search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gaza"

    • ஒப்பந்தத்தின்படி இரண்டாவது கட்டத்தில் 5 இஸ்ரேலிய பெண் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும்.
    • ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்று இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

    அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.

    பிணைக்கைதிகளான ஆகிய 3 இளம்பெண்களை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

    இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் நேற்று விடுவித்தது. விடுவிக்கப்பட்ட கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர். 

    பின்னர் அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் வந்தடைந்த அவர்கள், உடல்நிலை பரிசோதனைக்கு பின் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. 

     

    ஆனால் ஒப்பந்தத்தின்படி இரண்டாவது கட்டத்தில் 5 இஸ்ரேலிய பெண் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால் 4 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்தப்படி நேற்று, பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை.

    இந்நிலையில், ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்றும், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதனால் விடுவிக்கப்பட்ட 200 பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்குள் செல்ல முடியாமல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும், வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. ஹமாசின் அக்டோபர் 7, 2023 தாக்குதலின் போது Kibbutz Nir Oz பகுதியில் இருந்து அர்பெல் யாஹுட் கடத்தப்பட்டார். அதே தாக்குதலில் அவரது சகோதரர் உயிரிழந்தார். அவரது உறவினர்கள் பலர் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

    • போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.
    • கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் விடுவிக்கப்பட்டனர்.

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

    அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக் கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துவிட்டனர்.

    கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சமீபத்தில் அமலுக்கு வந்தது.

    பிணைக்கைதிகளான ரோமி கொனின் (24), ஏமி டமாரி (28), டோரன் ஸ்டான்பிரிசர் (31) ஆகிய 3 பேரை ஹமாஸ் அமைப்பு சமீபத்தில் விடுதலை செய்தது. இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும்.

    இந்நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுத்துள்ளது. விடுவிக்கப்பட்ட கரினா அரிவ், டேனிலா கில்போவா, நாமா லெவி மற்றும் லிரி அல்பாக் ஆகிய 4 பெண்கள் காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    பின்னர் அவர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பிணை கைதிகளை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது.

    • பொருட்கள் காசாவுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.
    • ஆங்காங்கே சிறிய திருட்டுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.

    போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், காசாவில் நிவாரண பொருட்கள் செல்வதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. அமப்பின் உதவி செய்யும் குழுக்கள், அரசு மற்றும் தனியார் துறைகள் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் காசாவுக்கு லாரிகள் மூலம் எடுத்து செல்லப்பட்டன.

    நிவாரணம் மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் செல்லும் லாரிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகளவிலும், கொள்ளை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று ஐ.நா. தெரிவித்துள்ளது. ஆங்காங்கே சிறிய திருட்டுகள் மட்டுமே நடைபெற்றுள்ளன.

    இஸ்ரேல் - காசா இடையிலான போர் நிறுத்தத்தின் மூன்றாம் நாளில் கிட்டத்தட்ட 900 லாரிகளில் உதவி பொருட்கள் காசாவிற்குள் சென்றதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது ஒப்பந்தத்தில் கோரப்பட்ட 600 லாரிகளை விட கணிசமாக அதிகம் ஆகும்.

    மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான துணை ஐ.நா. ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் முஹன்னத் ஹாடி நேற்று (செவ்வாய் கிழமை) காசாவில் இருந்து ஜெருசலேமுக்கு திரும்பினார். அப்போது ஐ.நா. செய்தியாளர்களிடம் பேசிய ஹாடி, "பாலஸ்தீனியர்கள் தெருக்களில் நம்பிக்கையுடன் எதிர்நோக்குவது, சிலர் வீடு திரும்புவது, சிலர் சாலைகளை சுத்தம் செய்ய தொடங்குவதை பார்க்கும் போது கடந்த 35 ஆண்டுகால வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்று," என தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், ஐ.நா. உலக உணவுத் திட்டத்தால் நடத்தப்படும் பொது சமையலறை, பிற இடங்களில் குடும்பங்களுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையில், அவர்கள் அனைவரும் மனிதாபிமான உதவி தேவை என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் வீட்டிற்குச் செல்லவும், வேலை செய்யவும், பணம் சம்பாதிக்கவும் அவர்கள் விரும்புவதாக கூறினார்.

    "மனிதாபிமான உதவியைச் சார்ந்து இருப்பது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. பாலஸ்தீனியர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வியை மீண்டும் தொடங்குவது குறித்தும், ஒரு வருடத்திற்கும் மேலாக ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருக்கும் பெண்களுக்கு தங்குமிடம், போர்வைகள் மற்றும் புதிய ஆடைகள் தேவைப்படுவது குறித்தும் பேசினர். வரும் நாட்களில் கூடாரங்கள் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

    • காசாவில் இருந்த 23 லட்சம் மக்களில் 19 லட்சம் மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்
    • 100க்கும் மேற்பட்ட லாரிகள் முழுநேர வேலை செய்தாலும், இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்.

    அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேலைத் தாக்கியதில் இருந்து காசாவில் போர் தொடங்கியது, இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் கடத்தப்பட்டனர். சுமார் 100 பணயக்கைதிகள் இன்னும் காசாவிற்குள் உள்ளனர், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

    இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் 46,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தெரிவித்துள்ளது. 110,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர். 17,000 க்கும் மேற்பட்ட போராளிகளைக் கொன்றதாக இஸ்ரேலிய இராணுவம் கூறுகிறது. ஆனால் அதற்கான ஆதாரத்தை அதனால் தர முடியவில்லை.

    இஸ்ரேலிய இராணுவத்தின் தொடர் குண்டுவீச்சுகள் காசாவின் பெரும்பகுதியை தரைமட்டமாக்கியுள்ளது. காசாவில் இருந்த 23 லட்சம் மக்களில் 19 லட்சம் மக்களை இடம்பெயர்ந்துள்ளனர்.

     

    இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் நேற்று [ஞாயிற்றுக்கிழமை] முழுமையாக நடைமுறைக்கு வந்தது. முதற்கட்டமாக இஸ்ரேலிய பணய கைதிகள் மூவரை ஹமாஸும், பாலஸ்தீனிய கைதிகள் 90 பேரை இஸ்ரேலும் விடுவித்தது.

    போர் நிறுத்தம் தொடங்கியுள்ள நிலையில் காசாவில் தாங்கள் கைவிட்டுச் சென்ற வீடுகளை நோக்கி மக்கள் மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர்.

    15 மாதங்களாக வெளியேற்றப்பட்டு சொந்த நாட்டில் அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்த காசா மக்கள் கல்லாகவும் மண்ணாகவும் எஞ்சிய கட்டடங்களை கடந்து சிதிலங்களுக்கு ஊடாக தங்கள் வீடுகளின் எச்சங்களுக்குத் திரும்பத் தொடங்கினர்.

    தெருக்களை சுத்தம் செய்து தங்கள் வாழ்வை மீண்டும் கட்டமைக்கும் முயற்சியை நம்பிக்கையுடன் தொடங்கியுள்ளனர். ஆனால் சேதங்கள் சரிசெய்யப்பட்டு காசாவில் மீண்டும் இயல்வு வாழ்க்கை திருப்புவது அவ்வளவு எளிதானது அல்ல என்பதே துரதிஷ்டவசமாக உண்மை.

     

    காசாவில் புனரமைப்பு பணிகளை நடத்தி முடிக்க 350 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி, ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் வெளியிட்ட தரவின்படி, காசாவில் உள்ள 69% கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.

    சுமார் 245,000 வீடுகள் உட்பட பல கட்டடங்கள் அழிக்கப்பட்டுள்ளன என்று ஐநா மதிப்பிட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட லாரிகள் முழுநேர வேலை செய்தாலும், இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.

    ஆனால் நம்பிக்கை மிகுந்த ஒரு பால்ஸ்தீனியர் கூறுவதுபோல், "நாங்கள் இனியும் ஒரு கூடாரத்தில் இருக்கலாம், ஆனால் வித்தியாசம் என்னவென்றால், இரத்தக்களரி நின்றுவிடும், பயம் அகன்றுவிடும், நாங்கள் நிம்மதியாக தூங்குவோம்" என்பது ஒன்றே காசா மக்களுக்கு ஆறுதலாக அமைத்துள்ளது. 

     

    • புளோரிடா தோட்டமான மார்-ஏ-லாகோவில் ஒரு மணிநேர உரையாற்றினார்
    • கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவதையும் டிரம்ப் நிராகரிக்கவில்லை.

    அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் வரும் ஜனவரி 20 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்பதற்குள் காசாவில் வைத்திருக்கும் பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காவிட்டால், மத்திய கிழக்கில் மோதல் வெடிக்கும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்

    செவ்வாயன்று தனது புளோரிடா தோட்டமான மார்-ஏ-லாகோவில் ஒரு மணிநேர செய்தி மாநாட்டில் உரையாற்றிய டொனால்டு டிரம்ப், நான் பதவியேற்கும் நேரத்தில் அவர்கள் திரும்பி வரவில்லை என்றால், மத்திய கிழக்கில் அனைத்து நரகங்களும் வெடிக்கும், இது ஹமாஸுக்கு நல்லதல்ல, வெளிப்படையாக யாருக்கும் நல்லது அல்ல. இஸ்ரேல் மீது ஹமாஸ் ஒருபோதும் தாக்குதல் நடத்தி இருந்திருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் டென்மார்க்கில் உள்ள கிரீன்லாந்தை கைப்பற்ற ராணுவத்தை பயன்படுத்துவதையும் டிரம்ப் நிராகரிக்கவில்லை. மேலும் பதவியேற்றதும் மெக்சிகோ வளைகுடா, அமெரிக்க வளைகுடா என்று மாற்றப்படும் என்றும் தாங்கள் அவர்களுக்கு உதவிகளை வழங்குவதால் அந்த பெயரே பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    • குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள தங்கள் கூடாரங்களில் தஞ்சம் அடைந்திருந்தபோது தாக்குதல் நடந்தது.
    • கத்தாரில் நடக்கும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடர தூதுக்குழுவை நியமித்துள்ளார்.

    நேற்று மற்றும் இன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டனர். மனிதாபிமான மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்கள் உட்பட பல இடங்களைத் இஸ்ரேல் தாக்கியுள்ளது .

    முவாசி மனிதாபிமான வலயத்தில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள், குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள தங்கள் கூடாரங்களில் தஞ்சம் அடைந்திருந்தபோது அங்கு தாக்குதல் நடந்துள்ளது.

    இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் உள்நாட்டுப் பாதுகாப்புத் தலைவர் மனிதாபிமான வலயத்தில் பதுங்கியிருப்பதாகக் குற்றம் சாட்டி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    மேலும் டெய்ர் அல்-பாலாவில் நடந்த மற்றொரு தாக்குதலில் உள்ளூர் பாதுகாப்புக் குழுக்களின் எட்டு உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். தெற்கு காசாவில், கான் யூனிஸில் ஐந்து போலீசார் கொல்லப்பட்டனர்.

    ஹமாஸ் தனது சொந்த நோக்கங்களுக்காக உதவியைப் பயன்படுத்துவதாகக் கூறி, இஸ்ரேல் மீண்டும் மீண்டும் காசாவின் காவல்துறையை குறிவைத்துள்ளது. இது சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உதவி வழங்குவதில் தடையாக உள்ளது.

    மேலும் மூன்று பாலஸ்தீனியர்கள் மகாசியில் தெருவில் நடந்து சென்றபோது கொல்லப்பட்டனர். மகாசி மற்றும் நுஸ்ராத் அகதிகள் முகாம் உட்பட மத்திய காசாவில் நடந்த தாக்குதல்களில் நேற்று பிற்பகுதியிலும் இன்று அதிகாலையிலும் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, கத்தாரில் நடக்கும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளை தொடர தூதுக்குழுவை அங்கீகரித்துள்ளதற்கு மத்தியில் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளது.

    மொசாட், ஷின் பெட் மற்றும் இராணுவத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கிய தூதுக்குழு இன்று புறப்படும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    ஹமாஸ் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை. கடந்த 15 மாத கால மோதலில் அமெரிக்கா தலைமையிலான முந்தைய போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் பலமுறை தோல்வியடைந்தன.

    • மருத்துவமனையின் அருகாமையில் விமானத் தாக்குதல்களில் மருத்துவ ஊழியர்கள் உட்பட 50 பேர் பலியாகினர்.
    • ஆபத்தான நிலையில் இருந்த 15 நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்

    காசா மீது இஸ்ரேல் கடந்த 14 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் 46 ஆயிரதுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளர். லட்சக்கணக்கில் மக்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களும் போதுமான மருத்துவ உதவிகள் இல்லாமல் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் வடக்கு காசாவில் உள்ள கடைசி பெரிய மருத்துவமனையை இஸ்ரேலிய படையினர் மூடியுளளனர்.

    வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா பகுதியில் செயல்பட்டு வந்த கமால் அத்வான் மருத்துவமனையில் நேற்று [சனிக்கிழமை] புகுந்த இஸ்ரேலிய படையினர் நோயாளிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி சுமார் 240 மருத்துவ ஊழியர்களை சிறைபிடித்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

     

    கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியாவை இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் (IDF) சிறைபிடித்து அழைத்துச் சென்றுள்ளனர். அவர் ஒரு ஹமாஸ் பயங்கரவாதி என்று இஸ்ரேலிய படை குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் அதற்கான ஆதாரங்கள் எதையும் வழங்கவில்லை.

    நேற்று முன்தினம் [வெள்ளிக்கிழமை] மருத்துவமனையின் அருகாமையில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்களில் மருத்துவ ஊழியர்கள் உட்பட 50 பேர் கொல்லப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மருத்துவமனையை ஹமாஸ் பயங்கரவாதிகளின் கோட்டை எனக் கூறியுள்ள இஸ்ரேலிய படை, மருத்துவ ஊழியர்களில் டாக்டர் அபு சஃபியாவும் ஒரு ஹமாஸ் பயங்கரவாத செயல்பாட்டாளராகவும், ஹமாஸ் இன்ஜினியரிங் மற்றும் டேங்க் எதிர்ப்பு ஏவுகணை  செயல்பாடுகளில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

     

    ஆபத்தான நிலையில் இருந்த 15 நோயாளிகள், 50 பராமரிப்பாளர்கள் மற்றும் 20 சுகாதாரப் பணியாளர்கள் அருகிலுள்ள இந்தோனேசியன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. மேலும் அந்த பகுதியின் கடைசி பெரிய சுகாதார வசதி சேவையும் தற்போது இல்லை என்று கவலை தெரிவித்துள்ளது.

    மருத்துவமனை அமைந்துள்ள வடக்கு காசாவின் பெய்ட் லாஹியா நகரம், அக்டோபர் மாதம் முதல் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

    இவ்ஸ்த்ரேலிய படை வெளியிட்டுள்ள அறிக்கையில் பயங்கரவாதிகள் கமல் அத்வான் மருத்துவமனையை ஜபாலியாவில் அதன் இராணுவ நடவடிக்கைகளுக்கான கட்டளை மையமாகப் பயன்படுத்துவதை உளவுத்துறை கண்டுபிடித்துள்ளதாகவும் நேற்று [சனிக்கிழமை] 240 போராளிகளைக் கைது செய்ததாகவும் கூறியுள்ளது. 

    • உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.
    • பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.

    பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிரித்து கடந்த வருடம் அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு அந்நாட்டில் ஆபரேஷன் அல்-அக்ஸா மூலம் திடீர் தாக்குதலை நடத்தியது.

    இதில் 1200 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். 100 பேர் வரை பணய கைதிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர். இதற்கு பழிக்கு பழி வாங்க கடந்த 13 மாத காலமாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி 45,227 பேரை கொன்று குவித்துள்ளது.

    இதில் 107,573 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 70 சதவீதம் பெண்களும் குழந்தைகளுமே ஆவர் என்று ஐநா தெரிவித்துள்ளது.

    இந்த தாக்குதல்களில் கை கால்களை இழந்த ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவன் முகமது சயீத் ஷபான்.

    வடக்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஏழு வயது சயீத் தனது இரண்டு கால்களையும் வலது கையையும் இழந்தான். சயீத்தின் கதை சமூக ஊடகங்களில் வைரலானது. அவன் பாலஸ்தீனிய முகாமில் ரோலர் ஸ்கேட்டைப் பயன்படுத்தி சுற்றித் திரியும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவின.

    இது துபாய் நாட்டின் இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது கவனத்துக்கு சென்றுள்ளது. பாலஸ்தீனிய சிறுவன் முகமது சயீத் ஷபானுக்கு செயற்கை உறுப்புக்கள் வழங்குவதாக அவர் தற்போது உறுதி அளித்துள்ளார். 

    • பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 107,573 பேர் காயமடைந்துள்ளனர்.
    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.

    பாலஸ்தீன நகரமாக காசாவை இஸ்ரேல் ராணுவம் கடந்த 14 மாத காலமாக குண்டுகளால் துளைத்து வருகிறது. இந்த தாக்குதல்களால் பலி எண்ணிக்கை 45 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 107,573 பேர் காயமடைந்துள்ளனர்.

     

    இந்நிலையில் நிலையில் வடக்கு தற்போது காசாவில் 2 மருத்துவமனைகள் மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

    வடக்கு காசாவில் செயல்படும் கமால் அத்வான் மருத்துவமனை மீதும், அருகிலுள்ள அல் அவ்தா மருத்துவமனை மீதும் இன்று தாக்குதல் நடந்துள்ளது.

    இஸ்ரேலியப் படைகள் வடக்கு காசா நகரில் உள்ள மற்றொரு பள்ளிக்கூடம் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    முன்னதாக வடக்கு காசாவில் ஜபாலியா அல்-நஸ்லாவில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். 

    • பாஜகவின் விமர்சனத்தை வழக்கமான ஆணாதிக்கம் என்று பிரியங்கா தெரிவித்தார்
    • இந்துக்கள் மீதான அட்டூழியங்களை குறித்து மத்திய அரசு வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

    பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி கைப்பை அணிந்து பாராளுமன்றம் சென்றார். இது இஸ்லாமியர்களை திருப்திப்படுத்தும் செயல் என பாஜக அங்கலாய்த்தது.

    பிரியங்கா காந்தி இந்த விமர்சனத்தை, வழக்கமான ஆணாதிக்கம் என்றும் எதை அணிய வேண்டும், எதை அணியக்கூடாது என  நான் தான் முடிவெடுப்பேன், நான் விரும்புவதை அணிவேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் தற்போது வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக கைப்பை அணிந்து பாராளுமன்றம் வந்துள்ளார். மேலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் வங்கதேச இந்துக்கள் மீது நடக்கும் வன்முறையை கண்டிக்கும் வகையில் பைகளை அணிந்து பாராளுமன்ற வளாகத்தில் இந்துக்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்.

    இதற்கிடையே நேற்று பாராளுமன்றத்தில் பேசிய பிரியங்கா காந்தி, வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான அட்டூழியங்களை குறித்து மத்திய அரசு வங்கதேச அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இக்கட்டில் உள்ளவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    பிரியங்காவின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று இதற்கு தீர்வு காணுமா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

    • ஹிஸ்புல்லா கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது தாக்கியது.
    • 250 பேரை பணய கைதிகளாக கைப்பற்றி சென்றது.

    காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் நான்கு குழந்தைகள் உள்பட ஐந்து பேர் உயிரிழந்தனர் என்று பாலஸ்தீன மருத்துவ துறை தெரிவித்து இருக்கிறது. இந்த தாக்குதலில் மேலும் 15 பேர், பெரும்பாலும் குழந்தைகள் பலத்த காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் ராணுவம் சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹிஸ்புல்லா மீறியதாக குற்றம்சாட்டி இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இஸ்ரேல் படைகள் ஆளில்லா விமானம் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது. காசாவில் போராடி வரும் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ராக்கெட்டுகள், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்கியது.

    கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் நுழைந்து 1200 பேரை கொன்று குவித்தனர். இதில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர். மேலும், 250 பேரை பணய கைதிகளாக கைப்பற்றி சென்றது. இதன் காரணமாகத் தான் காசாவில் போர் தொடங்கியது.

    ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் இதுவரை குறைந்தது 44,500 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    • கிராமத்தில் நடந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
    • இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    பாலஸ்தீனம் மீது கடந்த 13 மாதங்களாகத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் கடந்த செப்டம்பர் இறுதியிலிருந்து அண்டை நாடான லெபனானையும் தாக்கி வருகிறது. லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்துத் தாக்குவதாகக் கூறும் இஸ்ரேல் தலைநகர் பெய்ரூட்டில் குடியிருப்பு கட்டடங்களையும் தகர்த்து வருகிறது.

    லெபனானில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 58 லட்சம் மக்கள் தொகை கொண்ட லெபனானில் இஸ்ரேல் தாக்குதலுக்கு அஞ்சி இதுவரை 1,30, 000 பேர் தங்கள் வீடுகளை விட்டு புலம்பெயர்ந்துள்ளனர்.

    இவர்களில் பெரும்பாலானோர் பெய்ரூட் அருகே உள்ள எல்லை வலியாக அண்டை நாடான சிரியாவுக்குள் அகதிகளாகச் சென்றுள்ளனர். இதற்கிடையே பெய்ரூட் மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்களை அப்பகுதியை காலி செய்யும்படி இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்தது.

    இந்நிலையில் லெபனானில் தலைநகர் பெய்ரூட் முழுவதும் உள்ள பல குடியிருப்புகள் மீது நேற்று [சனிக்கிழமை] இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். 66 பேர் படுகாயமடைந்துள்ளனர். பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமானது.

     

    கிழக்கு லெபனானில் பால்பெக் மாவட்டத்தில் சிம்ஸ்டார் கிராமத்தில் நடந்த தாக்குதலில் நான்கு குழந்தைகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். போதாய் கிராமத்தின் மீதான தாக்குதலில் 5 பேர் என மொத்தம் 13 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருவதால் லெபனானில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. 

    ×