என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Benefits"

    • முகத்தில் தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம்.
    • தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது!

    தயிரை உணவில் சேர்த்துக்கொள்வது பல்வேறு நன்மைகளை பயக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஏனெனில் இதில் லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளதோடு, புரோபயாடிக்குகள், புரோட்டீன்கள், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஊட்டச்சத்துக்களும் உள்ளன. உணவு மட்டுமின்றி தயிர் அழகியல் நடைமுறையிலும் பயன்படுத்தப்படுகிறது. தயிர் பயன்பாடு சருமத்தை பளபளப்பாக்கும் என்று பொதுவாகவே பலருக்கும் தெரியும். ஆனால் சரும பளபளப்பு மட்டுமின்றி பல்வேறு சரும நலன்களை கொண்டுள்ளது தயிர். தயிரை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காண்போம். 

    சருமத்திற்கு ஈரப்பதம்...

    வறண்ட சருமம் என்பது நீரிழப்புக்கான அறிகுறியாகும். சருமம் வறண்டு போகும்போது முகத்தில் தோல் உரியும். அப்படி தோல் உரிந்தால், சருமத்திற்கு நீரேற்றம் தேவை என்று அர்த்தம். தயிரை முகத்தில் தடவுவது சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கான விரைவான மற்றும் பயனுள்ள வழியாகும். தயிர் சருமத்தின் மந்தமான நிலையை உடனடியாக மேம்படுத்தும். சருமம் பிரகாசமாகவும் மாற உதவும்.

    சரும பிரகாசம்...

    தயிரில் இருக்கும் லாக்டிக் அமிலம்தான் சருமம் வெண்மையாக உதவுகிறது. இந்த லாக்டிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, மெலனின் உற்பத்தியைக் குறைத்து, சருமத்தை பிரகாசமாக்குகிறது. இது மெலனின் உற்பத்தியைத் தடுக்கும் நொதிகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. 


    தயிரில் உடலுக்கும், சருமத்திற்கும் அதிக நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன

    புற ஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு

    சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் சருமத்தை விரைவில் கருமையடையச்செய்யும். மேலும் சருமத்தை பாதிக்கும். புற ஊதா கதிர்களால் ஏற்படும் புள்ளிகள் மற்றும் சுருக்கங்களை சரிசெய்ய தயிரைப் பயன்படுத்தலாம். சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் தயிரில் உள்ள துத்தநாகம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    நெகிழ்ச்சித்தன்மை

    சருமம் கொலாஜனை இழக்கும்போது, அதன் நெகிழ்ச்சி குறையும். தயிரை முகத்தில் தடவும்போது சரும நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்கும்.

    முகச்சுருக்கங்களை தடுக்கும்

    சருமம் மீள்தன்மையுடன் இருக்கும்போது, சுருக்கங்கள் மற்றும் முகத்தில் புள்ளிகள் தோன்றுவது குறையும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் இந்த நிலையைத் தடுக்க ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இதன் காரணமாக, உங்கள் இளமையைப் பாதுகாக்க மென்மையான, பளபளப்பான சருமத்தைப் பெறுவீர்கள்.

    முகப்பரு

    தயிரில் உள்ள புரோபயாடிக்குகள், அழற்சி, முகப்பரு புண்களுக்கு முக்கிய காரணமான P. acnes பாக்டீரியாவை எதிர்த்துப் போராட உதவும் என்று கூறப்படுகிறது. ப்ரோபியோனிபாக்டீரியம் ஆக்னஸ் (P. acnes) என்ற பாக்டீரியா இயற்கையாகவே தோலில் வசிக்கிறது. இருப்பினும், முகத்துளைகள் அடைக்கப்படும்போது, இந்த பாக்டீரியாக்கள் பெருகி, வீக்கம் மற்றும் தொற்றுநோயை ஏற்படுத்துகின்றன. புரோபயாடிக்குகள் ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்கின்றன. இது முகப்பருவைத் தணித்து, நீண்ட காலத்திற்கு முகப்பரு வருவதை தடுக்க உதவும்.

    பிற தோல்நோய்கள்

    புரோபயாடிக்குகளில் காணப்படும் அதே அழற்சி எதிர்ப்பு பண்புகள், ரோசாசியா, சொரியாசிஸ் போன்ற பிற தோல்நோய்களுக்கும் சிகிச்சையளிக்க உதவுகின்றன.

    • கேரளாவில் உச்சிமுதல் பாதம்வரை தேங்காய் எண்ணெய்தான்!
    • தேங்காய் எண்ணெயில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.

    கேரள பெண்கள் என்றாலே அவர்களின் வனப்பும், நீண்ட அடர்த்தியான முடியும்தான் பலரையும் கவரும். கேரளப் பெண்களுக்கு இந்த அழகை கொடுப்பது தேங்காய் எண்ணெய்தான். உச்சம் முதல் பாதம்வரை அவர்கள் பயன்படுத்துவது தேங்காய் எண்ணெய்தான். மேலும் சமையலுக்கும் அவர்கள் தேங்காய் எண்ணெயைதான் பயன்படுத்துவார்கள். தேங்காய் எண்ணெயின் பயன்பாடு கேரளாவில் அதிகம் இருப்பதற்கான காரணங்களை கீழே காண்போம். 

    உடல் எடை குறையும்

    உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைக்கும் காப்ரிக் ஆசிட் (Capric Acid) மற்றும் லாரிக் ஆசிட் (Lauric Acid) ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காய் எண்ணெயில் போதிய அளவு உள்ளன. எனவே தேங்காய் எண்ணெயை உரிய அளவு தினமும் உணவில் சேர்த்தால் உடல் எடை குறையும். 

    சரும பொலிவு

    தேங்காய் எண்ணெய் மேக்கப் ரிமூவராக பயன்படுகிறது. இரவில் முகத்தை சுத்தம் செய்து விட்டு தேங்காய் எண்ணெயை தடவிக்கொண்டு படுக்கலாம். இதனால் சருமத்திற்கு நல்ல பொலிவு கிடைக்கும். எண்ணெய் சருமம் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கலாம்.

    நோய் எதிர்ப்பு சக்தி

    தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட்  வைரஸ் மற்றும் பாக்டீரியல் நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் கொண்டதாக உள்ளது. மோனோ லாரின் (Mono Laurin) வைரஸ் செல் சுவர்களைக் கரைக்கிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்கு (Metabolism) பெரிதும் உதவுகிறது. 

    சரும பாதுகாப்பு

    சரும வறட்சியை தடுத்து, இளமை தோற்றத்தை தக்கவைக்க தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவும். சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ இதில் நிறைந்துள்ளது. தேங்காய் எண்ணெய்யை முகத்தில் தடவுவது பல்வேறு நன்மை அளிக்கும். கரும்புள்ளிகளை மங்கச் செய்து, தழும்புகளை குணப்படுத்தும். இதில் உள்ள சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் சருமத்திற்கு அடியில் தங்கி, சருமத்தை மென்மையாகவும், வறட்சியின்றியும் வைத்துக் கொள்ள உதவும். தேங்காய் எண்ணெய்யில் மசாஜ் செய்வது முகச்சுருக்கத்தையும், முதுமை தோற்றத்தையும் தள்ளிப்போடும். 


    உச்சிமுதல் பாதம்வரை பலனளிக்கும் தேங்காய் எண்ணெய்

    பாடி லோஷன்

    உடம்பிற்கு மிகப்பெரிய பாடி லோஷனாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய்யை கை, கால்களில் தேய்ப்பது தோலுக்கு மென்மையையும், தோலின் ஈரப்பதத்தை கூட்டவும் செய்கிறது. தினமும் குளித்து முடித்த பின் தேங்காய் எண்ணெயை உடல் முழுவதும் தடவினால், சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். உடல் முழுவதும் மசாஜ் செய்வதற்கும் தேங்காய் எண்ணெயை பயன்படுத்தலாம். 

    முடி பராமரிப்பு

    கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலானோர் முடிக்கு தேங்காய் எண்ணெயைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துவர். தேங்காய் எண்ணெய் மயிரிழைகளுக்கு ஈரப்பதத்தை கொடுப்பதோடு, முடியின் வேர்க்கால்களை பலமடைய செய்கிறது.  தேங்காய் எண்ணெய் கூந்தல் உதிர்வை குறைக்கிறது. மேலும் முடிக்கு பளபளப்பை கொடுக்கிறது. 

    தோல் நோய்

    கீழேவிழுந்து கை, கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டால், உடனே அம்மா சொல்வது தேங்காய் எண்ணெய், மஞ்சள்தூளை கலந்து வை என்பதுதான். அதற்கு காரணம் தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்புப் பொருள் தோல் பூஞ்சை நோய்களை கட்டுப்படுத்துகிறது. மேலும் திறந்த புண்களில் தொற்றுக்களை வரவிடாமலும் பாதுகாக்கிறது. 

    • பீட்ரூட்டில் காணப்படும் பீட்டாலைன் நிறமி காரணமாக, ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையான நச்சு நீக்கியாக கருதப்படுகிறது.
    • ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையாகவே சருமத்திற்கு அழகும், பளபளப்பும் சேர்க்கக்கூடியது.

    ஏ.பி.சி. ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

    ஆப்பிள், பீட்ரூட், கேரட் ஆகிய 3 பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் ஏ.பி.சி. ஜூஸ் ஆரோக்கியமான பானமாகும். ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன. அவை ஒன்று சேர்ந்து சுவையான ஜூஸாக மாறுவதோடு உடலுக்கு ஊட்டச்சத்துக்களை அளிக்கின்றன. தினமும் ஏன் ஏ.பி.சி. ஜூஸ் பருக வேண்டும் என்பதற்கான காரணங்களை பார்ப்போம்.

    தினமும் ஏ.பி.சி. ஜூஸ் உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் வைட்டமின் சி உள்ளது. அவை ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும். நோய்த்தொற்றுகளுக்கு எதிராக இயற்கையாகவே பாதுகாப்பை உருவாக்கும். இரும்பு மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை பீட்ரூட்டில் உள்ளன. இவை இரண்டும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் ஆக்சிஜனின் சுழற்சியை ஊக்குவிக்கவும் பயன்படும்.

    பீட்ரூட்டில் காணப்படும் பீட்டாலைன் நிறமி காரணமாக, ஏ.பி.சி. ஜூஸ் இயற்கையான நச்சு நீக்கியாக கருதப்படுகிறது. கல்லீரலில் உற்பத்தியாகும் நச்சுக்களை நடுநிலையாக்கவும் உதவும். ஆப்பிள் மற்றும் கேரட்டில் நார்ச்சத்து மற்றும் பெக்டின் உள்ளன. அவை அதிக பித்த உற்பத்தி மற்றும் எளிதான செரிமானம் மூலம் வளர்சிதை மாற்றக்கழிவுகள் மற்றும் நச்சுக்களை உடலில் இருந்து வெளியேற்றும் செயல்முறையை துரிதப்படுத்துகின்றன. எனவே ஏ.பி.சி. ஜூஸை தினமும் பருகுவது உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க வழிவகை செய்யும்.

    ஏ.பி.சி ஜூஸ் குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதாலும், ஊட்டச்சத்து, நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும் உடல் எடையை குறைக்க அல்லது சீராக நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற தேர்வாக அமையும். இதிலிருக்கும் நார்ச்சத்து வயிறு நிரம்பிய உணர்வை தரும் என்பதால் சாப்பாட்டுக்கு இடையே நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவதை தடுக்கும். வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தவும் உதவும்.

    ஏ.பி.சி. ஜூஸில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அது குடல் நோய்களை தடுக்கும். மலச்சிக்கல், வயிறு வீக்கம் போன்ற பொதுவான செரிமான பிரச்சினைகளையும் விரட்டியடிக்கும். ஆப்பிளில் கரையக்கூடிய நார்ச்சத்தான பெக்டின் உள்ளது. அது குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பீட்ரூட் இரைப்பை அமிலங்களின் சுரப்பை ஊக்குவிப்பதால் செரிமானத்தை எளிதாக்கும். முக்கியமான ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் உதவிடும். ஏ.பி.சி. ஜூஸை தொடர்ந்து உட்கொள்வது ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியம், ஊட்டச்சத்து ஒருங்கிணைப்பு மற்றும் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை மேம்படுத்தும்.

    இந்த ஜூஸ் இயற்கையாகவே சருமத்திற்கு அழகும், பளபளப்பும் சேர்க்கக்கூடியது. ஆப்பிள் மற்றும் கேரட்டில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஏ உள்ளன. இவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கக்கூடியவை. சருமத்தில் விரைவாக சுருங்கங்கள் விழுவதை தடுக்கும். பீட்ரூட்டில் உள்ளடங்கி இருக்கும் பீட்டாலைன்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து தடுக்கும்.

    • நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
    • ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

    தினமும் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

    மன ஆரோக்கியம்

    உங்கள் உடல் உங்களை மகிழ்ச்சியாக உணர உதவும் ரசாயனங்களை வெளியிடுகிறது.

    ஆஸ்துமாவை விரட்டும்

    ஆஸ்துமாவை நெருங்கவிடாமல் நுரையீரல் மற்றும் மூச்சுக்குழாய்களை வலுப்படுத்த உதவுகிறது.

    ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கும்

    ஓடும்போது தமனிகள் சுருங்கி விரிவடைவதால் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவும்.

    நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்

    நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவு. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்படும்.

    உடல் எடை குறையும்

    ஓடும்போது ஒரு மணி நேரத்திற்கு 705 முதல் 865 கலோரிகள் எரிக்கப்படும். உடல் எடையும் குறையும்.

    உடல் வலிமை

    ஓடுவதன் மூலம் உடல் வலிமை கூடுவதோடு தசை நாண்கள் மற்றும் தசைநார்கள் வலுப்படும்.

    எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்

    ஓடும் சமயத்தில் உடல் அழுத்தப்படும்போது எலும்புகளை வலுப்படுத்த அத்தியாவசிய தாதுக்களை அனுப்பும். ஓடுவதன் காரணமாக எலும்புகளை அழுத்துவதால், காலப்போக்கில் எலும்பு அடர்த்தி அதிகரிக்கும்.

    மூட்டுகளை வலிமைப்படுத்தும்

    ஓடுவதன் காரணமாக தசைநார்கள் மற்றும் தசைநாண் களின் வலிமையை அதிகரிப்பதன் மூலம் மூட்டு பகுதி வலிமை அடையும். அதனால் கணுக்கால், இடுப்பு மற்றும் முழங்கால்களில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.

    நீரிழிவு நோயை குறைக்கும்

    ரத்தத்தில் சர்க்கரை அளவை பராமரிக்கச் செய்து நீரிழிவு நோய் அபாயத்தை குறைக்க உதவும்.

    எவ்வளவு நேரம் ஓடலாம்?

    தினமும் 20 முதல் 30 நிமிடங்கள் ஓடுவது நல்லது. அப்படி ஓட முடியாதவர்கள் 5 முதல் 10 நிமிடங்கள் ஓடுவது கூட உடல் உறுப்புகளுக்கு பலன் அளிக்கும்.

    • தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான்.
    • தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை.

    தினமும் தலைமுடியில் அதிக அளவில் எண்ணெய் தேய்த்தாலும் பிரச்சனைகள் ஏற்படும். அதிக எண்ணெய் மயிர்க்கால்களை அடைத்துவிடும். இதனால் தலைமுடி நன்றாக வளர்வதில் தடை ஏற்படும். அதிக எண்ணெய் தலையில் இருக்கும்போது தூசியும், அழுக்கும் அதிகமாக தலையில் சேரும். இதனால் தலையில் அரிப்பு, சொரிதல் போன்றவை ஏற்படும். சிலசமயம் அதிக எண்ணெய் தலைமுடியில் பொடுகை அதிகமாக்கி விட்டுவிடும்.

    தலைக்கு தேய்க்கும் எண்ணெயில் முதலிடத்தில் இருப்பது அன்றும் சரி, இன்றும் சரி மரச்செக்கு தேங்காய் எண்ணெய்தான். சிறிதளவே எண்ணெய் எடுத்துக்கொண்டு நன்றாக தலை முழுவதும் படும்படி தேய்த்து நன்றாக மசாஜ் செய்யவும். மணிக்கணக்கில் தலையில் எண்ணெய்யை ஊற விடாமல் தலைமுடியை எண்ணெய் பிசுக்கு நன்கு போகுமாறு கழுவி விடவும்.

    தலையில் மேலோட்டமாக எண்ணெய் தேய்ப்பதால் எந்தவித உபயோகமும் இல்லை. தலைமுடியின் அடியில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். அதன்பின் குளிக்க வேண்டும்.

    அந்த காலத்தில் கிராமப்புறங்களில் தலையில் எண்ணெயை ஊற்றி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொஞ்ச நேரம் ஊற வைத்து பின் ஆற்றிலோ, குளத்திலோ அல்லது கிணற்றிலோ நன்கு குளித்துவிட்டு வந்து அன்றைக்கு தயாரிக்கப்பட்டிருக்கும் 'சிறப்பு சாப்பாடு' சாப்பிட்டு முடித்தால், அதனால் உண்டாகும் மயக்கத்தில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்தால் அது ஒரு சந்தோஷமான மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

    • ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பது நல்லது.
    • தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.

    தலையில் எண்ணெய் தேய்க்காமல் இருப்பதை விட தினமும் எண்ணெய் தேய்ப்பதினால் உடலுக்கு நிறைய நன்மைகள் இருக்கின்றன. காய்ந்து போன, கரடுமுரடான, சரிவர பராமரிக்காமல் பாதிக்கப்பட்ட, அடைபட்ட மயிர்க்கால்களின் நுண்துளைகள் எரிச்சலூட்டும் தலைப்பொடுகு உள்ள தலைமுடி மற்றும் முடி கொட்டுதல் போன்ற பிரச்சனைகள் தீர வாரத்துக்கு இருமுறை தலையில் எண்ணெய் தேய்ப்பது நல்ல பலன்களைத் தரும்.

    ஒருநாள் விட்டு ஒருநாள் அல்லது வாரத்தில் இரண்டு நாட்கள் தலையில் எண்ணெய் தேய்ப்பது என்பது உலர்ந்த காய்ந்துபோன தலைமுடிக்கு மிகவும் நல்லது. தலையில் ஏற்படும் சில சரும நோய்களுக்கு தினமும் மருந்து கலந்த எண்ணெய் தேய்ப்பது நல்லது என்று சருமநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரை செய்வதுண்டு.

    தலையிலுள்ள மயிர்க்கால்கள் பாதிக்கப்படாமல் இருக்க எண்ணெய் மிகவும் உதவியாய் இருக்கும். தலையில் எண்ணெய் தினமும் தேய்ப்பதால் தலைமுடிக்கு மட்டுமல்ல, உங்கள் உடம்பையே புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். உங்கள் தலைமுடி அடர்த்தியாகவும் கருகருவென்றும் பளபளப்பாகவும் இருக்க எண்ணெய் மிகமிக உதவியாய் இருக்கும்.

    தலைக்கும் தலையிலுள்ள மயிர்க்கால்களுக்கும் தேவைப்படும் சத்துப்பொருட்களுக்கும் வைட்டமின்களுக்கும், மயிர்க்கால்கள் உறுதியாக இருக்கவும் தலைமுடி நன்கு வளரவும் எண்ணெய் மிகவும் உதவுகிறது. தலைமுடியில் இருக்கும் சுருள்முடிகளை நேராக்க எண்ணெய் உதவுகிறது. தலையில் பொடுகு வராமல் தடுக்க, இளநரை வராமலிருக்க, மன அழுத்தத்தைப் போக்க, பேன் தொந்தரவு இல்லாமலிருக்க, தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய் மிகவும் உதவுகிறது.

    • வருகிற 29-ந்தேதி சனிப்பெயர்ச்சி.
    • சனிப்பெயர்ச்சி மிகவும் நல்ல பெயர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

    வருகிற 29-ந்தேதி நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி மிகவும் நல்ல பெயர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

    சனி பகவான் குருவின் வீட்டில் அமர்வதால், ஆன்மிகம் தொடர்பான பிரச்சினை அதிகரிக்கும். போலி ஆன்மிகவாதிகளை மக்கள் கண்டறிந்து ஒதுக்குவார்கள்.

    அதே வேளையில் புனிதமான சந்நியாசிகள் குறு பீடங்கள் தொடர்பாக போலியான செய்திகளும் பரவும். எனவே மக்கள் செய்திகளை பகுத்தறிந்து பார்த்து செயல்பட வேண்டியது அவசியம்.

    கல்வி நிறுவனங்கள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரிக்கும். ஒருமித்த கருத்துக்கள் ஏற்படுத்த முடியாமல் ஆட்சி செய்பவர்கள் திண்டாடுவார்கள்.

    என்றாலும் சனிபகவானின் பார்வையால் சர்ச்சைகள் அனைத்தும் மக்களுக்கு நன்மையாகவே முடியும். பொருளாதாரம் நல்ல படியாகவே அமையும்.


    இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியப் பொருளாதாரம் நிலை பெற்று உலக அளவில் மதிக்கப்படும். இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயரும்.

    மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகள், பெரும் மழைப்பொழிவு ஆகியவை ஏற்படும். அரசாங்கம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

    கடல்சார் ஆராய்ச்சியிலும் கடல்சார் பொருளாதாரத்தி லும் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். கடல்மாசை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபடும். மீன் வளம் அதிகரிப்பதால் மீனவர்கள் வாழ்க்கை நன்றாக அமையும்.

    சர்வதேச கடல் எல்லைப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    பெண்களுக்குச் சகல நிலைகளிலும் ஏற்றமும் முன்னேற்றமும் உண்டாக வாய்ப்பு உண்டு.

    பெரும்பாலான துறைகளில் பெண்கள் கோலோச்சுவார்கள், அரசியல் சார்ந்த பெண்களின் ஆளுமையும் சாதுரிய மும் உலகை வியக்க வைக்கும். சமூக செயல்பாடுகளிலும் பொது காரியங்களிலும் அவர்களின் பங்களிப்பு வலுவாக இருக்கும்.

    மற்றபடி உலகில் ஆங்காங்கே போர் பதட்டங்கள் அதிகரிக்கும். ரத்தம் சம்பந்தமான புதிய நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு.

    காற்றில் பரவும் நோய்கள் புதிதாக தோன்றும். அதேவேளையில் தீர்க்க முடியாத கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.

    இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் பாராட்டப்படும். கலைத்துறையைச் சார்ந்தவர்க ளுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த நன்மை தருவதாக அமையும்.

    அந்த வகையில் இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம், மீனம், மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் ஏழரைச் சனிக்காலத்துக்கு ஆட்படுகிறார்கள்.

    ஏழரைச் சனி என்றதும் பயம் கொள்ளத் தேவையில்லை. அப்படியே அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனி போன்ற நிலைகளை எண்ணியும் கலங்க வேண்டியதில்லை. சனி பகவான் நம் வினைகளைக் கரைக்க அருள் செய்பவர்.

    • அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள்.
    • மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே இனாம் கிளியூர் ஊராட்சியில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று வலங்கைமான் ஒன்றிய அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அரசு பள்ளியில் மாணவர்கள் சேருவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அரசின் திட்டங்கள் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்ப டும் சலுகைகள் குறித்தும் பொதுமக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.

    இதில் வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், ஆசிரியர் பயிற்றுனர் புனிதா, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசித்ரா, ஆசிரியை பூங்கொடி, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், வானவில் மன்றத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து திட்டங்களின் பயனை மக்கள் உரிய முறையில் பெற வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.
    • திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதரக்குடி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ஆதிதிராவிடர் காலனியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமையல் அறை கட்டிடத்தினை திறந்து வைத்தார். கலெக்டர் ஆஷா அஜீத் உடனிருந்தார்.

    பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    முத்தமிழறிஞர் டாக்டர்.கருணாநிதி வழியில், தமிழ கத்தில் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர், அனைத்துத்துறைகளின் மேம்பாட்டிற்கென பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கிராமப்புறங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு மேம்பாட்டு பணிகள் தமிழக முழுவதும் நடைபெற்று வருகிறது.

    சிவகங்கை மாவட்ட கிராமங்களில் அடிப்படை தேவைகள் அதிகரித்து வருகிறது. அதன் தேவை களை நிறைவேற்றும் விதமாக, சம்பந்தப்பட்ட ஊராட்சிகள் சார்பிலும் மற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் மேம்பாட்டு நிதியின் மூலமாகவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சரால் செயல் படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்களின் பயன்களை, பொதுமக்கள் உரியமுறையில் பெற்று பயன்பெற வேண்டும். அதுவே அந்த திட்டங்களின் வெற்றிக்கு அடிப்படை யானதாகும். எனவே, தனிநபர் மற்றும் கிராமங்களின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும், முதலில் அறிந்து கொண்டு, அதன்மூலம் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், ஒன்றிய குழு உறுப்பினர் மருதுபாண்டியன், ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டிமீனாள் (பாதரக்குடி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மூட்டுகளை இலகுவாக்குகிறது. எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.
    • நல்ல தூக்கம் வர உதவுகிறது. கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

    உடல் உழைப்பு வெகுவாக குறைந்துவிட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.

    நடைப்பயிற்சி, நம் உள் உறுப்புகளுக்கு தேவையான ரத்த ஓட்டத்தை அளித்து உடல் உறுப்புகளை சீராக செயல்பட உதவுகிறது.

    நடைபயிற்சி மேற்கொள்வதால், இடுப்பளவு மற்றும் வயிற்று பகுதியில் உள்ள அதிகப்படியான சதை பகுதியை குறைக்க உதவுகிறது.

    தினமும் நடைபயிற்சி செய்வதின் மூலம், இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறையும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    நடைப்பயிற்சி ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, ரத்த சர்க்கரை அளவில் உள்ள ஏற்றத்தாழ்வை சரிசெய்யும். ஆஸ்துமா மற்றும் சில புற்றுநோய்களின் வளர்ச்சியையும் தடுக்கும்.

    ஒருவர் தினமும் 30 நிமிடங்கள் நடப்பதன் மூலம் நல்ல மனநிலையை உணர வைக்கும் எண்டோபின்களின் வெளியீடு அதிகரித்து, மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவது குறையும்

    தொடர்ச்சியான நடைபயிற்சி, எலும்புகளையும், தசைகளையும் வலிமையாக்கும். இதனால் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

    உடல் எடையை மிகவும் எளிதில் குறைக்க உதவும் வழிகளுள் ஒன்று நடைப்பயிற்சி. ஒரு நாளில் ஒருவர் 30 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சியை மேற்கொண்டால், 150 கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையில் மாற்றம் தெரியும்.

    நடைபயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்

    நரம்பு மண்டலம் சுறுசுறுப்படையும்.

    நாளமில்லா சுரப்பிகள் புத்துணர்ச்சி பெறும்.

    அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது.

    முதுகு நரம்புகளை உறுதியாக்குகிறது.

    அடிவயிற்றுத் தொப்பையை குறைக்கிறது.

    மூட்டுகளை இலகுவாக்குகிறது.

    எலும்புகளுக்கு உறுதியளிக்கிறது.

    கால்களையும், உடலையும் உறுதியான அமைப்பில் வைக்கிறது.

    'கொலஸ்ட்ரால்' அளவைக் குறைக்கிறது.

    மாரடைப்பு, சர்க்கரை நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

    உடல், மனச்சோர்வைக் குறைக்கிறது.

    நல்ல தூக்கம் வர உதவுகிறது.

    கண் பார்வையை கூர்மைப்படுத்துகிறது.

    உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும்

    ரத்தக்குழாய்களில் தேங்கியிருக்கும் கொழுப்புத் திட்டுகளை நீக்கப் பயன்படும்.

    சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்யவேண்டியது அவசியம்

    நடைபயிற்சியின்போது செய்ய கூடாதவை

    ஒரு கையால் செல்போனில் பேசிக்கொண்டும், மறுகையை பாக்கெட்டில் சொருகிக்கொண்டும் நடப்பதால் எந்த பயனும் இல்லை.

    இரண்டு கைகளையும் முன்னும் பின்னும் வீசி, நிமிர்ந்து வேகமாக நடைபோடுவதுதான் உண்மையான பயிற்சி.

    உடல் எடை குறைக்க நடைபோடுபவர்கள், நொறுக்குத்தீனிகளை கொறித்துக்கொண்டே சென்றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை

    அதிகமாகப் பேசிக்கொண்டே நடப்பது நல்லதல்ல.

    மேடு, பள்ளம் உள்ள இடத்தில நடைபயிற்சி மேற்கொள்ளகூடாது..

    எவ்வாறு நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்

    நெஞ்சை நிமிர்த்தி முன்னோக்கி பார்த்தவாறு நடக்க வேண்டும்.

    நெஞ்சை உயர்த்தியவாறு தோள்களை சாதாரணமாகவும் கைகளைத் தளர்வாகவும் வைத்திருக்க வேண்டும்..

    கைகளை முன்னும் பின்னும் ஒரே சீராக ஆட்டியவாறு நடக்க வேண்டும்.

    உங்கள் அடி வயிற்றை கெட்டியாகவும் உறுதியாகவும் வைத்த நிலையில் முதுகை சமமாக நிமிர்த்தியவாறு உடலைச் சற்றே முன் புறம் சாய்த்தவாறு நடக்க வேண்டும்.

    ஒரு நேர்கோட்டில் நடப்பதை போல் பாவனை செய்யுங்கள். அடிகளை சற்று அதிகமாக எட்டி வைத்து நடப்பதைக் கட்டுப்படுத்துங்கள். வேகமாக செல்ல வேண்டுமானால், காலடிகளை அருகருகே வைத்து விரைவாக நடங்கள்.

    நடக்க காலை உயர்த்தும் போது உங்கள் முன்னங்கால் விரல்களால் உடலை உந்தித்தள்ளியவாறும், காலை பூமியில் வைக்கும் போது குதிகாலை பூமியில் முதலில் பதிய வைத்தவாறும் நடக்க வேண்டும்.

    இயல்பாக சுவாசியுங்கள். நடக்கும் போது ஆழமாக ஒரே சீரான வேகத்தில் சுவாசித்து உயிர் வளி (Oxygen) அதிகமான அளவில் உட் செலுத்திக்கொள்ளுங்கள்.

    நடக்கும்போது வேகமாகவும் அதே நேரத்தில் மூச்சிறைக்கும் அளவிற்கு இல்லாமலும் பார்த்துக் கொள் ளுங்கள்.

    நடைபயிற்சியின் அவசியம்

    அதிகாலையில் நடப்பது மிகவும் நல்லது.அந்த நேரத்தில் நடப்பதால் தூய்மையான காற்றினை நாம் சுவாசிக்க முடியும்.

    அதிகாலையில் நடக்க முடியாதவர்கள் இரவு உணவுக்கு பின் அரை மணி நேரம் நடக்கலாம்.

    எக்காரணம் கொண்டும் வெறும் வயித்துல நடக்கக் கூடாது.

    அதிகாலையில் நடக்கிறவங்க, அதுக்கு முன்னாடி அரை லிட்டர் தண்ணீர் குடிச்சிட்டு நடக்க ஆரம்பிக்கலாம்.

    உடற்பயிற்சி துவக்கமாக ஒரே வேகத்தில் சுமார் 5 நிமிடங்கள் நடந்து பின்னர் கைகால்களை நீட்டவும். இதன்மூலம் நரம்புகளில் ஏதும் சோர்வோ அல்லது வீக்கமோ ஏற்படுவதில் இருந்து காத்துக்கொள்ளலாம்.

    • காவலர் பொது நல இயக்கம் வலியுறுத்தல்
    • அதிகாரிகளுக்கு காலத்தோடு பதவி உயர்வு மற்றும் சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை காவலர் பொது நல இயக்க பொதுச் செயலாளர் கணேசன் முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் இரவு ரோந்து பணியை தீவிர படுத்தி வருவது வரவேற்க்க தக்கது. இதனால் குற்ற சம்பவங்கள் குறைந்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் இரவு ரோந்து பணி செய்யும் போலீசாருக்கு சிறப்பு படி வழங்கப்படுகிறது.

    அது போல் புதுவையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கும் சிறப்பு படி வழங்கினால் அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துவதுடன் மேலும் பணியை சிறப்பாக செய்ய ஏதுவாக அமையும்.

    மேலும் புதுவை காவல்துறையில் பணி புரியும் போலீசார் முதல் அதிகாரிகளுக்கு காலத்தோடு பதவி உயர்வு மற்றும் சலுகைகளை உடனுக்குடன் வழங்க வேண்டும். தற்போது எல்.டி.சி., எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.

    இத்தேர்வுக்காக பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் மற்றும் அரசு துறை ஊழியர்களுக்கு தினப்படி அன்றே வழங்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு வழங்கப்படுவதில்லை. எனவே மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் தினப்படி போலீசாருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சுப்பயிற்சியாக இருக்கும்.
    • இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக அமையும்.

    உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சுப்பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவிசெய்கிறது. மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் யோகாசனம் நமக்கு உதவுகிறது.

    தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்க முடியும். யோகா செய்பவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலம் பெறும். மேலும் நன்றாக சுவாசிக்க முடியும். இதயம் சரியாக இயங்கி உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

    உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், ஊளைச்சதை எனப்படும் தேவையற்ற சதைகள் கரைந்து அழகான ஃபிட்டான உடல் அமைப்பை பெறுவதற்கு யோகா உதவிசெய்கிறது. தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மேலும் நாம் பதட்டம் இல்லாமல் மனஅமைதி அடையவும், தெளிவாக சிந்திக்கும் திறனையும் பெற யோகாசனம் உதவுகிறது.

    அதிகப்படியான வேலைப்பளு, குடும்பப்பிரச்சினை மற்றும் பிற காரணங்களால் பலரும் மனஅமைதியை இழந்து சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே தினமும் யோகாசனம் செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் நீங்குகிறது.

    யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுகின்றோம். இதனால் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு நோய் நொடியின்றி நீண்ட நாட்கள்வாழவும் உதவுகிறது. ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதாலும் தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருவதாலும் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியத்தை பெறமுடியும்.

    தற்போதுள்ள காலக்கட்டத்தில் தொப்பையை எப்படி குறைப்பது என்பதே எல்லோரது மனதிலும் உள்ள கேள்வியாக உள்ளது. கடைகளில் விற்கும் பாக்கெட் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதாலும், கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதாலும், ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரைமுறை இல்லாமல் உடல் எடை கூடி அவதிப்படுகின்றனர். பலருக்கும் வயிற்றில் தொப்பை ஏற்படுகிறது. யோகானசனங்களில் நவுகாசனா, உஷட்ரசனா, போன்ற யோகாசனங்களை செய்வதன் மூலம் சுலபமாக தொப்பையை குறைக்க முடியும்.

    ×