search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blocked"

    • சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிப்பு.
    • பாதையை பயணிகள் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள்.

    ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து சுமார் 10 மணி நேரமாக போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ஜம்மு பகுதியின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள கூனி நாலா பகுதியில் நேற்று இரவு 10:30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பாறைகள் உருண்டு சாலைகளில் விழுந்து தடையை ஏற்படுத்தி உள்ளது.

    இதைதொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHA) 144-ல் உள்ள சாலைகளில் பாறைகளை அகற்றும் பணி 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

    நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்து, இந்த பாதையை பயணிகள் தவிர்க்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    முன்னதாக மார்ச் 31-ம் தேதி, ஜம்மு- ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை 44, மேஹத் தல்வாஸ் மற்றும் கிஷ்த்வார் பதேர், ராம்பன் ஆகிய இடங்களில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி இட்டேரி ரோடு பகுதியில் ஏராளமான சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    இது குறித்து கவுன்சி லர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தெந்த நடவடிக்கும் எடுக்காததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீராம் நகர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் சாயப்பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. பட்டறைகளில் இருந்து காலை 10 மணிக்கு மேல் கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

    இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாயப்பட்டறை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாக குற்றச்சாட்டு
    • போராட்டத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு

    சூலூர்

    சூலூர் அருகே பாப்பம்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி சார்பாக அத்திக்கடவு குடிநீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த பகுதியில் 40 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் வருவதாக தெரிகிறது.

    இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

    இன்று அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து பாப்பம்பட்டி நால் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், குடி தண்ணீருக்காக நாங்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறோம். 40 நாள்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. இதனால் மிகவும் சிரமமாக உள்ளது.

    குடிதண்ணீருக்காக அதிக அளவில் பணத்தை செலவு செய்ய வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து முறையான உத்தரவாதம் அளிக்கப்பட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர்.

    இதனையடுத்து அங்கு வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இந்த போராட்டத்தால் 300க்கும் அதிகமான வாகனங்கள் சாலையில் ஆங்காங்கே நின்றன.

    • மதுரையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் சூழல் ஏற்பட்டது.

    மதுரை

    தென்மேற்கு பருவமழை குறைந்ததால் மதுரை மாநகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை நீர்மட்டம் சரிந்துள்ளது. இதனால் மதுரை நகரில் 100 வார்டுளிலும் போதியளவு குடிநீர் விநியோகம் நடைபெறவில்லை என புகார் எழுந்துள்ளது.

    மதுரை மாநகராட்சியின் 25-வது வார்டான பி.பி.குளம் பகுதியில் உள்ள இந்திராநகர், முல்லை நகர் ஆகிய பகுதிகளில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரியிடம் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.குடிநீருக்காக பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கும் சூழல் ஏற்பட்டது.

    சாலை மறியல்

    குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி இன்று காலை பி.பி.குளம் மெயின்ரோட்டில் பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி உதவி பொறியாளர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

    இதனை தொடர்ந்து லாரி மூலம் அந்த பகுதியில் குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.

    • மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன.

    இதில் 29-வது வார்டுக்குட்பட்ட ஸ்ரீ சபரி பாலாஜி நகர் பகுதியில் குடிநீர், சாக்கடை, தார் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக சரி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

    ஆனால் இதுவரை நகராட்சி தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் இன்று காலை மேட்டுப்பாளையம்- குரும்பனூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இச்சம்பவம் குறித்து அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், நகராட்சி பொறியாளர் சுகந்தி மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இருப்பினும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சாலை மறியலை கைவிட மறுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நகராட்சி அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    காரமடை நகராட்சி 16-வது வார்டில் குளத்துப்பாளையம், முல்லை நகர் கொண்டசாமி நகர், பயணீர் காலணி ஆகிய பகுதிகளில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், குப்பைகளை சேகரித்தல், குடிநீர் தொட்டியை சீரமைத்து புதுப்பித்தல், உப்பு தண்ணி குழாய்கள் புதுப்பித்தல், பொது சுகாதார வளாகத்தை சீரமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு கோரிக்ைகைகளை வலியுறுத்தி கேட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காரமடை சிறுமுகை சாலையில் குளத்துப்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பிரச்சினைகளுக்கு உட னடியாக தீர்வு ஏற்படுத்தி தருவதாக கூறியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் காரமடை- சிறுமுகை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • ஆம்புலன்ஸ் வழியை மறைத்து நின்ற டாக்டரின் காரால் மூதாட்டி பரிதாப இறந்தார்.
    • தலைமை பெண் டாக்டரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை

    மதுரை புதூரை சேர்ந்தவர் பிரேமா (வயது 75). இவருக்கு நேற்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் புதூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது மூதாட்டிக்கு நாடித்துடிப்பு குறைவாக உள்ளது.

    அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள்' என்று டாக்டர்கள் அறிவுரை கூறினர். இதையடுத்து மூதாட்டியை அழைத்துச் செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வந்தது. ஆஸ்பத்திரிக்குள் வரும் வழியில் டாக்டரின் கார் நின்று கொண்டு இருந்தது. ஊழியர்கள் ஆம்புலன்ஸை ஆஸ்பத்திரிக்கு வெளியே நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து உறவினர்கள் மூதாட்டியை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கஷ்டப்பட்டு அழைத்து வந்து 108 ஆம்புலன்சில் ஏற்றினர். அதன் பின்னர் ஆம்புலன்ஸ் புறப்பட்டது.

    இருந்த போதிலும் மூதாட்டி பிரேமா வழியிலேயே பரிதாபமாக இறந்தார். மூதாட்டியின் மகள் சுப்புலட்சுமி கூறுகையில், என் தாயாருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரை ஆட்டோவில் புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து வந்தோம். மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் தேவையற்ற கால தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக என் தாயார் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார் என்றார். மதுரை புதூர் அரசு ஆஸ்பத்திரியில் 108 ஆம்புலன்ஸ் நிற்க வேண்டிய இடத்தில் தலைமை பெண் டாக்டரின் கார் நிறுத்தப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பெண் டாக்டரிடம் கேட்டபோது, "ஆம்புலன்சை இடம் மாற்றும் முடிவை நான் எடுக்கவில்லை. மாநகராட்சி நகர் நல சுகாதார அதிகாரி உத்தரவின் பேரில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நோயாளி உயிரிழப்புக்கும், ஆம்புலன்ஸ் வெளியே நின்றதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை" என்றார்.

    மாநகராட்சி நகர்நல சுகாதார அதிகாரி வினோத் கூறுகையில், "மருத்துவமனை வளாகத்தில் வெளி நோயாளிகள் அமர்வதற்காக தான் அந்த இடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆம்புலன்ஸ் நிறுத்துவதற்காக, புதூர் பஸ் நிலையத்தில் இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. இட நெருக்கடி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மற்றபடி இதில் எந்த உள்நோக்கமும் இல்லை" என்று தெரிவித்தார்.

    ×