search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national highway"

    • சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.
    • பாதையை பயணிகள் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள்.

    ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஜம்மு பகுதியின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூனி நாலா பகுதியில் நேற்று இரவு 10:30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்து தடையை ஏற்படுத்தி உள்ளது.

    இதைதொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHA) 144-ல் உள்ள சாலைகளில் பாறைகளை அகற்றும் பணி 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, இந்த பாதையை பயணிகள் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    முன்னதாக மார்ச் 31-ம் தேதி, ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 44, மேஹத் தல்வாஸ் மற்றும் கிஷ்த்வார் பதேர், ராம்பன் ஆகிய இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.
    • நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருப்பதி:

    மிச்சாங் புயல் காரணமாக ஆந்திராவில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    திருப்பதி அருகே உள்ள நாயுடு பேட்டை தடா இடையே காலங்கி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை-நெல்லூர் தேசிய நெடுஞ்சாலையில் 4 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    இதனால் சூலூர்பேட்டை சுங்க சாவடி அருகே உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகே சாலை சேதம் அடைந்தது.

    அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையில் திருப்பி அனுப்பப்பட்டன.

    கடந்த 2 நாட்களாக மழை வெள்ளம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து முடங்கியது.

    நேற்று காலங்கி ஆற்றில் மழை வெள்ளம் குறைந்தது. இதையடுத்து நாயுடு பேட்டை டிஎஸ்பி ராஜகோபால் தலைமையிலான போலீசார் சேதமடைந்த சாலைகளில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் போலீசார் நிற்கவைக்கப்பட்டு அந்த வழியாக வரும் வாகனங்கள் சாலை சேதம் அடைந்த இடத்தில் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    இதனால் சென்னை-நெல்லூர் சாலையில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது. நீண்ட தூரம் சுற்றிச் செல்லும் சிரமம் குறைந்ததால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    • போடி மெட்டு-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.381.76 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது.
    • கேரள முதல்-அமைச்சர் பினராயிவிஜயன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தை கேரளாவுடன் இணைக்கும் தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், தோட்ட தொழிலாளர்கள் செல்லும் ஜீப்கள், அத்தியாவசிய தேவைக்காக செல்லும் லாரிகள், அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.

    கேரளாவுக்கு குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு என 3 சாலை வழியாக சென்று வருகின்றனர். இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மூணாறு மலைச்சாலை உள்ளது.

    போடி மெட்டு-மூணாறு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.381.76 கோடி மதிப்பில் அகலப்படுத்தும் பணி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகின்ற நிலையில் சாலை யை அதிகாரப்பூர்வமாக தற்போது திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த ஆகஸ்ட் 17ந் தேதி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் மத்திய மந்திரி நிதின் கட்கரி வர இயலவில்லை. இதனால் சாலை திறப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் வருகிற 12-ந் தேதி மத்திய மந்திரி நிதின் கட்கரி மூணாறு-போடி மெட்டு என்ற சாலையை திறந்து வைக்கிறார் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதேபோல் ரூ.25 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள செருதோணி பாலத்தையும், அடிமாலி-குமுளி தேசிய நெடுஞ்சாலை என்.எச்.185 அகலப்படுத்தும் பணிகளையும் அவர் தொடங்கி வைக்கிறார். இதில் கேரள முதல்-அமைச்சர் பினராயிவிஜயன், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் வளைந்து நெழிந்து செல்லும் சாலையில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

    • தாசில்தார் மதிவாணன் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஆங்காடு தலைவர் கிரிஜா, நல்லூர் தலைவர் அமிர்தவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    சோழவரம் ஒன்றியத் திற்குட்பட்ட ஆங்காடு, சோழவரம், நல்லூர், பகுதி களில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் மழைக்காலங்களில் வழிந்தோடும் மழைநீர் கால்வாய் அடைப்புகளால் வெளியே செல்ல முடியாமல் சோழவரம் செங்காளம்மன் கோவில் நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கி வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும். மேலும் மழைநீர் தேங்கி நிற்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு வருவதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து பொன்னேரி தாசில்தார் மதிவாணன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி தலைவர்கள் ஆகியோருடன் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது சோழவரம் பகுதியில் வீடுகளில் எடுக்கப்படும் கழிவு நீரை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தினமும் 10-க்கும் மேற்பட்ட டிராக்டர்கள், லாரிகளில் வருவதால் வாகன ஓட்டிகளுக்கு துர்நாற்றம் வீசுவதாகவும் மழை நீரில் கழிவுநீர் கலந்து ஊருக்குள் செல்வதாகவும் சோழவரம் ஊராட்சி தலைவர் லட்சுமி முனிகிருஷ்ணன் புகார் தெரிவித்தார்.

    இதையடுத்து தேசிய நெஞ்சாலையில் கழிவு நீரை கொட்டும் லாரி, டிராக்டர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு தாசில்தார் மதிவாணன் உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராமகிருஷ்ணன், ஆங்காடு தலைவர் கிரிஜா, நல்லூர் தலைவர் அமிர்தவல்லி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வணிகர்கள் திடீர் சாலை மறியல்
    • போலீசார் பேச்சுவார்த்தை

    வேலூர்:

    வேலூர் அடுத்த கொணவட்டம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது.

    பள்ளி நிர்வாகத்தனர் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அருகில் உள்ள லாரி மெக்கானிக் ஷெட்டுகளுக்கு லாரிகள் செல்ல முடியவில்லை. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம் கூறிய போது அவர்கள் அலட்சியமாக பதில் அளித்து உள்ளனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அருகில் உள்ள கடை வியாபாரிகள் மற்றும் லாரி மெக்கானிக்குகள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி திருநாவுக்கரசு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறிய லில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • தேசிய நெடுஞ்சாலையோரம் 2 ஆயிரம் மரக்கன்று நடும்விழா நடந்தது.
    • தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலை கலைத்திட்ட குழு தலைவர் தொட்ட வீரையா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தென்மாபட்டு அருகே புதிதாக 45 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடும்விழா நடந்தது.

    இந்த விழாவில் தேசிய நெடுஞ்சாலை மதுரை மண்டல அலுவலர் அஜய் பிஸ்நோய் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்ட சிறப்பு வருவாய்த்துறை அலுவலர் சரவணன் கலந்து கொண்டு பேசினார். திட்ட இயக்குநர் நாகராஜ், இணை மேலாளர் சுமித் தேவ்டா, சிறப்பு வட்டாட்சியர்கள் மூர்த்தி, செந்தில்வேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தனர்.

    தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், தேசிய நெடுஞ்சாலை கலைத்திட்ட குழு தலைவர் தொட்ட வீரையா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர்.

    தென்மாபட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிகாரி களுடன் இணைந்து மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வழக்கறிஞர் நவநீதன், வாணியங்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
    • இரு புறமும் உள்ள ஆக்கிர மிப்புகள் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகரத்தின் உள்ளே செல்லும் சேலம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 10 வருடங்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துக்களுக்கு காரணம் சாலையின் இரு புறமும் உள்ள ஆக்கிர மிப்புகள் தான் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை துறை சில தினங்களுக்கு முன்பு வருகிற 28-ந் தேதி அன்று சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக அறிவித்தனர்.

    இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி முதற்கட்டமாக தேசிய நெடுஞ்சாலை துறையை சேர்ந்தவர்கள் மற்றும் நில அளவியர் ஆகியோர் நேற்று அம்சாகுளத்தில் தொடங்கி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கூகையூர் ரோடு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அளவிடு செய்து மஞ்சள் நிறத்தில் அம்பு குறியீடு போடப்பட்டது.

    பின்னர் கடை உரிமை யாளர்களிடம் வருகின்ற 28-ந் தேதிக்கு முன்னதாகவே ஆக்கிரமிப்புகளை தங்களு டைய செலவிலே எடுக்கு மாறு தெரிவித்தனர். மீறும் பட்சத்தில் 28-ந் தேதி அன்று ஆக்கிரமிப்புகளை எடுக்கும்போது அதற்கான ஏற்படும் பொருள்கள் சேதாரத்தை, தேசிய நெடுஞ்சாலை துறையோ, பேரூராட்சி நிர்வாகமோ ஏற்றுக் கொள்ளாது என கடை உரிமையாளர்களுக்கு தெரிவித்தனர்.

    • கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது.
    • பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி வி.கே.டி.தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி அடுத்த சித்திரைசாவடி முதல் பனிக்கன்குப்பம் அரசு பொறியியல் கல்லுாரி வரையில் பைபாஸ் பகுதியில் வராததால்அப்பகுதிக்கு தனியாக தேசிய நெடுஞ்சாலை நகாய் பிரிவின் சார்பில் தனியாக ஒப்பந்த பணி கோரப்பட்டு பணிகள் துவங்கியது. இப்பகுதியில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலைகள் தரமில்லாமலும், ஒரே நீள,அகலத்தில் போட ப்படவில்லை. மாறாக பள்ளமும், மேடுமாகவும், பழைய தார்சாலை அளவில் பாதியளவே பல இடங்களில் தார் சாலைபோடப்பட்டுள்ளன.

    அரைகுறையாக போடப்பட்ட தார்சாலையும் தரமற்ற முறையில் உள்ளது. இதனால் பல இடங்களில் தார் போடப்பட்ட ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி ஜல்லி சாலையாகிவருகிறது. தரமற்ற சாலைகள் போட்ட தேசிய நெடு ஞ்சாலை அதிகாரிகளை கண்டித்து அரசியல் கட்சி யினர், வியாபாரிகள் போரா ட்டம் நடத்திட தயாராகி வருகின்றனர். இதனால் தரமற்ற சாலையை சீரமைத்து, சீராக சாலை அமைத்திட மாவட்ட நிர்வாகம், நகாய் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    • தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் எச்சரிக்கை விளக்கு இல்லாததால் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
    • இந்த தேசிய நெடுஞ்சாலையின் உட்பிரிவு சாலையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    தேவகோட்டை

    ராமநாதபுரம் மாவட்டம் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது58). கட்டிட தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை புளியால் சந்திப்பில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முருகேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தேவகோட்டை தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேத சோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலை தற்போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில் தேவகோட்டை அருகே உள்ள சடையன்காடு, தேவகோட்டை பிரிவு சாலை, உடப்பன் பட்டி, கன்னங்கோட்டை, மாரிச் சான்பட்டி, தளக்காவயல், மாவிடுத்திக்கோட்டை, புளியால் போன்ற இடங்களில் சாலையில் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    ஒரே மாதத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். இந்த சாலையில் சுங்கவரி வசூல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    எனவே இந்த தேசிய நெடுஞ்சாலையின் உட்பிரிவு சாலையில் எச்சரிக்கை விளக்குகள் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • வேப்பூரில் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி நிறுத்தப்பட்டுள்ளது.
    • 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வேப்பூர் பஸ் நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் முதல் கட்டமாக ரூ.8 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் காலத்தின் உயரம் அதிகமாக வேண்டும் என்று அப்போதே கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட அரசு பிறகு சுமார் ரூ. 10 கோடி நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பாலத்தின் உயரம் மீண்டும் குறைந்த அளவே கட்டப்படுவதால் பஸ்கள் உள்ளே செல்ல முடியாத நிலைமை உருவாகும் என்று சமூக ஆர்வலர்கள் நடைபெற்று வந்த வேலையை நிறுத்தி சுமார் 15 அடி உயரம் எங்களுக்கு வேண்டும் என்று கூறி வேலையை நிறுத்தம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த வேப்பூர் போலீசார் சமூக ஆர்வலரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி பாலம் கட்டும் உரிமையாளரிடம் பேசி 15 அடி உயரத்திற்கு பாலத்தை கட்ட ஏற்பாடு செய்வதாக கூறி சமூக தீர்வை ஏற்படுத்தி பாலத்தின் உயரத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர்.

    • விழுப்புரம் நகராட்சி பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சியில், நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்புத் துறையின் சார்பில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டும்பணி நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தற்போது மழைக்காலமாக உள்ளதால், பணியினை விரைந்து முடிக்க வேண்டும். மேலும், இது நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் பொதுமக்களுக்கு சிரமமின்றி பணியை விரைந்து முடித்து, சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்கள் விரைந்து பணியினை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் விழுப்புரம் 4 வழிச்சாலை பகுதியிலிருந்து வரக்கூடிய மழைநீர் ஆங்காங்கே தேங்கி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்குவதை கண்டறிந்து அதை சீர் செய்திடும் வகையில் விழுப்புரம் நெடுஞ்சாலை கட்டுமானம் (ம) பராமரிப்புத்துறையின் மூலம் 2021-2022-ஆம் நிதியாண்டில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், விழுப்புரம் நகரம் வழியாக செல்லும் பழைய தேசிய நெடுஞ்சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் மற்றும் பாக்ஸ் கல்வெட்டு புதிதாக கட்டுதல் என ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டு, தற்பொழுது புதிய பஸ் நிலையம் அருகே, புதிய பாலம் கட்டப்படுகின்றன. அதனை தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் 2 பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால் கட்டும்பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்பணி முடிவுற்றவுடன், மழைநீர் தேங்காமல் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் சென்று விடுகின்ற வகையில் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் சிவசேனா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளர் தன்ராஜ், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஷோபனா, உதவி பொறியாளர்கள் வசந்தபிரியா, அய்யனார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • தேசிய நெடுஞ்சாலை இடையே சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் உள்ள 11, 12, 14 ஆகிய வார்டுகளில் சுமார் 500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வார்டுகளில் உள்ளவர்கள் விவசாய நிலங்களுக்கு மூலப்பொருள் எடுத்து செல்லவும், விளை பொருட்களை கொண்டு வரவும் சோழங்குறிச்சி சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் சோழங்குறிச்சி, அழிசுகுடி, பருக்கல், வாத்திகுடிகாடு, காக்காபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக உடையார்பாளையம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு அணுகுசாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால், சோழங்குறிச்சி சாலையில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் 11, 12, 14 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சோழங்குறிச்சி சாலை அருகே உள்ள மயானத்திற்கு, இறந்தவர்கள் உடலை கொண்டு செல்ல அருகே உள்ள தெருக்கள் வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டு உடையார்பாளையத்தில் இருந்து சோழங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்வதற்கு தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் வருகிற 25-ந் தேதியன்று உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்

    ×