என் மலர்
நீங்கள் தேடியது "அமெரிக்க அதிபர்"
- தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருகிறது.
- ஜனநாயக கட்சியினர் ட்ரம்ப் உரையில் குறுக்கிட்டனர்
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை தான் நிறுத்தாவிட்டால், 35 மில்லியன் மக்கள் இறந்திருப்பார்கள் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
நேற்று 100 நிமிடங்களுக்கு மேல் ஆற்றிய யூனியன் உரையில், மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் போரை அவர் நிறுத்தியாக தெரிவித்தார்.
"நான் பதவியேற்ற முதல் 10 மாதங்களில், எட்டுப் போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன்... இதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான மோதலும் அடங்கும், அது ஒருவேளை அணு ஆயுதப் போராகக்கூட மாறியிருக்கக்கூடும். எனது தலையீடு மட்டும் இல்லையென்றால், 3.5 கோடி (35 மில்லியன்) மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறினார்.' என தெரிவித்தார்.
100வது முறை...
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து இந்தியா-பாகிஸ்தான் போரை தான்தான் முடிவுக்கு கொண்டுவந்ததாக ட்ரம்ப் தெரிவித்து வருகிறார். தற்போது வரை சுமார் 100 முறை இதே கருத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் ட்ரம்பின் இந்தக் கூற்றுக்கு இந்தியா தொடர்ந்து மறுப்புதெரிவித்து வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போர் மட்டுமின்றி, கம்போடியா - தாய்லாந்து, கொசோவோ -செர்பியா, இஸ்ரேல் - ஈரான், எகிப்து - எத்தியோப்பியா, ஆர்மீனியா - அஜர்பைஜான், காங்கோ - ருவாண்டா, மற்றும் காசா போர் ஆகியவற்றையும் நிறுத்தியதாக கூறினார். தற்போது காசா போர் மிக குறைந்த அளவிலேயே நடந்துவருவதாகவும் தெரிவித்தார்.
ஒரு கட்டத்தில், சில ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிரம்பின் உரையில் குறுக்கிட்டனர். அதற்குப் பதிலளிக்கும் விதமாக அவர், 'இது வேடிக்கையாக இல்லையா? இவர்கள் நோயுற்ற (மனநிலை பாதிக்கப்பட்ட) மனிதர்கள்' என்று கூறினார்
- அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது.
- அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன்கீழ் இந்த பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார். இதற்கு எதிராக எதிர்க்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இதை விசாரித்த அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு, அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு சட்டவிரோதமானது என்று தீர்ப்பு அளித்தது. பரஸ்பர வரி விதிப்பு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. இதனால் அதிபர் டிரம்ப் கடும் அதிருப்தி அடைந்து நீதிபதிகளை கடுமையாக விமர்சித்தார்.
இதற்கிடையே பரஸ்பர வரியை கோர்ட்டு ரத்து செய்ததால் அதிபரின் சிறப்பு அதிகாரத்தைப் (சட்டப்பிரிவு 122) பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் புதிதாக 10 சதவீத வரி விதிக்கப்படுகிறது என்று டிரம்ப் அறிவித்தார்.
பின்னர் அந்த வரியை 15 சதவீதமாக உயர்த்தினார். மேலும், பரஸ்பர வரி விதிப்பை மீண்டும் அமல்படுத்துவதற்கான மாற்று வழிகள் குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
பல தசாப்தங்களாக அமெரிக்காவைச் சுரண்டி வரும் நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரியை, சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட 15 சதவீத அளவுக்கு உடனடியாக உயர்த்துகிறேன்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நேற்று வெளியிட்ட அபத்தமான, மோசமாக எழுதப்பட்ட மற்றும் அசாதாரணமான அமெரிக்க எதிர்ப்பு முடிவை முழுமையாக, விரிவாக மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் எனது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அடுத்த குறுகிய மாதங்களில் எனது நிர்வாகம் புதிய மற்றும் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட புதிய வரி கட்டணங்களை தீர்மானித்து வெளியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அமெரிக்கா அறிவித்தது.
தற்போது பரஸ்பர வரியை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால் இந்தியாவிடம் பழைய வரியான 3.5 சதவீதம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் டிரம்ப் அறிவித்த புதிய வரியான 15 சதவீதத்தால் இந்திய பொருட்களுக்கு 18.5 சதவீதம் வரி வசூலிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
- டிரம்ப் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
- வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.
சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்தப் பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.
அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.
இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலக நாடுகள் மீதான ட்ரம்ப்பின் அதீத வரிவிதிப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட பல பில்லியன் கோடி டாலர் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அதிக வரி விதிப்பால், மக்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வு சட்டவிரோதமானது என இலினாய்ஸ் ஆளுநர் JB Britzker, கலிபோர்னியா ஆளுநர் Gavin Newsom நியூயார்க் ஆளுநர் Kathey Hochul ஆகியோர் காட்டமாக உள்ளனர்.
- ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
- போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு நெருக்கமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் ஈரானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அந்நாட்டின் அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் உங்களின் ராணுவத்தை அழிப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தநிலையில் அமெரிக்கா கடந்த 24 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்கு ஆசியா நோக்கி அனுப்பி வைத்து உள்ளது.
இதையடுத்து இந்த வார இறுதியில் ஈரானை தாக்க அமெரிக்க ராணுவம் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதிபர் டிரம்ப் ஆயுத மோதலுக்கு அனுமதி அளிப்பாரா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை கூறும்போது, இந்த வார இறுதியில் ராணுவம் தாக்குதலுக்கு தயாராக உள்ளது. ஆனால் அதுதான் சிறந்த நடவடிக்கை என்பதில் அதிபர் டிரம்ப் இன்னும் உறுதியாக இல்லை.
அமெரிக்க தலைமைத் தளபதி தனிப்பட்ட முறையில் ராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாதிட்டார். சிறந்த நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசகர்கள் மற்றும் நட்பு நாடுகளிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதிக்குள் டிரம்ப் ஒரு முடிவை எடுப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவர் இதைப் பற்றி சிந்திக்க நிறைய நேரம் செலவிடுகிறார் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 50-க்கும் மேற்பட்ட போர் விமானங்களை அனுப்பி நிலை நிறுத்தியுள்ளது. எப்-16, எப்-22, எப்-35 போர் விமானங்கள் உட்பட பல நவீன விமானங்கள் அங்கு சென்று உள்ளன.
யு.எஸ்.எஸ். ஜெரால்ட் போர்டு போர் கப்பல் இந்த வார இறுதியில் ஈரான் அருகே செல்ல உள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க விமானப்படை டேங்கர்கள் மற்றும் போர் விமானங்கள் மத்திய கிழக்குக்கு நெருக்கமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஈரான் நிச்சயமாக பதிலடி கொடுக்கும். இதன் காரணமாக அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே எந்நேரத்திலும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
- அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
- அமெரிக்கர்கள் ஈரானை நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாக தொடர்ந்து கூறுகிறார்கள்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் இருந்து வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
மேலும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்த ஈரான் அங்கு ராணுவ பயிற்சி மேற்கொண்டது. பயிற்சிகளின் போது நீர்வழியில் செல்லும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தெக்ரானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அயதுல்லா அலி கமெனி பேசியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். உலகின் வலிமையான ராணுவ படை சில சமயங்களில் மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு கடுமையாகத் தாக்கப்படலாம்.
அமெரிக்கர்கள் ஈரானை நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாக தொடர்ந்து கூறுகிறார்கள். நிச்சயமாக ஒரு போர்க்கப்பல் ஒரு ஆபத்தான ராணுவ இருப்பு ஆகும். ஆனால் அந்த போர்க்கப்பலை விட ஆபத் தானது ஒன்று உள்ளது.
அது போர்க்கப்பலுக்கு கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பக் கூடிய ஆயுதம் ஆகும். ஈரான் அரசாங்கத்தை அகற்ற அமெரிக்கா பல ஆண்டுகளாக முயன்று அதில் தோற்றது. அதை நீங்களும் (டிரம்ப்) செய்ய முடியாது என்றார்.
இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறும்போது, அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அதிபர் டிரம்ப் நிர்ணயித்த முக்கிய நிபந்தனைகளுக்கு ஈரான் இன்னும் உடன்படவில்லை.
டிரம்ப் கூறியது போல் இதை ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் மிகவும் விரும்புகிறோம்.
பேச்சுவார்த்தைகளை எவ்வளவு காலம் தொடர வேண்டும் என்பதை டிரம்ப் இறுதியில் முடிவு செய்வார் என்றார்.
- உலகின் மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் எங்களிடம் உள்ளன.
- இன்னும் சில நாட்களில், நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நம்புகிறோம்.
மத்திய கிழக்கு நாடான ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடந்த டிசம்பர் மாதம் முதல், அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.
போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மேற்கொண்ட நடவடிக்கையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 27 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வருகிறது.
இதைதொடர்ந்து அமெரிக்க கடற்படையின் விமானம் தாங்கி கப்பல்கள், போர்க் கப்பல்கள் மேற்கு ஆசிய கடற்பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்கப் படைகள் ஈரானை தாக்கினால், அதன் விளைவுகள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் என்றும் அமெரிக்கர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும். ஈரானை தாக்கும் அல்லது துன்புறுத்தும் எவருக்கும் தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈரான் அமெரிக்காவுடன் விரைவில் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்ளும் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பேச்சுவார்த்தை மூலம் இந்த பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர நான் விரும்புகிறேன். ஆனால் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், அமெரிக்கா இந்தப் பகுதியில் நிலை நிறுத்தி வைத்திருக்கும் ராணுவத்தை பயன்படுத்தத் தயாராக இருக்கிறேன்.
உலகின் மிகப்பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் எங்களிடம் உள்ளன. இன்னும் சில நாட்களில், நாங்கள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம் என்று நம்புகிறோம்.
அப்படி ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி "இது பிராந்தியப் போராக" மாறும் என்று சொன்னது சரியா இல்லையா என்பது தெளிவாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டிரம்ப், பொதுமேடையில் “கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது” என்றார்.
- கியூபெக் திரும்பிய கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர்.
சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். முன்னாள் பிரதமர் ட்ரூடோ காலத்தில், டிரம்ப் அவரை "பிரதமர்" என அல்லாமல், "கவர்னர் ட்ரூடோ" என்று அழைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் கனடா-அமெரிக்கா இடையேயான உறவு கசக்க தொடங்கியது. இருப்பினும் இதனை புதுப்பிக்கும் முயற்சியில் கனடா சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.
சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப், மார்க் கார்னி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப் அறிவித்த அமைதி வாரியத்தில் இணைய கார்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று அமைதி வாரியத்தில் இணைய கார்னி ஒத்துக்கொண்டார்.
மேலும், அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்து கொள்ளவும் கார்னி ஒரு வாய்ப்பாக இதனை கருதினார். இருப்பினும் டிரம்ப் அவருடைய கோரிக்கையை நிராகரித்தார். மேலும், டிரம்ப் இது "பெரிய தலைவர்களுக்கான உருவாக்கப்பட்ட மிக உயரிய குழு, இதில் கனடாவுக்கு இடமில்லை" என்று பகிரங்கமாக அறிவித்தார்.
மேலும், அவர் பொதுமேடையில் "கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது" என்றார். இதனால் சுவிட்சர்லாந்தில் இருந்து பெரும் ஏமாற்றத்துடன் கார்னி திரும்பினார்.
பின்னர் கியூபெக் திரும்பிய அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர். அதில் அவர் "கனடா அமெரிக்காவால் உயிர் வாழ்வதில்லை. நாங்கள் கனடியர்கள் என்பதால்தான் கனடா செழிக்கிறது." என்றார்.
பின்னர் அமெரிக்கா-கனடா இடையிலான நீண்டகால உறவைப் பாராட்டிய கார்னி, அதே நேரத்தில், எங்கள் வீட்டின் உரிமையாளர்கள் நாங்களே. இது எங்கள் நாடு; எங்கள் எதிர்காலம்; முடிவு எங்களிடமே உள்ளது. மேலும், நடுத்தர சக்தி நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெரும் சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகவும், சுங்க வரிகளை அழுத்தம் செலுத்தும் கருவியாகவும், நிதி கட்டமைப்புகளை கட்டாயப்படுத்தும் சாதனமாகவும், விநியோகச் சங்கிலிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பலவீனங்களாகவும் மாற்றத் தொடங்கியுள்ளன, என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு டிரம்ப் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்ன நினைத்துக்கொண்டுள்ளார் என தெரியவில்லை. எங்கள் தயவு இல்லாமல் சீனாவை சார்ந்து இருக்க விரும்புகிறாரா கவர்னர் கார்னி.
சீனப்பொருட்களை கனடாவில் இறக்குமதி செய்தால் அவர்கள் போகிற போக்கில் உங்களை விழுங்கிவிடுவார்கள். அதனை மீறி நீங்கள் சீனா உடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டால் உங்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்படும்" என்றார்.
முன்னதாக அமெரிக்காவின் அடுத்தக்கட்ட பாதுகாப்பு அம்சமான தங்க கவசத்தில் இணைய கனடா மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
- இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு
- அமெரிக்கா 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை
அமெரிக்கா, உலக சுகாதார அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளது. கோவிட் பெருந்தொற்று காலத்தில் உலக சுகாதார அமைப்பு 'சீனாவுக்கு ஆதரவாக' செயல்பட்டதாக விமர்சித்த டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டே அந்த அமைப்பிலிருந்து விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். இது ஒரு வருடத்திற்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.
பெருந்தொற்றை உலக சுகாதார அமைப்பு கையாண்ட விதம் தவறானது என்றும், தன்னைத்தானே சீர்திருத்திக்கொள்ளும் திறன் அதற்கு இல்லை என்றும், அதன் உறுப்பு நாடுகளின் அரசியல் செல்வாக்கிற்கு அது உட்பட்டுள்ளது என்றும் கூறி, அதிலிருந்து விலகும் முடிவை எடுத்ததாக அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை தெரிவித்துள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. மேலும், இந்த விலகல் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு என்று அந்த அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். அமெரிக்கா பாரம்பரியமாக உலக சுகாதார அமைப்பின் மிகப்பெரிய நன்கொடையாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான தனது கட்டணத்தைச் செலுத்தவில்லை, இது ஏற்கனவே அந்த நிறுவனத்தில் பெரும் வேலை இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் வழக்கறிஞர்கள் அமெரிக்கா நிலுவைத் தொகையை செலுத்த கடமைப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாலும், அவ்வாறு செய்ய எந்தக் காரணத்தையும் காணவில்லை என்று வாஷிங்டன் (அமெரிக்கா) கூறியுள்ளது.
- காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
- உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைய சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது.
இதன்மூலம் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், ஜோர்டான், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய எட்டு இஸ்லாமிய நாடுகள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாகச் சேருகின்றன.
காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் தாவோஸ் உலக பொருளாதார மாநாட்டில் அமைதிக் குழுவிற்கான வரைவை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
- ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு.
- அரசு மற்றும் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவற்றால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஈரான் அரசு மற்றும் அந்நாட்டின் உச்ச தலைவர் அய்துல்லா அலி கமேனிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்ததால் அதை ஒடுக்க அரசு நடவடிக்கை எடுத்தது.
போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஈரான் முழுவதும் வன்முறை வெடித்தது. வாகனங்கள், அரசு கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பேரணியாக செல்கிறார்கள். அப்போது அரசு மற்றும் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன.
போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில், போராட்டம் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளதாது.
இதற்கிடையே, ஈரானில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரானில் புதிய அரசை அமைப்பதற்கான காலம் நெருங்கிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
கமேனி போன்ற பலவீனமான தலைவரின் ஆட்சியின் கீழ் வாழத் தகுதியற்ற நாடாக ஈரான் மாறிவிட்டதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
- உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
- ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.
கடந்த வாரம் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் இல்லம் மீது ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. நோவ்கோ பிராட் பிராதியத்தில் உள்ள புதினின் அரசு இல்லத்தின் மீது உக்ரைன் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், அதை பாதுகாப்பு படைகள் முறியடித்ததாகவும் ரஷியா வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜா லாவ்ரோவ் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்தநிலையில் உக்ரைன் டிரோன் தாக்குதலில் புதினின் இல்லத்தை குறி வைக்கவில்லை என்று ரஷியாவின் குற்றச்சாட்டை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான ஏர்போர்ஸ் விமானத்தில் அவர் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியதாவது:-
ரஷிய அதிபர் புதினின் இல்லத்தை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதலை நடத்தவில்லை என்பதை அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். அங்கு தாக்குதல் நடந்ததாக நான் நம்பவில்லை. அன்றைய தினம் ரஷிய அதிபருடன் தொலைபேசியில் பேசினேன். புதினும் இந்த விஷயத்தை எழுப்பினார். இந்த குற்றச்சாட்டால் நான் மிகவும் கோபம் அடைந்தேன்.
இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
20 அம்ச திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அமெரிக்கா புறப்பட்டு சென்ற மறுநாள் ரஷியா இந்த குற்றச்சாட்டை தெரிவித்தது.
இது சமாதான முயற்சிகளை பலவீனப்படுத்தும் மாஸ்கோவின் முயற்சி தவிர வேறொன்றுமில்லை என்று ஐரோப்பிய அதிகாரிகள் வாதிட்ட பிறகு அமெரிக்காவின் இந்த முடிவை டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
- நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
- அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என டிரம்ப் எச்சரிக்கை.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பல இடங்களில் போராட்டக்காரர்கள்- போலீசார் இடையே மோதல் நடந்தது. இதில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த மோதலில் 8 பேர் பலியானார்கள்.
இதற்கிடையே அமைதியான போராட்டங்களுக்கு எதிராக ஈரான் அரசு வன்முறையை பயன்படுத்தினால், அமெரிக்க அரசு களத்தில் இறங்கி பதிலடி கொடுக்க தயாராக உள்ளது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் டிரம்ப்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் ஆலோ சகர் அலி ஷாம்கானி கூறுகையில்," ஈரானின் பாதுகாப்பு என்பது யாராலும் தாண்டக்கூடாத சிவப்பு கோடு. இதை மீறி வெளிநாட்டு சக்திகள் உள்நாட்டு விஷயத்தில், பாதுகாப்பில் தலையிட நினைத்தால் அவர்களின் கை துண்டிக்கப்படும். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் காசாவில் அமெரிக்காவின் தலையீடு என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தியது என்பதை ஈரான் மக்கள் நன்கு அறிவார்கள்" என்றார்.
ஈரானின் தேசிய பாது காப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி கூறும் போது,"ஈரானில் போராட் டங்களை அமெரிக்காவும், இஸ்ரேலும் தூண்டி விடு கின்றன. எங்களின் உள்நாட்டுப் பிரச்சினையில் அமெரிக்கா தலையிடுவது முழுப் பிராந்தியத்திலும் குழப்பத்திற்கும் அமெரிக்க நலன்களின் அழிவிற்கும் வழிவகுக்கும் என்பதை டிரம்ப் தெரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
அதேபோல் ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் கூறும்போது, அனைத்து அமெரிக்க ராணுவ தளங்களும் படைகளும் சட்ட பூர்வமான இலக்குகளாக மாறும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே ஈரானின் ஐ.நா. தூதர் அமீர் சயீத் இரவானி, ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு சபைத் தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஈரானில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள சட்ட விரோத அச்சுறுத்தல்களை ஐ.நா. சபை கண்டிக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். அந்த அறிக்கைகள் ஐ.நா. சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்" என்றும் கூறி உள்ளார்.
அந்தக் கடிதத்தில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், ஈரான் தற்காப்பு உரிமையை உறுதியாக பயன்படுத்தும் என்று கூறி உள்ளதாகத் தெரிகிறது.






