என் மலர்tooltip icon

    இஸ்ரேல்

    • ஆட்சியில் இருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நேதன்யாகு மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.
    • ஜனாதிபதி அலுவலகம், "யாராவது மன்னிப்பு பெற விரும்பினால், அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

    ஊழல் வழக்கில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

    ஆட்சியில் இருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளில் லஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை மீறல் உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகளில் நேதன்யாகு மீது நீதிமன்றத்தில் வழக்குகள் நடந்து வருகிறது.

    குறிப்பாக அவரும் அவரது மனைவி சாராவும் கோடீஸ்வரர்களிடமிருந்து நகைகள் உள்ளிட்ட 260,000 டாலர்கள் மதிப்புள்ள ஆடம்பரப் பொருட்களை வாங்கியது, தனக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட ஊடகங்கள் மீது ஆதிக்கம் செலுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இதில் அடங்கும்.

    இந்நிலையில் நேதன்யாகு மீதான வழக்கை கைவிடும்படி டிரம்ப், இஸ்ரேல் ஜனாதிபதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இஸ்ரேலிய நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து, நேதன்யாகுவுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும், நேதன்யாகுவுக்கு எதிரான நடவடிக்கை அரசியல் ரீதியாக நியாயப்படுத்த முடியாதது என்றும் டிரம்ப் கடிதத்தில் சுட்டிக்காட்டினார்.

    டொனால்டு டிரம்பின் பெரும் ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நேதன்யாகு கூறினார். இருப்பினும் இந்த கடிதத்திற்கு பதிலளித்த இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம், "யாராவது மன்னிப்பு பெற விரும்பினால், அவர்கள் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே தன் மீதான ஊழல் வழக்கில் சாட்சியமளிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற நேதன்யாகு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என்று ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  

    • ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
    • இன்று காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார், காரை ஓட்டி வந்தது ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.

    கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உள்ளிட்ட பல மருத்தவர்கள் சிக்கினர்.

    முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக இன்று காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், டெல்லி கார் வெடி விபத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் எக்ஸ் தள பக்கத்தில் கூறுகையில்,"

    டெல்லி கார் வெடி விபத்தில் தங்கள் உறவுகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

    துயர்மிகு நேரத்தில் இந்தியாவிற்கு இஸ்ரேல் உறுதுணையாக இருக்கும்" என்றார்.

    • வெள்ளிக்கிழமை 3 உடல்களை ஹமாஸ் அமைப்பினர் அனுப்பி வைத்துள்ளனர்.
    • அவைகள் பிணைக்கைதிகளின் உடல்கள் அல்ல என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். அப்போது பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் எடுத்துச் சென்றது.

    இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் காசா மீது ஈவு இரக்கமின்றி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலில் 1200 பேர் உயிரிழந்த நிலையில், காசாவில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்த நிலையில்தான் கடந்த மாதம் இஸ்ரேல்- காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது ஹமாஸ் உயிரோடு உள்ள அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும். பிணைக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்க வேண்டும். அதற்கு இணையாக இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். உயிரிழந்த பாலஸ்தீனர்களை ஒப்படைக்க வேண்டும்.

    கடந்த வெள்ளிக்கிழமை 30 பாலஸ்தீனர்களின் உடல்களை இஸ்ரேல் காசாவுக்கு அனுப்பி வைத்தது. அத்துடன் பிணைக்கைதிகள் விடுவிப்பு- பாலஸ்தீன கைதிகள் விடுதலை ஒப்பந்தம் நிறைவுக்கு வந்தது. ஆனால் ஹமாஸ் இன்னும் அனைத்து உடல்களையும் ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது.

    இதனால் மேற்கொண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படுவது குறித்து பதற்றமான நிலைதான் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு மூன்று உடல்களை இஸ்ரேலுக்கு காசா அனுப்பி வைத்துள்ளது. இஸ்ரேல் உடல்களை ஆய்வு செய்து வருகிறது. அந்த உடல்கள் 2023, அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்டபோது இறந்தவர்களின் உடல்கள் அல்ல என இஸ்ரேல் புலனாய்வுத்துறை கூறியதாக, ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெயர் தெரிவிக்க விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகமும், மூன்று உடல்களும் எந்தவொரு பிணைக்கைதிகள் உடையது அல்ல. ஆனால், விரிவான அறிக்கை ஏதும் கொடுக்கப்படவில்லை.

    அதேவேளையில் ஹமாஸ் ஆயுதப்படை பிரிவு "நாங்கள் உடல்களின் மாதிரிகளை ஒப்படைக்க முன்வந்ததாகவும், ஆனால் இஸ்ரேல் அதை மறுத்துவிட்டு, பரிசோதனைக்காக உடல்களை கேட்டதாகவும். இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளை நிறுத்துவதற்கான உடல்களை ஒப்படைத்தோம்" என தெரிவித்துள்ளது. அந்த உடல்கள் யாருடைய உடல்கள் எனத் தெரியவில்லை.

    ஒப்பந்தத்தின்படி 11 உடல்களை இஸ்ரேல் பெற்றுள்ளது. ஆனால் 17 உடல்களை ஒப்படைப்பதாக ஹமாஸ் தெரிவித்திருந்தது. ஒருசில நாட்கள் இடைவெளி விட்டுவிட்டு ஒன்று அல்லது இரண்டு உடல்களை என ஹமாஸ் உடல்களை ஒப்படைத்து வருகிறது.

    இஸ்ரேல் 225 உடல்களை ஒப்படைத்துள்ளது. இதில் 75 உடல்கள் மட்டுமே உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

    • இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது.
    • ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும்.

    இஸ்ரேல்- காசா இடையிலான டொனால்டு டிரம்பின் முயற்சியால் அமைதிக்கான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முதற்கட்டாக உயிருடன் உள்ள 20 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது.

    தாக்குதலின்போது உயிரிழந்தவர்களின் உடலையும் ஹமாஸ் அமைப்பினர் எடுத்துச் சென்றனர். அந்த உடல்களை இன்னும் முழுமையாக ஒப்படைக்கவில்லை என இஸ்ரேல் கூறுகிறது. அதேவேளையில், அதற்கான தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே, ஹமாஸ் விதிமுறையை மீறியதாக இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் குற்றச்சாட்டை ஹமாஸ் மறுத்துள்ளது.

    இதனால் அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால, அமைதி ஒப்பந்தத்தை வலிமையாக அமெரிக்காவின் முன்னிணி அதிகாரிகள், அமைச்சர்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு பயணம் செய்தவாறு உள்ளனர்.

    இன்று அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியா, இஸ்ரேல் வந்தடைந்துள்ளார். அவர் "காசாவில் நிரந்தரமான அமைதியை உருவாக்குவதற்காக, டொனால்டு டிரம்ப் தயார் செய்த ஒரு திட்டத்தை தவிர்த்து வேறு எந்த திட்டமும் இல்லை. இது சிறந்த திட்டம். ஒரே திட்டம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், இஸ்ரேல் இதுவரை போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை கடைபிடித்துள்ளது. ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட வேண்டும். ஹமாஸ் அமைப்பு மிரட்டல் விடுக்கும் வகையில் நடந்து கொண்டால், அவர்கள் மீதான தாக்குதலை மீண்டும் தொடங்க, அமெரிக்காவின் அனுமதி இஸ்ரேலுக்கு தேவையில்லை" என்றார்.

    • அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பினா்.
    • தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்றார்.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த போர் அமெரிக்க அதிபர் டிரம்பின் பேச்சுவார்த்தை காரணமாக நிறுத்தப்பட்டது.

    நீண்ட நாட்களாக நீடித்து வந்த போரால் பொதுமக்களிடையே அவர் மீதான செல்வாக்கு சரிந்தது. மேலும் ஊழல் புகார் மற்றும் போரை நீட்டிக்காமல் அமெரிக்காவிடம் பணிந்து நிறுத்தியதற்காக அவருடைய சொந்த கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு நேரலையில் பேட்டி அளித்தார்.

    அப்போது அவரிடம் பத்திரிகையாளர் 'அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?' என கேள்வி எழுப்பினா். அதற்கு அவர் 'ஆம் நிச்சயமாக' என பதில் அளித்தார்.

    தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, நான் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என பதில் அளித்தார்.

    இஸ்ரேலின் நீண்டநாள் பிரதமராக 1996-ம் ஆண்டில் இருந்து (தொடர்ச்சியாக இல்லாமல்) நேதன்யாகு உள்ள நிலையில் அடுத்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள புதிய பிரதமருக்கான தேர்தலில் அவர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.
    • சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும்.

    காசா போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த நிலையில் இஸ்ரேல் பணய கைதிகள் 20 பேரை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பால் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்தவர்களில் நேபாளத்தைச் சேர்ந்த பிபின் ஜோஷி உட்பட நான்கு பேரின் சடலங்களை இஸ்ரேலிய அதிகாரிகளிடம் ஹமாஸ் ஒப்படைத்தது.

    பிபின் ஜோஷியின் சடலம் நேற்று முன் தினம் நள்ளிரவு டெல் அவிவ் விமான நிலையத்தை அடைந்தது என்று இஸ்ரேலுக்கான நேபாள தூதர் தனபிரசாத் பண்டிட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    ஜோஷியின் அடையாளத்தை உறுதிப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகள் மரபணு (DNA) பரிசோதனை செய்ய உள்ளனர். அதன்பிறகு, நேபாள தூதரகத்துடன் ஒருங்கிணைந்து, சடலத்தை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்புவதற்கு முன் இஸ்ரேல் அரசு முறைப்படி இறுதி சடங்குகளை நடத்தும் என்று தூதர் பண்டிட் கூறினார்.

    அக்டோபர் 7 , 2023, இஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலுக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஜோஷி நேபாளத்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றிருந்தார்.

    ஸ்டுடென்ட் எக்ஸ்சேஞ்ச் திட்டத்தின் கீழ், காசா எல்லைக்கு அருகிலுள்ள கிப்புட்ஸ் அலிமிம் என்ற இடத்தில் விவசாயம் குறித்து ஆராய்ச்சி படிப்புக்காக சென்ற 17 நேபாள மாணவர்களில் ஜோஷியும் ஒருவர் ஆவார்.

    ஹமாஸ் தாக்குதல் நடந்த நாளில், துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டு வெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் சைரன் ஒலித்தபோது, அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் உடனடியாக வெடிபொருள் தாக்குதலில் இருந்து தப்பிக்கப் பாதுகாப்பான இடத்தில் பதுங்கினர்.

    ஆனால், அவர்கள் மறைந்திருந்த இடத்திற்குள் ஹமாஸ் போராளிகள் வெடிகுண்டு ஒன்றை வீசினர். இதனால் பலர் காயமடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட பிபின் ஜோஷி, இரண்டாவதாக வீசப்பட்ட வெடிகுண்டைப் லாவகமாகப் பிடித்து, மீண்டும் வெளியே வீசினார்.

    ஜோஷியின் இந்தத் துரிதச் செயலால் அங்கிருந்த பலரது உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் ஜோஷியை ஹமாஸ் படையினர் பிடித்து இழுத்துச் சென்றனர்.

    இஸ்ரேலியர்கள் அல்லாத பிணைக்கைதிகளில் கஸாவில் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்ட ஒரே நபர் இவர்தான்.

    2023 இல் கடத்தப்பட்டதில் இருந்து ஜோஷியைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் இருந்தது. சமீபத்தில் இஸ்ரேலிய இராணுவம் கஸாவில் இருந்து ஜோஷி உயிருடன் இருந்ததைக் காட்டும் ஒரு வீடியோவை மீட்டது. இருப்பினும் அவர் தற்போது சடலமாக திரும்பியுள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.   

    • இஸ்ரேல்- காசா இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
    • பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்ட நிலையில், டிரம்ப் இஸ்ரேல் சென்றிருந்தார்.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.

    அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் உறுப்பினர் உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுந்து நின்று புகழாரம் சூட்டினர்.

    அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென இரண்டு உறுப்பினர்கள் டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரும் அவை பாதுகாவலர்களால் வெளியேற்றப்பட்டனர். பின்னர் டிரம்ப் தொடர்ந்து உரையாற்றினார்.

    ஐமென் ஓடே மற்றும் ஓஃபர் காசிஃப் அகிய இரண்டு உறுப்பினர்கள்தான் கோஷம் எழுப்பினர். அதில் ஒருவர் இனப்படுகொலை என எழுதப்பட்டிருந்த பதாகையை தூக்கிபிடித்திருந்தார்.

    • 8 மாதங்களில் 8 போரை நிறுத்தும்போது, போர்களை விரும்பவில்லை என்பதுதான் உண்மையான அர்த்தம்.
    • நான் மிகவும் கொடூரமாக சென்று கொண்டிருக்கிறேன் என எல்லோரும் நினைத்தனர்.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எகிப்து செல்ல இருக்கிறார்.

    அதற்கு முன்னதாக இன்று இஸ்ரேல் சென்றார். அவருக்கு இஸ்ரேலில் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இஸ்ரேல் பாராளுமன்றத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உரையாற்றினார்.

    அப்போது டிரம்ப் பேசியதாவது:-

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையிலான ஒப்பந்தம் மூலம் பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது போர் முடிவு மட்டுமல்ல. இது புதிய மத்திய கிழக்கின் வரலாற்று விடியல். அமெரிக்காவை போன்று, இஸ்ரேலுக்கு பொற்காலம் ஏற்படும்.

    பல வருட இடைவிடாத போர் மற்றும் முடிவில்லா ஆபத்துக்குப் பிறகு, இன்று வானம் அமைதியாக இருக்கிறது, துப்பாக்கிகள் அமைதியாக இருக்கின்றன, சைரன்கள் அமைதியாக இருக்கின்றன. இறுதியாக அமைதியான ஒரு புனித பூமியில் சூரியன் உதிக்கிறது.

    அமைதி ஒப்பந்தம் மூலமாக நம்முடைய நேரத்தை நாம் வீணடிப்பதாக ஏராளமானோர் தெரிவித்தனர். ஆனால், நாம் இந்த சாதனையை எட்டியதற்காக பல சிறந்த அமெரிக்க தேசப்பற்றாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    8 மாதங்களில் 8 போரை நிறுத்தும்போது, போர்களை விரும்பவில்லை என்பதுதான் உண்மையான அர்த்தம். நான் மிகவும் கொடூரமாக சென்று கொண்டிருக்கிறேன் என எல்லோரும் நினைத்தனர்.

    நான் எல்லோருடன் போருக்கு சென்று கொண்டிருப்பதாகவும், நான் போருக்கு செல்லும் ஆளுமை கொண்டவராகவும் இருப்பதாக ஹிலாரி கிளிண்டன் கூறியதை நினைவூட்டுகிறேன் ஆனால், என்னுடைய ஆளுமை போரை நிறுத்தவது பற்றியது என நினைக்கிறேன்.

    இவ்வாறு டிரம்ப் தெரிவித்தார்.

    • இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) போர் நிறுத்தம் ஏற்பட முயற்சி மேற்கொண்டார் டிரம்ப்.
    • காசா அமைதி உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், இஸ்ரேலுக்கு சென்றார்.

    இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஹமாஸ் 20 பணயக்கைதிகளை விடுவித்துள்ளது. அதற்கு இணையான இஸ்ரேல், சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்துள்ளது.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ்) இடையிலான அமைதி அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் காசா அமைதி உச்சி மாநாடு நடக்கிறது எகிப்தில் நடைபெறுகிறது. இதில் டொனால்டு டிரம்ப் கலந்து கொள்கிறார்.

    இதற்கான அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட அவர், இஸ்ரேல் நாட்டிற்கு சென்றுள்ளார். இஸ்ரேல் நாட்டில் அவருக்கு சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இஸ்ரேல் சென்ற டொனால்டு டிரம்ப், அந்நாட்டின் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக சென்றார். அப்போது இஸ்ரேல் பாராளுமன்ற உறுப்பினர் எழுந்து நின்று, உலகிற்கு அதிக டிரம்ப்கள் தேவை" என உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார்.
    • விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல்முறையாக இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப்பை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வரவேற்றனர்.

    ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகள் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேலுக்கு வந்துள்ளார்.

    ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்திக்கும் டிரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இஸ்ரேல் பயணத்தை முடித்துக்கொண்டு டிரம்ப் அங்கிருந்து எகிப்து செல்கிறார்.

    • டொனால்டு டிரம்ப் 20 அம்ச திட்டங்களை பரிந்துரைத்து போர் நிறுத்த முயற்சியை மேற்கொண்டார்.
    • இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் டிரம்பின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன.

    இஸ்ரேல்- காசா (ஹமாஸ் அமைப்பு) இடையிலான போர் நிறுத்தம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இதனால் காசாவில் இரண்டு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    டொனால்டு டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்ச திட்டத்தை அறிவித்தார். இதை இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஏற்றுக்கொண்டார். ஹமாஸ் விரைவாக இதை ஏற்றுக்கொண்டு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும். இல்லையென்றால் யாரும் பார்க்க விரும்பாத பெரிய ரத்தக்களரி தொடர்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்தார்.

    இதனைத்தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரில் ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தனர். பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி முதல்கட்டமாக ஹமாஸ் அமைப்பினர், பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும். இஸ்ரேல் ராணுவம் காசாவில் இருந்து வெளியேற வேண்டும்.

    அதன்படி காசா போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகள் விடுவிப்பார்கள் என நம்பப்படுகிறது. ஹமாஸ் பிடியில் 48 பணயக்கைதிகள் உள்ளனர். இவர்கள் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது.

    இந்த முதற்கட்ட போர் நிறுத்தம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டால், காசாவில் போர் நிறுத்தத்திற்கான நம்பிக்கை வலுப்பெறும்.

    • 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.
    • அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்

    இந்தியா- பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    அவருக்கு சில நாடுகளும் ஆதரவு தெரிவித்து பரிந்துரைத்தன. ஆனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

    இந்தநிலையில் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்க உள்ள நிலையில் அதுகுறித்து டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.

    இதற்கு பதிலளித்த டிரம்ப்,"நாங்கள் 7 போர்களை தீர்த்து வைத்தோம். 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.

    வரலாற்றில் யாரும் இவ்வளவு போர்களை தீர்த்து வைத்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருவேளை அவர்கள் (நோபல் குழு) அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்" என்றார்.

    இதற்கிடையே வெள்ளை மாளிகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் டிரம்ப்பின் படத்தை "அமைதித் தலைவர்" என்ற தலைப்பில் பகிர்ந்து உள்ளது.

    இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அலுவலகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டொனால்டு டிரம்புக்கு நோபல் பரிசு கொடுங்கள்.அவர் அதற்கு முழு தகுதி படைத்தவர்" என்று தெரிவித்துள்ளது.

    இன்று மாலை அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட உள்ள நிலையில் நேதன்யாகுவின் கருத்து வந்துள்ளது.  கடந்த ஜூலை மாதம் இஸ்ரேல் டிரம்புக்கு நோபல் பரிசு வழங்க அதிகாரபூர்வமாக பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    ×