எண்ணெய் விலை உயர்வு ரஷியாவின் போர் முயற்சிகளுக்கு உதவக்கூடும்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
எண்ணெய் விலை உயர்வு ரஷியாவின் போர் முயற்சிகளுக்கு உதவக்கூடும்: ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
Published on

கீவ்:

ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையே, உலகளவில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வேலைநிறுத்தங்கள் எண்ணெய் விலையின் அதிகரிப்புக்கு வழிவகுத்தன, இது எங்களுக்கு எதிர்மறையானது. எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து அதிக வருமானம் கிடைப்பதால் ரஷியர்கள் வலுவடைந்து வருகின்றனர் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com