என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரி விதிப்பு"

    • நான் விதித்த வரி மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.
    • சாதனை அளவில் நாடு கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டோம்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது 2-வது ஆட்சி காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி பாராளுமன்றத்தில் உரையாற்றினார். தனது ஆட்சியின் முக்கிய சாதனைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    நான் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு காலத்திலேயே யாரும் பார்த்திடாத மாற்றத்தை அடைந்து உள்ளோம். எனது ஆட்சி அமெரிக்காவின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது. இது ஒரு யுகத்திற்கான திருப்பம் ஆகும்.

    அமெரிக்க பொருளாதாரம் வலுப்பெற்று வருகிறது. நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. ஒரு ஆண்டுக்கு முன்பு இருந்த பொருளாதார தேக்கநிலை, பணவீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு உள்ளோம். உலக அரங்கில் அமெரிக்காவுக்கு மீண்டும் மரியாதை கிடைத்துள்ளது. நாட்டின் எதிரிகள் பீதியில் உள்ளனர்.

    அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதித்தன. இதனால் அந்த நாடுகள் மீது வரி நடவடிக்கைகளை எடுத்தேன். அமெரிக்காவின் பொருளாதார மாற்றத்திற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று இந்த வரி விதிப்பு ஆகும். பல தசாப்தங்களாக நம்மை ஏமாற்றி வந்த நாடுகள் இப்போது நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வரிகள் மூலம் நமக்குக் கொடுத்து வருகின்றன.

    அவர்கள் நம்மை மிகவும் மோசமாக ஏமாற்றி வந்தனர். வெளிநாடுகளால் செலுத்தப்படும் வரிகள் நவீன கால வருமான வரி முறையை கணிசமாக மாற்றும். அமெரிக்க மக்களிடமிருந்து ஒரு பெரிய நிதிச் சுமையை நீக்கும். வரி விதிப்பு மூலம் பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒப்பந்தங்கள் அனைத்தும் முடிந்துவிட்டன. அவர்கள் முன்பு போல் பணம் சம்பாதிக்கவில்லை. ஆனால் நாம் நிறைய பணம் சம்பாதிக்கிறோம்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கையை ரத்து செய்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒரு துரதிருஷ்டவசமான தீர்ப்பை வழங்கியது. ஆனால் அனைத்து நாடுகளும், நிறுவனங்களும் தாங்கள் ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தை வைத்திருக்க விரும்புகின்றன. நான் விதித்த வரி மூலம் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது.

    இந்த வரிகள் சட்டபூர்வமானது. அது தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். வரிகள் மூலம் அமெரிக்காவுக்கு பணம் குவிகிறது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துகிறது.

    நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து வருகிறோம். சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துகிறோம். அவர்கள் நமக்கு தேவையில்லை. சாதனை அளவில் நாடு கடத்தல் நடவடிக்கையை மேற்கொண்டோம்.

    சட்டவிரோத குடியேறிகளுக்கு வணிக ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதை தடுக்கும் டலிலா சட்டத்தை பாராளுமன்றம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ஆபரேஷன் மிட்நைட் ஹேமர் நடவடிக்கை மூலம் அணுசக்தி திட்டத்தை நாங்கள் அழித்தோம். இல்லையென்றால் ஈரானின் ஆட்சி பயங்கரவாதத்தை பரப்பியிருக்கும். ஈரானிடம் அணு ஆயுதத்தை வைத்திருக்க அனுமதிக்க முடியாது.

    ஈரான் ஏற்கனவே ஐரோப்பாவையும் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களையும் அச்சுறுத்தக்கூடிய ஏவுகணைகளை உருவாக்கியுள்ளன. விரைவில் அமெரிக்காவை அடையும் ஏவுகணைகளை உருவாக்க பணியாற்றி வருகின்றனர்.

    எதிர்காலத்தில் ஈரானின் எந்தவொரு அணுசக்தி லட்சியங்களையும் அமெரிக்கா பொறுத்துக்கொள்ளாது என்றார். 

    • பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி டிரம்ப்பின் வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
    • வேறு ஒரு அதிகாரம் செயல்படுத்தப்படும் வரை இந்த புதிய வரி அமலில் இருக்கும்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.

    அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார். சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.

    உலக நாடுகள் மீதான பரஸ்பர வரி உள்பட அமெரிக்க அவசர அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், டிரம்ப் விதித்த வரிகளுக்கு எதிராக அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

    இதில் நேற்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் டிரம்ப் அமல்படுத்திய வரி விதிப்பு செல்லாது என்று தெரிவித்தனர். 6 நீதிபதிகள் அளித்த தீா்ப்பில், வரி விதிக்கும் அதிகாரத்தை அமெரிக்க பாராளுமன்றத்துக்குத்தான் அரசமைப்புச் சட்டம் மிகத் தெளிவாக வழங்கியுள்ளது. அரசமைப்புச் சட்டத்தை வகுத்தவா்கள் அந்த அதிகாரத்தை அரசு நிா்வாகத்துக்கு அளிக்கவில்லை.

    எனவே டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என்று அறிவித்தனர். 3 நீதிபதிகள் டிரம்ப்பின் வரி விதிப்புகள் சட்டபூா்வமானவைதான் என்று தெரிவித்தனா்.

    பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பின்படி டிரம்ப்பின் வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பால் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்தார். இந்த தீர்ப்பால் ஏற்பட்டுள்ள பின்னடைவை சமாளிக்க உலகளாவிய 10 சதவீத வரி விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்து உள்ளார். அரசியலமைப்பு சட்டம் 122-ன் கீழ் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளுக்கும் தற்காலிகமாக 10 சதவீத வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அரசியலமைப்பு சட்டம் 232 மற்றும் 301 ஆகிய பிரிவுகளின் கீழ் விதிக்கப்பட்ட வரிகள் இன்னும் நடைமுறையில் உள்ளன. தற்போது கூடுதலாக பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத உலகளாவிய கட்டணத்தை விதிக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுவேன். இந்த சட்ட பிரிவு அனைத்து நாடுகளுக்கும் 150 நாட்கள் வரை 15 சதவீதம் வரி விதிக்க அனுமதிக்கிறது. அமெரிக்க அரசு விதித்து உள்ள வரிகள் தொடரும். எதுவும் ரத்தாகாது.

    அமெரிக்காவுக்கு எதிராக நியாயமற்ற முறையில் வரிகளை விதிக்கும் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும். வரி விதிப்புகளை செயல்படுத்த மாற்று வழிகள் உள்ளன என்றார்.

    இதற்கிடையே கூடுதல் 10 சதவீத வரி விதிப்பு உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார்.

    புதிய வரி உத்தரவில் கையெழுத்திட்ட பிறகு, டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில், இந்த வரி உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்தார்.

    இந்த உத்தரவில், சில குறிப்பிட்ட கனிமங்கள், இயற்கை வளங்கள் மற்றும் உரங்கள், ஆரஞ்சு மற்றும் மாட்டிறைச்சி போன்ற சில வேளாண் பொருட்கள், மருந்துகள் சில மின்னணு பொருட்கள் மற்றும் சில வாகனங்கள் உள்பட பல்வேறு வகையான விலக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    பரஸ்பர வரிக்கு பதிலாக அரசியலமைப்பு சட்டம் 122 சட்டத்தை தற்காலிகமாக டிரம்ப் பயன்படுத்தி உள்ளார். இந்த சட்ட பிரிவு மூலம் விதிக்கப்படும் வரி 150 நாட்கள் வரைதான் அமலில் இருக்கும். அதன் பின்னரும் வரி தொடர வேண்டும் என்றால் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் டிரம்ப் மற்ற விதிகளை பயன்படுத்தியும் சில வரிகளை விதித்தார். இதில் வர்த்தக விரிவாக்க சட்டம் 1962 பிரிவு 232-யை பயன்படுத்தி பல்வேறு வரிகளை விதித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள், பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள். இந்த தற்காலிக வரி விதிப்பு வருகிற 24-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    வேறு ஒரு அதிகாரம் செயல்படுத்தப்படும் வரை இந்த புதிய வரி அமலில் இருக்கும். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் அனைத்து நாடுகளும் இதற்கு கட்டுப்பட வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    டிரம்ப் தற்போது அறிவித்துள்ள உலகளாவிய 10 சதவீத வரி விதிப்பு அறிவிப்பால் இந்தியா மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைந்தது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பிற்குப் பிறகு, இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்காவில் 10 சதவீத பரஸ்பர வரி மட்டுமே விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் அது தற்காலிகமானதுதான். வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை முடிவு செய்யப்பட்ட வரி விகிதங்களை செயல்படுத்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதால் 10 சதவீத வரி தற்காலிகமானது என்று வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. இதன்மூலம் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு ஏற்கனவே விதித்த வரிகளை அமல்படுத்த டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    • பல்வேறு நாடுகளின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார்.
    • இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    வாஷிங்டன்:

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார்.

    உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

    ஏற்கனவே அமெரிக்க கீழமை நீதிமன்றம் அதிபர் டிரம்ப் விதிக்கும் வரிகள் அனைத்தும் சட்டவிரோதமானவை எனக்கூறி கடந்த ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

    • அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.
    • நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாரும் வாக்கு சீட்டு முறையில் ஓட்டளிக்க கூடாது.

    அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல்நாளில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    உலக நாடுகளுக்கு வரி விதிப்பதில் மும்முரம் காட்டினார். தற்போது அவரது கவனம் தேர்தல் மீது சென்றுள்ளது. அமெரிக்காவில் தேர்தல் சீர்த்திருத்தங்களுக்கு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறிருப்பதாவது:- அமெரிக்க தேர்தலில் வாக்கெடுப்பின் போது மோசடி செய்யப்பட்டன, திருடப்பட்டன. நாம் அவற்றை சரி செய்ய போகிறோம். தேர்தல் சீர்திருத்தங்கள், கடுமையான கட்டுப்பாடுகள் தேவை.

    * சில சந்தர்ப்பங்களைத் தவிர வாக்காளர்கள் ஓட்டளிக்க அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்.

    * அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் அடையாள அட்டையை காட்ட வேண்டும்.

    * மெயிலில் இனி வாக்கு சீட்டுகள் இல்லை. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், ராணுவத்தினர் தவிர மற்ற யாரும் வாக்கு சீட்டு முறையில் ஓட்டளிக்க கூடாது.

    இந்த நடைமுறைகளை அனைத்து குடியரசு கட்சியினரும், பின்பற்றுவதற்காக போராடுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

    • அமெரிக்காவின் விவசாய பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
    • இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும் ஒரு சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் கொடுத்துள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை செயலாளர் புரூக் ரோலின்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வழியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இதன் மூலம் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடையும்.

    2024 ஆம் ஆண்டில், இந்தியாவுடனான அமெரிக்காவின் விவசாய வர்த்தக பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகை அமெரிக்க விவசாய பொருட்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும், மேலும் இன்றைய ஒப்பந்தம் இந்தப் பற்றாக்குறை சரி செய்யப்படும்" என்று தெரிவித்தார். 

    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

    இன்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.

    அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்ட நிலையில் இருக்கைக்கு செல்ல சபாநாயகர் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளியால் மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    • வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.

    Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற NDA நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கைக்காக பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.

    • இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
    • இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப் அவர்களுக்குப் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.

    Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப் அவர்களுக்குப் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளும், மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது நமது மக்களுக்குப் பயனளிப்பதோடு, இருதரப்பு ஒத்துழைப்பிற்கான அபரிமிதமான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

    உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு அதிபர் டிரம்ப் அவர்களின் தலைமை மிகவும் அவசியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்குகிறது.

    எங்களது கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்குக் கொண்டு செல்ல அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். 

    • உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசியதை பெருமையாக கருதுகிறேன்.

    வர்த்தகம் மற்றும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் அவர் ஒப்புக்கொண்டார்.

    இதன்மூலம் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • அனைத்து கனடா விமானங்களுக்கும் சான்றிதழை அமெரிக்கா ரத்து செய்யும்.
    • பிரிவினைவாத குழுவிற்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல்.

    அமெரிக்கா-கனடா இடையே வர்த்தக போர் இருந்து வருகிறது. இதற்கிடையே சீனாவுடன் கனடா வர்த்தகத்தில் ஈடுபட்டால் அந்த நாடு மீது 100 சதவீத வரி விதிப்பேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் விற்கப்படும் கனடா விமானத்திற்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்து உள்ளார்.

    அமெரிக்காவை சேர்ந்த கல்ப்ஸ்ட்ரீம் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ஜெட் விமானங்களுக்கு சான்றளிக்க கனடா மறுத்ததற்குப் பதிலடியாக இந்த வரி நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் தெரிவித்தார்.

    மேலும், அனைத்து கனடா விமானங்களுக்கும் சான்றிதழை அமெரிக்கா ரத்து செய்யும் என்றார்.

    இந்த நிலையில் மேற்கு கனடாவில் எண்ணை வளம் மிக்க ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள பிரிவினைவாத குழுவிற்கும், அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையே ரகசிய சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதையடுத்து கனடா பிரதமர் மார்க் கார்னி கூறும்போது, கனடாவின் இறையாண்மையை அமெரிக்கா மதிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்றார்.

    • டிரம்ப், பொதுமேடையில் “கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது” என்றார்.
    • கியூபெக் திரும்பிய கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர்.

    சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    அமெரிக்கா அதிபர் டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். முன்னாள் பிரதமர் ட்ரூடோ காலத்தில், டிரம்ப் அவரை "பிரதமர்" என அல்லாமல், "கவர்னர் ட்ரூடோ" என்று அழைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனால் கனடா-அமெரிக்கா இடையேயான உறவு கசக்க தொடங்கியது. இருப்பினும் இதனை புதுப்பிக்கும் முயற்சியில் கனடா சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.

    சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப், மார்க் கார்னி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப் அறிவித்த அமைதி வாரியத்தில் இணைய கார்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று அமைதி வாரியத்தில் இணைய கார்னி ஒத்துக்கொண்டார்.

    மேலும், அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்து கொள்ளவும் கார்னி ஒரு வாய்ப்பாக இதனை கருதினார். இருப்பினும் டிரம்ப் அவருடைய கோரிக்கையை நிராகரித்தார். மேலும், டிரம்ப் இது "பெரிய தலைவர்களுக்கான உருவாக்கப்பட்ட மிக உயரிய குழு, இதில் கனடாவுக்கு இடமில்லை" என்று பகிரங்கமாக அறிவித்தார்.

    மேலும், அவர் பொதுமேடையில் "கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது" என்றார். இதனால் சுவிட்சர்லாந்தில் இருந்து பெரும் ஏமாற்றத்துடன் கார்னி திரும்பினார்.

    பின்னர் கியூபெக் திரும்பிய அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர். அதில் அவர் "கனடா அமெரிக்காவால் உயிர் வாழ்வதில்லை. நாங்கள் கனடியர்கள் என்பதால்தான் கனடா செழிக்கிறது." என்றார்.

    பின்னர் அமெரிக்கா-கனடா இடையிலான நீண்டகால உறவைப் பாராட்டிய கார்னி, அதே நேரத்தில், எங்கள் வீட்டின் உரிமையாளர்கள் நாங்களே. இது எங்கள் நாடு; எங்கள் எதிர்காலம்; முடிவு எங்களிடமே உள்ளது. மேலும், நடுத்தர சக்தி நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெரும் சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகவும், சுங்க வரிகளை அழுத்தம் செலுத்தும் கருவியாகவும், நிதி கட்டமைப்புகளை கட்டாயப்படுத்தும் சாதனமாகவும், விநியோகச் சங்கிலிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பலவீனங்களாகவும் மாற்றத் தொடங்கியுள்ளன, என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு டிரம்ப் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்ன நினைத்துக்கொண்டுள்ளார் என தெரியவில்லை. எங்கள் தயவு இல்லாமல் சீனாவை சார்ந்து இருக்க விரும்புகிறாரா கவர்னர் கார்னி.

    சீனப்பொருட்களை கனடாவில் இறக்குமதி செய்தால் அவர்கள் போகிற போக்கில் உங்களை விழுங்கிவிடுவார்கள். அதனை மீறி நீங்கள் சீனா உடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டால் உங்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்படும்" என்றார்.

    முன்னதாக அமெரிக்காவின் அடுத்தக்கட்ட பாதுகாப்பு அம்சமான தங்க கவசத்தில் இணைய கனடா மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    • அமெரிக்க வர்த்தகர்கள் புதிய ஆர்டர்களை நிறுத்தவும், ரத்து செய்யவும் தொடங்கி உள்ளனர்.
    • இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தைகளை உருவாக்குவது என்பது 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும்.

    திருப்பூரை சேர்ந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் சக்திவேல் புது டெல்லியில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து இந்திய ஆயத்த ஆடை துறை எதிர்கொண்டு வரும் முக்கிய சவால்கள் குறித்தும் அமெரிக்காவில் சமீபத்திய இறக்குமதி வரி நடவடிக்கை ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்தும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் மிகப்பெரிய ஆயத்த ஆடை ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவிற்கு செல்லும் ஏற்றுமதிகளை பாதுகாக்க இந்தியா-அமெரிக்கா வரி விவகாரத்தில் உடனடியாக தீர்வு காண வேண்டிய தேவை உள்ளது.

    50 சத விகித அதிக வரி விதிப்பு காரணமாக வர்த்தகர்கள் ஆர்டர்கள் ரத்து செய்ய ப்படும் அபாயம் , உற்பத்தி குறைப்பு , வேலை வாய்ப்பு இழப்பு மற்றும் இந்தியாவின் சந்தைப்பங்கை நிரந்தரமாக இழக்கும் நிலை போன்ற கடுமையான சூழ்நிலைகள் உருவாகி வருகிறது.

    அமெரிக்க வாடிக்கை யாளர்களை தக்க வைத்து க்கொள்ள ஏற்றுமதி யாளர்கள் ஏற்கனவே 25 சதவீதம் விலை குறைப்பை ஏற்றுக்கொண்டு ள்ளதாகவும், இதன் காரணமாக நிறுவனங்களின் லாபம் முற்றிலும் இல்லாததுடன் சேமிப்புகளும் குறைந்து வருவதால் நீண்ட காலத்திற்கு இந்நிலையை தொடர முடியாத சூழல் ஏற்பட்டு உள்ளது.

    தற்போது அமெரிக்க வர்த்தகர்கள் புதிய ஆர்டர்களை நிறுத்தவும், ரத்து செய்யவும் தொடங்கி உள்ளனர். அதற்கு ஈடாக இந்தியாவில் உள்ள ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தைகளை உருவாக்குவது என்பது 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும். இச்சூழ்நிலையில் சலுகை வசதிகள் கொண்ட போட்டி நாடுகள் இந்தியாவின் இடத்தை நிரந்தரமாக பிடித்து விடும் அபாயம் உள்ளது.

    இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதியை பாதுகாக்க இந்தியா-அமெரிக்கா இறக்குமதி வரி சிக்கல் அல்லது வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். முடியாத பட்சத்தில் ஒப்பந்தம் முடியும் வரை இடைக்கால வரி தளர்வு அல்லது நிறுத்தம் வழங்க வேண்டும் என வலியுறுத்த ப்பட்டுள்ளது.

    மேலும் 3 முதல் 6 மாதங்கள் கூட தாமத மானால் இந்தியாவின் முக்கியமான ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை வளர்ச்சிக்கு திரும்ப முடியாத நிரந்தர இழப்பு ஏற்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×