search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "banks"

    • யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி கார் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது.
    • ரெப்போ வட்டி விகிதத்தின் படி வீட்டுக்கடனுக்கான வட்டித் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    புதுடெல்லி:

    அனைத்து வங்கிகளும் தற்போது போட்டி போட்டுக்கொண்டு வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன் என பல்வேறு கடன்களை தங்களது வாடிக்கையாளர்களுக்கு வாரி வழங்கி வருகிறது.இதற்காக குறிப்பிட்ட சதவீதம் வட்டி விதித்து வருகிறது. இந்த வட்டி விகிதம் ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழ்நிலையில் பல வங்கிகள் தனிநபர் கடன், காருக்கான கடன்களின் வட்டி தொகையை அதிகரித்து உள்ளது.பாரத ஸ்டேட் வங்கி கடந்த டிசம்பர் மாதம் வரை காருக்கான கடன் வட்டி சதவீதம் 8.65 ஆக இருந்தது. இது தற்போது 8.85 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

    பரோடா வங்கி 8.7 சதவீதத்தில் இருந்து 8.8 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. இதற்கான சேவை கட்டணமும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

    யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி கார் மற்றும் தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மாற்றி அமைத்துள்ளது. கார் கடனுக்கான வட்டி விகிதம் முன்பு 8.75 சதவீதமாக இருந்தது. இது 9.15 சதவீதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    ஐ.டி.எப்.சி. வங்கி தான் முதன் முதலாக தனது வட்டி விகிதத்தை உயர்த்தியது. நவம்பர் மாதம் இந்த வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 10.49 சதவீதமாக இருந்தது. இது 10.75 சதவீதம் ஆக உயர்தப்பட்டு இருக்கிறது.

    இதே போல கர்நாடக வங்கியும் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 14.21 சதவீதத்தில் இருந்து 14.28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    ரெப்போ வட்டி விகிதத்தின் படி வீட்டுக்கடனுக்கான வட்டித் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ரசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றவில்லை. இதனால் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் அப்படியே இருந்து வருகிறது.

    • வங்கிகள், தபால் நிலையங்கள் என பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன.
    • இல்லத்தரசிகள் பலரும் தேர்ந்தெடுப்பது சீட்டு பிடிப்பதைதான்.

    வங்கிகள், தபால் நிலையங்கள் என பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. எனினும் காலம் காலமாக சேமிப்பிற்கு இல்லத்தரசிகள் பலரும் தேர்ந்தெடுப்பது அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து சீட்டு பிடிப்பதைதான். சேமிக்கும் பணம் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும். சிறிய தொகையை முதலீடாக செலுத்தலாம். அவசரகால தேவைக்கு சுலபமாக பெற்றுக்கொள்ளலாம் ஆகிய காரணங்களால்தான் இந்த முறையில் பணத்தைச் சேமிக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்த சீட்டு பிடிக்கும் குழுவில் 10 முதல் 20 பெண்கள் வரை உறுப்பினர்களாக இருப்பார்கள். சீட்டு நடத்துபவர் அந்த உறுப்பினர்களில் ஒரு வராகவோ அல்லது தனி நபராகவோ இருப்பார். தனி நபராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படும். இம்மாதிரியான சீட்டுகள் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அத்தனை மாதங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒரு உறுப்பினருக்கு வழங்குவார்கள். உதாரணமாக ஆயிரம் ரூபாயை உறுப்பினர்கள் அனைவரும் சீட்டு நடத்துபவரிடம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.

    இவ்வாறு சேர்த்த பணத்தை அந்த மாதம் யாருக்கு கொடுக்கலாம் என்பதை இரண்டு முறைகளில் தேர்வு செய்வார்கள். ஒன்று, குலுக்கல் முறை. மற்றொன்று ஏலம் முறை

    .குலுக்கல் முறையில், உறுப்பினர்களின் பெயர்களை துண்டுச் சீட்டில் எழுதிப்போட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இந்த முறை மூலம் அனைவருக்கும் சாமான வாய்ப்பு கிடைக்கும். ஏலம் முறையில் ஒருவர் கேட்கும் தொகையை பொறுத்து, யாருக்கு சீட்டு என்பது நிர்ணயம் செய்யப்படும். இப்படித்தான் சீட்டுப் பிடிக்கும் சேமிப்பு திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தனிநபர் நம்பிக்கையின் மூலம் மட்டுமே பணத்தை முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, உங்களுக்கு மிகவும் பரீட்சயமான, நம்பிக்கையான நபராக இருந்தால் மட்டுமே இதில் முதலீடு செய்ய வேண்டும்.

    மேலே கூறப்பட்டுள்ள இரண்டு முறைகளில் குலுக்கல் முறையை பின்பற்றுபவர்களிடம் சீட்டுப் போட்டு முதலீடு செய்வது நல்லது.

    ஏலம் முறையில், ஒரே நபர் பலமுறை ஏலம் கேட்கும் வாய்ப்பு அதிகம். இதனால் அவசியத்தேவை இருக்கும் போது உங்களுக்கு பணம் கிடைக்காமல் கூட போகலாம். சொற்பமான செலவுகளுக்காக மட்டுமே சீட்டுப் போடுவது நல்லது. அதிக முதலீடு செய்யும் போது இதில் பணத்தை இழக்கக்கூடிய அபாயமும் உள்ளது. இது நம்பிக்கையின் பெயரில் மட்டுமே நடத்தப்படும் சேமிப்பு திட்டம் என்பதால், இதில் அதிக தொகையை முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

    • கடனை திருப்பி கேட்டு வங்கி அலுவலர்கள் அலுத்துப் போய் இருந்தார்கள்.
    • வருடம் ரூ.12 ஆயிரம் கிடைத்து விடும். வராக்கடனில் ஓரளவு வசூலாகி விடும் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை ரூ.1000 வீதம் வழங்கப்படுகிறது.

    இந்த திட்டத்தால் பெண்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தார்களோ அதைவிட அதிகமாக வங்கிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன.

    சிறு சிறு கடன்கள் வாங்கியது, நகை கடன்களுக்கு வட்டி கட்டாமல் இருப்பது, விவசாய கடன், கல்வி கடன், வாகன கடன் என்று பல வகையான கடன் பெற்றிருப்பார்கள். அவர்களில் பலர் கடன்களை திருப்பி செலுத்தாமல் இருக்கிறார்கள்.

    கடனை திருப்பி கேட்டு வங்கி அலுவலர்கள் அலுத்துப் போய் இருந்தார்கள்.

    இப்போது அந்த மாதிரி பட்டவர்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 வந்து விழுவதை அறிந்ததும் வங்கி மேலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

    நிலுவை வைத்திருப்பவர்களின் கடன்களில் பிடித்தம் செய்யும்படி கூறி இருக்கிறார்கள். வருடம் ரூ.12 ஆயிரம் கிடைத்து விடும். வராக்கடனில் ஓரளவு வசூலாகி விடும் என்று மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

    அதே போல் வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லாமல் இருந்த கணக்குகளிலும் பிடித்து கொள்கிறார்கள். இதனால் பலர் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஏமாந்து போனார்கள்.

    கடன் நிலுவை இருந்தால் கண்டிப்பாக அதில்தான் கழிப்போம் என்று வங்கி அதிகாரிகள் உறுதியாக கூறிவிட்டனர்.

    • மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.
    • செப்டம்பர் 30ந் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு 2,000 ரூபாய் நோட்டு அறிமுகம் செய்யப்பட்டது.இவ்வகை ரூபாய் நோட்டு எப்போது வேண்டுமானாலும் தகுதிநீக்கம் செய்யப்படலாம் என்ற பேச்சும் இருந்து வந்தது. காரணம் 2,000 ரூபாய் நோட்டு, பணம் பதுக்கலுக்கு அதிகம் பயன்படும் என்ற அச்சம் இருந்தது.

    தற்போதும் பல்வேறு வகையில் பணம் பதுக்கல் அதிகரித்துள்ள காரணத்தால் மக்கள் கைக்கு 2000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கவே இல்லை. ரிசர்வ் வங்கி, 2018-19 ம் ஆண்டில் இருந்து புதிய 2,000 ரூபாய் நோட்டு அச்சடிப்பதை நிறுத்தியது. இந்நிலையில் 2,000 ரூபாய்கள் நீக்கம் செய்யப்படுவதாக அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.வரும் செப்டம்பர் 30ந் தேதி வரை, 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வசம் இருக்கும் 2,000 ரூபாய் நோட்டுக்களை தங்கள் வங்கி கணக்கில் 'டிபாசிட்' செய்து கொள்ளலாம். வேறு எந்த வங்கி கிளைகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை அளித்து அதற்கு இணையான மற்ற ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம்.

    இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் சாதாரண மக்களிடம் 2,000 ரூபாய் நோட்டுகள் இல்லாததால், பெரிய பரபரப்பு எழவில்லை. அப்படியே கைவசம் இருந்தாலும் எவ்வித கவலையும் தேவையில்லை. நான்கு மாத அவகாசம் இருப்பதால் நாளை முதல் பதட்டமில்லாமல் ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளலாம் என சிறப்பு ஏற்பாடு செய்துள்ள வங்கிகள் அறிவுறுத்தியுள்ளன.

    இதுகுறித்து திருப்பூர் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:- நாளை 23-ந் தேதி முதல் செப்டம்பர் 30ந் தேதி வரை 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்.அதற்காக, வங்கி கிளைகளில் சிறப்பு கவுண்டர் திறக்கப்படும்.ஆதார், பான்கார்டு போன்ற ஏதாவது ஆவண விவரங்களுடன், விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அதிகபட்சம் 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.கைவசம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம்., மையங்கள் வாயிலாகவோ, நேரடியாகவோ, தங்கள் வங்கி கணக்கில் செலுத்திக்கொள்ளலாம்.அதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மட்டும், படிவத்தை பூர்த்தி செய்து ஆவண நகல்களுடன் வழங்க வேண்டும்.

    பொதுமக்கள் எவ்வகையிலும் பதற்றமடைய தேவையில்லை. நான்கு மாதம் அவகாசம் உள்ளது. கைவசம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை பாதுகாப்பான முறையில் தங்கள் வங்கி கணக்கில் செலுத்தலாம். 500, 200, 100, 50 ரூபாய் நோட்டுகளாகவும் மாற்றிக்கொள்ளலாம். போதிய அளவுக்கு ரூபாய் நோட்டுகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

    • சுரக் ஷா காப்பீடு திட்ட த்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு அளிக்கப்படுகிறது.
    • 100 சதவீதம் மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    திருப்பூர் :

    மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து, பிரதான் மந்திரி சுரக் ஷா பீமா யோஜனா என்கிற பெயரில் விபத்து காப்பீடு திட்டம், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (பி.எம்.ஜெ.ஜெ.பி.ஒய்.,) எனும் ஆயுள் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துகிறது.வங்கி கணக்கு வைத்துள்ளோர் அனைவரும் இந்த காப்பீடு திட்டங்களில் பயனாளி களாக சேர்கப்படுகின்றனர்.

    சுரக் ஷா காப்பீடு திட்ட த்தில் வெறும் 20 ரூபாய் ஆண்டு பிரீமியத்தில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு, ஜீவன் ஜோதி திட்டத்தில் ஆண்டு பிரிமியம் 436 ரூபாய்க்கு 2 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயனாளியாக இணைய வயது வரம்பு தகுதி மட்டுமே உள்ளது. சுரக் ஷா காப்பீடு திட்டத்தில், 18 முதல் 70 வயதுக்கு உட்பட்டோரும், 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டோர், ஜீவன் ஜோதி திட்டத்திலும் இணையலாம்.வங்கிகள் மூலம் மலிவான பிரீமிய த்தில், அதிக பலன் தரும் இந்த திட்டங்கள் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. அதனால், காப்பீடு திட்ட பயனாளிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.இந்நிலையில் இரு காப்பீடு திட்டங்களிலும் 100 சதவீதம் மக்கள் அனைவரையும் பயனாளியாக சேர்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    இதுகுறித்து, அனைத்து வங்கி தலைமையுடன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீடியோ கான்பர ன்ஸிங்கில் பேசியுள்ளார்.அதனடிப்படையில் அனைத்து வங்கிகளும், காப்பீடு திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க வேண்டும் என மாவட்ட அளவில் இயங்கும் தங்கள் வங்கி கிளைகளுக்கு அறிவு றுத்தியுள்ளன.

    காப்பீடு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, மக்கள் அனைவரையும் பயனா ளியாக இணைப்பதற்காக, கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், மாவட்ட முன்னோடி வங்கிகள் இதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 

    • கல்விக்கடன் முகாமில் வங்கிகள் பங்கேற்றன.
    • பேராசிரியர் அருண்ராஜா நன்றி கூறினார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து ''கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாமை'' சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

    கல்லூரி தாளாளர் ஆர்.சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குநர் விக்னேசுவரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் செந்தில் குமார், டீன் மாரிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முதலாமாண்டு துறைத் தலைவர் ஸ்ரீராம் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் வெம்பக்கோட்டை கிளை மேலாளர் ராஜகுமாரி, ஆலங்குளம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாளர் தணிகைநாதன், தாயில்பட்டி கிளை மேலாளர் ஆனந்த், பேங்க் ஆப் இந்தியாவின் செவல்பட்டி கிளை மேலாளர் சீனிவாசராவ், சல்வார்பட்டி கிளை மேலாளர் பிரபு, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மம்சாபுரம் கிளை மேலாளர் மணிகண்டன், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் ஏழாயிரம்பண்ணை கிளை மோலாளர் ரகுநாத் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.

    வெம்பக்கோட்டை கிளைமேலாளர் ராஜகுமாரி பேசுகையில், விருதுநகர் மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்படி இந்த சிறப்பு முகாம் நடை பெறுகிறது. தமிழக அரசின் ''வித்யாலட்சுமி'' என்ற திட்டத்தின் மூலமாக உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கவிக்கடன் வழங்கும் திட்டத்தை மாணவர்களுக்கு அறிமுகப் படுத்தினார். இந்த திட்டத்தின் கீழ் எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும்? அதற்குரிய ஆவணங்கள் சமர்பிப்பது பற்றிய வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டது. விண்ணப்பிக்கும் போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

    ஏழை, எளிய மாண வர்களும் பயன்பெறும் வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் கல்வி கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், ஒருங்கிணைப்பாளர்கள் சாகுல் ஹமீது, பேராசிரியர் ராதாகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் அலுவலக உதவியாளர் களுடன் இணைந்து செய்திருந்தனர். பேராசிரியர் அருண்ராஜா நன்றி கூறினார்.

    • வெட்டாற்று கதவணையில் நீரோட்டத்தை பார்வையிட்டு கரைகளை ஆய்வு செய்தார்.
    • மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.

    திருவாரூர்:

    திருவாரூர் வட்டத்திற்கு ட்பட்ட கங்களாஞ்சேரி, ஓடாச்சேரி, மாங்குடி ஆகிய பகுதிகளில் மாண்டஸ் புயல் மற்றும் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் முன்னிலையில் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கங்களாஞ்சேரி கிராமத்தில் வெட்டாற்று கதவணையில் நீரோட்டத்தினை பார்வையிட்டு கரைகளை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, ஓடாச்சேரி கிராமத்தில் வெட்டாறு நீரொழுங்கி, மாங்குடி கிராமத்தில் பாண்டவயாறு கதவணை ஆகிய பகுதிகளில் மழைநீர் தடையின்றி செல்கிறதா என்பதனை ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் சிதம்பரநாதன், உதவி பொறியாளர் தங்கமுத்து மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்.
    • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வுகளை திரும்ப பெற வேண்டும், மாவட்டம் முழுவதும் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார மையங்களில் மருத்துவர்கள் இரவில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முன்பு இருந்த பணி நேரத்தை கடைப்பிடிக்க வேண்டும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தஞ்சை மாவட்ட குழ சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சாவூர் ரயிலடி முன்பு நடைபெற்றது.

    மாவட்ட செயலாளர் விஜயலெட்சுமி தலைமை வகித்தார்.மாவட்ட தலைவர் தனசீலி, மாவட்ட துணை செயலாளர் எஸ்தர் லீமா, பொருளாளர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்பாட்டத்தினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் கிருஷ்ணன் தொடக்கி வைத்தார்.

    நிர்வாக குழு உறுப்பினர் சேவையா சிறப்புரையாற்றினார்.மாநகர செயலாளர் பிரபாகர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.

    தஞ்சை மாநகர செயலாளர் பத்மாவதி, ஒன்றிய நிர்வாகிகள் தஞ்சைமல்லிகா, ஒரத்தநாடு எலிசபெத், பட்டுக்கோட்டை ஜானகி, சகுந்தலா, பேராவூரணி கலைச்செல்வி, திருவோணம்தவமணி, மதுக்கூர்ஜெனிதா, சேதுபாசத்திரம் கனகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் பங்கேற்றன.
    • கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட்டு 3 வாரங்களில் கல்வி கடன் வழங்க நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    குடும்ப சூழல் மற்றும் பொருளாதார பின்னடைவின் காரணமாக உயர்கல்வியை தொடர்வதில் நெருக்கடியை சந்திக்கும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கல்விக் கடன் முகாம் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் அருண் தம்புராஜ், எம்.எல்.ஏ.க்கள் முகம்மது ஷா நவாஸ், நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை வழங்கினர்.

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் என மொத்தம் 18 வங்கிகள் இதில் பங்கேற்றன.

    மாணவர்கள் அதிக அளவில் வருகை தந்து, கல்விக் கடன் குறித்த விபரங்களை கேட்டறிந்தனர். மொத்தம் 304 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதற்கான கலந்தாய்வு உடனடியாக நடத்தப்பட்டு 3 வாரங்களில் கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென கலெக்டர் தெரிவித்தார்.

    கல்விக் கடன் கேட்டு வங்கிகளுக்கு அலையும் நிலையை மாற்றி, ஒரே இடத்தில் வங்கிகளை வரவைத்து, கடன் வழங்கும் முறையில் ஒரு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தியதற்காக மாணவர்களும் பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர் என்று ஷா நவாஸ் எம்.எல்.ஏ தெரிவித்தார்.

    • தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் நடப்பு 2022-2023ம் நிதியாண்டில் ரூ. 4 ஆயிரத்து 267 கோடி கடன வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    • இந்த நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 81 சதவீதமும், சிறு, குறு தொழிலுக்கு 10 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 9 சதவீதமும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கிகள் ஆலோசனை குழு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை வகித்து கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசுகையில்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகள் மூலம் நடப்பு 2022-2023ம் நிதியாண்டில் ரூ. 4 ஆயிரத்து 267 கோடி கடன வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் விவசாய கடன்களுக்காக ரூ.3 ஆயிரத்து 470 கோடியும், சிறு, குறு தொழில்களுக்கு ரூ.450 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ. 347 கோடியும் கடனாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ 147 கோடி ரூபாய் வங்கிகளுக்கு கூடுதலான இலக்கு நிர்ணம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதியாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 81 சதவீதமும், சிறு, குறு தொழிலுக்கு 10 சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 9 சதவீதமும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடன் திட்ட அறிக்கையின்படி அனைத்து வங்கிகளும் இலக்கினை அடைய முழுவீச்சில் செயல்படவேண்டும். வங்கியாளர்கள் அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

    கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மண்டல உதவி பொதுமேலாளர் கோடிஸ்வராவ், முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் பிரபாகரன், ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆனந்தி மற்றும் அனைத்து வங்கி கிளை மேலாளர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
    • வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும்.

    சென்னை:

    அனைத்து வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் மும்பையில் நடந்தது.

    இக்கூட்டத்தில் வருகிற 27-ந்தேதி ஒருநாள் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

    வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும். 2010-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் 27-ந்தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அதிகாரிகளும் கலந்து கொள்வதால் வங்கிகள் அன்று முழுமையாக மூடப்படும். மேலும் வேலைநிறுத்தம் நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் 25-ந் தேதி மற்றும் 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வங்கி விடுமுறை நாட்களாகும்.

    அதனால் 3 நாட்கள் தொடர்ந்து வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். வங்கி பணிகள் பாதிக்கக்கூடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் முடிவடைவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #Bank #IncomeTaxDepartment
    சென்னை:

    நடப்பு நிதியாண்டுக்கான வங்கி கணக்குகள் நாளை (31-ந்தேதி)யுடன் முடிவடைவதால் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பொது மக்களுக்கான வங்கி சேவை வழங்கப்படமாட்டாது. அரசு துறைகளின் கருவூலங்கள் சார்பில் பணம் செலுத்துதல், எடுத்தல் போன்ற நடவடிக்கைகள் நடைபெறும். கருவூல கணக்குகளை சரிபார்த்தல், காசோலை, வரைவு காசோலை மற்றும் ஆன்லைன் மூலம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மட்டும் நடைபெறும்.

    பொது மக்கள் ஜி.எஸ்.டி. உள்ளிட்ட அரசு துறைகளுக்கு செலுத்த வேண்டிய வரிகள் மட்டும் செலுத்தலாம். வழக்கமான பணம் எடுத்தல், டெபாசிட் செய்தல், காசோலை பரிவர்த்தனை போன்ற பணிகள் நடைபெறாது. அதே வேளையில் மாதத்தின் 5-வது சனிக்கிழமையாக இன்று உள்ளதால் வங்கிகள் செயல்படுகின்றன.

    மேலும் ஏப்ரல் 1-ந்தேதி அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன. வங்கி கணக்குகள் முடிவடைவதையொட்டி அன்று வங்கிகள் திறந்து இருந்தாலும் சேவை நடைபெறாது. பண பரிவர்த்தனை, காசோலை, வரைவோலை பரிவர்த்தனை நேரடியாக மேற்கொள்ள இயலாது. இணையதளம், செல்போன் வழியாக பணபரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.



    எந்திரங்கள் வழியாக பணம் டெபாசிட் செய்வதில் எந்த சிக்கலும் கிடையாது என்று வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.

    வங்கிகள் நாளை செயல்படுவது போல வருமான வரித்துறை அலுவலகமும் இயங்குகின்றன. நடப்பு நிதியாண்டுக்கான தாமதிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட வருமானவரி படிவங்களை நாளைக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

    அதனால் வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக இன்றும் நாளையும் வருமானவரி அலுவலகம் வழக்கம் போல் செயல்படும்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வருமான வரித்துறை மண்டல அலுவலகங்களிலும் வழக்கமான வேலை நேரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்குகிறது.

    சென்னை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டில் ரூ.1000 கோடி சொத்துவரி இலக்கு வைத்து வசூலில் ஈடுபட்டு வருகிறது. நாளையுடன் நிதியாண்டு நிறைவடைவதால் நாளை அனைத்து மாநகராட்சி சொத்து வரி அலுவலகங்களும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சொத்து வரி வசூலில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக இன்றும் (சனி), நாளையும் (ஞாயிறு) சொத்து வசூல் அலுவலகங்கள் செயல்படுகின்றன.

    மேலும் அரசு இ.சேவை மையங்களும் நாளை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் இ.சேவை மையங்களை பயன்படுத்தி அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தலாம். #Bank #IncomeTaxDepartment
    ×