என் மலர்tooltip icon

    உலகம்

    டிரம்பின் அமைதி வாரியத்தில் இணைய ஒப்புதல் அளித்தது இஸ்ரேல்
    X

    டிரம்பின் அமைதி வாரியத்தில் இணைய ஒப்புதல் அளித்தது இஸ்ரேல்

    • அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார்.
    • இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது.

    ஜெருசலேம்:

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் அமைதி வாரியம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த வாரியத்தில் இணையுமாறு பல நாடுகளுக்கு அமெரிக்கா கடிதம் எழுதி உள்ளது.

    காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவது, அங்குள்ள மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவது மற்றும் போருக்குப் பிந்தைய காசாவின் நிர்வாகத்தைச் சீரமைப்பது ஆகியவையே இந்த குழுவின் முக்கிய நோக்கங்களாகும்.

    இதில் இடம் பெற இந்தியா, பாகிஸ்தான், ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்மொழிந்துள்ள காசா அமைதிக் குழுவில் இணைவதற்கு இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாகச் சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இக்குழுவில் இணையும் 8-வது நாடு இஸ்ரேல் ஆகும். இந்த வாரியத்தில் பிரதமர் நேதன்யாகு இணைய ஒப்புக்கொண்டுள்ளார். இதை அவரது அலுவலகம் நேற்று அறிவித்தது.

    டிரம்பின் இந்த வாரியத்தில் அமீரகம், மொராக்கோ, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் இணைய ஒப்புதல் தெரிவித்தன.

    Next Story
    ×