என் மலர்
நீங்கள் தேடியது "எண்ணெய் விலை"
- நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.
- கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன.
விருதுநகர்:
விருதுநகர் வணிகச் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்கப்படும் எண்ணெய் வகைகளின் விலை நிலவரம் வருமாறு:-
நல்லெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 4,300 ரூபாய், கடலை எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,600 ரூபாய், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 6,500 ரூபாய், ரீபைண்ட் ஆயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,400 ரூபாய் , விளக்கெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,550 ரூபாய், பாமாயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,030 ரூபாய் , கடுகு எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,700 க்கு விற்கப்படுகிறது.
சில்லறை விலையில் எண்ணெய் வகைகள் விலை நிலவரம் :-
நல்லெண்ணெய் ஒரு கிலோ 290 ரூபாய்க்கும் கடலை எண்ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும், ரீபைண்ட் ஆயில் ஒரு கிலோ 170 க்கும், தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 460 ரூபாய்க்கும், விளக்கெண் ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும் , பாமாயில் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், கடுகு எண்ணெய் ஒரு கிலோ 190 க்கும் விற்கப்படுகிறது.
நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.
கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன. தீபாவளி வரை இந்த நிலையே தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
- பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது.
கீவ்:
ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் ஈரான் ராணுவ நிலைகள்மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை தவிர்ப்பதற்கான முன்கூட்டிய தாக்குதல் இது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, உலகளவில் கச்சா எண்ணெய் விலை வெகுவாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வேலைநிறுத்தங்கள் எண்ணெய் விலையின் அதிகரிப்புக்கு வழிவகுத்தன, இது எங்களுக்கு எதிர்மறையானது. எண்ணெய் ஏற்றுமதியில் இருந்து அதிக வருமானம் கிடைப்பதால் ரஷியர்கள் வலுவடைந்து வருகின்றனர் என தெரிவித்தார்.
- இந்த எண்ணெய் விலை வரம்பை ஏற்க ரஷியா மறுத்துள்ளது.
- இந்த விலை வரம்பு ரஷியா பெறும் வருவாயைக் கட்டுப்படுத்த ஒரு முக்கியமான கருவி ஆகும்.
மாஸ்கோ:
ரஷியாவில் இருந்து வரும் எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர்கள் ஆக ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ஜி7-ல் சேர்க்கப்பட்டுள்ள பணக்கார நாடுகள் இந்த விலை வரம்பை நிர்ணயித்துள்ளன. மேலும், ரஷியாவிலிருந்து உலகிற்கு வரும் எண்ணெய் தடையின்றி தொடர்ந்து வழங்குவதே இதன் நோக்கமாகும்.
ரஷிய எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 60 அமெரிக்க டாலர் என்ற உச்சவரம்பை நிர்ணயிக்கும் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது, அதேபோல, ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவை ஆஸ்திரேலியா மற்றும் ஜி-7 நாடுகளும் ஆதரித்துள்ளன.
உக்ரைன் போர் தொடங்கிய பின், ஐரோப்பிய ஒன்றியம் ஜி-7 நாடுகளும் ரஷியாவிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய்க்கு தடை விதித்துள்ளன.
இதற்கிடையே, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த விலை வரம்பு ரஷியா பெறும் வருவாயைக் கட்டுப்படுத்த ஒரு முக்கியமான கருவி ஆகும். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் எண்ணெய் விநியோகம் சீராக கிடைத்திட வழி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எண்ணெய் விலை வரம்பை ரஷியா ஏற்க மறுத்து இந்த முடிவை நிராகரித்துள்ளது.






