search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Russia Ukraine war"

    உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை தனது அரசாங்கம் வழங்கும் என புதின் தெரிவித்தார்
    மாஸ்கோ:

    ரஷியா, உக்ரைன் போர் 100வது நாளை தாண்டிய நிலையில், இரு நாடுகளில் இருந்தும் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படாமல் இருக்கிறது. இதனால் ஆப்ரிக்க நாடுகள் உள்ளிட்ட உலகின் பல நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளன. இதற்கு ரஷியாதான் காரணம் என மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. 

    இந்நிலையில் வளர்ந்து வரு உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகளுக்கு மேற்கத்திய நாடுகள்தான் காரணம் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டினார்.

    இதுகுறித்து பேசிய அவர்,  உலக உணவு சந்தையில் என்ன நடக்கிறது என்பதையும், அது சந்தித்து வரும் பிரச்சனைகளையும் ரஷியாவின் மீது திருப்புவதை காண முடிகிறது. மேலும், ரஷியாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் உலகச் சந்தைகளை மோசமாக்குவதுடன், உற்பத்தியை குறைத்து விலைகளை உயர்த்துகின்றன. 

    உக்ரைனில் இருந்து தானிய ஏற்றுமதியை ரஷ்யா தடுக்கவில்லை. ஆனால் மேற்கத்திய நாடுகள் உணவு பிரச்சனைகளுக்கு ரஷியாவை குற்றம்சாட்டி வருகின்றன. உக்ரைனில் இருந்து தானியங்களை ஏற்றுமதி செய்யும் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதற்கான சலுகைகளை தனது அரசாங்கம் வழங்கும். 

    இவ்வாறு புதின் கூறினார்.
    இதுவரை இந்த போரினால் 243 குழந்தைகள் இறந்துள்ளனர். 446 பேர் காயம் அடைந்துள்ளனர்.
    கீவ்:

    ரஷிய ராணுவம் இதுவரை 2 லட்சம் குழந்தைகளை கடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100-வது நாளை நெருங்கி வருகிறது. இந்த போர் உலக அளவில் பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரினால் இதுவரை ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் இந்த போர் குறித்து  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ரஷிய ராணுவம் உக்ரைனில் இருந்து 2 லட்சம் குழந்தைகளை கட்டாயமாக கடத்தி சென்றுள்ளது. கடத்தப்பட்ட இந்த குழந்தைகள் ரஷியாவின் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த குழந்தைகளில் சிலர் பெற்றோர்களிடம் இருந்தும், குடும்பங்களில் இருந்தும் பிரிக்கப்பட்டவர்கள் ஆவர். இந்த கிரிமினல் திட்டத்தின் நோக்கம் குழந்தைகளை கடத்துவது மட்டுமல்ல, அவர்களை பல்வேறு இடங்களுக்கு அனுப்பும்போது உக்ரைனை மறந்துவிடுவார்கள். மேலும் அவர்களால் திரும்பி வரவே முடியாது.

    இந்த குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை உக்ரைன் தண்டிக்கும், ஆனால் அதற்கு முன் போர்களத்தில், ‘உக்ரைனை யாரும் கைப்பற்ற முடியாது. நாங்கள் சரணடையமாட்டோம். எங்கள் குழந்தைகள் ஒன்றும் உடைமை கிடையாது’ என்பதை நாம் நிரூபிப்போம்.

    இதுவரை இந்த போரினால் 243 குழந்தைகள் இறந்துள்ளனர். 446 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    இவ்வாறு ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    ரஷிய அதிபர் புதின், பீலேவை தனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிரேசிலியா:

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 100வது நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த படையெடுப்பில் ஆயிரக்கணக்கான வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் பல நகரங்களை முற்றுகையிட்டுள்ள ரஷியா தொடர்ந்து முன்னேறி வருகிறது.

    இந்த போரினால் உலக அளவில் பொருளாதாரமும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த போர் மூலம் உக்ரைன் மற்றும் ரஷியாவில் இருந்து ஏற்றுமதி செய்யாமல் இருக்கும் உணவு தானியங்கள் மூலம் உலகின் பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் உக்ரைன் மீதான போரை ரஷியா உடனே நிறுத்த வேண்டும் என கால்பந்து ஜாம்பவான் பீலே, ரஷிய அதிபர் புதினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறியதாவது:-

    "இந்தப் படையெடுப்பை நிறுத்துங்கள்." இந்த சண்டை பொல்லாதது மற்றும் நியாயப்படுத்தவே முடியாதது. இந்த போர் வலி, பயம், மற்றும் வேதனையைத் தவிர வேறெதையும் கொண்டுவருவதில்லை.

    இவ்வாறு பீலே கூறியுள்ளார். 

    உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் உக்ரைனின் தேசிய அணி விளையாடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவர் இதனை தெரிவித்தார்.

    பீலேவும், புடினும் கடைசியாக மாஸ்கோவில் 2017 இல் உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பையின் போது சந்தித்தனர். ரஷிய அதிபர் புதினும், பீலேவை தனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
    இந்த முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஐரோப்பிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
    பிரசல்ஸ்:

    உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 97-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

    இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவியை வழங்கி வருகின்றன. மேலும் ரஷியாவின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

    இருப்பினும் ஐரோப்பாவின் எரிபொருள் தேவை பெரும்பாலும் ரஷியாவை நம்பியே உள்ளது. ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தங்களுக்கு தேவையான 35 சதவிகிதத்திற்கு அதிகமான எரிபொருட்களை ரஷியாவிடமிருந்தே பெறுகின்றன. இதனால், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார தடைகள் ரஷியா மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த உக்ரைன், மேற்கத்திய நாடுகள் விளையாடுவதை நிறுத்திவிட்டு, முழு தடைகளை விதிக்க வேண்டும் என கேட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷியாவிடமிருந்து வாங்கும் கச்சா எண்ணெய்யில் 90 சதவிகிதத்தை நிறுத்த ஐரோப்பிய யூனியன் நாடுகள் முடிவு செய்துள்ளன. பெல்ஜியத்தில் இன்று நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு தொடர்பான அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் ஐரோப்பிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
    ராணுவ சேவையில் தொழில்நுட்பம், மருந்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் அனுபவம் வாய்ந்தவர்களை இணைப்பதற்கு இந்த வயது வரம்பு ரத்து உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மாஸ்கோ:

    ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷியா ரத்து செய்துள்ளது.

    உக்ரைனுக்கு எதிரான ரஷிய போர் 3 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. எளிதாக உக்ரைனை ஆக்கிரமித்துவிடலாம் என்ற கணக்கில் இந்த போரை ரஷியா தொடங்கியது. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    இந்த போரில் ஆயிரக்கணக்கான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை ரஷியா ரத்து செய்துள்ளது. ரஷிய நாடாளுமன்றத்தில் இன்று இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேறியது. இதற்குமுன் இராணுவ 

    ராணுவத்தில் சேர ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் ரஷியர்களின் வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த உச்ச வயது வரம்பை ரஷியா ரத்து செய்துள்ளது.

    இதுகுறித்து ரஷியா கூறுகையில், இந்த புதிய நடைமுறை தேவைக்கு ஏற்ற, சிறப்பு தகுதி மற்றும் திறன் உள்ளவர்களை பணியமர்த்துவதை எளிதாக்கும். இந்த புதிய மசோதா படி, இன்னும் இளம் வீரர்கள் நிறைய பேரை ராணுவத்தில் இணைத்து கொள்ளலாம். அதேசமயம், ராணுவத்தில் இணைவதற்கான உச்ச வயது வரம்பு 40-ஆக இருந்த நிலையில், ராணுவ சேவையில் தொழில்நுட்பம், மருந்துவம் உள்ளிட்ட பிரிவுகளில் அனுபவம் வாய்ந்தவர்களை இணைப்பதற்கு இந்த வயது வரம்பு ரத்து உதவும். சமீபத்திய ஆண்டுகளில், ரஷிய இராணுவம் தன்னார்வலர்களை அதிகளவில் நம்பியுள்ளது. அங்கு 18-27 வயதுடைய அனைத்து ஆண்களும், ஒரு வருட கட்டாய இராணுவ சேவைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால், பலர் பல காரணங்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்கள் உரிய காரணம் கூறினால் மட்டுமே ராணுவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.

    இவ்வாறு ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.
    ×