search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின் கட்டணத்தை குறைக்க தொழில் துறையினா் கோரிக்கை
    X

    கோப்புபடம்

    மின் கட்டணத்தை குறைக்க தொழில் துறையினா் கோரிக்கை

    • கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப தீா்மானிக்கப்பட்டுள்ளது.
    • 50-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களை சோ்ந்த உரிமையாளா்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் கடந்த ஆண்டு உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தொழில் துறையினா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இதுகுறித்து நாடா இல்லா தறி நெசவாளா் சங்க (சிஸ்வா) ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜ் கூறியதாவது:- மின் கட்டண உயா்வால் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் உள்ள தென்னை நாா் உற்பத்தி சாா்ந்த தொழிற்சாலைகள், நிட்டிங், ஓ.இ. மில்கள், ஸ்பின்னிங் மில்கள், கல்குவாரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட குறு, சிறு தொழில் நிறுவனங்களை சோ்ந்த உரிமையாளா்களுடனான ஆலோசனை கூட்டம் அண்மையில் கோவையில் நடைபெற்றது.

    இதில் மின் கட்டணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், கட்டணத்தை குறைக்க வலியுறுத்தியும் முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்ப தீா்மானிக்கப்பட்டுள்ளது என்றாா்.

    Next Story
    ×