்கு 3ஏ-2 பிரிவின் கீழ் யூனிட்டுக்கு 4.50 ரூபாயில் இருந்து 6.40 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த விசைத்தறியாளர்கள், மின்கட்டணத்தை குறைக்க வேண்டும், அதுவரை மின்கட்டணம் செலுத்தப்போவதில்லை எனக்கூறி பல கட்ட போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர்களுடன் விசைத்தறியாளர் சங்கத்தினர் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையின் விளைவாக கடந்த மார்ச் 3-ந்தேதி மின் கட்டணத்தில் யூனிட்டுக்கு 1.10 ரூபாய் குறைக்கப்பட்டது. இதற்கிடையில் விசைத்தறி யாளர்கள், மின் கட்டணம் குறைப்பு தொடர்பாக மாநில முதல்வருக்கு மனு வழங்கி வருகின்றனர். இதற்காக பிரத்யேகமாக மனு ஒன்றையும் அச்சடித்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    விசைத்தறிகளுக்கு விலையில்லா மின்சாரம் போக, அனைத்து சிலாப்களுக்கும் யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மின் கட்டண பயன்பாடு அடிப்படையில் 70 பைசாவில் இருந்து 1.40 ரூபாய் வரை யூனிட்டுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 10 முதல் கடந்த மார்ச் முதல் தேதி வரை கூடுதல் கட்டணமே வசூலிக்கப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து சிலாப்களுக்கும், யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்த வேண்டும். நிலுவையில் இருக்கும் மின்கட்டணத்துக்கான வட்டி அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். நிலுவை மின் கட்டணத்தை செலுத்த தவணை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். ஆண்டுக்கு 6 சதவீதம் மின் கட்டண உயர்வு என்பதில் இருந்து விசைத்தறிகளுக்கு விலக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • மின் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் கூடுதல் கவுண்டர் திறக்க வலியுறுத்தி உள்ளனர்.
    • மதுரை வில்லாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன.

    அவனியாபுரம்

    மதுரை வில்லாபுரம் பகுதியில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. சிறு தொழில் நிறுவனங்கள் முதல் பெரும் தொழில் நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் 2 மாதத்திற்கு ஒரு முறை மின்சார கட்டணத்தை கட்டுவதற்கு இப்பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு சென்றால் அங்கு ஒரு கவுண்டரை மட்டும் திறந்து வைத்து மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பல மணி நேரம் மின்சார அலுவலகத்தில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

    மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது என்று பொதுமக்கள் கூறுகின்றனர். தினந்தோறும் வேலைக்கு சென்றால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலையில் உள்ள மக்கள் ஒரு நாள் வேலைக்கு லீவு போட்டு இந்த மின்சாரத்தை கட்டணத்தை செலுத்தும் நிலை உள்ளது.

    எனவே கூடுதல் கவுண்டர்களைத் திறந்து உடனடியாக கட்டணம் செலுத்தும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்.
    • உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

    சென்னை :

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    2022-23-ம் ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.9.2022 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியதுள்ளது. எனவே ஒருநாளின் உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்கும்படி பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையை ஏற்று, குறைந்த அழுத்த மின் இணைப்பு (லோ டென்சன் 3-பி) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின் கட்டணத்தை 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

    இவ்வாறு மின் கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட உள்ளது.
    • சீர்திருத்தம் என்ற அடிப்படையில் மின்வாரியத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன

    திருப்பூர் :

    தமிழகத்தில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில் அடுத்தடுத்த மாதங்களில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்பட உள்ளது.இதனால் ஏழை, நடுத்தர குடும்பத்தினர் மத்தியில், நிதிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சீர்திருத்தம் என்ற அடிப்படையில் மின்வாரியத்தில் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் 1டி எனப்படும் சீர்த்திருத்தம், கட்டட உரிமையாளர், வாடிக்கையாளர்களை பாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    நான்கிற்கும் அதிகமான வீடுகள், அறைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்கள், அந்த வீடுகள் அறைகளுக்கு போர்வெல் தண்ணீர் இறைத்து வழங்குவதற்கென பொதுவான இணைப்பு (காமன் சர்வீஸ்) என்ற பெயரில் கூடுதலாக ஒரு மின் இணைப்பு பெற்றிருப்பர். அந்த இணைப்புக்கான கட்டணம் வீட்டு இணைப்புக்குரிய கட்டணத்தின் அடிப்படையில் தான் வசூலிக்கப்பட்டு வந்தது.தற்போதைய மாற்றத்தின் அடிப்படையில் அந்த காமன் சர்வீஸ் 1டி என வகைப்படுத்தப்பட்டு, ஒரு யூனிட்டுக்கு 8 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பழைய கட்டணத்தை விட 3 மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ஒரு வீட்டுக்கு ஒரு மின் இணைப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் தான் இந்த நடைமுறை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1டி மாற்றத்தால் காமன் சர்வீஸ்க்கான இலவச 100 யூனிட் மின்சாரம் ரத்தாகும்.மின் கட்டணம் உயரும்.மற்றபடி தனித்தனி மின் இணைப்பு பெற்று மோட்டார் உள்ளிட்ட மின் சார்ந்த தேவைகளுக்காக பயன்படுத்தி வருவோருக்கு உயர்த்தப்பட்ட வீட்டு உபயோகத்துக்கான மின் கட்டணமே வசூலிக்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்றனர்.

    • மாதம் 1.50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
    • தொழிலுக்காக பெற்ற முதலீட்டுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஏற்கனவே சிரமப்பட்டு வருகிறோம்.

    பல்லடம் :

    பல்லடம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:- 'எல்.டி.சி.டி., மற்றும் எச்.டி., மின்சாரம் உபயோகிப்பவர்களுக்கு டிமாண்ட், யூனிட் கட்டணம் உயர்வு மற்றும் 'பீக் ஹவர்ஸ்' கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.ஜி.எஸ்.டி., கொரோனா, விசைத்தறி கூலி பிரச்சினை, நூல்விலை உயர்வு உள்ளிட்டவற்றால் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

    மின் கட்டணம் உயர்த்தப்பட்டால், தொழிலை விட்டு செல்வதை தவிர வேறு வழியில்லை.தொழிலுக்காக பெற்ற முதலீட்டுக் கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஏற்கனவே சிரமப்பட்டு வருகிறோம். மின் கட்டண உயர்வால், குறைந்தபட்சம், மாதம் 1.50 லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த சூழல் உருவானால், வங்கிக் கடன்களை செலுத்த முடியாமல் நஷ்டத்தை சந்தித்து தொழிலை கைவிடும் நிலை ஏற்படும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில்,மின்சாரம் சார்ந்த மற்றும் சோலார் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவற்றில் உள்ள பிரச்னைகள் குறித்து அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. தொழிலை விரிவு படுத்துவதே அரசின் நோக்கம். விரைவில் தொழில்துறையினர் ஏற்றுக் கொள்ளக்கூடிய குறைந்த மின் கட்டண உயர்வு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த பதில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. விரைவில் நல்லதொரு தகவல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.
    • மின் கட்டண உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.

    கொழும்பு :

    பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் இலங்கையில் மின்சார கட்டணத்தை அரசு அதிரடியாக உயர்த்தி இருக்கிறது. யூனிட்டுக்கு 75 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    இதன் மூலம் மாதத்துக்கு 30 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் ஒரு குடும்பத்தினர் இனிமேல் 198 ரூபாய் அதிகமாக செலுத்த வேண்டும். இந்த விலை உயர்வு இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. இந்த கட்டண உயர்வுக்கு இலங்கை மின்சார வாரிய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்து இருக்கிறது.

    ஏற்கனவே எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விண்ணை முட்டும் விலைவாசியால் தவித்து வரும் மக்களுக்கு, தற்போது மின் கட்டண உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தி இருக்கிறது.

    • கூட்டத்தில், உணவு பண்டங்கள், இன்சூரன்ஸ் பாலிசி தொகை மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு கைவிட வேண்டும்.
    • தஞ்சை வழியாக இயங்கிய அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் அட்டை,நிதிய ளிப்பு வழங்கும் என இருபெரும் விழா நடைபெற்றது. பின்னர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு கணேசன் தலைமை தாங்கினார். சொக்கலிங்கம் வரவேற்றார்.

    மாவட்ட குழு பாலசுப்பிரமணியன் உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட குழு விஜயலெட்சுமி நிதிபெற்று பேசினார். மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் கிருஷ்ணன், மாநகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்த கூட்டத்தில், உணவு பண்டங்கள், இன்சூரன்ஸ் பாலிசி தொகை மீதான 5 சதவீத ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    மின்சார கட்டண உயர்வை மாநில அரசு திரும்பபெற வேண்டும். தஞ்சை வழியாக இயங்கிய அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஒன்றிய பொருளாளர் ராமலிங்கம், செயலாளர் ஜார்ஜ்துரை ஆகியோர் நன்றி கூறினர்.

    ×