search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "post offices"

    • வங்கிகள், தபால் நிலையங்கள் என பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் உள்ளன.
    • இல்லத்தரசிகள் பலரும் தேர்ந்தெடுப்பது சீட்டு பிடிப்பதைதான்.

    வங்கிகள், தபால் நிலையங்கள் என பணத்தை சேமிப்பதற்கு பல வழிகள் இருக்கின்றன. எனினும் காலம் காலமாக சேமிப்பிற்கு இல்லத்தரசிகள் பலரும் தேர்ந்தெடுப்பது அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து சீட்டு பிடிப்பதைதான். சேமிக்கும் பணம் கைக்கு எட்டிய தூரத்தில் இருக்கும். சிறிய தொகையை முதலீடாக செலுத்தலாம். அவசரகால தேவைக்கு சுலபமாக பெற்றுக்கொள்ளலாம் ஆகிய காரணங்களால்தான் இந்த முறையில் பணத்தைச் சேமிக்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

    இந்த சீட்டு பிடிக்கும் குழுவில் 10 முதல் 20 பெண்கள் வரை உறுப்பினர்களாக இருப்பார்கள். சீட்டு நடத்துபவர் அந்த உறுப்பினர்களில் ஒரு வராகவோ அல்லது தனி நபராகவோ இருப்பார். தனி நபராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படும். இம்மாதிரியான சீட்டுகள் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ அத்தனை மாதங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை ஒரு உறுப்பினருக்கு வழங்குவார்கள். உதாரணமாக ஆயிரம் ரூபாயை உறுப்பினர்கள் அனைவரும் சீட்டு நடத்துபவரிடம் கொடுப்பதாக வைத்துக்கொள்வோம்.

    இவ்வாறு சேர்த்த பணத்தை அந்த மாதம் யாருக்கு கொடுக்கலாம் என்பதை இரண்டு முறைகளில் தேர்வு செய்வார்கள். ஒன்று, குலுக்கல் முறை. மற்றொன்று ஏலம் முறை

    .குலுக்கல் முறையில், உறுப்பினர்களின் பெயர்களை துண்டுச் சீட்டில் எழுதிப்போட்டு குலுக்கல் மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இந்த முறை மூலம் அனைவருக்கும் சாமான வாய்ப்பு கிடைக்கும். ஏலம் முறையில் ஒருவர் கேட்கும் தொகையை பொறுத்து, யாருக்கு சீட்டு என்பது நிர்ணயம் செய்யப்படும். இப்படித்தான் சீட்டுப் பிடிக்கும் சேமிப்பு திட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தனிநபர் நம்பிக்கையின் மூலம் மட்டுமே பணத்தை முதலீடு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். எனவே, உங்களுக்கு மிகவும் பரீட்சயமான, நம்பிக்கையான நபராக இருந்தால் மட்டுமே இதில் முதலீடு செய்ய வேண்டும்.

    மேலே கூறப்பட்டுள்ள இரண்டு முறைகளில் குலுக்கல் முறையை பின்பற்றுபவர்களிடம் சீட்டுப் போட்டு முதலீடு செய்வது நல்லது.

    ஏலம் முறையில், ஒரே நபர் பலமுறை ஏலம் கேட்கும் வாய்ப்பு அதிகம். இதனால் அவசியத்தேவை இருக்கும் போது உங்களுக்கு பணம் கிடைக்காமல் கூட போகலாம். சொற்பமான செலவுகளுக்காக மட்டுமே சீட்டுப் போடுவது நல்லது. அதிக முதலீடு செய்யும் போது இதில் பணத்தை இழக்கக்கூடிய அபாயமும் உள்ளது. இது நம்பிக்கையின் பெயரில் மட்டுமே நடத்தப்படும் சேமிப்பு திட்டம் என்பதால், இதில் அதிக தொகையை முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.

    • 8 ஆண்டுகளின் முடிவில் அன்றைய மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம்
    • ரிசர்வ் வங்கி மூலம் 2.5 சதவீதம் வட்டியுடன் 6 மாதங்களுக்கு ஒரு முறை வங்கி கணக்கில் செலுத்தப்படும்

    கோவை,

    கோவை அஞ்சல் கோட்டம் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை செப்டம்பர் 11-ந் தேதி முதல் தொடங்குகிறது.

    இந்திய அஞ்சல் துறை, ரிசர்வ் வங்கி உடன் இணைந்து குறிப்பிட்ட தேதிகளில் தங்க பத்திரம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த மாதத்திற்கான விற்பனை கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 15-ந் தேதி வரை விற்பனை நடக்கிறது. 1 கிராம் தங்க பத்திரத்தின் விலை ரூ.5923.இதன் மூலம் ஒருவர் தம் வாழ்நாளில் 1 கிராம் முதல் 4 கிலோ வரை தங்க பத்திரங்களை வாங்கி கொள்ளலாம்.

    தங்க பத்திரத்தின் முதலீட்டு காலமான 8 ஆண்டுகளின் இறுதியில் அன்றைய தேதியில் உள்ள மதிப்பில் தங்க பத்திரங்களை பணமாக மாற்றி கொள்ளலாம். இதன் மூலம் செய்யப்படும் முதலீட்டுக்கு ரிசர்வ் வங்கியின் மூலமாக 2.5 சதவீதம் வட்டி கணக்கிடப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு முறை முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இது தங்க பத்திர முதலீட்டாளர்களுக்கு கூடுதல் வருவாய் ஆகும்.

    தங்க பத்திரம் பெறுவதற்கு, முதலீட்டாளரின் விபரங்களை தங்க பத்திர விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து, அத்துடன் ஆதார் நகல், பான் கார்டு நகல் மற்றும் வங்கி கணக்கின் விவரங்களை அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சமர்ப்பித்து தங்க பத்திரத்தை பெற்று கொள்ளலாம். பதிவு செய்த 15 நாட்களில் தங்க பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.தங்க பத்திரத்தில் முதலீடு செய்வதின் மூலம் செய்கூலி, சேதாரம் இல்லாமல் தங்கத்தை சேமிக்கலாம்.

    பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தமிழகத்தில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
    • 6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்க திட்டமிட்டு உள்ள நிலையில் 6 நாட்களில் மட்டும் இந்த அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

    சென்னை:

    நாட்டின் 76-வது சுதந்திர தின விழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைவரும் தங்கள் இல்லங்களில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

    இதனை தொடர்ந்து அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை தொடங்கியது. கடந்த 7-ந் தேதியில் இருந்து சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து தபால் நிலையங்களிலும் தேசிய கொடி விற்பனை நடந்து வருகிறது.

    ஒரு கொடியின் விலை ரூ.25. நேரிலும், தபால் மூலமாகவும் பெறலாம். ஆன்லைன் வழியாக புக் செய்தால் வீட்டிற்கே தேசியக் கொடி வந்து சேரும். பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மொத்தமாக தேசிய கொடியை கேட்டாலும் நேரில் சென்று வழங்கவும் தபால் துறை தயாராக உள்ளது.

    தமிழகத்தில் 20 லட்சம் தேசியக் கொடிகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தபால் துறை மூலம் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

    சென்னை மண்டலத்தில் இதுவரையில் 80 ஆயிரம் தேசியக் கொடிகள் விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    6.5 லட்சம் தேசியக் கொடிகள் விற்க திட்டமிட்டு உள்ள நிலையில் 6 நாட்களில் மட்டும் இந்த அளவிற்கு விற்பனையாகி உள்ளது.

    இது குறித்து தபால்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    பொதுமக்கள் தேசிய கொடியை வாங்க வேண்டும் என்பதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை)யும் தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை நடைபெறும்.

    தனிநபராகவோ, கூட்டமாகவோ, தொழில் நிறுவனமோ அல்லது ஒன்று, இரண்டு தேசியக் கொடி கேட்டாலோ வழங்கப்படும் என்றார்.

    • மதுரையில் அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை செய்யப்படுகிறது.
    • எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    மதுரை 

    மதுரை அஞ்சல் கோட்ட நடுநிலை கண்காணிப்பாளர் ஜவகர்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் கிராம் 1-க்கு ரூ.5,926-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து தபால் நிலையங்களிலும் தங்க பத்திரம் விற்பனை தொடங்கியுள்ளது. தனி நபர் நிதியாண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கத்திற்கு முதலீடு செய்யலாம். இந்த தங்கமானது பத்திர வடிவில் இருந்தால் அது பாதுகாப்பான முதலீடு மட்டுமின்றி ஆண்டு ஒன்றுக்கு 2.5 சதவீதம் வட்டியும் கூடுதலாக கிடைக்கும். எனவே பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்த திட்டத்தில் 7.5 சதவீதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படும்.
    • திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

    திருப்பூர் :

    இந்திய அஞ்சல் துறை சார்பில் மகளிர் மேன்மை சேமிப்புபத்திரம்-2023 என்ற திட்டம் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பெண்கள் மற்றும் பெண் குழந்தை பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கி முதலீடு செய்யலாம். குறைந்தபட்சம் ரூ.1,000 செலுத்தி இந்த திட்டத்தில் சேரலாம். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் 7.5 சதவீதம் காலாண்டுக்கு ஒருமுறை கூட்டு வட்டி விகிதம் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 2 ஆண்டுகள் ஆகும்.

    இந்தநிலையில் கடந்த 25-ந் தேதி முதல் வருகிற ஜூன் மாதம் 30-ந் தேதி வரை திருப்பூர் அஞ்சல் கோட்டத்தின் கீழ் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மகளிர் நலன் காக்க சேமிப்பு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இந்த தகவலை திருப்பூர் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    பாஸ்போர்ட்களுக்கு விண்ணப்பிக்க தமிழ்நாட்டில் 12 தபால் நிலையங்களில் விரைவில் புதிய மையங்கள் திறக்கப்படும். விண்ணப்பித்த 6-வது நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறினார். #Passport
    சென்னை:

    பாஸ்போர்ட் வழங்குவதற்கான வழிமுறைகளை எளிமையாக பல்வேறு ஒருங்கிணைந்த சேவையை மேம்படுத்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 2010-ம் ஆண்டு பாஸ்போர்ட் சேவா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைமுறை சிக்கல் எதுவும் இல்லாமல் எளிமையான முறையில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி பி.கே. அசோக்பாபு கூறியதாவது:-

    பாஸ்போர்ட் வழங்கும் சேவையை மேலும் எளிமைப்படுத்தும் வகையில் காவல் துறையின் சரிபார்ப்புக்காக ‘எம் பாஸ்போர்ட் போலீஸ் செயலி’ யை கடந்த ஆண்டு ஜனவரி 4-ந்தேதி முதல்-அமைச்சர் அறிமுகப்படுத்தினார். இதற்காக 1,700 ‘கை கணினி’ (டேப்லெட்) வாங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பம் சரிபார்ப்பு பணியை காவல்துறை துரிதமாக செய்தது. அதன்பின்னர் தமிழகத்தில் 11 லட்சத்து 66 ஆயிரத்து 990 பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. 2014-ம் ஆண்டை ஒப்பிடுகையில் 23 சதவீதம் அதிகமாகும்.

    கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் 63 நாட்கள், திருச்சி புறநகர் 51 நாட்கள், அரியலூர் 48 நாட்களில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு திரும்பி வந்தன.

    பொதுவாக 21 நாட்களுக்கு பிறகு பரிசீலனை செய்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு ரூ.50-ம், 21 நாட்களுக்கு முன்பாக பரிசீலனை செய்து பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு வரும் விண்ணப்பங்களுக்கு பரிசீலனை கட்டணம் ரூ.150 கட்டணமும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த ஆண்டு விரைவான சேவை மூலம் 21 நாட்களுக்கு முன்பாகவே பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்பட்டதால் முழு தொகை மாநில அரசுக்கு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது சராசரியாக விண்ணப்பித்த 6 நாளில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது.

    நாடு முழுவதும் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் 10 சதவீதம் தமிழகத்தில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் உள்ள 4 மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்களின் கீழ் 12 தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. விரைவில் தமிழகத்தில் சென்னை (வடக்கு) கடற்கரை ரெயில் நிலையம் அருகில் உள்ள தலைமை தபால் நிலையம், ராணிப்பேட்டை, ஆரணி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ராஜபாளையம், போடிநாயக்கனூர், ராமநாதபுரம், குன்னூர், ஈரோடு, தர்மபுரி ஆகிய 12 இடங்களில் உள்ள தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் மையம் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகள் நடந்து வருகிறது.

    இங்கு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அந்தந்த மண்டல அலுவலகங்களுக்கு விண்ணப்பங்கள் ஆன்-லைனில் அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Passport
    ×