search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நன்மைகள்"

    • கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்’ என்பது பழமொழி.
    • பெண்கள் வெற்றிக்கனியை பறிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

    * `கும்பச் சனி குடம் குடமாய் கொடுக்கும்' என்பது பழமொழி. `நீதிமான்' என்றும், `நியாயவான்' என்றும், போற்றப்படும் சனி தனது ஆட்சி வீடான கும்ப ராசியில் சஞ்சரிக்கும் பொழுது நீதி, நியாயம் கிடைக்க போராட்டங்கள் அதிகரிக்கும். நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்புகள் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் கொடுக்கலாம்.

    * அரசியல் சதுரங்கத்தில் கட்சித்தாவல்கள் அதிரடியாய் அமையும். அனைத்துக் கட்சிகளுக்கும் தேர்தல் களம் சவாலான போட்டியாக அமையும். ஆயினும் முடிவில் மக்கள் விரும்பியபடி நல்லாட்சி அமையும்.

    * முற்காலத்தில் `குடங்களை' சுமந்த பெண்கள், இக்காலத்தில் 'மகுடங்களை' சுமக்க, கும்பத்தில் சஞ்சரிக்கும் சனியின் பலத்தால் வழிபிறக்கும். அரசியல் களத்தில் பெண்கள் வெற்றிக்கனியை பறிக்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

    * தங்கம், வெள்ளி போன்றவற்றின் விலை நினைக்க இயலாத அளவிற்கு உயரும். திடீர், திடீரென விலை குறைவது போல் தோன்றி மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும்.

    * பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றின் விலை சனிப்பெயர்ச்சி காலத்திலிருந்து இறங்கு முகமாக இருக்கும். ஆயினும் ஜூன் மாதத்திற்கு மேல் விலை ஏறிக்கொண்டே சென்று உச்சத்தைத் தொடும்.

    * சனியின் வக்ர காலத்திலும், செவ் வாய், சனியோடு சம்பந்தப்படும் நேரத்திலும் கடல் கொந்தளிப்பு, வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம். உலக நாடுகளுக்குள் பிரச்சினைகள் தலைதூக்கும்.

    * புகழ்பெற்ற அரசியல் பிரமுகர்கள், கலைத்துறையினைச் சேர்ந்தவர்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    * செந்நிறக் காய்கறிகள், வெள்ளைநிற உணவுப்பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும்.

    • தெய்வ சிலைகளை வாசலில் வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
    • வீட்டின் வாசலில் சூரிய வெளிச்சம் நன்றாக பட வேண்டும்.

    வீட்டு வாசலை சுத்தமாகவும், அலங்கரித்தும் வைப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் வீட்டுக்குள் நுழையும். இது அந்த வீட்டில் வசிக்கும் குடும்பத்தினருக்கு நற்பலன்களையும், செல்வச்செழிப்பையும் கொடுக்கும். வாசல் கதவை மாவிலை தோரணங்கள், அலங்காரப்பொருட்கள் கொண்டு அலங்கரியுங்கள். தெய்வ சிலைகளை வீட்டு வாசலில் வைத்து அலங்கரிப்பது, நேர்மறை ஆற்றலை அதிகரித்து அதிர்ஷ்டத்தை அளிக்கும்.

    வாசலின் அருகில் கண்ணாடி பவுலில் தண்ணீர் நிரப்பி அதில் மலர்களை மிதக்க விடுவதும், வாஸ்து சாஸ்திரத்தின்படி நன்மை தரும் விஷயமாகும். வீட்டின் வாசல் எப்போதும் நல்ல வெளிச்சத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். காலை வேளையில் வீட்டின் வாசலில் சூரிய வெளிச்சம் நன்றாக பட வேண்டும்.

    மாலை வேளையில் நுழைவு வாயிலில் நல்ல வெளிச்சம் இருக்குமாறு விளக்குகளை பொருத்துங்கள். மணி பிளான்ட் போன்ற அதிர்ஷ்டத்தை வரவழைப்பதாக நம்பப்படும் செடிகளை வீட்டின் முன்பக்க கதவுக்கு அருகில் வளர்க்கலாம். உடைந்த பொருட்கள், குப்பைக்கூடைகள், செருப்புகளை அடுக்கி வைக்கும் ரேக்குகள் ஆகியவற்றை வீட்டு வாசலுக்கு முன்பாக வைப்பதை தவிருங்கள்.

    • ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
    • அரிசியில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன.

    இந்திய உணவு வகைகளில் பல நூற்றாண்டுகளாக அரிசி முக்கிய அங்கம் வகிக்கிறது. அரிசியில் நூற்றுக்கணக்கான வகைகள் இருக்கின்றன. அவற்றுள் வெள்ளை, பழுப்பு நிற அரிசிதான் பரவலாக பயன்பாட்டில் இருக்கிறது. அதிலும் வெள்ளை நிற அரிசிதான் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. பாரம்பரிய அரிசி ரகங்கள் ஏராளம் உள்ளன. ஆனால் அவற்றின் பயன்பாடு குறைவாகவே உள்ளது. இப்போது பாரம்பரிய அரிசி வகைகளின் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து பலரும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

    அவற்றுள் ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சிறந்த அரிசிகளில் ஒன்றாக `நவரா' அரிசி விளங்குகிறது. இது கேரளாவை பூர்வீகமாக கொண்டது. பாலீஷ் செய்யப்படாத அரிசியான இது, சிவப்பு கலந்த பழுப்பு நிறத்தில் காட்சி அளிக்கும்.

    உணவாக மட்டுமல்லாமல் ஆயுர்வேதத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அரிசி உடலுக்கு உடனடி ஆற்றலையும், ஊட்டச்சத்தையும் அளிக்கக்கூடியது. அதனால் நோயாளிகளுக்கு சிறந்த உணவாக இது அமைகிறது. ரத்தம், எலும்புகள், தசைகள் என உடலின் அனைத்து திசு அமைப்புகளுக்கும் வலு சேர்க்கக்கூடியது.

    மெலிந்த தேகம் கொண்டவர்கள், பலவீனமான, ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், காய்ச்சலில் இருந்து மீண்டு வருபவர்களுக்கு ஏற்றது.

    நீரிழிவு நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த அரிசி பரிந்துரைக்கப்படுகிறது. ஆயுர்வேதம் இந்த அரிசியை தினமும் சாப்பிடுமாறு வலியுறுத்துகிறது. ஏனெனில் இந்த அரிசி பசியைத் தூண்டும், உடல் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். ஆயுர்வேதத்தில் மூட்டுவலி, வாத நோய், பக்கவாதம் போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

    நீரிழிவு நோயாளிகள் இந்த அரிசியை குறைவாக உட்கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கண்காணித்து அதற்கேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி உட்கொள்ளலாம்.

    இந்த அரிசியுடன் தண்ணீர் அல்லது பால் சேர்த்து சமைத்து ஊட்டமளிக்கும் கஞ்சியாகவும் உட்கொள்ளலாம். வெல்லம் அல்லது தேனுடன் லவங்கப்பட்டை, ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களை சேர்த்தும் சுவைக்கலாம். பிரியாணி, புலாவ் செய்வதற்கு பயன்படுத்தும் அரிசிக்கு மாற்றாக உபயோகிக்கலாம்.

    இந்த அரிசியில் தயாராகும் கூழ் பல்வேறு நோய்களை தடுக்கும் ஆற்றல் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு பாதுகாப்பான உணவாகவும் கருதப்படுகிறது. நரம்பு கோளாறுகளை குணப்படுத்துவதற்கான கேரள பாரம்பரிய மருத்துவத்தில் இந்த அரிசி முக்கிய பங்கு வகிக்கிறது.

    நவரா அரிசியின் நன்மைகள்:

    * உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

    * செரிமானத்திற்கு உதவும். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்.

    * உடல் மெலிவதை தடுக்கும்.

    * முடக்கு வாதத்தை குணப்படுத்த பயன்படுகிறது.

    * ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். ரத்த சோகையை குணப்படுத்தும்.

    * எலும்புகளை பலப்படுத்தும். ஆஸ்டியோபோரோசிஸ் நோய் வராமல் தடுக்கும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தினமும் ஒரு முட்டையாவது சாப்பிடுவது நல்லது.
    • இதயநோய், பக்கவாதம் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு

    தினமும் முட்டை உட்கொள்பவர்களுக்கு இதய நோய், பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகுறைவு என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான ஆய்வை சீனாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். 30 முதல் 79 வயதுக்குட்பட்ட 5 லட்சம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது.

    ஆய்வின் முடிவில் தினமும் உணவில் முட்டை சேர்த்துக்கொண்டால் இதய நோயால் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 18 சதவீதம் குறையும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல் பக்கவாதத்தால் இறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 28 சதவீதம் குறையும் என்பதும் தெரியவந்துள்ளது.

    முட்டையில் கொழுப்பு அதிகம் இருப்பதால் அதனை அதிக அளவு உட்கொள்வது உடல் நலனுக்கு கேடானது. அதேவேளையில் முட்டையில் வைட்டமின்களும், புரதங்களும் உள்ளடங்கி இருக்கிறது. அதனால் தினமும் ஒரு முட்டையாவது சாப்பிடுவது நல்லது.

    பெரும்பாலான ஆய்வு முடிவுகளும் முட்டையை அளவோடு சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும் என்பதையே தெளிவுபடுத்தியுள்ளன. இதய நோய், பக்கவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள தினமும் ஒரு முட்டை சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுவது நல்லது என்பது ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது

    • மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் வாயில் துர்நாற்றத்தை போக்கும்.
    • மிளகை சுட்டு அதன் புகையினை உள் இழுத்தால் தலைவலி தீரும்.

    * சளி தொல்லைக்கு மிளகை நன்றாக பொடித்து அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும்.

    * அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.

    * கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும். கல்யாணமுருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.

    * மிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளில் இருந்து ரத்தம் வடிதல் குணமாகும், பற்களும் வெண்மையாக இருக்கும், வாயில் துர்நாற்றத்தை போக்கும்.

    * மிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலை பாரம் குணமாகும். மிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும். மிளகை சுட்டு அதன் புகையினை உள் இழுத்தால் தலைவலி தீரும்.

    * ஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.

    * மிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது. மிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது.

    * மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. நஞ்சை முறுக்கும் தன்மை கொண்டது. பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி.

    • முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
    • முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.

    முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

    முருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தை தணிக்கவும் வல்லது. முருங்கைக்கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.

    சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையை போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

    மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.

    ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்து போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.

    குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகிறது. இது நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.

    முருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் 'சி' கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.

    • புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச்சேர்க்கை.
    • ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகவும் புரதம் அவசியம்.

    புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட அமினோ அமிலங்களின் கூட்டுச்சேர்க்கை. இது தசைகளுக்கு வலுசேர்க்கிறது. செல்களை புதுப்பிக்கவும், காயம், புண் போன்றவை ஆறுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன், வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாகவும் புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற இமுனோ குளோபுலின்களைத் தயாரிக்கவும் இது தேவை. நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவில் இருந்தே பெறலாம். சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துக்கள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச்சத்தை பெறலாம்.

    இயற்கை உணவைச் சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது போன்ற மற்ற சத்துக்களும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலுசேர்க்கும். செயற்கை பானங்களில் இருக்கிற புரதத்தை உடல் செரிப்பதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் என்று புரதச்சத்து சம்பந்தப்பட்ட பவுடரை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கின்றனர். இதுவும் தவறு.

    உடற்பயிற்சி கூடத்துக்கு செல்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டுவந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்.

    • சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது.
    • சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

    வழிபாடுகளிலும், ஆயுர்வேத மருந்துகளிலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த மூலிகையாக துளசி விளங்குகிறது. பழங்காலத்தில் இருந்தே துளசியை மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தி வருகிறார்கள். துளசியில் தினமும் தேநீர் தயாரித்து பருகினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்ப்போம்.

    சுவாசம் மேம்படும்

    துளசியில் ஆண்டி மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது. இவை சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, ஒவ்வாமை போன்ற பாதிப்புக்குள்ளானவர்களுக்கு துளசி டீ நன்மை பயக்கும்.

    சரும பாதுகாப்பு

    துளசியில் பிளவனாய்டுகள், பாலிபினால்கள் உள்ளிட்ட ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. இவை செல்களுக்கு சேதம் ஏற்படுத்தும் பிரீ ரேடிக்கல்களில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவுகின்றன. நாள்பட்ட நோய்களின் அபாயத்தை குறைக்கவும் துணைபுரிகின்றன. மேலும் துளசியில் இருக்கும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் முகப்பரு, தோல் நோய்த்தொற்றுகள் உள்பட பல்வேறு தோல் பிரச்சினைகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

    செரிமானம்

    அஜீரணம், வாயு தொல்லை போன்ற வயிற்று கோளாறுகளை போக்கி செரிமானம் சீராக நடைபெறுவதற்கு துளசி டீ உதவி புரியும். குடல் இயக்கம் சுமூகமாக நடக்கவும் துணைபுரியும்.

    அழற்சி

    துளசியில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட அழற்சியால் பாதிக்கப்படுபவர்களுக்கு துளசி டீ நன்மை தரும்.

    மன நலம்

    துளசி அறிவாற்றல் செயல்பாடு மற்றும் மன நலனை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. நினைவாற்றல் திறனையும் தக்கவைக்கக்கூடியது.

    ரத்த சர்க்கரை

    துளசி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் என்று சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன. அதனால் நீரிழிவு நோயாளிகள், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளவர்கள் துளசி டீ பருகுவது பயனுள்ளதாக இருக்கும்.

    எடை மேலாண்மை

    துளசி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடியது. உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் வழிவகை செய்யும். உடல் எடையை சீராக தக்கவைப்பதற்கு தினமும் துளசி டீயும் பருகி வரலாம்.

    இதய ஆரோக்கியம்

    துளசி ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்களிக்கும்.

    • வாய்ப்புண், குடல் புண் (அல்சர்) குணமாகும்.
    • இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.

    பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் டாக்டர்கள் கூறும் ஒரே விஷயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தான். காரணம் என்னவென்றால் தற்போதைய சமூகத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தவிர்க்கும் விஷயம் என்றால் அது பழங்கள் சாப்பிடுவது தான்.

    பழங்களின் வகைகள் ஏராளம். அதிலும் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் இருகிறது. அந்தவகையில் விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்று தெரிந்துக்கொள்வோம்.

    * பற்களை வலுடையச் செய்கிறது.

    * உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    * தலை வலி குறையும்.

    * கண்பார்வை மங்கல் குணமாகும்.

    * பசியை தூண்ட செய்யும்.

    * இதயத்தை பலம் பெற செய்யும்.

    * மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும்.

    * இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.

    * வாயுத் தொல்லை நீங்கும்.

    * நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

    * எலும்புகள் வலுவடையும்.

    * ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

    * நினைவாற்றல் அதிகரிக்கும்.

    * பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.

    * உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது.

    * வாய்ப்புண், குடல் அல்சர் குணமடையும்.

    * வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.

    இந்த விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். ஆகவே இதை இந்த காலக்கட்டத்தில் வாங்கி சாப்பிடுவது நல்லது.

    • யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சுப்பயிற்சியாக இருக்கும்.
    • இதயத்திற்கு தேவையான ரத்த ஓட்டம் சீராக அமையும்.

    உடலை ஒரு நிலையில் குறிப்பிட்ட அளவு நேரம் இருக்கச் செய்யும் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும் சொல்லே யோகாசனம். தினமும் யோகாசனம் செய்வது உங்களுக்கு சிறந்த ஒரு மூச்சுப்பயிற்சியாக இருக்கும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்க உதவிசெய்கிறது. மேலும் நமது உடல் சுறுசுறுப்பாக இயங்கவும் யோகாசனம் நமக்கு உதவுகிறது.

    தினமும் யோகாசனம் செய்வதன் மூலம் நமக்கு ஏற்படக்கூடிய இதயம் சம்பந்தமான நோய்களை தடுக்க முடியும். யோகா செய்பவர்களுக்கு ரத்த ஓட்டம் சீராகும், இதயம் பலம் பெறும். மேலும் நன்றாக சுவாசிக்க முடியும். இதயம் சரியாக இயங்கி உடல்நலத்தை மேம்படுத்துகிறது.

    உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்புகள், ஊளைச்சதை எனப்படும் தேவையற்ற சதைகள் கரைந்து அழகான ஃபிட்டான உடல் அமைப்பை பெறுவதற்கு யோகா உதவிசெய்கிறது. தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் நம்முடைய சிந்திக்கும் ஆற்றல் மேம்படுகிறது. மேலும் நாம் பதட்டம் இல்லாமல் மனஅமைதி அடையவும், தெளிவாக சிந்திக்கும் திறனையும் பெற யோகாசனம் உதவுகிறது.

    அதிகப்படியான வேலைப்பளு, குடும்பப்பிரச்சினை மற்றும் பிற காரணங்களால் பலரும் மனஅமைதியை இழந்து சந்தோஷம் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே தினமும் யோகாசனம் செய்வதால் நம்முடைய மன அழுத்தம் மற்றும் மனம் சம்பந்தமான அனைத்து குறைபாடுகளும் நீங்குகிறது.

    யோகா செய்யும் போது நாம் உடலை வளைத்து, நெளித்து செயல்படுவதால் உடலுக்கு அதிகப்படியான இயக்கம் கொடுகின்றோம். இதனால் நமது உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு நோய் நொடியின்றி நீண்ட நாட்கள்வாழவும் உதவுகிறது. ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவதாலும் தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருவதாலும் உடலும் மனதும் நல்ல ஆரோக்கியத்தை பெறமுடியும்.

    தற்போதுள்ள காலக்கட்டத்தில் தொப்பையை எப்படி குறைப்பது என்பதே எல்லோரது மனதிலும் உள்ள கேள்வியாக உள்ளது. கடைகளில் விற்கும் பாக்கெட் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதாலும், கொழுப்பு நிறைந்த உணவு பொருட்களை சாப்பிடுவதாலும், ஜங்க் ஃபுட்ஸ் சாப்பிடுவதாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரைமுறை இல்லாமல் உடல் எடை கூடி அவதிப்படுகின்றனர். பலருக்கும் வயிற்றில் தொப்பை ஏற்படுகிறது. யோகானசனங்களில் நவுகாசனா, உஷட்ரசனா, போன்ற யோகாசனங்களை செய்வதன் மூலம் சுலபமாக தொப்பையை குறைக்க முடியும்.

    • கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும்.
    • பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.

    சஷ்டி விரதம் கடைபிடிப்பது எவ்வாறு?

    * கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.

    * பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து 'துதிப்போருக்கு வல்வினை போம்'என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.

    * ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்ச் சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.

    * மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம்.

    *ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.

    சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது உணவு கட்டுப்பாடுதான். உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.

    மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது. குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.

    பெண்களின் பாதுகாப்புக்கு கந்தசஷ்டி கவசம் படியுங்கள்!

    ஒரு வீரனுக்கு, அவனது மார்பிலுள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது.

    கந்த சஷ்டி கவம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதற்காக ஆறுநாளும் இதனைப் படித்து வருவர்.

    இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார்.

    கவசத்தின் முதல் பாடலில், "துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும்" என்கிறார். அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும்.

    காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்டாகும்.

    மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.

    சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.

    குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவும் இந்தக் காலத்தில், சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.

    • வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் போன்ற பல்வேறு நன்மைகள் பயன்பெற முடியும்.
    • தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில் சமைத்து உணவு வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் செயல்படுத்துவது குறித்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து முதற்கட்டமாக மாநகராட்சி பகுதிகள் அரசுத் தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களில் காலை உணவு வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளதுஇத்திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்தல், மாணவ-மாணவியர்கள் ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்க ப்படாமல் இருப்பதை உறுதி செய்தல், மாணவ-மாணவியர்களின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், குறிப்பாக இரத்த சோகை குறைப்பாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ-மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்கவைத்து கொள்ளுதல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் போன்ற பல்வேறு நன்மைகள் பயன்பெற முடியும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மாநகராட்சியில் 8 தொடக்கப் பள்ளியில் 375 மாணவ- மாணவியர்களும், கும்பகோணம் மாநகராட்சியில் 13 தொடக்கப் பள்ளிகளும் 1067 மாணவ மாணவியர்கள் என மொத்தம் 21 மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 1442 மாணவ- மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறு வார்கள். தஞ்சாவூர் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கி ணைப்பு மையம் கூட்டுறவு காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளியிலும், கும்பகோணம் மாநகராட்சி பள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் கோபு சிவகுருநான் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஒருங்கிணைப்பு மையங்களில் உள்ள சமையல் கூடங்களில் சமைத்து உணவு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் மாநக ராட்சி ஆணையர்கள் சரவணகுமார் (தஞ்சாவூர்), செந்தில்முருகன் (கும்பகோணம்), முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×