என் மலர்
நீங்கள் தேடியது "அதிபர் ஜெலன்ஸ்கி"
- உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார்.
- ரஷியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.
கீவ்:
அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் பதவி ஏற்றபின் ரஷியாவுடன் உறவுகளை மேம்படுத்த முயன்றார். அந்நாட்டு அதிபர் புதினுடன் தொலைபேசியிலும் பேசி நட்பை வளர்த்தார்.
உக்ரைனுடன் ரஷியா நடத்தி வரும் போரை நிறுத்தும் முயற்சியிலும் டிரம்ப் ஈடுபட்டார். ஆனால் அவரது முயற்சி எந்தவித பலனும் அளிக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த டிரம்ப் ரஷியாவின் மிகப்பெரிய 2 எண்ணை நிறுவனங்களான ரோஸ் நெப்ட் மற்றும் அகோயில் ஆகியவற்றிற்கு பொருளாதார தடை விதித்தார்.
ரஷியாவுக்கு எதிராக அதிபர் டிரம்ப் எடுத்த முதல் நடவடிக்கை இதுவாகும்.
இந்நிலையில், ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அதிபர் டிரம்ப், ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரவேற்பு தெரிவித்துள்ளார். இத்தடை உத்தரவுகளை மேலும் விரிவுபடுத்த அவர் வலியுறுத்தியுள்ளார்.
- ரஷிய அதிபர் புதினை ஹங்கேரியில் சந்தித்துப் பேச உள்ளேன் என்றார் அதிபர் டிரம்ப்.
- வெள்ளை மாளிகை வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் வரவேற்றார்.
வாஷிங்டன்:
உக்ரைன் - ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்டில் அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதற்கிடையே, அதிபர் டிரம்ப் சமூக ஊடக பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷிய அதிபர் புதினுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் சந்தித்து போர் நிறுத்தம் குறித்து பேச திட்டமிட்டுள்ளேன். சந்திப்புக்கான தேதி இன்னும் இறுதி செய்யப் படவில்லை. இரு வாரங்களுக்குள் இந்த சந்திப்பு நடக்கும் என தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்குச் சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் வாசலில் வந்து வரவேற்றார் அதிபர் டிரம்ப்.
இந்தச் சந்திப்பின்போது அதிபர் புதினுடன் நடந்த உரையாடல் விபரங்கள் மற்றும் உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
- பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றுள்ளார்.
- ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
பீஜிங்:
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் நரேந்திர மோடி இரு நாள் பயணமாக சீனா சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தியான்ஜெனில் நாளை நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்களை பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி உடன் தொலைபேசியில் இன்று உரையாடினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தொலைபேசியில் தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலென்ஸ்கிக்கு நன்றி. நடந்து வரும் மோதல், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து நாங்கள் ஆலோசனை நடத்தினோம். அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா முழு ஆதரவை வழங்குகிறது எனதெரிவித்துள்ளார்.
- உக்ரைன் உடனான போரை நிறுத்துமாறு அதிபர் டிரம்ப் ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
- ரஷியா நடத்திய வான்வழி தாக்குதலில் உக்ரைனின் சிறைச்சாலை, மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்தனர்.
கீவ்:
உக்ரைன், ரஷியா இடையிலான போர் மூன்றரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார். இதற்கிடையே, போர் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட புதினுக்கு இன்னும் 10 முதல் 12 நாட்கள் மட்டுமே இருக்கின்றன. பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆனாலும் அதைப் பொருட்படுத்தாத ரஷியா, உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
உக்ரைன் மீது ரஷியா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சப்போரியா மாகாணம் பிலன்கிஸ்கா நகரில் உள்ள சிறைச்சாலை மீது ரஷியா வான்வழி தாக்குதல் நடத்தியது. டிரோன்கள் மூலம் சிறைச்சாலை மீது குண்டுகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் சிறைக்கைதிகள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர். மேலும் 80 பேர் படுகாயமடைந்தனர்.
மத்திய உக்ரைனின் டினிப்ரோ பகுதியில் ரஷிய படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 3 மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது.
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
இவை வேண்டுமென்றே, நடத்தப்பட்ட தாக்குதல்கள். தற்செயலானவை அல்ல என தெரிவித்தார்.
- உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது.
- பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் கொண்டு வர அதிபர் டிரம்ப் முயற்சித்து வருகிறார்.
கீவ்:
உக்ரைன் ரஷியா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்காக ரஷியா மீது இன்னும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறி வருகிறார்.
அதேநேரம், பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்கஅதிபர் டிரம்ப் போர் நிறுத்தம் கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போரை முடிவுக்கு கொண்டு வ, ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன்.
உக்ரைன் இந்தப் போரை ஒருபோதும் விரும்பவில்லை. மேலும் போரை தொடங்கிய ரஷியா தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.
- ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவ்:
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, உலகளவில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வேலைநிறுத்தங்கள் எண்ணெய் விலையின் அதிகரிப்புக்கு வழிவகுத்தன, இது எங்களுக்கு எதிர்மறையானது. எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து அதிக வருமானம் கிடைப்பதால் ரஷியர்கள் வலுவடைந்து வருகின்றனர் என தெரிவித்தார்.
- உக்ரைன் மீது ரஷியா ஏவிய டிரோன் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
- ரஷியாவின் டிரோன் தாக்குதலுக்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
கீவ்:
உக்ரைன் மீது மொத்தம் 69 ஏவுகணைகள் மற்றும் 298 டிரோன்களை ரஷியா நள்ளிரவில் ஏவி மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர்.
ரஷியா உடனான போர் தொடங்கியதிலிருந்து உக்ரைனில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது என அந்நாட்டு விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்நிலையில், ரஷியாவின் டிரோன் தாக்குதலை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அதிபர் ஜெலன்ஸ்கி டெலிகிராம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ரஷியாவின் இதுபோன்ற ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலும் அந்நாட்டுக்கு எதிரான புதிய தடைகளுக்கு போதுமான காரணமாகும். ரஷியா இந்தப் போரை இழுத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் கொலைகளைத் தொடர்கிறது.
உலகம் விடுமுறையில் செல்லலாம், ஆனால் வார இறுதி நாட்கள் மற்றும் வார நாட்கள் இருந்தபோதிலும் போர் தொடர்கிறது. இதைப் புறக்கணிக்க முடியாது.
அமெரிக்காவின் மவுனமும், உலகில் உள்ள மற்றவர்களின் மவுனமும் புதினை ஊக்குவிக்கிறது என காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.
- ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது.
- 3 ஆண்டுக்கு மேலாக சண்டை நடந்துவரும் நிலையில் நேரடி பேச்சுவார்த்தை நடந்தது.
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார்.
இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று முன்தினம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷிய அதிபர் புதினிடம் தொலைபேசியில் இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இது தொடர்பான டிரம்பின் எக்ஸ் பதிவில், "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் உரையாடினேன். ரஷ்யாவும் உக்ரைனும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகள் உடனடியாகத் தொடங்கும் என்று நம்புகிறேன். போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகள் குறித்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்த போர் முடிந்தவுடன் அமெரிக்காவுடன் பெரிய அளவிலான வர்த்தகம் செய்ய ரஷ்யா விரும்புகிறது. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். புதிய வேலைவாய்ப்புகள், மற்றும் செல்வதை உருவாக்க ரஷ்யாவிற்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. அதேபோல், உக்ரைன் தனது நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் செயல்பாட்டில் வர்த்தகத்தில் பெரும் பயனாளியாக இருக்க முடியும்" என்று பதிவிட்டுள்ளார்.
அதே சமயம், இனி எக்காலத்திலும் நேட்டோவில் உக்ரைன் சேரக்கூடாது என்றும் கிரீமியா பகுதி முழுமையாக ரஷியாவுக்கே அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் ரஷியா நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரஷியாவுக்கு எதிரான பொருளாதார தடைகள் தொடர வேண்டும் என்று தொலைபேசியில் பேசிய டிரம்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வலியுறுதியாக கூறப்படுகிறது
- ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது.
- 3 ஆண்டுக்கு மேலாக சண்டை நடந்துவரும் நிலையில் நேரடி பேச்சுவார்த்தை நடந்தது.
வாஷிங்டன்:
ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் சம்மதம் தெரிவித்தார்.
இரு நாட்டு பிரதிநிதிகளும் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தைக்காக நேற்று முன்தினம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கூடினர். துருக்கி நாட்டின் அதிகாரிகள் நடுநிலை வகித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்தது.
இந்நிலையில், ரஷியா-உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து திங்கட்கிழமை அதிபர் புதினுடன் தொலைபேசியில் பேசுவேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
வரும் திங்கட்கிழமை ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புதினிடம் தொலைபேசி மூலம் பேசுவேன். அப்போது வாரத்திற்கு சராசரியாக 5000-க்கும் மேற்பட்ட ரஷிய மற்றும் உக்ரைன் வீரர்களைக் கொல்லும் போரை நிறுத்துவது குறித்து பேசுவேன்.
அதன்பின் நான் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடமும் பேசுவேன். இது ஒரு முக்கிய நாளாக இருக்கும் என நம்புகிறேன். ஒரு போர் நிறுத்தம் ஏற்படும். மேலும் இந்த வன்முறை முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.
- உக்ரைனை குறிவைத்து ரஷியா சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர்.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. விரைவில் இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. அதிபர் ஜெலன்ஸ்கி சொந்த ஊரான கிரிவ்வி ரிக் பகுதியில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் பிரட்கெட் பிரிங், விளையாட்டு மைதானம், உணவகத்தில் நடந்த ஏவுகணை தாக்குதல் கொடூரமானது. இதற்காகவே போர் நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், துரதிர்ஷ்டவசமாக அமெரிக்காவின் விமர்சனம் என்பது விரும்பத்தகாத ஆச்சர்யமாக உள்ளது. எத்தகைய வலிமையான நாடு, எத்தகைய வலிமையான மக்கள். ஆனால், பலவீனமான விமர்சனம் செய்கிறது. ஏவுகணை தாக்குதலில் குழந்தைகள் உயிரிழந்தால் கூட ரஷியா என்ற பெயரை உச்சரிக்கவே பயப்படுகின்றனர் என தெரிவித்தார்.
- உக்ரைனை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது.
- இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர்.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.
இதுதொடர்பாக ரஷியா-உக்ரைன் இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.
ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.
- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 மாதங்களைக் கடந்துள்ளது.
- கிழக்கு உக்ரைன் நகரை அழித்தது ரஷியா என அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
கீவ்:
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா 10 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. தற்போது இந்த போர் சட்டவிரோதமாக ரஷியாவுடன் இணைத்துக்கொள்ளப்பட்ட 4 மாகாணங்களில் மையம் கொண்டுள்ளது.
அந்த மாகாணங்களின் கட்டுப்பாட்டை நிறுவ ரஷியா போராடி வரும் சூழலில், அந்த மாகாணங்களை மீட்க உக்ரைன் ராணுவம் விடாமுயற்சியுடன் சண்டையிட்டு வருகிறது. இதனால் அந்த 4 மாகாணங்களிலும் உள்ள பல்வேறு நகரங்களில் தினமும் குண்டு மழை பொழிந்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் மாகாணங்களில் உள்ள பல முன்னணி நகரங்களில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது. குறிப்பாக டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள கிழக்கு நகரமான பக்முத்தை ரஷிய ஆக்கிரமிப்பாளர்கள் அழித்துவிட்டனர். அந்த நகரின் நிலத்தில் வாழ்வதற்கு இடமில்லை என தெரிவித்தார்.






