search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "citizens"

    • வாரிசு உரிமையின் அடிப்படையில அவருக்கு பாட்டி வழியில் இருந்து ரூ.225 கோடிக்குமேல் சொத்துகள் கிடைத்துள்ளது.
    • கொடைவள்ளல்கள் கோடியில் ஒருவராக மிளிர்வர்.

    ஜெர்மனியின் புகழ்பெற்ற நிறுவனங்களில் ஒன்று பி.ஏ.எஸ்.எப். சோடா தொழிற்சாலையாக 1865-ல் இதை தொடங்கியவர் பிரெடரிக் ஏங்கல்கார்ன். தற்போது இந்த நிறுவனம் ரசாயன தொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் கோலோச்சுகிறது.

    இந்த நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி சொத்துகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் இளம் வாரிசுகளில் ஒருவர் பத்திரிகையாளராக இருக்கும் மர்லின் ஏங்கல்கார்ன். இவருக்கு சமூக தொண்டு ஆர்வமும் அதிகம். வாரிசு உரிமையின் அடிப்படையில் அவருக்கு பாட்டி வழியில் இருந்து ரூ.225 கோடிக்குமேல் சொத்துகள் கிடைத்துள்ளது.

    31 வயதான அவர், இந்த பணத்தை கொண்டு செல்வச் செழிப்புடன் தனது வாழ்க்கை முழுவதும் வாழலாம். ஆனால் அவர் அதன் மீது கொஞ்சமும் நாட்டமின்றி, பலருக்கும் அதை பகிர்ந்து கொடுக்க தீர்மானித்து உள்ளார். அதற்காக 'மறுபகிர்வு கவுன்சில்' என்ற திட்ட அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஆஸ்திரிய குடிமக்கள் 50 பேருக்கு அந்த தொகையை பகிர்ந்து வழங்குகிறார். இதற்காக 5 ஆயிரம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. அவர்களில் 50 பேரை தேர்வு செய்து வாரம் தோறும் குறிப்பிட்ட தொகை அவர்களுக்கு சென்று சேரும் வகையில் கொடை வழங்குகிறார்.

    கொடைவள்ளல்கள் கோடியில் ஒருவராக மிளிர்வர். அவர்களில் மர்லின் இளம் கொடையாளர் என்றால் ஆச்சரியமில்லை!.

    • விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலை அமைக்கும் பணியால் மழைநீர் தேங்கியது
    • இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    புதுச்சேரி:

    விழுப்புரம்-புதுச்சேரி இடையிலான நாகப்பட்டினம் 4 வழிச் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் 4 வழிச்சாலை பகுதியில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

    அதுபோல் இப்பணியால் அரியூர் மகாலட்சுமி நகர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மகாலட்சுமி நகரை சுற்றியுள்ள பல்வேறு வீதிகளிலும் மற்றும் அரசு பள்ளி ஒட்டி உள்ள சர்வீஸ் சாலையிலும் மழை நீர் அதிகம் தேங்கியுள்ளது இதனால் இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

    அதுபோல் தினந்தோறும் பள்ளி மாணவர்கள் இந்த கழிவு நீர் கலந்த மழை நீரில் கடந்து சென்று மாலை வீடு திரும்பும் பொழுது காய்ச்சலுடன் திரும்புகின்றனர்.

    இந்த மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் சுற்றிலும் பள்ளிகள் அதிகம் உள்ளதால் முதற்கட்டமாக இதனை விரைந்து செய்திட பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் குடிநீரில் இந்த மழை நீர் கழிவு நீர் உள்ளிட்டவை கலப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் பொது மக்கள் பல்வேறுமுறை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி அதிகாரி களிடம் முறையிட்டனர்.

    இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கை எடுக்காததால் அரியூர் பகுதி பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன் தலைமையிலான போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர்.

    சேலம்:

    சேலம் களரம்பட்டி இட்டேரி ரோடு பகுதியில் ஏராளமான சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளி யேற்றப்படும் கழிவுநீர் சாக்க டையில் கலந்து அடைப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் வீட்டின் முன்பு தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    இது குறித்து கவுன்சி லர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தெந்த நடவடிக்கும் எடுக்காததால் அந்தப் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஸ்ரீராம் நகர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இதை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, இந்த பகுதியில் சாயப்பட்டறைகள் அதிக அளவில் செயல்பட்டு வருகிறது. பட்டறைகளில் இருந்து காலை 10 மணிக்கு மேல் கழிவுநீரை திறந்து விடுகின்றனர். இதனால் இந்த பகுதியில் உள்ள வீடுகள் முன்பு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது.

    இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தபோதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாயப்பட்டறை கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    • பல் மருத்துவ சிகிச்சை முகாமை புதுச்சேரி மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் நடத்தியது.
    • டாக்டர் மனோகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    புதுச்சேரி:

    பிள்ளையார்குப்பம் ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் பல் கட்டும் பிரிவு மற்றும் புதுச்சேரி ரோட்டரி ஆரோசிட்டி இணைந்து, முதியோர்களுக்கான பல் மருத்துவ சிகிச்சை முகாமை புதுச்சேரி மகாத்மா காந்தி முதியோர் இல்லத்தில் நடத்தியது.

    முகாமுக்கு இந்திரா காந்தி பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் டாக்டர் அருணா ஷர்மா, பல் மருத்துவ பிரிவு துறை தலைவர் மற்றும் புராஜெக்ட் திட்ட இயக்குனர் டாக்டர் மனோகர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    ரோட்டரி ஆரோசிட்டி தலைவர் சிவராமன், பொருளாளர் டாக்டர் பாரத், முன்னாள் முதல்வர் எழில், புராஜெக்ட் திட்ட ஒருங்கிணைப்பாளர் அஷோக், மகாத்மா காந்தி முதியோர் இல்ல நிர்வாக இயக்குனர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருத்துவ குழுவினர் முதியோர் இல்லத்தில் உள்ள 16 முதியோர்களுக்கு பல் பரிசோதனை செய்து, பல் எடுத்தல், பல் சுத்தம் செய்தல், பல் அடைத்தல் போன்ற சிகிச்சைகள் அளித்தனர்.

    இதில், 12 பேருக்கு செயற்கை பல் இலசமாக பொறுத்தப்பட்டது. மேலும், இம்முகாமில், புற்றுநோய் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசோ தனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

    • பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
    • குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் பேரூராட்சி சுடுகாடு உள்ளது. இந்த வளாகத்தில் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. சுடுகாட்டை சுற்றி உள்ள இடங்களிலும் குப்பைகள் அதிகளவில் குவிந்துள்ளன.

    இந்த குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் இறுதிசடங்கு நிகழ்வில் பங்கேற்ற செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறும்போது;- திருவையாறில் சேகரமாகும் குப்பைகள் காவிரி கரையில் கொட்டப்பட்டு மக்காத குப்பை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. சுடுகாடு வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன.
    • குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரையில் பேரூராட்சி சுடுகாடு உள்ளது. இந்த வளாகத்தில் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. சுடுகாட்டை சுற்றி உள்ள இடங்களிலும் குப்பைகள் அதிகளவில் குவிந்துள்ளன.

    இந்த குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் இறுதிசடங்கு நிகழ்வில் பங்கேற்ற செல்வோர் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர் பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறும்போது;- திருவையாறில் சேகரமாகும் குப்பைகள் காவிரி கரையில் கொட்டப்பட்டு மக்காத குப்பை சிமெண்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. சுடுகாடு வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் உள்ள குப்பைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • ஆஸ்திரேலியாவில் இன்று முழு சூரிய கிரகணம் காணப்பட்டது.
    • கிரகணம் முடிந்தபின் உலக்கை தானாக கீழே விழுந்து விடும்.

    மேட்டுப்பாளையம்,

    ஆஸ்திரேலியாவில் இன்று முழு சூரிய கிரகணம் காலை 7.20 மணி முதல் மதியம் 12.20 மணி வரை காணப்பட்டது. இந்த சூரிய கிரகணம் இன்று 3 நிலைகளில் தெரியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவில் சூரிய கிரகணத்தின் தாக்கம் உள்ளதா? என பலர் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். இதற்கிடையே மேட்டுப்பாளையம் அருகே ஆலாங்கொம்பு வீராசாமி நகரை சேர்ந்த விஜய்ஆனந்த் குடும்பத்தினர் வெண்கலத் தட்டில் தண்ணீர் ஊற்றி உலக்கையை நிற்க பார்த்து பார்த்தனர். அப்போது தட்டில் வெண்கல தட்டு செங்குத்தாக நின்றது.

    சூரிய கிரகணத்தின் தாக்கம் இந்தியாவில் உள்ளதால் தண்ணீர் ஊற்றி வெண்கல தட்டில் ஒலக்கை நிற்பதாக கூறினர். இப்படி உலக்கை வாசல் முன்பு நிற்பதை அந்த பகுதி மக்கள் அறிந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் அங்கு பார்த்தனர். மேலும் அதனை புகைப்படமும் எடுத்தனர். கிரகணம் முடிந்தபின் ஒலக்கை தானாக கீழே விழுந்து விடும் என பெரியோர்கள் கூறினா்.

    • சுரக் ஷா காப்பீடு திட்ட த்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு அளிக்கப்படுகிறது.
    • 100 சதவீதம் மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    திருப்பூர் :

    மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து, பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா என்கிற பெயரில் விபத்து காப்பீடு திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பி.எம்.ஜெ.ஜெ.பி.ஒய்.,) எனும் ஆயுள் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துகிறது.வங்கி கணக்கு வைத்துள்ளோர் அனைவரும் இந்த காப்பீடு திட்டங்களில் பயனாளி களாக சேர்கப்படுகின்றனர்.

    சுரக் ஷா காப்பீடு திட்ட த்தில் வெறும் 20 ரூபாய் ஆண்டு பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு, ஜீவன் ஜோதி திட்டத்தில் ஆண்டு பிரிமியம் 436 ரூபாய்க்கு 2 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளியாக இணைய வயது வரம்பு தகுதி மட்டுமே உள்ளது. சுரக் ஷா காப்பீடு திட்டத்தில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டோரும், 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர், ஜீவன் ஜோதி திட்டத்திலும் இணையலாம்.வங்கிகள் மூலம் மலிவான பிரீமிய த்தில், அதிக பலன் தரும் இந்த திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. அதனால், காப்பீடு திட்ட பயனாளிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.இந்நிலையில் இரு காப்பீடு திட்டங்களிலும் 100 சதவீதம் மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து, அனைத்து வங்கி தலைமையுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பர ன்ஸிங்கில் பேசியுள்ளார்.அதனடிப்படையில் அனைத்து வங்கிகளும், காப்பீடு திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க வேண்டும் என மாவட்ட அளவில் இயங்கும் தங்கள் வங்கி கிளைகளுக்கு அறிவு றுத்தியுள்ளன.

    காப்பீடு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் அனைவரையும் பயனா ளியாக இணைப்பதற்காக, கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட முன்னோடி வங்கிகள் இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 

    • மின்கம்பங்கள் மாற்றப்பட்டு 10 நாட்களை கடந்தும், அதில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை.
    • 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சிக்கு உட்பட்ட 27-வது வார்டு பகுதியில் உப்பு தண்ணீர், நல்ல தண்ணீர் குடிநீர் குழாய்கள் உடைந்து 3 மாதங்களாகிறது.

    பொதுமக்கள் சரி செய்ய கோரிக்கை விடுத்த பின்னர் சீரமைப்பு பணி நடந்தது. ஆனாலும் இதுவரை குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என தெரிகிறது.மேலும் அந்த வார்டில் உள்ள சாலைகளும் சீரமைக்கப்பட்டு வந்தன. இந்த பணியும் கடந்த 3 மாதத்திற்கு முன்பு தொடங்கியது. அந்த பணியும் இதுவரை முடியவில்லை.

    இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.மேலும் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் ஏ.ஜி நகர், ஆர்.வி நகர் பகுதிகளில் மின் கம்பங்கள் மாற்றப்பட்டு 10 நாட்களை கடந்தும், அதில் தெரு விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.

    இப்படி எண்ணற்ற பிரச்சினைகள் இந்த வார்டில் உள்ளது. இது தொடர்பாக இந்த வார்டின் கவுன்சிலர் வனிதா சஞ்ஜீவ்காந்தி பலமுறை புகார் தெரிவித்தார். ஆனாலும் பணிகள் முடிவடையாமலேயே உள்ளன.

    இந்த நிலையில், 27-வது வார்டு உறுப்பினர் வனிதா சஞ்ஜீவ்காந்தி தலைமையில் 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் மேட்டுப்பாளையம் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளிடமும் மனு அளித்தனர். அப்போது அதிகாரிகள், உடனடியாக சம்மந்தப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினர். இதையடுத்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் பால்ராஜ் கூறுகையில், மேட்டுப்பாளையம்-கோவை சாலையில் 27-வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனால் இந்த வார்டுக்கு தேவையான குடிநீர் குழாய், தெரு விளக்குகள் சீரமைப்பது தடை ஏற்பட்டது. எனவே இப்பகுதியில் விரைவில் பணிகளை முடித்து தர வேண்டுமென நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் பரிந்துரை செய்துள்ளதாக தெரிவித்தார்.

    • சம்பவ இடத்திற்கு போலீசார், வருவாய்த்துறை, தாசில்தார் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • இதற்காக இன்று காலை முதலே 700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் , சிலோன் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் ஏராளமான ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் பலருக்கு குடிமனை கிடையாது. இதனால் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி நாஞ்சிக்கோட்டை சாலை பால்பண்ணை எதிரில் உள்ள வாரியை ஒட்டிய ஒரு காலியிடத்தில் திரண்டு அங்கு குடியேறுவதற்காக கொட்டகை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், வருவாய்த்துறை, தாசில்தார் ஆகியோர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும்.

    இதனால் நீங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என கூறினர். இதை ஏற்றுக்கொண்டு அன்றைய தினம் போராட்டம் கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி இன்று தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மறியல், சிலோன் காலனி உள்ளிட்ட பகுதி பொதுமக்களுடன், கோட்டாட்சியர் ரஞ்சித் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

    இதற்காக இன்று காலை முதலே

    700-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டு வந்தனர். அவர்களில் சிலரை மட்டும் பேச்சு வார்த்தைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

    பொதுமக்களுடன் விடுதலை சிறுத்தை கட்சி, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

    நாங்கள் பல ஆண்டுகளாக குடிமனைக் பட்டா கேட்டு போராடி வருகிறோம். எங்களுக்கு உடனடியாக குடிமனை பட்டா வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

    உங்களுக்கு வேறு இடத்தில் பட்டா வழங்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியர் கூறினார்.

    இதையடுத்து அலுவலகத்தின் வழியே திரண்டு இருந்த ஏராளமான பொதுமக்கள் கோட்டாட்சியர் ரஞ்சித்திடம் மனு அளித்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் பலருக்கு குடிமனை பட்டா இல்லாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். 10 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடியும் நடவடிக்கை இல்லை. உடனடியாக அனைவருக்கும் குடிமகனை பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அனைவரும் மனு அளித்த பின்னர் கலைந்து சென்றனர். இதனை முன்னிட்டு அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

    • விஷ வண்டுகள் பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு.
    • நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியம் கங்களாஞ்சேரி ஊராட்சியில் விஷ வண்டுகள் தொடர்ந்து பொதுமக்களை தாக்கி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜனுக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

    உடன் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தரராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவக்குமார், ஊராட்சி செயலர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாச னிடம் புகார் மனு ஒன்று அளித்துள்ளனர்.

    மனுவின் பேரில் திருவாரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு போலீசார் இணைந்து கங்களாஞ் சேரிரியில் காலனி தெரு, பூண்டி, கீழத்தெரு, நாகூர் மெயின் ரோடு உள்ளிட்ட நான்கு இடங்களில் இருந்த விஷ வண்டுகளை அழித்தனர்.

    • குரு என்பவர் அஞ்ஞானம் எனும் இருளை நீக்கி ஞானம் எனும் ஒளியை தருபவர்.
    • குரு என்பவருக்கு பற்பல பொருள் உண்டு.

    திருப்பூர் :

    தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில், குரு வணக்கம்' நிகழ்ச்சி கே.செட்டிபாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது.இதில் மாநில பொதுச் செயலாளர் கந்தசாமி பேசியதாவது:-

    குரு என்பவர் அஞ்ஞானம் எனும் இருளை நீக்கி ஞானம் எனும் ஒளியை தருபவர். இறைவனையே குருவாகவும் வணங்குவது உண்டு.மீனவ சமுதாயத்தை சேர்ந்த வேத வியாசர் நான்கு வேதங்களையும் தொகுத்தவர் என்பதால் வியாச பூர்ணிமாவாகவும் விழா எடுப்பதுண்டு.குரு என்பவருக்கு பற்பல பொருள் உண்டு. குறிப்பிட்ட பாடத்தை கற்பிக்கும் தொழில் செய்பவர் உபாத்யாயர் என்றும், குறிப்பிட்ட பாடத்தில் தனது சிஷ்யனை நிபுணத்துவம் ஆக்குபவரை ஆச்சார்யர் என்றும் கூறப்படுவதுண்டு.மாணவர்களை சிறந்தவொரு குடிமகனாக மாற்றுவதிலும், அக்குடிமகன் மூலம் சமுதாயம் சிறந்த முறையில் வளர்ச்சியடையவும் ஆசிரியர்கள் பெரும் பங்காற்றுகின்றனர். கல்விக்கான ஆசிரியராக பணியாற்றி சமூகத்தை விழிப்புணர்வு அடைய செய்வது நம் ஒவ்வொருவரின் தலையாய பணியாகும்.இவ்வாறு அவர் பேசினார்.

    ×