என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எண்ணெய்"

    • வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்தது
    • வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில், வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் தாம் தான் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில், வெனிசுலாவின் பொறுப்பு அதிபர் டிரம்ப் என்று குறிப்பிட்டுள்ள விக்கிபீடியா பக்கத்தை பகிர்ந்துள்ளார். 

    • வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
    • வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்று டிரம்ப் தெரிவித்தார்.

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் வெனிசுலா கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வரிவிதிப்பு நடவடிக்கைகளால் முடங்கியுள்ள இருதரப்பு வர்த்தகத்தை மீட்டெடுக்க நல்ல வாய்ப்பாக அமையும் என டிரம்ப் அரசு தரப்பு கருத்து தெரிவித்துள்ளது.

    • அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவின் எண்ணெய் தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்பும்
    • அமெரிக்கா உடனடியாக 5 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கத் தொடங்கும்

    வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி ஆகியோரை போதை பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்க ராணுவம் அதிரடியாக கைது செய்து அமெரிக்காவுக்கு அழைத்து சென்றது.

    இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கையாளும் என்றும் எண்ணெயை விற்று அதிலிருந்து வரும் பணம் வெனிசுலா நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவில் முதலீடுகளை செய்யும் என்றும் தெரிவித்தார்.

    இந்நிலையில் வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்காக அமெரிக்க எண்ணெய் நிறுவன தலைவர்களுடன் டிரம்ப் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

    வெனிசுலாவுடன் தற்போது நாங்கள் மிகவும் இணக்கமாக இருக்கிறோம். அமெரிக்க நிறுவனங்கள் வெனிசுலாவின் சிதைந்த எண்ணெய் தொழில்துறையை விரைவாக மீண்டும் கட்டியெழுப்பவும், மில்லியன்கணக்கான பேரல் எண்ணெய் உற்பத்தியை அமெரிக்கா, வெனிசுலா மக்கள் மற்றும் முழு உலகிற்கும் பயனளிக்கும் வகையில் கொண்டு வரவும் உதவ முடியும்.

    எந்த நிறுவனங்கள் வெனிசுலாவுக்கு செல்லும் என்பது குறித்த முடிவை நாங்கள் எடுப்போம். வெனிசுலா மிகவும் வெற்றிகரமானதாக இருக்கப் போகிறது.மேலும் அமெரிக்க மக்கள் பெரும் பயனாளிகளாக இருப்பார்கள்.

    அமெரிக்கா உடனடியாக 5 கோடி பேரல்கள் வரை கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து விற்கத் தொடங்கும் என்றும், இது காலவரையின்றித் தொடரும் என்றும் வெனிசுலாவும் ஒப்புக் கொண்டுள்ளது என்றார்.

    மேலும் அவர் கூறும் போது, நான் 8 போர்களை முடிவுக்கு கொண்டு வந்தேன். இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரை அணு ஆயுதங்கள் மோதல் இல்லாமல் விரைவாக முடிவுக்கு கொண்டு வந்தேன்.

    1 கோடி பேரின் உயிர்களை காப்பாற்றியதற்காக பாகிஸ்தான் பிரதமர் என்னை பாராட்டினார். வரலாற்றில் என்னை விட வேறு யாருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று என்னால் நினைக்க முடியவில்லை என்றார்.

    • வெனிசுலா எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும்.
    • அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும்.

    வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து அமெரிக்கா அழைத்து வந்தது.

    வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே வெனி சுலா நாட்டை அமெரிக்கா நிர்வகிக்கும் என்றும் அந்நாட்டு எண்ணெய் வளத்தை கையாளுவோம் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். தங்களின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட வேண்டும் என்று வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்சுக்கு டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.

    இந்த நிலையில் வெனிசுலாவில் இருந்து 5 கோடி கச்சா எண்ணெய் பேரல்களை அமெரிக்கா வாங்கும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வெனிசுலாவில் உள்ள இடைக்கால அதிகாரிகள் 30 மில்லியன் (3 கோடி) முதல் 50 மில்லியன் (5 கோடி) பேரல்கள் உயர்தர கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு வழங்கவுள்ளனர் என்பதை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த எண்ணெய் அதன் சந்தை விலையில் விற்கப்படும். அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும். அந்த பணம் என்னால் கட்டுப்படுத்தப்படும். இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த எரிசக்தித் துறைச் செயலாளர் கிறிஸ் ரைட்டுக்கு உத்தரவிட்டு உள்ளேன். இந்த எண்ணெய் வெனிசுலா சேமிப்பு கப்பல்கள் மூலம் எடுத்து வரப்பட்டு அமெரிக்கா கப்பல்துறைக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    வெனிசுலாவில் உள்ள எண்ணெய் வளத்தை கைப்பற்ற டிரம்ப் நினைக்கிறார் என்றும் இதனால் தனது ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறார் என்றும் நிக்கோலஸ் மதுரோ குற்றம் சாட்டியிருந்தார். தற்போது அவர் கைது செய்யப் பட்டுள்ள நிலையில் வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க உள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எண்ணெய் சருமம் உள்ளவர்களும் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம்
    • பூப்பெய்தும் பெண்களை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்க சொல்வார்கள்.

    பலரும் சருமம் பளபளப்பாக, மென்மையாக, ஈரப்பதத்துடன் இருக்க பாடிலோஷன்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை அனைத்தும் பல விளைவுகளையும் கொண்டுள்ளன என்பதை அறிய மறுக்கின்றனர். பாடி லோஷன்களுக்கு பதில் எண்ணெய்யை சருமத்திற்கு பயன்படுத்துவது அவ்வளவு நன்மை பயக்கும். அதனால்தான் நமது பாட்டி எல்லாம் எண்ணெய் குளியல் எடுக்க சொல்வர். எண்ணெய் குளியல், எண்ணெய் பயன்பாடு ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை தரவல்லது. பாடி லோஷன்களுக்கு மாறாக உங்களுக்கு முழுமையான உடல் பளபளப்பை தரும் 5 எண்ணெய் வகைகளை பார்ப்போம்.

    தேங்காய் எண்ணெய்

    நெடுங்காலமாகவே தேங்காய் எண்ணெய்யை அழகு, ஆரோக்கியம், ஆகாரம் என பல செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தி வருகிறோம். அதன் நற்குணங்கள் அனைத்தும் நாம் அறிந்தவையே. தேங்காய் எண்ணெய் கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளால் நிரம்பியுள்ளது. இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி மென்மையையும், பளபளப்பையும் இயற்கையாகவே தருகிறது. சிறந்த பலன்கிடைக்க தேங்காய் எண்ணெய்யை சிறிது சூடுபடுத்தி பயன்படுத்தலாம். வெயிலில் சென்றுவந்த பிறகு அல்லது சருமம் வறட்சியாக, சோர்வாக உணரும்போது தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

    நல்லெண்ணெய்

    நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது மந்தமான, வறண்ட சருமத்திற்கு நல்ல பலன் கொடுக்கும். நல்லெண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது இன்னும் பலனளிக்கும். பொதுவாக பூப்பெய்தும் பெண்களை வெறும் வயிற்றில் நல்லெண்ணெய் குடிக்க சொல்வார்கள். இடுப்பு எலும்புகள் பலம் அடையும் என்று. அவ்வளவு நன்மைகள் கொண்டது நல்லெண்ணெய். நல்லெண்ணைய்யை லேசாக சூடாக்கி ஒரு 10 நிமிடம் மசாஜ் செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, சருமத்தை உறுதியாகவும், ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் காட்டும். 

    பாதாம் எண்ணெய்

    எண்ணெய் பசையை அதிகம் விரும்பாதவர்கள், எண்ணெய் சருமம் உள்ளவர்களும் பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம். பாதாம் எண்ணெய் மற்ற எண்ணெய்களைப் போல கனமாக இருக்காது. இது மென்மையாகவும், சருமத்தால் விரைவாக உறிஞ்சப்படும் தன்மையும் கொண்டது, இதனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் ஈ மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளது, இது உங்கள் சருமத்தின் நிறத்தை சமன் செய்து நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது. இரவில் தூங்க செல்வதற்கு முன்பு பாதாம் எண்ணெய்யை முகத்தில் தடவி இரவுமுழுவதும் அப்படியே விடலாம். பழுப்பு நிற கோடுகள், கருமையான திட்டுகளை இது நீக்கும். வேண்டுமானால் பாதாம் எண்ணெயுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். 


    பாதாம் & ஆர்கன் எண்ணெயில் அதிகம் ஒட்டும்தன்மை இருக்காது

    ஆர்கன் எண்ணெய்

    ஆர்கன் மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் ஒரு தாவர எண்ணெய்தான் ஆர்கன் எண்ணெய். இது திரவ தங்கம் என்று அழைக்கப்படுகிறது. பிசுபிசுத்தன்மையை வெறுப்பவர்களுக்கு இதுவும் நல்ல தேர்வாகும். இதில் வைட்டமின் ஈ மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை உங்கள் சருமத்தை எண்ணெய் பசையின்றி பளபளப்பாக்குகின்றன. இதனை குளித்தபிறகு இரண்டு, மூன்று சொட்டுகள் முகத்தில் தடவினால் போதும். எண்ணெய் பசை இருப்பதுபோல் முகத்தில் தெரியாது. இது நல்ல வாசனை கொடுப்பதோடு மென்மையான, பளபளப்பான தன்மையை சருமத்திற்கு அளிக்கிறது.  

    கடுகு எண்ணெய்

    கடுகு எண்ணெயில் ஒமேகா-3 அமிலங்கள், ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அவை சருமத்தை பிரகாசமாக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். மசாஜ் செய்ய, குறிப்பாக குளிர்காலத்தில், உடலை சூடாகவும், சருமத்தை மிருதுவாகவும் வைத்திருக்க, இது பல காலமாகப் பயன்படுத்தப்படுகிறது. வாரத்திற்கு ஒரு முறை கடுகு எண்ணெய்யை பயன்படுத்தினால், உங்கள் சருமம் வலுவாகவும், மென்மையாகவும் இருக்கும்.  இதன் வாசனை பிடிக்காதவர்கள் ஜாஸ்மீன் அல்லது லாவெண்டர் எண்ணெய்யை இரண்டு, மூன்று சொட்டுகள் சேர்த்து பயன்படுத்துங்கள். 

    • நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.
    • கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன.

    விருதுநகர்:

    விருதுநகர் வணிகச் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்கப்படும் எண்ணெய் வகைகளின் விலை நிலவரம் வருமாறு:-

    நல்லெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 4,300 ரூபாய், கடலை எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,600 ரூபாய், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 6,500 ரூபாய், ரீபைண்ட் ஆயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,400 ரூபாய் , விளக்கெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,550 ரூபாய், பாமாயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,030 ரூபாய் , கடுகு எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,700 க்கு விற்கப்படுகிறது.

    சில்லறை விலையில் எண்ணெய் வகைகள் விலை நிலவரம் :-

    நல்லெண்ணெய் ஒரு கிலோ 290 ரூபாய்க்கும் கடலை எண்ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும், ரீபைண்ட் ஆயில் ஒரு கிலோ 170 க்கும், தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 460 ரூபாய்க்கும், விளக்கெண் ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும் , பாமாயில் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், கடுகு எண்ணெய் ஒரு கிலோ 190 க்கும் விற்கப்படுகிறது.

    நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.

    கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன. தீபாவளி வரை இந்த நிலையே தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • பொதுவாக எதை எடுத்துக்கொண்டாலும் இரண்டு விஷயங்கள் இருக்கும்.
    • தலையில் எண்ணெய் தேய்ப்பது அனைவரும் தினமும் செய்யலாம்.

    தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறியிருந்ததை பார்த்தோம். உடலெங்கும் எண்ணெய் தேய்க்க சிரமம் என்பதினால், மிக முக்கியமாக மூன்று இடங்களில் மட்டும் எண்ணெய் தேய்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை தலை, காது, பாதம்.

    பொதுவாக எதை எடுத்துக்கொண்டாலும் இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று ஆரம்பம் மற்றொருன்று முடிவு, மனித உடலை பொறுத்தவரை உடல் ஆரம்பிக்குமிடம் தலை, முடியும் இடம் பாதம். இந்த உடம்பில் தலை தான் மிக முக்கியம். ஏன் எனில் நாம் ஏற்கனவே பார்த்தது போல ஐம்புலன்களும் உள்ள உறுப்பு தலை.

    தலையைப்பற்றி பார்ப்பதற்கு முன் பொதுவாக சில விஷயங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு மரம் நன்றாக செழித்து வளர வேண்டுமென்றால் அதனுடைய வேர் நன்றாக இருக்க வேண்டும். வேர் சரியில்லை என்றால் மரம் பலவீனமாகிவிடும் மற்றும் பட்டுப்போக வாய்ப்புயிருக்கிறது. அதேபோலத்தான் மனிதனும்.

    மனிதனுடைய வேர் தலையில் தான் இருக்கிறது. என்னது மனிதனுடைய வேர் தலையா? ஆனால் மரத்தின் வேர் அடியில் அல்லவா இருக்கிறது. மனித தலை மேலே அல்லவா இருக்கிறது என்று கேட்க தோன்றும். ஆம், உண்மைதான். ஆயுர்வேத கூற்றின்படி மனிதன் தலை கீழாக செயல்படும் ஓர் இனம்.

    பருமனாக உள்ள பொருள் கீழே இருக்கும், லேசான பொருள் மேலே இருக்கும் என்பதுதானே நிதர்சனம்.

    மனித உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள் உள்ளன. இதில் மார்புக்கு மேலே கபம், மார்பிலிருந்து தொப்புள் வரை பித்தம், தொப்புளுக்கு கீழே வாதம் இருக்கும்.

    ரா. பாலமுருகன்

     

    இதில் வாதம் லேசான தன்மை கொண்டது, கபம் கணத் தன்மை கொண்டது. லேசான தன்மை கொண்டது மேலிருக்க வேண்டும். கணத் தன்மை கொண்டது கீழ் இருக்க வேண்டும். ஆனால் மனித உடல் தலை கீழாக அமைத்து உள்ளது. அதனால் தான் மனிதன் தலை கீழாக செயல்படும் இனம் என்கிறோம். இப்போது தெரிய வருகிறதா மனித தலை தான் வேர் என்று.

    பொதுவாக ஆரோக்கியத்தை மேம்படுத்த தலையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் மிக தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது.

    தலையை பாதுகாக்க "மூர்த்தினி தைல சிகிச்சை" நான்கு வகையாக மேற்கொள்ளப்படுகிறது.

    1. தலையில் எண்ணெய் தேய்த்தல்.

    2. தலையில் எண்ணெய்யை தொடர்ந்து ஊற்றுதல்.

    3. தலையில் பஞ்சின் உதவி உடன் சிறிது நேரம் எண்ணெய் வைத்தல்.

    4. vbதலையில் வரையறுக்கப்பட்ட கால அளவு நேரம் எண்ணெய்யை தேக்கி வைத்தல் என்று நான்கு வகையில் சிகிட்சை மேற்கொள்ளப்படுகிறது.

    இதில் முதலில் கூறிய தலையில் எண்ணெய் தேய்த்தல் என்பதை தவிர மீதமுள்ள மூன்றும் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் செய்யப்படுவது. ஆனால் தலையில் எண்ணெய் தேய்ப்பது அனைவரும் தினமும் செய்யலாம்.

    ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் எப்படி எண்ணெய் தேய்க்கலாம் என்று பார்ப்போம். தினமும் காலையில் குளிப்பதற்கு முன் 10ml சுத்தனமான நல்லஎண்ணெய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது மூலிகை மருந்துகள் கொண்டு செரியூட்டபட்ட மருந்து எண்ணெய்யை தலை முழுவதும் வட்ட வடிவில் அதிக அழுத்தம் இல்லாமல் தலையில் எல்லா இடத்திலும் படும்படி தேய்க்க வேண்டும். அதன் பின் தலைக்கு குளிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அண்டை மாநிலங்களில் இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.

    நம் மாநிலத்தில் குளித்த பின்பே எண்ணெய் தேய்க்கும் முறை இருந்து வந்தது. ஆம் இருந்து வந்தது தான்... ஆனால் தற்போது இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும் என்பதையே மறந்து வாழ்த்து வருகின்றனர் .இதனால் தான் தூக்கம் குறைந்து, நியாபக சக்தியையும் குறைந்து வருவதை காணமுடிகிறது.

     

    தலையில் எண்ணெய் தேய்ப்பதினால் அளப்பரிய பயன்களை பெற முடியும், தலை வலி ஏற்படாது. தலை முடி நன்றாக அடர்த்தியாக, கருமை நிறத்தில், நீண்ட முடியாக வளரும். இள நரை, வழுக்கை ஏற்படாது. கபாலத்திற்கு பலம் ஏற்படும். ஐம்புலன்கள் நன்றாக செயல்படும். முக மலர்ச்சி ஏற்படும். மிக முக்கியமாக நன்றாக தூக்கம் வரும்.

    இது தான் இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கியமாக தேவையான ஒன்று. ஆக குளிப்பதற்கு முன்போ அல்லது குளித்து நன்கு தலை காய்ந்த பின்போ மூலிகை எண்ணெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து வரலாம்.

    நோய்யுற்றவர்கள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் கீழ் காணும் மருந்துகளை வாங்கி தினமும் தலையில் தேய்த்து வர நோய் கட்டுக்குள் வரும்.

    நீலிபிருங்காதி தைலம் - தலை முடி நன்றாக வளர...

    பிருங்க ஆமலாக தைலம் - தலைமுடி கருக்க, குளிர்ச்சி ஏற்பட...

    க்ஷிரபலா தைலம் - நன்றாக தூக்கம் வர...

    அசன வில்வாதி தைலம் - சைனஸ் பிரச்சனைக்கு...

    பலா ஹட்டாதி தைலம் - தலை வலி குணமாக...

    தூர்வாதி தைலம் - தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு நீங்க...

    மேலும் மன உளைச்சல், அழுத்தம், தூக்கமின்மை, தலையில் ஏற்படும்சோரியாசிஸ் போன்ற பல நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் தலையில் எண்ணெய் தேய்த்து வரலாம்.

    தொலைபேசி- 9025744149

    • வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள்.
    • வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும்.

    வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

    * முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

    * வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

    * குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

    * சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும்.

    இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் நல்லது. வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

    * யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

    * முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்கி வருகிறது.
    • இந்தியா பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார்.

    இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்ப், "இந்தியா இனி, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என கேள்விப்பட்டதாகவும், அப்படி நடந்தால் உண்மையில் அது நல்ல நடவடிக்கை" என்று தெரிவித்தார்.

    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
    • இந்திய நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், ஈரானிய பெட்ரோலியம் மற்றும் பெட்ரோ கெமிக்கல் பொருட்களை வர்த்தகம் செய்ததாகக் கூறி 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்களுக்கச் சொந்தமான கப்பல்களுக்கும் அமெரிக்க தடை விதித்துள்ளது

    அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்ட இந்திய நிறுவனங்கள் :

    1. அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்

    2. குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட்

    3. ஜூபிடர் டை கெம் பிரைவேட் லிமிடெட்

    4. ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ

    5. பெர்சிஸ்டண்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட்

    6. காஞ்சன் பாலிமர்ஸ்

    • பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் இருந்து ஏற்றுமதி ஆகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை இந்தியா பெருமளவில் வாங்குவதால் டிரம்ப் 25 சதவீதம் வரி விதித்துள்ளார். ஆகஸ்ட் முதல் புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது.

    இந்நிலையில், பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பேசிய டிரம்ப், பாகிஸ்தான் நாட்டுடன் நாங்கள் ஒப்பந்தம் ஒன்றை முடிவு செய்துள்ளோம். இதன்படி, பாகிஸ்தானிலுள்ள பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளில் இருந்து எண்ணெய் எடுக்கும் பணியை இணைந்து மேற்கொள்ள போகிறோம். இதற்காக எண்ணெய் நிறுவனம் தேர்வு செய்யும் நடைமுறையில் ஈடுபட்டு இருக்கிறோம்.

    யாருக்கு தெரியும், ஒரு நாள் இந்தியாவுக்கு கூட பக்ஷிதன் எண்ணெயை விற்பனை செய்ய கூடும் என்று டிரம்ப் கிண்டலாக கூறினார்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போரை நான் தான் தடுத்து நிறுத்தினேன் என்று தொடர்ந்து டிரம்ப் கூறி வரும் நிலையில், பாகிஸ்தானுடன் அமெரிக்கா கைகோர்த்துள்ளது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான்.
    • தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை.

    தினமும் தலைமுடியில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்தாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிக எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடும். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்படும். அதிக எண்ணெய் தலையில் இருக்கும்போது தூசியும், அழுக்கும் அதிகமாக தலையில் சேரும். இதனால் தலையில் அரிப்பு, சொரிதல் போன்றவை ஏற்படும். சிலசமயம் அதிக எண்ணெய் தலைமுடியில் பொடுகை அதிகமாக்கி விட்டுவிடும்.

    தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான். சிறிதளவே எண்ணெய் எடுத்துக்கொண்டு நன்றாக தலை முழுவதும் படும்படி தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். மணிக்கணக்கில் தலையில் எண்ணெய்யை ஊற விடாமல் தலைமுடியை எண்ணெய் பிசுக்கு நன்கு போகுமாறு கழுவி விடவும்.

    தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. தலைமுடியின் அடியில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். அதன்பின் குளிக்க வேண்டும்.

    அந்த காலத்தில் கிராமப்புறங்களில் தலையில் எண்ணெயை ஊற்றி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொஞ்ச நேரம் ஊற வைத்து பின் ஆற்றிலோ, குளத்திலோ அல்லது கிணற்றிலோ நன்கு குளித்துவிட்டு வந்து அன்றைக்கு தயாரிக்கப்பட்டிருக்கும் 'சிறப்பு சாப்பாடு' சாப்பிட்டு முடித்தால், அதனால் உண்டாகும் மயக்கத்தில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால் அது ஒரு சந்தோஷமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

    ×