என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தலைக்கு எண்ணெய்... உடல் நலத்துக்கு நல்லது!
- பொதுவாக எதை எடுத்துக்கொண்டாலும் இரண்டு விஷயங்கள் இருக்கும்.
- தலையில் எண்ணெய் தேய்ப்பது அனைவரும் தினமும் செய்யலாம்.
தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறியிருந்ததை பார்த்தோம். உடலெங்கும் எண்ணெய் தேய்க்க சிரமம் என்பதினால், மிக முக்கியமாக மூன்று இடங்களில் மட்டும் எண்ணெய் தேய்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை தலை, காது, பாதம்.
பொதுவாக எதை எடுத்துக்கொண்டாலும் இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று ஆரம்பம் மற்றொருன்று முடிவு, மனித உடலை பொறுத்தவரை உடல் ஆரம்பிக்குமிடம் தலை, முடியும் இடம் பாதம். இந்த உடம்பில் தலை தான் மிக முக்கியம். ஏன் எனில் நாம் ஏற்கனவே பார்த்தது போல ஐம்புலன்களும் உள்ள உறுப்பு தலை.
தலையைப்பற்றி பார்ப்பதற்கு முன் பொதுவாக சில விஷயங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மரம் நன்றாக செழித்து வளர வேண்டுமென்றால் அதனுடைய வேர் நன்றாக இருக்க வேண்டும். வேர் சரியில்லை என்றால் மரம் பலவீனமாகிவிடும் மற்றும் பட்டுப்போக வாய்ப்புயிருக்கிறது. அதேபோலத்தான் மனிதனும்.
மனிதனுடைய வேர் தலையில் தான் இருக்கிறது. என்னது மனிதனுடைய வேர் தலையா? ஆனால் மரத்தின் வேர் அடியில் அல்லவா இருக்கிறது. மனித தலை மேலே அல்லவா இருக்கிறது என்று கேட்க தோன்றும். ஆம், உண்மைதான். ஆயுர்வேத கூற்றின்படி மனிதன் தலை கீழாக செயல்படும் ஓர் இனம்.
பருமனாக உள்ள பொருள் கீழே இருக்கும், லேசான பொருள் மேலே இருக்கும் என்பதுதானே நிதர்சனம்.
மனித உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள் உள்ளன. இதில் மார்புக்கு மேலே கபம், மார்பிலிருந்து தொப்புள் வரை பித்தம், தொப்புளுக்கு கீழே வாதம் இருக்கும்.
ரா. பாலமுருகன்
இதில் வாதம் லேசான தன்மை கொண்டது, கபம் கணத் தன்மை கொண்டது. லேசான தன்மை கொண்டது மேலிருக்க வேண்டும். கணத் தன்மை கொண்டது கீழ் இருக்க வேண்டும். ஆனால் மனித உடல் தலை கீழாக அமைத்து உள்ளது. அதனால் தான் மனிதன் தலை கீழாக செயல்படும் இனம் என்கிறோம். இப்போது தெரிய வருகிறதா மனித தலை தான் வேர் என்று.
பொதுவாக ஆரோக்கியத்தை மேம்படுத்த தலையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் மிக தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது.
தலையை பாதுகாக்க "மூர்த்தினி தைல சிகிச்சை" நான்கு வகையாக மேற்கொள்ளப்படுகிறது.
1. தலையில் எண்ணெய் தேய்த்தல்.
2. தலையில் எண்ணெய்யை தொடர்ந்து ஊற்றுதல்.
3. தலையில் பஞ்சின் உதவி உடன் சிறிது நேரம் எண்ணெய் வைத்தல்.
4. vbதலையில் வரையறுக்கப்பட்ட கால அளவு நேரம் எண்ணெய்யை தேக்கி வைத்தல் என்று நான்கு வகையில் சிகிட்சை மேற்கொள்ளப்படுகிறது.
இதில் முதலில் கூறிய தலையில் எண்ணெய் தேய்த்தல் என்பதை தவிர மீதமுள்ள மூன்றும் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் செய்யப்படுவது. ஆனால் தலையில் எண்ணெய் தேய்ப்பது அனைவரும் தினமும் செய்யலாம்.
ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் எப்படி எண்ணெய் தேய்க்கலாம் என்று பார்ப்போம். தினமும் காலையில் குளிப்பதற்கு முன் 10ml சுத்தனமான நல்லஎண்ணெய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது மூலிகை மருந்துகள் கொண்டு செரியூட்டபட்ட மருந்து எண்ணெய்யை தலை முழுவதும் வட்ட வடிவில் அதிக அழுத்தம் இல்லாமல் தலையில் எல்லா இடத்திலும் படும்படி தேய்க்க வேண்டும். அதன் பின் தலைக்கு குளிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அண்டை மாநிலங்களில் இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
நம் மாநிலத்தில் குளித்த பின்பே எண்ணெய் தேய்க்கும் முறை இருந்து வந்தது. ஆம் இருந்து வந்தது தான்... ஆனால் தற்போது இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும் என்பதையே மறந்து வாழ்த்து வருகின்றனர் .இதனால் தான் தூக்கம் குறைந்து, நியாபக சக்தியையும் குறைந்து வருவதை காணமுடிகிறது.
தலையில் எண்ணெய் தேய்ப்பதினால் அளப்பரிய பயன்களை பெற முடியும், தலை வலி ஏற்படாது. தலை முடி நன்றாக அடர்த்தியாக, கருமை நிறத்தில், நீண்ட முடியாக வளரும். இள நரை, வழுக்கை ஏற்படாது. கபாலத்திற்கு பலம் ஏற்படும். ஐம்புலன்கள் நன்றாக செயல்படும். முக மலர்ச்சி ஏற்படும். மிக முக்கியமாக நன்றாக தூக்கம் வரும்.
இது தான் இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கியமாக தேவையான ஒன்று. ஆக குளிப்பதற்கு முன்போ அல்லது குளித்து நன்கு தலை காய்ந்த பின்போ மூலிகை எண்ணெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து வரலாம்.
நோய்யுற்றவர்கள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் கீழ் காணும் மருந்துகளை வாங்கி தினமும் தலையில் தேய்த்து வர நோய் கட்டுக்குள் வரும்.
நீலிபிருங்காதி தைலம் - தலை முடி நன்றாக வளர...
பிருங்க ஆமலாக தைலம் - தலைமுடி கருக்க, குளிர்ச்சி ஏற்பட...
க்ஷிரபலா தைலம் - நன்றாக தூக்கம் வர...
அசன வில்வாதி தைலம் - சைனஸ் பிரச்சனைக்கு...
பலா ஹட்டாதி தைலம் - தலை வலி குணமாக...
தூர்வாதி தைலம் - தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு நீங்க...
மேலும் மன உளைச்சல், அழுத்தம், தூக்கமின்மை, தலையில் ஏற்படும்சோரியாசிஸ் போன்ற பல நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் தலையில் எண்ணெய் தேய்த்து வரலாம்.
தொலைபேசி- 9025744149






