என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Netanyahu"

    • ஆரம்பத்தில் 600,000 மக்களையும், இறுதியில் முழு பாலஸ்தீன மக்களையும் தங்க வைக்க இந்நகரம் தயாராகி வருகிறது.
    • திட்டமிடப்பட்ட அந்நகரத்தை ஹிட்லரின் வதை முகாம்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர்.

















    தெற்கு காசாவில் உள்ள ராஃபாவில் இடிபாடுகளில் 'மனிதாபிமான நகரம்' ஒன்றை கட்டும் திட்டத்தை காட்ஸ் முன்மொழிந்தார்.

    தெற்கு காசாவின் இடிபாடுகளில் ஒரு "மனிதாபிமான நகரத்தை" நிர்மாணிப்பதற்கான செயல்பாட்டுத் திட்டங்களை வகுக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நகரத்திற்கு உள்ளே நுழைந்ததும், பாலஸ்தீனியர்கள் மற்ற நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று காட்ஸ் தெரிவித்துள்ளார்.

    ஆரம்பத்தில் 600,000 மக்களையும், இறுதியில் முழு பாலஸ்தீன மக்களையும் தங்க வைக்க இது தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

     இந்நிலையில் இஸ்ரேல் உருவாக்க நினைக்கும் நகரம் ஒரு வதை முகாமாக இருக்கும் என்றும் பாலஸ்தீனியர்களை அங்கு வைப்பது இன அழிப்புக்கு சமம் என்று இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் கூறினார்.

    இஸ்ரேல் ஏற்கனவே காசா மற்றும் மேற்குக் கரையில் போர்க்குற்றங்களைச் செய்து வருகிறது. இந்த முகாம் கட்டுவது அந்தக் குற்றங்களில் பெரிய அளவில் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஓல்மெர்ட் கூறினார்.

    பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு "மனிதாபிமான நகரம்" திட்டத்தை ஆதரிக்கிறார். காசாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை அகற்ற அவர்கள் ஒரு முகாமைக் கட்டும் அதே வேளையில், பாலஸ்தீனியர்களைக் காப்பாற்றுவது அவர்களின் குறிக்கோள் அல்ல, மாறாக அவர்களை நாடு கடத்துவதும் தூக்கி எறிவதுதான் என்று ஓல்மெர்ட் கூறினார்.

    இஸ்ரேலிய மனித உரிமை செயல்பாட்டாளர்களும் இந்தத் திட்டத்தை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான ஒரு வரைபடம் என்று விவரித்துள்ளனர்.

    இது செயல்படுத்தப்பட்டால் இனப்படுகொலைக்கு சமமாகிவிடும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் பலர் திட்டமிடப்பட்ட அந்நகரத்தை ஹிட்லரின் வதை முகாம்களுடன் ஒப்பிட்டு விமர்சித்து வருகின்றனர். 

    • நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது என்று மம்தானி தெரிவித்தார்.
    • மம்தானி ஒரு சோசலிஸ்ட் அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    33 வயதான இந்திய -அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர் ஜுஹ்ரான் மம்தானி, முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை தோற்கடித்து, நியூயார்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மீரா நாயர் மற்றும் இந்திய-உகாண்டா கல்வியாளர் மஹ்மூத் மம்தானியின் மகன் தான் சோஹ்ரான் மம்தானி ஆவார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் தற்போது நியூயார்க் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    மம்தானி மேயராக தேர்வானதில் இருந்து அவரை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

    இந்நிலையில் அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது, ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று நியூ யார்க் மேயர் மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    மம்தானியின் இக்கருத்துக்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், மம்தானி ஒரு சோசலிஸ்ட் அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட். அவர் யூத மக்களைப் பற்றி சில மோசமான விஷயங்களைச் சொல்லியுள்ளார். மம்தானிக்கு வெள்ளை மாளிகை வழியாகதான் பணம் வருகிறது. அவருக்கு வெள்ளை மாளிகை வழியாக பணம் தேவை. அவர் இப்படி நடந்துகொள்வது அவருக்கு நல்லதல்ல. இல்லையெனில் அவருக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்படும்" என்று தெரிவித்தார். 

    • அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டது.
    • தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

    அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் பெயரை சமீபத்தில் பாகிஸ்தான் பரிந்துரைத்தது. ஆனால் பல போர்களை நிறுத்த முயற்சி மேற்கொண்டாலும் தனக்கு நோபல் பரிசு தர மாட்டார்கள் என்று டிரம்ப் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

    இதனையடுத்து, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயர் முறைப்படி பரிந்துரை செய்யப்பட்டது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.யான கார்ட்டர், நோபல் குழுவிற்கு எழுதிய கடிதத்தில் டிரம்பின் பெயரை பரிந்துரை செய்தார்.

    இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்ப் பெயரை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரிந்துரை செய்துள்ளார்.

    நேற்று இரவு வெள்ளை மாளிகையில் நடந்த இரவு விருந்தின் போது, நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய நியமனக் கடிதத்தின் நகலை டிரம்மிடம் நெதன்யாகு வழங்கினார்.

    அப்போது டிரம்பிடம் பேசிய நெதன்யாகு, "நீங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஒவ்வொரு பிராந்தியத்திலும் அமைதியை ஏற்படுத்தி வருகிறீர்கள். நான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு உங்களை பரிந்துரைத்து நோபல் பரிசுக் குழுவிற்கு அனுப்பிய கடிதத்தை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். இதற்கு நீங்கள் மிகவும் தகுதியானவர், நீங்கள் அதைப் பெற வேண்டும்" என்று தெரிவித்தார்.

    2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இதுவரை 338 வேட்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்று நோபல் குழு தெரிவித்துள்ளது.

     

    • ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த நான்கு பள்ளிகள் திங்களன்று தாக்கப்பட்டன.
    • நேதன்யாகுவின் ஊழல் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்ட்டது.

    காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை நடத்தி வருகிறது. மருத்துவமனைகள், பள்ளிகள், வீடுகள் மற்றும் பிற நெரிசலான இடங்கள் திங்கட்கிழமை கடுமையான குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டன.

    காசா நகரின் கடற்கரையில் நடந்த ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர். மத்திய காசாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனை மீது பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டது.

    காசா நகரின் அல்-வஹ்தா சாலையில் பாதசாரிகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். கான் யூனிஸில் வீடுகள் பரவலாக அழிக்கப்படுவது தொடர்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இஸ்ரேலிய டாங்கிகள் வடக்கு காசாவில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன, அங்கு ஒரு பெரிய வெளியேற்றம் நடத்தப்படுகிறது. 18 பகுதிகளை காலி செய்ய இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ஆயிரக்கணக்கான மக்கள் தங்கியிருந்த நான்கு பள்ளிகள் திங்களன்று தாக்கப்பட்டன. கான் யூனிஸில் உள்ள உணவு விநியோக மையத்தின் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர்.

    காசாவில் மட்டும், திங்களன்று 85 பேர் இறந்ததாக உறுதி செய்யப்பட்டது, அவர்களில் 60 பேர் வடக்கு காசாவிலும் காசா நகரத்திலும் இருந்தவர்கள். காசாவின் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இஸ்ரேலிய இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளனர்.

    இதற்கிடையில், இந்த வாரம் தொடங்கவிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் ஊழல் வழக்கு விசாரணை, நேதன்யாகுவின் வேண்டுகோளைத் தொடர்ந்து, ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றத்தால் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்த விசாரணையை கடுமையாக சாடியது குறிப்பிடத்தக்கது.

    • உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
    • முஹாரிப் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மரணம், சிலுவையில் அறையப்படுதல், தலை துண்டிக்கப்படுதல் உள்ளிட்ட தண்டனைகளை எதிர்கொள்வார்.

    ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயதுல்லா மகரெம் ஷிராசி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருக்கு எதிராக புதிதாக வெளியிடப்பட்ட 'ஃபத்வா' (மத ஆணையில்) அவர்களை "கடவுளின் எதிரிகள்" என்று அறிவித்துள்ளார்.

    எனவே உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் அவர்களுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

    ஒரு தலைவரையோ அல்லது மர்ஜாவையோ (மத அதிகாரத்தையோ) அல்லது அரசையோ அச்சுறுத்தும் எவரும் கடவுளுக்கு எதிராகப் போரை நடத்துபவர் (முஹாரிப்) என்று அவர் கூறினார்.

    ஈரானிய சட்டத்தின் கீழ், முஹாரிப் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மரணம், சிலுவையில் அறையப்படுதல், தலை துண்டிக்கப்படுதல் மற்றும் நாடுகடத்தப்படுதல் உள்ளிட்ட தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியவர் ஆவார்.

    முஸ்லிம்கள் தங்கள் கடமையை நிறைவேற்றப் போராடும்போது ஏதேனும் கஷ்டங்களையோ அல்லது இழப்புகளையோ சந்தித்தால், அவர்கள் கடவுளின் பாதையில் போராடியதற்கான வெகுமதியைப் பெறுவார்கள் என்றும் ஷிராஸி கூறுகிறார்.

    உலகெங்கிலும் உள்ள அனைத்து முஸ்லிம்களும் இந்த எதிரிகள் தங்கள் வார்த்தைகள் மற்றும் தவறுகளுக்கு வருத்தப்பட வைப்பது அவசியம் என்று 'ஃபத்வா'வில் கூறப்பட்டுள்ளது.

    • வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
    • அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

    இஸ்ரேலால் அக்கிரமிக்கப்ட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் வசிக்கும் இஸ்ரேலிய பொதுமக்கள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களைத் தாக்கியுள்ளனர்.

    பாலஸ்தீன கிராமமான காஃப்ர் மாலிக்கிற்குள் பொதுமக்கள் நுழைவதைத் தடுக்க முயன்றபோது இந்த தாக்குதல் நடந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் இராணுவ வாகனங்களுக்கும் தீ வைத்து அழித்தனர்.

    அவர்கள் கூட்டத்தை நெருங்கியபோது, அவர்கள் படையினரைத் தாக்கி பாதுகாப்பு வாகனங்களை அழித்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை கலைக்க வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலிய இராணுவத்தின் மீதான தாக்குதல் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கூறினார்.

    இந்த மக்கள் ஒரு சிறிய சிறுபான்மையினர் என்றும், அவர்கள் இஸ்ரேலின் பெரும்பான்மையான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் நேதன்யாகு மேலும் கூறினார்.

    • காசாவில் உள்ள மனிதாபிமான அறக்கட்டளைக்கு 30 மில்லியன் டாலர் உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.
    • ரான் டெர்மர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நம்பிக்கைக்குரியவர் ஆவார்.

    காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் இதனை தெரிவித்தார். மேலும், "காசாவில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. அதனால்தான் அங்கு நிறைய பணம் வழங்கப்படுகிறது. காசாவில் உள்ள மக்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்கின்றனர்" என்று கூறிய டிரம்ப், காசாவில் உணவைத் திருடியவர்கள் மோசமானவர்கள் என்றும், அங்கு உணவு விநியோகம் திறமையாக செய்யப்படுகிறது என்றும் கூறினார்.

    முன்னதாக காசாவில் உள்ள மனிதாபிமான அறக்கட்டளைக்கு 30 மில்லியன் டாலர் உதவி வழங்க அமெரிக்கா முடிவு செய்திருந்தது.

    இதற்கிடையே இஸ்ரேலிய அமைச்சர் ரான் டெர்மர் அடுத்த வாரம் அமெரிக்காவிற்கு  பயணம் செய்கிறார். இந்த சந்திப்பின்போது போது காசாவில் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரான் டெர்மர் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் நம்பிக்கைக்குரியவர் ஆவார்.

    நேற்று காசாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது
    • அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டது.

    ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அதிபர் டிரம்ப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    "வாழ்த்துக்கள், அதிபர் டிரம்ப். அமெரிக்காவின் வலிமையால் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் உங்கள் துணிச்சலான முடிவு வரலாற்றை மாற்றும்" என்று தனது உரையில் நேதன்யாகு நெகிழ்ந்தார். 

    டிரம்ப் தலைமை "மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் செழிப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் வரலாற்றின் ஒரு மையப்புள்ளியை உருவாக்கியுள்ளது" என்று கூறிய நேதன்யாகு தாக்குதல் முடிந்தவுடன் அதிபர் டிரம்பிடம் இருந்து தனக்கு உடனடியாக அழைப்பு வந்ததாக தெரிவித்தார்.

    "ஆபரேஷன் ரைசிங் லயன், இஸ்ரேல் உண்மையிலேயே அற்புதமான காரியங்களைச் செய்துள்ளது. ஆனால் ஈரானின் அணுசக்தி வசதிகளுக்கு எதிரான இன்றைய நடவடிக்கையில், அமெரிக்கா உண்மையிலேயே நிகரற்றதாக இருந்துள்ளது. பூமியில் வேறு எந்த நாடும் செய்ய முடியாததை அது செய்துள்ளது," என்று நேதன்யாகு சிலாகித்தார்.

    இந்திய நேரப்படி இன்று அதிகாலையில், அமெரிக்கா ஈரானின் ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), மற்றும் இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய மூன்று அணுசக்தி வசதிகள் மீது தாக்குதல் நடத்தியது.

    ஈரானின் மிகவும் மேம்பட்ட வசதியான ஃபோர்டோ, ஒரு மலைக்குள் கட்டப்பட்டுள்ளது. இது அமெரிக்காவின் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் "பங்கர் பஸ்டர்" ஆயுதத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  

    • ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது.
    • இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 5-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியை கொன்றால் மோதல் முடிவுக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

    • இஸ்ரேல்-ஈரான் இடையேயான கடும் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் நீடித்து வருகிறது
    • ஈரான் மூலம் உலகுக்கு ஏற்படும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்கத் தேவையானதை செய்வோம்.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இஸ்ரேலும், ஈரானும் தொடர்ந்து 3-வது நாளாக பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அறிவித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கினால் ஈரானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப் படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பை கொலை செய்ய ஈரான் திட்டம் போட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

    உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த பேட்டியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, "ஈரான் அணு ஆயுதங்கள் வைத்து இருப்பதை டிரம்ப் விரும்பவில்லை என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் உள்ளார். இதனால் அவர் ஈரானின் நம்பர் ஒன் எதிரியாக இருந்து வருகிறார். டிரம்ப் தங்களது அணு சக்தி திட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்பதால் அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டு உள்ளது. அவர்களின் உளவுத்துறை மூலம் டிரம்பை கொல்ல விரும்புகிறது.

    ஈரானின் அணு சக்தி நடவடிக்கைக்கு இஸ்ரேலின் தாக்குதல் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது. ஈரானால் நாங்கள் உடனடி அச்சுறுத்தலை எதிர்கொண்டோம். ஈரான் உலகிற்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக இருக்கிறது." என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில் ஈரான் நாட்டின் ஆட்சியாளரும், மதத்தலைவருமான கமேனியை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டு இருந்ததை டிரம்ப் தடுத்து நிறுத்தினார் என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. இஸ்ரேல்-ஈரான் இடையே கடுமையான சண்டை நடந்து வரும் நிலையில் அமெரிக்கா வெளியிட்ட இந்த தகவல் பரபரப்பை எற்படுத்தி இருக்கிறது.

    • அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.
    • அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட கவலையளிக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியது.

    நேற்று காலை ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

    இந்நிலையில் ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார்.

    அப்போது கவலையை வெளிப்படுத்திய மோடி, பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்கான இந்தியாவின் உறுதியை மோடி வலியுறுத்தினார்.

    முன்னதாக, வெளியுறவு அமைச்சகம் ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியதுடன், அணுசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள் உட்பட கவலையளிக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் கூறியது.

    ஈரான் மீதான தாக்குதலில் சர்வதேச ஆதரவைப் பெற மோடியை நேதன்யாகு அழைத்ததாக தெரிகிறது. ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடனும் நேதன்யாகு தொலைபேசியில் பேசினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உள்ளிட்ட தலைவர்களையும் நேதன்யாகு தொடர்புகொண்டார்.

    • எங்களுக்கு எதிரான அச்சுறுத்தலைத் தடுக்கும் பணியை முடிக்க தேவையான வரை இந்த நடவடிக்கை தொடரும்.
    • தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் உரத்த வெடிச்சத்தங்கள் கேட்டன.

    இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது.

    முன்னதாக கடந்த திங்கட்கிழமை, இஸ்ரேல் தங்களை தாக்கும் என உளவுத்துறை தகவல் கிடைத்ததாக ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் (SNSC) தெரிவித்தது. அவ்வமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ஈரான் ராணுவத் தாக்குதலுக்கு உள்ளானால், அதன் ஆயுதப் படைகள் உடனடியாக இஸ்ரேலின் "ரகசிய அணுசக்தி நிலையங்களை" குறிவைக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி இஸ்ரேல் ஈரான் மீது இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.

    ஒரு தொலைக்காட்சி அறிக்கையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இஸ்ரேலின் நலன் கருதி ஈரானின் அச்சுறுத்தலை முறியடிக்க இலக்கு வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையை இஸ்ரேல் தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

    மேலும் "எங்களுக்கு எதிரான அச்சுறுத்தலைத் தடுக்கும் பணியை முடிக்க தேவையான வரை இந்த நடவடிக்கை தொடரும்" என்று நேதன்யாகு அறிவித்தார்.

    இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இந்த தாக்குதலை, "உடனடி அச்சுறுத்தல்களை நடுநிலையாக்குவதை நோக்கமாகக் கொண்ட முன்கூட்டிய தாக்குதல்" என்று விவரித்தார்.

    மேலும், ஈரான் திருப்பி தாக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இஸ்ரேல் முழுவதும் சிறப்பு அவசரகால நிலையை காட்ஸ் அறிவித்தார்.

    இதற்கிடையில், இன்று அதிகாலை நேரத்தில் தலைநகர் தெஹ்ரானின் பல பகுதிகளில் உரத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இஸ்ரேலிய தாக்குதல்கள் இராணுவ உள்கட்டமைப்பு அல்லது அணுசக்தி தொடர்பான வசதிகளை குறிவைத்திருக்கலாம் என்ற நம்பப்படுகிறது. குண்டுவெடிப்புகளுக்கான ஆதாரம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காணப்படவில்லை என்று ஈரானின் அரசு ஊடகமான IRIB குறிப்பிட்டது.

    இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பலரால் நம்பப்படுகிறது, இருப்பினும் அது இதை ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை அல்லது மறுக்கவில்லை.

    இந்த சூழலில் ஈரான் திருப்பி தாக்கினால் விளைவு விபரீதமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதற்கிடையே, ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

    ×