என் மலர்
நீங்கள் தேடியது "Hair"
- ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டரை ஊற்றி, தேவைப்படும்போது அதனை தலைமுடியில் அடித்துக்கொள்ளலாம்.
- ஷாம்பு போட்டு குளித்தபின், ரோஸ் வாட்டரை முடியில் தடவி சிலமணிநேரம் கழித்து கழுவுங்கள்.
ரோஸ் வாட்டர் பெரும்பாலும் முகத்திற்கு பயன்படுத்திதான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் அழகியலுக்கு அப்பாற்பட்ட ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. முடி பராமரிப்பிற்கும் ரோஸ் வாட்டர் உதவுகிறது. உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், முடி உதிர்தலைக் குறைக்கவும், முடியின் பளபளப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. ரோஜாவில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் சருமத்தை மென்மையாக்கும் பண்புகள், ஆரோக்கியமான உச்சந்தலையை ஆதரிக்கவும், எரிச்சல் மற்றும் பொடுகு போன்ற பிரச்சனைகளை குறைக்கவும் உதவுகிறது. அந்தவகையில் ரோஸ் வாட்டர், தலைமுடிக்கு என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதனை முடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து காண்போம்.
ஈரப்பதம்
ரோஸ் வாட்டர் முடியின் நீரேற்றத்தை பராமரிக்க உதவுகிறது. உச்சந்தலையின் pH அளவை சமன் செய்ய உதவுகிறது. ரோஸ் வாட்டரில் உள்ள சர்க்கரைகள் முடியின் தண்டில் ஈரப்பதத்தை ஈர்க்கவும், தக்கவைக்கவும் உதவுகின்றன. இது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு முக்கியமானது. முடி இழைகளை மென்மையாக்குகிறது மற்றும் முடி உதிர்தலை குறைக்கிறது. முடிக்கு இயற்கை பளபளப்பு மற்றும் மென்மையை சேர்க்கிறது.
பொடுகு தடுப்பு
வறண்ட உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது மற்றும் அரிப்புகளைக் குறைக்கிறது. ரோஸ் வாட்டரின் லேசான அஸ்ட்ரிஜென்ட் பண்புகள் உச்சந்தலையில் எண்ணெய் பசையை சீராக்க உதவுகின்றன. பொடுகுக்கு வழிவகுக்கும் அதிகப்படியான படிவைத் தடுக்கின்றன. இதன் அழற்சி எதிர்ப்பு பண்பு எரிச்சல், சிவத்தல், மற்றும் அரிப்பு ஆகியவற்றை தணித்து, உணர்திறன் வாய்ந்த உச்சந்தலைகளுக்கு நன்மை பயக்கிறது.
நறுமணம்
ரோஸ் வாட்டர் இயற்கையான, மைல்டான நறுமணத்தைக் கொண்டுள்ளது. இது கூந்தலுக்கு நன்மை பயக்குவதோடு, அதன் நறுமணம் மனநிலையை மேம்படுத்தும். முடி நறுமணத்தோடு இருப்பது, மகிழ்ச்சியான பராமரிப்பை மேம்படுத்த பங்களிக்கிறது.

முகத்திற்கு மட்டுமின்றி முடிக்கும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது ரோஸ் வாட்டர்
முடிக்கு எவ்வாறு பயன்படுத்தலாம்
ஷாம்பு போட்டு குளித்தபின், ரோஸ் வாட்டரை முடியில் தடவி சிலமணிநேரம் கழித்து கழுவுங்கள். இது முடிக்கு பளபளப்பு, மென்மை மற்றும் நறுமணத்தை சேர்க்க உதவும்.
ஷாம்பு மற்றும் கண்டிஷனரில் ரோஸ் வாட்டரைச் சேர்த்தல்
நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்பு அல்லது கண்டிஷனரில் சில டீஸ்பூன் ரோஸ் வாட்டரை கலந்து முடிக்கு பயன்படுத்துங்கள். இது முடிக்கு நல்ல ஈரப்பதம் அளிக்கும். அதுபோல ஸ்ப்ரே பாட்டிலில் ரோஸ் வாட்டரை ஊற்றி, தேவைப்படும்போது அதனை தலைமுடியில் அடித்துக்கொள்ளுங்கள். இது சின்ன சின்ன முடிகள் அதிகம் பறக்காமல் இருக்கவும், முடிக்கு பளபளப்பையும், புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
உச்சந்தலையில் தடவுதல்
பருத்தி துணியை பயன்படுத்தி ரோஸ் வாட்டரை நேரடியாக உச்சந்தலையில் தடவலாம். இது பொடுகு, அரிப்பு, எரிச்சலை குறைக்கும். மசாஜ் போலவும் கொடுக்கலாம்.
முன்னெச்சரிக்கைகள்
ரோஸ் வாட்டர் நன்மை பயக்கக்கூடியது என்றாலும், முழுமையாக பயன்படுத்துவதற்கு முன்பு, ஒரு சிறிய அளவை எடுத்து நமது தலையின் உணர்திறனை சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள். கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுப்பவர்கள் ரோஸ் வாட்டரை உச்சந்தலையில் அதிகம் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
- பெண்களின் தங்கம் என ஷியா வெண்ணெய் அழைக்கப்படுகிறது.
- நீச்சல் வீரர்கள் பலர், ஷியா வெண்ணெயை தலையில் தடவிக்கொண்டுதான் தண்ணீரில் இறங்குகின்றனர்!
ஷியா வெண்ணெய் என அழகு சாதனப் பொருட்களில் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதைப்பற்றிய முழுமையான விவரங்கள் நம்மில் பலருக்கு தெரியாது. ஆப்பிரிக்காவில் ஏராளமாகக் காணப்படும் ஷியா மரத்தின் விதைகளிலிருந்து எடுக்கப்படுவதுதான் ஷியா வெண்ணெய். ஷியா மரத்தின் பழத்தில் உள்ள விதைகள் எடுக்கப்பட்டு, அவை நசுக்கப்பட்டு, வேகவைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு இந்த வெண்ணெய் எடுக்கப்படுகிறது. தோல் பராமரிப்பில் பல நூற்றாண்டுகளாக ஷியா வெண்ணெய் முக்கிய பங்காற்றி வருகிறது என்றால் நம்ப முடியுமா? ஆம். கிளியோபாட்ராவின் காலத்தில் இருந்து ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிளியோபாட்ரா, தனது அழகின் ரகசியங்களில் ஒன்றாக இதைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இது பெண்களின் தங்கம் எனவும் அழைக்கப்படுகிறது. தோல் மட்டுமின்றி முடி பராமரிப்பிற்கும் ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. ஷியா வெண்ணெயில் உள்ள ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான பல நன்மை பயக்கும் பண்புகள் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.
சருமத்திற்கு தரும் நன்மைகள்
ஷியா வெண்ணெய் ஒரு சிறந்த மாய்ச்சுரைசர் ஆகும். குறிப்பாக குளிர்காலங்களில் இது சரும பராமரிப்புக்கு முக்கிய பங்காற்றுகிறது. ஷியா வெண்ணெயில் நிறைந்துள்ள ஒலிக், ஸ்டீரிக், லினோலிக் அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ, ஈ, சி ஆகியவை, சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்கின்றன. ஷியா வெண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவது பளபளப்பான சருமத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும், அதன் குறிப்பிடத்தக்க மென்மை மற்றும் ஊட்டமளிக்கும் பண்புகள் வறண்ட சருமத்தில் விழும் விரிசல்களை குணப்படுத்த உதவுகின்றன. குறிப்பாக குதிகால் மற்றும் வெட்டுக்காயங்கள் போன்ற பகுதிகளை குணப்படுத்த உதவுகின்றன.

பல அரசிகள், தங்கள் சரும பராமரிப்பிற்கு ஷியா வெண்ணெயைப் பயன்படுத்தியிருக்கின்றனர்!
முடிக்கு தரும் நன்மைகள்
ஷியா வெண்ணெய் முடிக்கு கண்டிஷனராக பயன்படுகிறது. உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடி புத்துயிர் பெற உதவுகிறது. முடியின் நுனியில் உள்ள கிளைத்த முடிகளை சரிசெய்கிறது. மேலும் முடியின் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. சூரிய கதிர்களின் சேதத்திலிருந்து முடியை பாதுகாக்க ஆப்பிரிக்காவில் பாரம்பரியமாக ஷியா வெண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீச்சல் வீரர்கள் பலரும் ஷியா வெண்ணெயை தலையில் தடவிகொண்டு, பின்தான் தண்ணீரில் இறங்குகின்றனர். காரணம், குளோரின் சேதத்திலிருந்து முடியைப் பாதுகாத்து, அதன் ஆரோக்கியத்தையும், உயிர்ச்சக்தியையும் ஷியா வெண்ணெய் பாதுகாக்கும்.
ஆரோக்கிய நன்மைகள்
ஷியா வெண்ணெய் வலி நிவாரணி பண்புகளை கொண்டுள்ளது. ஆப்பிரிக்க மருத்துவத்தில் தசை வலி மற்றும் புண்களுக்கு சிகிச்சையளிப்பதில் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள், வாத நோய் போன்றவைகளுக்கு நன்மை பயக்கும். வலியைத் தணிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, தோல் ஒவ்வாமைகளை ஆசுவாசப்படுத்தவும், பூச்சி கடிக்கு சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவான தோல் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வை வழங்குகிறது.
- கேரளாவில் உச்சிமுதல் பாதம்வரை தேங்காய் எண்ணெய்தான்!
- தேங்காய் எண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.
கேரள பெண்கள் என்றாலே அவர்களின் வனப்பும், நீண்ட அடர்த்தியான முடியும்தான் பலரையும் கவரும். கேரளப் பெண்களுக்கு இந்த அழகை கொடுப்பது தேங்காய் எண்ணெய்தான். உச்சம் முதல் பாதம்வரை அவர்கள் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய்தான். மேலும் சமையலுக்கும் அவர்கள் தேங்காய் எண்ணெயைதான் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெயின் பயன்பாடு கேரளாவில் அதிகம் இருப்பதற்கான காரணங்களை கீழே காண்போம்.
உடல் எடை குறையும்
உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காய் எண்ணெயில் போதிய அளவு உள்ளன. எனவே தேங்காய் எண்ணெயை உரிய அளவு தினமும் உணவில் சேர்த்தால் உடல் எடை குறையும்.
சரும பொலிவு
தேங்காய் எண்ணெய் மேக்கப் ரிமூவராக பயன்படுகிறது. இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது.
சரும பாதுகாப்பு
சரும வறட்சியை தடுத்து, இளமை தோற்றத்தை தக்கவைக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும். சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ இதில் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவுவது பல்வேறு நன்மை அளிக்கும். கரும்புள்ளிகளை மங்கச் செய்து, தழும்புகளை குணப்படுத்தும். இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும். தேங்காய் எண்ணெய்யில் மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தையும், முதுமை தோற்றத்தையும் தள்ளிப்போடும்.

உச்சிமுதல் பாதம்வரை பலனளிக்கும் தேங்காய் எண்ணெய்
பாடி லோஷன்
உடம்பிற்கு மிகப்பெரிய பாடி லோஷனாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை கை, கால்களில் தேய்ப்பது தோலுக்கு மென்மையையும், தோலின் ஈரப்பதத்தை கூட்டவும் செய்கிறது. தினமும் குளித்து முடித்த பின் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவினால், சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். உடல் முழுவதும் மசாஜ் செய்வதற்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம்.
முடி பராமரிப்பு
கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் முடிக்கு தேங்காய் எண்ணெயைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவர். தேங்காய் எண்ணெய் மயிரிழைகளுக்கு ஈரப்பதத்தை கொடுப்பதோடு, முடியின் வேர்க்கால்களை பலமடைய செய்கிறது. தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்வை குறைக்கிறது. மேலும் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது.
தோல் நோய்
கீழேவிழுந்து கை, கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், உடனே அம்மா சொல்வது தேங்காய் எண்ணெய், மஞ்சள்தூளை கலந்து வை என்பதுதான். அதற்கு காரணம் தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் திறந்த புண்களில் தொற்றுக்களை வரவிடாமலும் பாதுகாக்கிறது.
- முடி இழைகளை ஊட்டமளிக்கவும், நீரேற்றம் செய்யவும் மற்றும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.
- முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மூலப்பொருளாக உள்ளது.
பெண்கள் மற்றும் ஆண்கள் என இருபாலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று முடிகொட்டுவது. முடிகொட்டுதலை தடுக்க, முடிவளர நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருப்போம். பலரும் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எல்லாம் பெறுவார்கள். ஆனால் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் இயற்கையிலேயே மருந்து உள்ளது. அதுதான் கற்றாழை. வீட்டில் எளிதாக கிடைக்கும் கற்றாழையால் நமது முடி அடையும் ஆரோக்கிய நன்மைகள், எப்போதெல்லாம் இந்த கற்றாழையை முடிக்கு பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்ப்போம்.
முடி உதிர்தல்
முடி உதிர்தல் அதிகமாகிறது என்று நீங்கள் கவலைக்கொள்ளும்போது கற்றாழையை தலைக்கு பயன்படுத்தலாம். கற்றாழை கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. இது முடியின் நுண்ணறைகளை வலுப்படுத்தவும், முடி உதிர்வதைத் தடுக்கவும் உதவும். கற்றாழையில் தாதுக்கள் மற்றும் நீர் இருப்பதால், முழு இழையையும் வலுப்படுத்துகிறது. மேலும் முடிக்கு வலிமையை கொடுக்கிறது. இதனால் முடி எளிதில் உடையக்கூடிய தன்மையை இழக்கும்.
முடி வளர்ச்சி
கற்றாழை முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. கற்றாழையில் உள்ள நொதிகள் உச்சந்தலையில் இருந்து இறந்த செல்களை அகற்ற உதவுகிறது. கற்றாழையில் வைட்டமின்கள் (வைட்டமின் A, B1, B2, B6, C மற்றும் E போன்றவை), தாதுக்கள் (கால்சியம் போன்றவை) மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை உள்ளன. அவை முடி இழைகளை ஊட்டமளிக்கவும், நீரேற்றம் செய்யவும் மற்றும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.
எண்ணெய் பசை
கற்றாழை உச்சந்தலை மற்றும் முடியில் அதிகளவில் உள்ள எண்ணெய் பசையைக் குறைக்கும். முடியின் இழைகளுக்கு சேதம் விளைவிக்காமல் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
வறண்ட முடி
கற்றாழை தலையில் செல்வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேலும் மயிறிழைகளுக்கு அதிக நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கும். இதன்மூலம் வறண்ட நிலையில் இருக்கும் முடி ஆரோக்கியம் பெறும்.

அனைத்துவிதமான முடி பிரச்சனைகளுக்கும் தீர்வுகளை கொண்டது கற்றாழை
அரிப்பு மற்றும் எரிச்சல்
கற்றாழை அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்றம் போன்றவற்றை தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது உச்சந்தலையில் ஏற்படும் அழற்சியைக் குணப்படுத்தவும், சருமத்தை ஆற்றவும், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்ற தோல் அழற்சி அல்லது பூஞ்சை தொற்றுகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
பொடுகு
கற்றாழை உச்சந்தலையில் உள்ள இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. மேலும் உச்சந்தலையில் நீரேற்றத்தை ஊக்குவிக்கிறது. உச்சந்தலை வறளும்போதுதான் பொடுகு உண்டாகும். இதன்மூலம் பொடுகு உருவாவதையும் கட்டுப்படுத்துகிறது.
புற ஊதா கதிர்கள்
சூரிய ஒளியில் இருந்து வரும் புற ஊதா கதிர்வீச்சினால் ஏற்படும் சேதத்திலிருந்து முடி இழைகளைப் பாதுகாக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் கற்றாழையில் உள்ளன. மேலும், அதன் ஈரப்பதமூட்டும் திறன் மற்றும் அதன் கலவையில் உள்ள வைட்டமின்கள் காரணமாக, கற்றாழை முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
முடி உதிர்தலைத் தடுப்பது, உச்சந்தலையில் இருந்து அதிகப்படியான எண்ணெயை நீக்குவது, முடியை ஈரப்பதமாக்குவது, முடி வளர்ச்சியை ஊக்குவித்தல், சூரிய ஒளியால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாத்தல் மற்றும் பொடுகு அல்லது உச்சந்தலையில் தொற்றுகள் வராமல் தடுப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை தலைமுடிக்கு அளிக்கிறது கற்றாழை. முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு கற்றாழை ஒரு சிறந்த மூலப்பொருளாக இருப்பதுடன் மலச்சிக்கல் மற்றும் செரிமான கோளாறுகள் போன்ற பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்கவும் கற்றாழையை பயன்படுத்தலாம்.
- பொதுவாக எதை எடுத்துக்கொண்டாலும் இரண்டு விஷயங்கள் இருக்கும்.
- தலையில் எண்ணெய் தேய்ப்பது அனைவரும் தினமும் செய்யலாம்.
தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் கூறியிருந்ததை பார்த்தோம். உடலெங்கும் எண்ணெய் தேய்க்க சிரமம் என்பதினால், மிக முக்கியமாக மூன்று இடங்களில் மட்டும் எண்ணெய் தேய்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை தலை, காது, பாதம்.
பொதுவாக எதை எடுத்துக்கொண்டாலும் இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று ஆரம்பம் மற்றொருன்று முடிவு, மனித உடலை பொறுத்தவரை உடல் ஆரம்பிக்குமிடம் தலை, முடியும் இடம் பாதம். இந்த உடம்பில் தலை தான் மிக முக்கியம். ஏன் எனில் நாம் ஏற்கனவே பார்த்தது போல ஐம்புலன்களும் உள்ள உறுப்பு தலை.
தலையைப்பற்றி பார்ப்பதற்கு முன் பொதுவாக சில விஷயங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மரம் நன்றாக செழித்து வளர வேண்டுமென்றால் அதனுடைய வேர் நன்றாக இருக்க வேண்டும். வேர் சரியில்லை என்றால் மரம் பலவீனமாகிவிடும் மற்றும் பட்டுப்போக வாய்ப்புயிருக்கிறது. அதேபோலத்தான் மனிதனும்.
மனிதனுடைய வேர் தலையில் தான் இருக்கிறது. என்னது மனிதனுடைய வேர் தலையா? ஆனால் மரத்தின் வேர் அடியில் அல்லவா இருக்கிறது. மனித தலை மேலே அல்லவா இருக்கிறது என்று கேட்க தோன்றும். ஆம், உண்மைதான். ஆயுர்வேத கூற்றின்படி மனிதன் தலை கீழாக செயல்படும் ஓர் இனம்.
பருமனாக உள்ள பொருள் கீழே இருக்கும், லேசான பொருள் மேலே இருக்கும் என்பதுதானே நிதர்சனம்.
மனித உடலில் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்கள் உள்ளன. இதில் மார்புக்கு மேலே கபம், மார்பிலிருந்து தொப்புள் வரை பித்தம், தொப்புளுக்கு கீழே வாதம் இருக்கும்.

ரா. பாலமுருகன்
இதில் வாதம் லேசான தன்மை கொண்டது, கபம் கணத் தன்மை கொண்டது. லேசான தன்மை கொண்டது மேலிருக்க வேண்டும். கணத் தன்மை கொண்டது கீழ் இருக்க வேண்டும். ஆனால் மனித உடல் தலை கீழாக அமைத்து உள்ளது. அதனால் தான் மனிதன் தலை கீழாக செயல்படும் இனம் என்கிறோம். இப்போது தெரிய வருகிறதா மனித தலை தான் வேர் என்று.
பொதுவாக ஆரோக்கியத்தை மேம்படுத்த தலையை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்று ஆயுர்வேதம் மிக தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளது.
தலையை பாதுகாக்க "மூர்த்தினி தைல சிகிச்சை" நான்கு வகையாக மேற்கொள்ளப்படுகிறது.
1. தலையில் எண்ணெய் தேய்த்தல்.
2. தலையில் எண்ணெய்யை தொடர்ந்து ஊற்றுதல்.
3. தலையில் பஞ்சின் உதவி உடன் சிறிது நேரம் எண்ணெய் வைத்தல்.
4. vbதலையில் வரையறுக்கப்பட்ட கால அளவு நேரம் எண்ணெய்யை தேக்கி வைத்தல் என்று நான்கு வகையில் சிகிட்சை மேற்கொள்ளப்படுகிறது.
இதில் முதலில் கூறிய தலையில் எண்ணெய் தேய்த்தல் என்பதை தவிர மீதமுள்ள மூன்றும் நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் செய்யப்படுவது. ஆனால் தலையில் எண்ணெய் தேய்ப்பது அனைவரும் தினமும் செய்யலாம்.
ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் எப்படி எண்ணெய் தேய்க்கலாம் என்று பார்ப்போம். தினமும் காலையில் குளிப்பதற்கு முன் 10ml சுத்தனமான நல்லஎண்ணெய் அல்லது சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது மூலிகை மருந்துகள் கொண்டு செரியூட்டபட்ட மருந்து எண்ணெய்யை தலை முழுவதும் வட்ட வடிவில் அதிக அழுத்தம் இல்லாமல் தலையில் எல்லா இடத்திலும் படும்படி தேய்க்க வேண்டும். அதன் பின் தலைக்கு குளிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அண்டை மாநிலங்களில் இம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
நம் மாநிலத்தில் குளித்த பின்பே எண்ணெய் தேய்க்கும் முறை இருந்து வந்தது. ஆம் இருந்து வந்தது தான்... ஆனால் தற்போது இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இளைஞர்கள் தலையில் எண்ணெய் வைக்க வேண்டும் என்பதையே மறந்து வாழ்த்து வருகின்றனர் .இதனால் தான் தூக்கம் குறைந்து, நியாபக சக்தியையும் குறைந்து வருவதை காணமுடிகிறது.

தலையில் எண்ணெய் தேய்ப்பதினால் அளப்பரிய பயன்களை பெற முடியும், தலை வலி ஏற்படாது. தலை முடி நன்றாக அடர்த்தியாக, கருமை நிறத்தில், நீண்ட முடியாக வளரும். இள நரை, வழுக்கை ஏற்படாது. கபாலத்திற்கு பலம் ஏற்படும். ஐம்புலன்கள் நன்றாக செயல்படும். முக மலர்ச்சி ஏற்படும். மிக முக்கியமாக நன்றாக தூக்கம் வரும்.
இது தான் இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கியமாக தேவையான ஒன்று. ஆக குளிப்பதற்கு முன்போ அல்லது குளித்து நன்கு தலை காய்ந்த பின்போ மூலிகை எண்ணெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் தேய்த்து வரலாம்.
நோய்யுற்றவர்கள் ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் கீழ் காணும் மருந்துகளை வாங்கி தினமும் தலையில் தேய்த்து வர நோய் கட்டுக்குள் வரும்.
நீலிபிருங்காதி தைலம் - தலை முடி நன்றாக வளர...
பிருங்க ஆமலாக தைலம் - தலைமுடி கருக்க, குளிர்ச்சி ஏற்பட...
க்ஷிரபலா தைலம் - நன்றாக தூக்கம் வர...
அசன வில்வாதி தைலம் - சைனஸ் பிரச்சனைக்கு...
பலா ஹட்டாதி தைலம் - தலை வலி குணமாக...
தூர்வாதி தைலம் - தலையில் ஏற்படும் அரிப்பு, பொடுகு நீங்க...
மேலும் மன உளைச்சல், அழுத்தம், தூக்கமின்மை, தலையில் ஏற்படும்சோரியாசிஸ் போன்ற பல நோய்களுக்கு ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனையுடன் தலையில் எண்ணெய் தேய்த்து வரலாம்.
தொலைபேசி- 9025744149
- பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும்.
- ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது.
பெண்கள் கூந்தலை பராமரிக்க நெல்லிக்காய், கற்றாழை இரண்டையுமே பயன்படுத்துவார்கள். அதிலும் முடி உதிராமல் நீளமாக வளர வேண்டும் என்ற எண்ணமும் மேலோங்கி இருக்கும். முடி வளர்ச்சிக்கு இந்த இரண்டில் எதனை பயன்படுத்துவது சிறந்தது? என்ற குழப்பமும் சிலரிடம் இருக்கும். அதற்கு சரியான தீர்வு எது என்று பார்ப்போமா?
நெல்லிக்காய்
இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்சிடென்டுகள், இரும்பு மட்டுமின்றி உச்சந்தலை மற்றும் முடியின் மயிர்க்கால்களுக்கு பலம் சேர்க்கும் பொருட்களும் நிரம்பியுள்ளன. அடிப்படையில் நெல்லிக்காய் முடியின் வேர்க்கால்களுக்கு புரதம்போல் ஊட்டச்சத்து மதிப்புடன் செயல்பட்டு அதன் ஆரோக்கியத்தை பாதுகாக்கக்கூடியது.
பொதுவாக நெல்லிக்காய் முடி உதிர்தலை குறைக்க உதவும். உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். விரைவில் முடி நரைப்பதை குறைக்கும். நெல்லிக்காயை எண்ணெய்யாக தலைக்கு பயன்படுத்தலாம். நெல்லிக்காய் பொடியையும் தலையில் தேய்த்து வரலாம். நெல்லிக்காயை சாறாக பருகியும் வரலாம். இப்படி நெல்லிக்காயை ஏதாவதொரு வகையில் பயன்படுத்தி வந்தால் கடுமையாக முடி உதிர்வது தடுக்கப்படும். தலைமுடி மீண்டும் உயிர்ப்புடன் காட்சியளிக்க உதவும்.
கற்றாழை
இது மென்மையானது, குளிர்ச்சியானது. உச்சந்தலைக்கு பயன்படுத்த ஏதுவானது. கற்றாழையில் வைட்டமின்களும், நொதிகளும் நிறைந்துள்ளன. உச்சந்தலை ஈரப்பதமின்றி வறட்சியாக காட்சி அளிக்கிறதா? உச்சந்தலையில் அரிப்பு ஏற்படுகிறதா? கற்றாழை இதற்கு சிறந்த தேர்வாக அமையும். இது ஷாம்பு போல நீரேற்ற பண்புகளை கொண்டு உச்சந்தலையை குளிர்விக்க உதவுகிறது. தலைமுடி சரியாக வளர்வதற்கு ஏற்ற சூழலையும் அளிக்கிறது. கற்றாழையை செடியில் இருந்து வெட்டி எடுத்து, அதன் உள்பகுதி சதையை வெளியே எடுத்து நேரடியாக தலையில் தேய்க்கலாம். கடைகளில் கிடைக்கும் தரமான கற்றாழை ஜெல்லையும் உபயோகிக்கலாம்.
எதனை பயன்படுத்தலாம்?
நெல்லிக்காய், கற்றாழை இவை இரண்டுமே வெவ்வேறு வழிகளில் முடியின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன. நெல்லிக்காயை பொறுத்தவரை முடி உதிர்வை தடுக்கவும், முடியை வலுவாக்கவும், முடி அடர்த்திக்கும் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. கற்றாழை உச்சந்தலையை தூய்மையாக பராமரிக்கவும், குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவிடக்கூடியது. முடி வளர்வதற்கு சாதகமான சூழலையும் ஏற்படுத்திக்கொடுக்கக்கூடியது.
உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருந்தாலோ, முடி அடர்த்தி குறைந்து மெல்லியதாக இருந்தாலோ நெல்லிக்காய் சிறந்த தீர்வாக அமையும். உச்சந்தலை வறண்டு அரிப்பு, எரிச்சல் ஏற்பட்டால் கற்றாழை கைகொடுக்கும்.
- பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும்.
- பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும்.
தலையின் குறிப்பிட்ட ஒரு பகுதியில் இருந்து மொத்தமாக தலைமுடி உதிர்ந்து, அந்தப்பகுதி மட்டும் பளபளவென்று காணப்படும். இது 'அலோபேசியா ஏறேட்டா' என்ற நோய் காரணமாக ஏற்படும். தலையில் உள்ள முடிகள் மொத்தமாக உதிர்ந்து வழுக்கையுடன் காணப்பட்டால் அது 'அலோபேசியா டோட்டாலிஸ்' என்று அழைக்கப்படும்.
இதற்கான சித்த மருத்துவம்: சிவனார் வேம்புக் குழித்தைலம், சிரட்டைத் தைலம் மருந்துகளை சித்த மருத்துவரின் ஆலோசனைப்படி தேங்காய் எண்ணெய்யில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தேய்த்துவர முடி நன்றாக வளரும்.
'டீனியா கப்பைடிஸ்' என்னும் பூஞ்சையால் சிலருக்கு தலைமுடி உதிரும். முடி உதிரும் பகுதிகள் வெள்ளை அல்லது சிவப்பு வட்ட வடிவத்துடன் காணப்படும்.
இப்பூஞ்சை நோய் எல்லா வயதினரையும் பாதிக்கும் என்றாலும், சிறு குழந்தைகளை அதிகமாய் பாதிக்கும். இது பொதுவாக ஒருவர் பயன்படுத்திய சீப்பை இன்னொருவர் பயன்படுத்துவது மற்றும் பொது இடங்களில் கையை வைத்து விட்டு தலையை சொறிவது போன்ற காரணங்களால் ஒருவருக்கு ஏற்படுகின்றது.
இதற்கான சித்த மருத்துவம்: சீமை அகத்தி இலைச் சாற்றை தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி வடிகட்டி அந்த இடத்தில் பூசிவர, ஊறல், செதில் உதிர்தல் நின்று மீண்டும் அவ்விடத்தில் விரைவில் முடி வளர்ந்து வரும்.
பொடுகு என்பது தலையிலிருந்து சிறு துகள்கள் உதிர்ந்துவிழும் ஒரு பொதுவான நிலையாகும். தலையில் தேய்க்கும் எண்ணெய் பசையை உண்டு வாழும் ஈஸ்ட் வகைகளில் ஒன்று 'மாலசீயா'. இது பொடுகு செதில்களுக்கு உள்ளே வளர்ச்சி அடைந்து ஊறல், அதனுடன் பொடித்துகள்கள் முகம், கழுத்து பகுதிகளில் உதிர்ந்து காணப்படும்.
தலையில் ஏற்படும் எக்ஸீமா என்னும் கரப்பானில் தோல் அழற்சி, அரிப்பு, சிறுசெதில் மற்றும் வீக்கத்துடன் இருக்கும். சோரியாசிஸ் எனப்படும் காளாஞ்சகப்படை என்பது ஒரு பொதுவான, நீண்டகால நாள்பட்ட நோயாகும். இதில் தலையில் செதில்கள், ஊறல், முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் காணப்படும். இவற்றுக்கான சித்த மருத்துவ சிகிச்சைகள்:
கரிசாலைச் சூரணம் 1 கிராம், அயப்பிருங்க ராஜ கற்பம் 200 மி.கி., சங்கு பற்பம் 200 மி.கி. இவற்றை இருவேளை தேன் அல்லது வெந்நீரில் சாப்பிட வேண்டும்.
அரிப்பு இருந்தால், கந்தக பற்பம் 200மி.கி., சிவனார் பற்பம் 200மி.கி., பலகரை பற்பம் 200 மி.கி. இவற்றை தேன் அல்லது வெந்நீரில் இருவேளை சாப்பிட வேண்டும். தலையில் தேய்ப்பதற்கு கரிசலாங்கண்ணி தைலம் அல்லது செம்பருத்தி தைலம் பயன்படுத்தலாம்.
- தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான்.
- தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை.
தினமும் தலைமுடியில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்தாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிக எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடும். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்படும். அதிக எண்ணெய் தலையில் இருக்கும்போது தூசியும், அழுக்கும் அதிகமாக தலையில் சேரும். இதனால் தலையில் அரிப்பு, சொரிதல் போன்றவை ஏற்படும். சிலசமயம் அதிக எண்ணெய் தலைமுடியில் பொடுகை அதிகமாக்கி விட்டுவிடும்.
தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான். சிறிதளவே எண்ணெய் எடுத்துக்கொண்டு நன்றாக தலை முழுவதும் படும்படி தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். மணிக்கணக்கில் தலையில் எண்ணெய்யை ஊற விடாமல் தலைமுடியை எண்ணெய் பிசுக்கு நன்கு போகுமாறு கழுவி விடவும்.
தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. தலைமுடியின் அடியில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். அதன்பின் குளிக்க வேண்டும்.
அந்த காலத்தில் கிராமப்புறங்களில் தலையில் எண்ணெயை ஊற்றி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொஞ்ச நேரம் ஊற வைத்து பின் ஆற்றிலோ, குளத்திலோ அல்லது கிணற்றிலோ நன்கு குளித்துவிட்டு வந்து அன்றைக்கு தயாரிக்கப்பட்டிருக்கும் 'சிறப்பு சாப்பாடு' சாப்பிட்டு முடித்தால், அதனால் உண்டாகும் மயக்கத்தில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால் அது ஒரு சந்தோஷமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.
- ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பது நல்லது.
- தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.
தலையில் எண்ணெய் தேய்க்காமல் இருப்பதை விட தினமும் எண்ணெய் தேய்ப்பதினால் உடலுக்கு நிறைய நன்மைகள் இருக்கின்றன. காய்ந்து போன, கரடுமுரடான, சரிவர பராமரிக்காமல் பாதிக்கப்பட்ட, அடைபட்ட மயிர்க்கால்களின் நுண்துளைகள் எரிச்சலூட்டும் தலைப்பொடுகு உள்ள தலைமுடி மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் தீர வாரத்துக்கு இருமுறை தலையில் எண்ணெய் தேய்ப்பது நல்ல பலன்களைத் தரும்.
ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பது என்பது உலர்ந்த காய்ந்துபோன தலைமுடிக்கு மிகவும் நல்லது. தலையில் ஏற்படும் சில சரும நோய்களுக்கு தினமும் மருந்து கலந்த எண்ணெய் தேய்ப்பது நல்லது என்று சருமநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரை செய்வதுண்டு.
தலையிலுள்ள மயிர்க்கால்கள் பாதிக்கப்படாமல் இருக்க எண்ணெய் மிகவும் உதவியாய் இருக்கும். தலையில் எண்ணெய் தினமும் தேய்ப்பதால் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் உடம்பையே புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். உங்கள் தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.
தலைக்கும் தலையிலுள்ள மயிர்க்கால்களுக்கும் தேவைப்படும் சத்துப்பொருட்களுக்கும் வைட்டமின்களுக்கும், மயிர்க்கால்கள் உறுதியாக இருக்கவும் தலைமுடி நன்கு வளரவும் எண்ணெய் மிகவும் உதவுகிறது. தலைமுடியில் இருக்கும் சுருள்முடிகளை நேராக்க எண்ணெய் உதவுகிறது. தலையில் பொடுகு வராமல் தடுக்க, இளநரை வராமலிருக்க, மன அழுத்தத்தைப் போக்க, பேன் தொந்தரவு இல்லாமலிருக்க, தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய் மிகவும் உதவுகிறது.
- அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார்.
- தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் அனுஷ்கா திவாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல் மருத்துவர் அனுஷ்கா முடி மாற்று அறுவை சிகிச்சையை செய்துள்ளார். இந்த சிகிச்சைக்காக மருத்துவர் அனுஷ்கா ஒவ்வொருவரிடம் ரூ.40,000 முதல் ரூ. 1 லட்சம் வரை பெற்றுள்ளார்.
மேலும், அவரிடம் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பலர் முகம் வீங்கி, உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அனுஷ்கா தலைமறைவானார். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், மருத்துவர் அனுஷ்காவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த பல் மருத்துவர் அனுஷ்கா திவாரி நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து அவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன.
- அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது.
ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வது பெண்களுக்கு அழகான தோற்றத்தைத் தருகிறது. இருப்பினும் இது முடியின் ஆரோக்கியத்துக்கு எந்த அளவுக்கு நல்லது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கில் பல பக்க விளைவுகளும் உள்ளன. எல்லோருக்கும் இந்த பின் விளைவுகள் வரும் என்று இல்லை. இருப்பினும், ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்துகொள்ளும் பெண்கள் ஒவ்வொருவரும் இதைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
முடி நீட்டமாக இருப்பதற்காக முடியில் ரசாயன கிரீம் தடவப்படுகிறது. மேலும், அதிகப்படியான வெப்பம் முடியின் மீது செலுத்தப்படுகிறது. இதனால் முடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த ரசாயன கிரீம் நம்முடைய கூந்தலுக்கு சரியாக இருக்குமா என்பதை எல்லாம் முதலில் சோதனை செய்துகொண்ட பிறகே முடிவு செய்ய வேண்டும்.
ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்கை வீட்டில், பார்லரில் செய்து கொள்ளலாம். வீட்டில் செய்வதாக இருந்தால் அடிக்கடி செய்ய வேண்டியதாக இருக்கும். பார்லரில் செய்யப்படும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் எட்டு மாதம் முதல் ஒரு வருடம் வரை இருக்கும். அதன் பிறகு மீண்டும் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய வேண்டியிருக்கும்.
ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்வதன் மூலம் சிலருக்கு நிரந்தரமாக முடி இழப்பு ஏற்படலாம். ஸ்ட்ரெய்ட்டனிங் செய்ய பயன்படுத்தப்படும் ரசாயனம் மற்றும் அதிக வெப்பம் முடியின் வேர்க்காலைப் பாதித்து, முடி உதிர்வை ஏற்படுத்தலாம்.
சிலருக்கு ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தற்காலிக முடி உதிர்வு பிரச்சனை ஏற்படலாம்.
முடி நேராக இருக்க அயர்ன் செய்யப்படுகிறது. இந்த வெப்பம் முடிக்கு வறண்ட தன்மையை கொடுக்கும். சிலருக்கு முடி ஜீவனின்றி இருப்பது போல பொலிவிழந்து காணப்படும்.
முடியில் உறுதியாக இருக்க அதில் ஹைட்ரஜன் இணைப்பு உள்ளது. அதை சிதைத்துத்தான் முடியை நேராக்குகிறோம். இதனால் முடியின் உறுதித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங் செய்த சில நாட்களிலேயே சிலருக்கு முடி உடைந்து கீழே விழுவதைக் காணலாம்.
வெயிலில் நடந்தாலே, குளிர்ந்த நீரில் குளித்தாலே, மழையில் நனைந்தாலோ கூட இவர்களுக்கு முடி உடைந்துவிடும்.
ரசாயனம் மற்றும் வெப்பம் காரணமாக தலையின் வேர்ப் பகுதியில் எண்ணெய் சுரப்பு நின்றுவிடலாம். இதனால் தலையின் வேர் பரப்பு உலர்ந்து, அரிப்பு, பொடுகு போன்ற பிரச்னை ஏற்படலாம்.
- சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.
- மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.
சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது.லக்னோ:
உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா நகரை சேர்ந்த சிறுவன் சிடக்தீப் சிங் சாஹல் (வயது 15). சிறு வயது முதலே சாஹலுக்கு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால், மகிழ்ச்சியற்ற நிலையில் இருந்த சாஹல், தனது பெற்றோரிடம் அவற்றை நீக்கி விடும்படி கேட்டிருக்கிறார்.
ஆனால் வளர்ந்ததும், அதன்மீது தனி கவனம் செலுத்த தொடங்கியதுடன், தலைமுடி தன்னில் ஒரு பகுதி என்ற உணர்வும் சாஹலுக்கு ஏற்பட்டது. சீக்கிய மதத்தினை சார்ந்த சாஹல், மத நம்பிக்கைகளுக்கு கவுரவம் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் தலைமுடியை வெட்டியதில்லை.
சாஹலின் தலைமுடி தற்போது 146 செ.மீ. (4 அடி 9.5 அங்குலம்) அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்நிலையில், சாஹலின் நீண்ட தலைமுடியானது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து உள்ளது.
இதுபற்றிய வீடியோ ஒன்றை கின்னஸ் உலக சாதனை அமைப்பு வெளியிட்டு உள்ளது. இதில் சாஹல், தன்னுடைய தலைமுடி பராமரிப்பு பற்றி பேசியுள்ளார். தலைமுடியை அலசி, சுத்தம் செய்து, எப்படி தலைமுடியை வாருவது என்பது பற்றி சாஹலின் தாயார் உதவி செய்திருக்கிறார். அப்படி அவர் உதவவில்லை எனில், நாள் முழுவதும் அதற்காக செலவிட வேண்டி இருக்கும் என சாஹல் கூறுகிறார்.
அப்படி தலைமுடியை அலசாமல் அல்லது காய வைக்காமல் இருக்கும்போது, சீக்கிய முறையை பின்பற்றுபவர்களிடையே காணப்படுவது போன்று, அதனை உருண்டையாக சுற்றி வைத்து, டர்பன் அணிந்து கொள்கிறார். இந்த சாதனையை பற்றி மற்றவர்களிடம் கூறும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நான் பொய் கூறுகிறேன் என நினைத்துவிட்டனர். அதன்பின்பு, அவர்களை நம்ப வைக்க சில சான்றுகள் தேவைப்பட்டன என அந்த வீடியோவில் கூறுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் 2024-ல் தன்னுடைய சாதனையும் ஒரு பகுதியாக இருப்பதற்காக சாஹல் அதிக மகிழ்ச்சியில் திளைத்துள்ளார்.






