என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதின்"

    • டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்தனர்.
    • மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    நாளை டெல்லியில் நடைபெற உள்ள 23வது இந்தியா-ரஷியா உச்சிமாநாட்டில் பங்கேற்க 2 நாள் பயணமாக இன்று மாலை ரஷிய அதிபர் புதின் இந்தியா வருகை தந்தார்.

    டெல்லியில் வந்திறங்கிய அவரை பிரதமர் மோடி நேரில் சென்று கட்டியணைத்து வரவேற்றார்.

    டெல்லி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார நிகழ்ச்சியை இருவரும் சிறிது நேரம் பார்த்து, கலைஞர்களை வாழ்த்தினர். பின்னர், இருவரும் ஒரே காரில் விமான நிலையத்திலிருந்து கிளம்பினார்.

    பிரதமர் மோடி தனது இல்லத்தில் புதினுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சிறப்பு இரவு விருதுக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.

    2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து புதினின் முதல் இந்திய வருகை இதுவாகும். எனவே இந்த வருகை சர்வதேச முக்கியத்துவம் பெற்றுள்ளது. அமெரிக்கா இந்தியா மீது பல தடைகளை விதித்துள்ள நேரத்தில் இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, புதின் ராஷ்டிரபதி பவனில் வரவேற்பு, பின்னர், ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை, பின்னர், மகாத்மா காந்தி நினைவிடத்தில் புதின் அஞ்சலி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    நாளை உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கும் அதிகாரப்பூர்வ இரவு விருந்தில் புதின் பங்கேற்பார். 

    • இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.
    • இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.

    இந்த சூழலில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தியிடம் புதின் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "பொதுவாக இந்தியாவிற்கு வெளிநாட்டு தலைவர்கள் யார் வந்தாலும் எதிர்க்கட்சித் தலைவர் அவர்களை சந்திப்பது வழக்கம். வாஜ்பாய், மன்மோகன் சிங் அரசாங்கத்தில் இதுதான் நடந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. நான் சந்திப்பதை மோடி அரசு விரும்பவில்லை. நான் வெளிநாடுகளுக்கு செல்லும் போதெல்லாம், எதிர்கட்சித் தலைவரை சந்திக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்படுவதாக அவர்கள் என்னிடம் கூறுகிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • அவரின் பாதுகாப்பு கவச வாகனமான 'அராஸ் செனட்' சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
    • புதின் தங்கியிருக்கும் ஹோட்டலைத் தவிர, ராஜ்காட், ஐதராபாத் ஹவுஸ் மற்றும் பாரத் மண்டபம் போன்ற அவர் செல்லும் அனைத்து இடங்களையும் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.

    பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்க இன்று மாலை ரஷிய அதிபர் புதின் டெல்லி வருகிறார்.

    இந்த சூழலில், டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் புதினுக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பணியில் ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர், இந்திய தேசிய பாதுகாப்புப் படை (NSG) கமாண்டோக்கள், ஸ்னைப்பர்கள், டிரோன்கள், சிக்கினல் ஜாமர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கண்காணிப்பு அமைப்புகள் மூலம் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

    இதற்காக ரஷியாவிலிருந்து 48 உயர்மட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் ஏற்கனவே டெல்லியை அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    டெல்லி காவல்துறை மற்றும் NSG அதிகாரிகளுடன் புதினின் பயணத்தின் அனைத்து வழிகளையும் அவர்கள் முழுமையாகச் சரிபார்த்து வருகின்றனர்.

    NSG,டெல்லி காவல்துறை, ரஷிய அதிபர் பாதுகாப்புப் படையினர் சுற்றியிருக்க பிரதமர் மோடி புதினுடன் இருக்கும்போது சிறப்பு பாதுகாப்புக் குழு (SPG) கமாண்டோக்களும் இந்தப் பாதுகாப்பில் பணியாற்றுவர்.

    இந்தப் பயணத்தின் புதின் சாலை மார்க்கமாக பயணிக்க அவரின் பாதுகாப்பு கவச வாகனமான 'அராஸ் செனட்' சொகுசு கார் மாஸ்கோவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.

    புதின் தங்கியிருக்கும் ஹோட்டலைத் தவிர, ராஜ்காட், ஐதராபாத் ஹவுஸ் மற்றும் பாரத் மண்டபம் போன்ற அவர் செல்லும் அனைத்து இடங்களையும் பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.  

    • ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் எங்களுக்கு பொருந்தாது.
    • முதலில் தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் ரஷியாவுக்கு சாதகமான அம்சங்கள் இருந்தன.

    மாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப் சந்தித்து பேசினார். இதில் அனுமதி ஒப்பந்தத்தில் மேற்கொள் ளப்பட்ட திருத்தங்கள் குறித்து புதினுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதுதொடர்பாக புதினின் மூத்த ஆலோசகர் யூரி உஷாகோவ் கூறும்போது, அமெரிக்க குழுவுடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தன.

    ஆனால் அதில் இன்னும் பணிகள் உள்ளன. இதுவரை நாங்கள் ஒரு சமரசத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஒப்பந்தத்தில் உள்ள சில விஷயங்கள் எங்களுக்கு பொருந்தாது" என்றார்.

    திருத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ரஷியா நிராகரித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    முதலில் தயாரிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் ரஷியாவுக்கு சாதகமான அம்சங்கள் இருந்தன. இதற்கு உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் கலந்துகொள்கிறார்.
    • கடைசியாக பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றனர்.

    ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் பயணமாக டிசம்பர் 4-ந்தேதி இந்தியா வர உள்ளார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியுடன் அவர் கலந்து கொள்ள உள்ளார்.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ரஷிய அதிபர் புதினின் அரசு முறை பயணம், இந்தியா - ரஷியாவின் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும்.

    சிறப்பு மற்றும் சலுகை பெற்ற மூலோபாய கூட்டாண்மை குறித்த தொலைநோக்கு பார்வையை வலுப்படுத்தவும், பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும்" என்று தெரிவித்துள்ளது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக இந்தியா மீது அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள சூழலில் புதின் இந்தியா வருகிறார்.

    இந்திய பயணத்தின்போது ரஷிய அதிபர் புதின் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடைசியாக பிரதமர் மோடியும் ரஷிய அதிபர் புதினும் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றனர். 

    • இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.
    • நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம்.

    ரஷியா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதற்காக அவர் ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதற்கிடையே ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச அமைதி திட்ட முன்மொழிவு ஒன்றை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷியாவுக்கு விட்டுகொடுக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. டிரம்ப்பின் இந்த அமைதி திட்டம் ரஷியாவுக்கு சாதகமாக இருப்பதாக உக்ரைன் கருதுகிறது.

    இதனால் இத்திட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மறுத்து வருகிறார். இதற்கிடையே அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்க வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அமைதிதிட்டத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நிராகரித்தால் அவர் தனது சிறிய இதயத்துடன்தான் போராட வேண்டியதிருக்கும். ஆனால் இந்த திட்டம் பேச்சுவார்த்தைக்கு திறந்தே உள்ளது. இந்த அமைதிதிட்ட வரைவு இறுதி சலுகை அல்ல. நாங்கள் சமாதானத்திற்கு செல்ல விரும்புகிறோம்.

    2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இந்த போர் ஒருபோதும் நடந்திருக்காது என்றார். முன்னதாக போர் நிறுத்த வரைவு திட்டத்தை வருகிற 27-ந் தேதிக்குள் உக்ரைன் ஏற்க வேண்டும்.

    இல்லையென்றால் அமெரிக்கா அளித்துவரும் ஆதரவு நிறுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார். ஆனால் அமைதி திட்டத்தை உக்ரைன் ஏற்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

    இதற்கிடையே இந்த அமைதி வரைவு திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. இந்த நிலையில் இன்று இத்திட்டம் தொடர்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, உக்ரைன் ஆகிய நாடுகளின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் ஜெனீவாவில் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

    • இஸ்ரேலிடம் இருந்து இதுவரை 315 பாலஸ்தீனர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 69,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவும் நேற்று தொலைபேசியில் உரையாடினர். ரஷியா உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் சூழலில் காசாவில் நடந்த போர் நிறுத்தம் குறித்து நேதன்யாகுவிடம் புதின் பேசியுள்ளார். 

    நேதன்யாகுவுடனான தொலைபேசி உரையாடலில் மத்திய கிழக்கு அரசியல் குறித்து புதின் விவாதித்ததாக ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

    காசா பகுதியில் போர் நிறுத்தம் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் சிரியாவில் உள்ள அரசியல் நிலைமை குறித்தும் இருவரும் விவாதித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் அக்டோபர் 10 ஆம் தேதி அமலுக்கு வந்தது. அதன் படி, ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிக்கும் என்றும், இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கும் என்றும் முடிவு எட்டப்பட்டது.

    அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் அக்டோபர் 10 ஆம் தேதி அமலுக்கு வந்ததிலிருந்து, ஹமாஸ் 25 பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. இஸ்ரேலிடம் இருந்து இதுவரை 315 பாலஸ்தீனர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் அவர்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இருந்தபோதிலும், இஸ்ரேல் ஒருதலைப்பட்ச தாக்குதல்களை நடத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 23 முதல், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் 69,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 

    • நீங்கள் அவர்களுடன் விளையாட முடியாது.
    • வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் நேர்காணலில் பங்கேற்றார்.

    அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், இருவரில் யாரை சமாளிப்பது மிகவும் கடினம் என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த டிரம்ப், "அவர்கள் இருவரும் வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான தலைவர்கள், அவர்களை குறைத்து மதிப்பிடக்கூடாது. நீங்கள் அவர்களை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். நீங்கள் அவர்களுடன் விளையாட முடியாது." என்று தெரிவித்தார்.

    அதே நேர்காணலில், எட்டு போர்களை நிறுத்த முடிந்ததாக கூறிய டிரம்ப், உக்ரைன் போரை தன்னால் மட்டும் நிறுத்த முடியவில்லை, ஆனால் அது விரைவில் நடக்கும் என்று தெரிவித்தார்.

    தனக்கு புதினுடன் நல்ல உறவு உள்ளது என்றும் அதனால் ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவது மிகவும் எளிதானது என்று நினைத்தது தவறு என்று டிரம்ப் கூறினார்.

    மேலும் அமெரிக்கா அணு ஆயுத சோதனை நடந்த திட்டமிட்டுள்ளது குறித்து பேசிய டிரம்ப், ரஷிய சோதனைகளை நடத்துவதாக அறிவித்துள்ளது, வட கொரியா தொடர்ந்து சோதனை செய்து வருகிறது.

    பாகிஸ்தானும் சோதனை செய்கிறது. சோதனை செய்யாத ஒரே நாடு நாங்கள்தான். அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதை நாங்கள் பார்ப்போம்" என்று தெரிவித்தார்.  

    பேட்டியில், சீனா, ரஷியா ஆகியவை அணு ஆயுதத்தை சோதனை செய்யவில்லை என்றும் அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் டிரோன் உள்ளிட்ட உபகரணங்களை தான் சோதனை செய்வதாக நிருபர் கூறினார். 

    இதற்கு பதிலளித்த டிரம்ப், அவை ரகசியமாக அணு ஆயுத சோதனைகளை மேற்கொள்கின்றன அவை வெளியே கூறப்படுவதில்லை என தெரிவித்தார். 

    • தனது கையிருப்பில் உள்ள 34 மெட்ரிக் டன் புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது என ஒப்பந்தம் கூறியது.
    • இந்த ஒப்பந்தம் 2010 இல் திருத்தப்பட்டது.

    உக்ரைனுடனான போரை நிறுத்த ரஷிய அதிபர் புதின் பிடிகொடுக்கவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனவே கோபத்தில் உள்ளார்.

    இந்த சூழலில், அமெரிக்காவுடன் ரஷியா கையெழுத்திட்ட புளூட்டோனியம் ஒப்பந்தத்தை புதின் ரத்து செய்து டிரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தொடர்பான சட்டதிருத்தத்தில் புதின் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    2000 ஆம் ஆண்டில், புளூட்டோனியம் மேலாண்மை குறித்து அமெரிக்காவிற்கும் ரஷியாவுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. பின்னர், இந்த ஒப்பந்தம் 2010 இல் திருத்தப்பட்டது.

    இதன்படி ரஷியா தனது கையிருப்பில் உள்ள 34 மெட்ரிக் டன் புளூட்டோனியத்தை அணு ஆயுதங்களை தயாரிக்க பயன்படுத்தக்கூடாது. இவற்றை அணுமின் உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

    அந்த நேரத்தில், இந்த ஒப்பந்தம்மூலம் சுமார் 17,000 அணு ஆயுதங்களின் உற்பத்தியைத் தடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.

    2016 இல் அமெரிக்காவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தபோது புதின் புளூட்டோனியம் ஒப்பந்தத்தை இடைநிறுத்தி வைத்தார்.

    இந்நிலையில் தற்போது இந்த ஒப்பந்தத்தை முற்றிலுமாக ரத்து செய்யும் சட்டதிருத்தத்தில் புதின் கெய்யெழுத்திட்டுள்ளார். இதன்மூலம் ரஷியா தடையின்றி அணு ஆயுதங்கள் தயாரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.    

    • டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
    • டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.

    இதுதொடர்பாக ரஷிய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் டிரம்ப்-புதின் இடையேயான பேச்சுவார்த்தை அமெரிக்காவின் அலாஸ்காவில் நடந்தது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அப்போது மீண்டும் சந்தித்து பேசுவோம் என்று இரு தலைவர்களும் தெரிவித்திருந்தனர்.

    இதற்கிடையே டிரம்ப்-புதின் இடையேயான சந்திப்பு ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் விரைவில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் புடா பெஸ்ட் நகரில் நடைபெற விருந்த டிரம்ப்-புதின் சந்திப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இடையே நடந்த தொலைபேசி உரையாடலுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து பொதுவெளியில் எதையும் தெரிவிக்க முடியாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே டிரம்ப்- புதின் இடையேயான சந்திப்பு தற்போது நடைபெறாது என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    • 112 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையை கட்ட சுமார் 8 பில்லியன் டாலர்கள் செலவாகும்
    • எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சுரங்கம் அமைக்கும் நிறுவனமான 'தி போரிங் கம்பெனி' மூலம் அமைக்கலாம்

    ரஷியாவுக்கும் அமேரிக்காவின் அலாஸ்காவுக்கும் இடையே பேரிங் ஜலசந்தி அமைந்துள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவையும் ரஷியாவையும் இணைக்கும் வகையில், பேரிங் ஜலசந்திக்கு அடியில் 'புதின் -டிரம்ப்' ரெயில் சுரங்கப்பாதையைக் கட்ட ரஷியாவின் தூதர் ஒருவர் பரிந்துரைத்துள்ளார்.

    ரஷிய அதிபர் புதினின் முதலீட்டுத் தூதரும், தேசிய செல்வ நிதியத்தின் தலைவருமான கிரில் டிமிட்ரிவ் இந்த சுரங்கப்பாதை யோசனையை முன்வைத்தார்.

    இது இரு நாடுகளுக்கும் இடையே ஒற்றுமையின் சின்னமாக இது அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    ரெயில்கள் செல்ல ஏதுவாக 112 கி.மீ. நீளமுள்ள இந்த சுரங்கப்பாதையை கட்ட சுமார் 8 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும், இதை எட்டு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்கலாம் என்றும் டிமிட்ரிவ் தெரிவித்துள்ளார்.

     

    மேலும் இந்தச் சுரங்கப்பாதையை அமெரிக்க கோடீஸ்வரர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான சுரங்கம் அமைக்கும் நிறுவனமான 'தி போரிங் கம்பெனி' மூலம் அமைக்கலாம் என்று கிரில் டிமிட்ரிவ் தனது சமூக ஊடகத்தில் பரிந்துரைத்துள்ளார்.

    ரஷிய தூதரின் இந்த கருத்து குறித்த என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ரஷியாவில் இருந்து அலாஸ்காவிற்கு ஒரு சுரங்கப்பாதை!.. இதைப் பற்றி இப்போதுதான் கேள்விப்பட்டேன். இது சுவாரஸ்யமான யோசனை. இதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்" என்று கூறினார்.

     

    அதேசமயம் நேற்று போர் நிறுத்தம் குறித்து வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் சந்திப்பின்போது, இந்த யோசனை குறித்து டிரம்ப் ஜெலென்ஸ்கியிடம் கேட்டார்.

    அதற்கு ஜெலென்ஸ்கி, "இந்த யோசனையில் எனக்கு மகிழ்ச்சி இல்லை" என்று பதிலளித்தார்.

    அடுத்த இரண்டு வாரங்களில் உக்ரைன் போர் நிறுத்தம் ரஷிய அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில் இந்த 'புதின்-டிரம்ப் சுரங்கப்பாதை' குறித்து விவாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

    • இன்று அதிபர் டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ளார்.
    • தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

    ஐரோப்பாவின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயற்சிப்பது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது.

    கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவில்லாமல் உக்ரைன் - ரஷியா போர் நீடித்து வருகிறது. இதுவரை ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்ட இந்த போர் உக்ரைனில் மிகப்பெரிய அளவிலான மக்களின் இடப்பெயர்ச்சிக்கும் வழிவகுத்தது.

    ரஷியாவுக்கு எதிரான பொருளாதர தடைகளை விதித்து உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவி வருகின்றன. ரஷியாவுக்கு சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. போர் நிறுத்தம் தொடர்பாக பலமுறை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியை சந்தித்தன.

    குறிப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்-ஐ ரஷிய அதிபர் புதின் கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்கா சென்று நேரில் சந்தித்து பேசியும் எந்த பயனும் இல்லை. புதின் போரை தேவையில்லாமல் நீட்டித்து வருவதாக டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார்.

    இன்று அதிபர் டிரம்ப்-ஐ ஜெலன்ஸ்கி நேரில் சந்திக்க உள்ள நிலையில் முன்னதாக புதின், டிரம்புடன் போனில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசிய டிரம்ப், தானும் புதினும் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் விரைவில் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே இன்றைய சந்திப்பில் டிரம்ப் இடம் தங்களுக்கு நீண்டதூரம் பாய்ந்து தாக்கும் Tomahawk ஆயுதங்களை வழங்குமாறு ஜெலன்ஸ்கி வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், ரஷிய அதிபர் புதினும் நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    ரஷிய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நேருக்கு நேர் சந்தித்து போரை முடிவுக்கு கொண்டுவருவத்து குறித்து விவாதிப்பார்களா என்ற கேள்விக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதிலளித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பு செயலாளர் கரோலின் லெவிட், "அது சாத்தியமானது தான் என்று அதிபர் டிரம்ப் நினைக்கிறார். அவ்வாறு நடப்பதை அவர் நிச்சயம் விரும்புவார்" என்று தெரிவித்தார். 

    ×