என் மலர்
நீங்கள் தேடியது "அருள்"
- டாக்டர் அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது.
- அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும்.
திண்டிவனம்:
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொள்ள வந்த பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் சேலம் அருள் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
டாக்டர் அன்புமணிக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பட்டுள்ளது. அன்புமணி ராமதாஸ் பதில் அளித்திருக்கிறாரா? இல்லையா? என்பது தெரியவில்லை. இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் 9 பேருடன் இன்று தைலாபுரத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
இதில் 9 நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு கட்சியின் நிறுவன தலைவர் ராமதாசிடம் ஒப்படைத்த பின்னர் அவர் முடிவு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வரும் என்று கூறி வருகிறாரே என்ற கேள்விக்கு, டாக்டர் ராமதாஸ் எடுக்கும் முடிவிற்கு கட்டுப்படுவோம். அவர் எந்த கூட்டணியில் அங்கம் வைக்க முடிவு செய்கிறாரோ அந்த கூட்டணி தான் வெற்றி பெறும். அவர்கள் தான் அடுத்து ஆட்சி அமைப்பார்கள். மக்கள் எதிர்பார்க்கும் கூட்டணியை ராமதாஸ் வைப்பார் என தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் டாக்டர் ராமதாசை சந்தித்து அவர் சொல்வதை கேட்டு செயல்தலைவராக செயல்படுவேன் என கூற வேண்டும் என பா.ம.க. தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் வெகு விரைவில் அது நடைபெறும் என அருள் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
- நேற்று முன்தினம் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
- அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
சென்னை:
பா.ம.க.வில் தந்தை மகனுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், நிர்வாகிகள் சிலர் ராமதாசுக்கு ஆதரவாகவும், சிலர் அன்புமணிக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இதனிடையே, மூச்சு உள்ளவரை பா.ம.க. தலைவர் தானே என ராமதாசும், வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் என்று அன்புமணியும் பேசி வருகிறார்கள். இதற்கிடையே, அன்புமணி ஆதரவாளர்களை ராமதாசும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணியும் நீக்கி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் அருளை பா.ம.க.வில் இருந்து நீக்கி அன்புமணி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், சட்டமன்றக்குழு கொறடா அருளை மாற்றக்கோரி பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேஸ்வரன், சதாசிவம், மயிலம் சிவக்குமார் மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் சட்டப்பேரவை செயலரை சந்தித்து மனு அளித்துள்ளனர். புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமாரை நியமிக்கவும் சட்டப்பேரவைச் செயலாளரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- அருளுக்கு பா.ம.க.வின் இணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
- தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையுமா என்பதை செயற்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும்.
தைலாபுரம்:
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே அதிகாரம் தொடர்பான மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனால் நிர்வாகிகள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, ராமதாசுக்கு ஆதரவாக பேசிய அருள் எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்குவதாக நேற்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,
* பா.ம.க.வில் யாரையும் நீக்கும் அதிகாரம் எனக்கே உள்ளது.
* எம்.எல்.ஏ. பதவியில் இருந்து யாரையும் நீக்க முடியாது. அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை.
* எம்.எல்.ஏ.க்களை நீக்க பா.ம.க. கொறடா தான் சபாநாயகருக்கு பரிந்துரை செய்ய முடியும்.
* அருளுக்கு பா.ம.க.வின் இணை பொதுச்செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
* தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இணையுமா என்பதை செயற்குழு, பொதுக்குழுதான் முடிவு செய்யும் என்றார்.
- கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சேலம் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினர் இரா. அருள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அண்மைக்காலங்களில் கட்சித் தலைமை குறித்து செய்தித் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட முதன்மை ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அவதூறான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இது குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு, இது குறித்து விசாரித்து வந்த நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலான நடவடிக்கைகளுக்காக கட்சித் தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இரா. அருளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதை அவர் மதிக்கவில்லை.
அதைத்தொடர்ந்து கட்சித் தலைமைக்கு ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அமைப்புச் சட்ட விதி 30-இன்படி பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் இரா. அருள் நீக்கப்படுகிறார். பாட்டாளி மக்கள் கட்சியினர் எவரும் அவருடன் எந்த வகையிலும் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும்.
- பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.
சஷ்டி விரதம் கடைபிடிப்பது எவ்வாறு?
* கந்தசஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டிக்க வேண்டும். விரத நாட்களில் காலை 4.30 மணிக்கு எழுந்து குளிர்ந்த நீரில் நீராட வேண்டும்.
* பின் முருகன் படத்துக்கு மாலை அணிவித்து 'துதிப்போருக்கு வல்வினை போம்'என்று தொடங்கும் கந்த சஷ்டி கவசம் படிக்க வேண்டும்.
* ஆறு நாளும், உபவாசம் இருக்க வேண்டும் என்று விரத முறைகள் சொன்னாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை எனவே, காலையில் மட்டும் பட்டினியாகவும், மதியம் சிறிது பச்சரிசி தயிர்ச் சாதமும், இரவில் பழம் அல்லது எளிய உணவு எடுத்துக்கொள்ளலாம்.
* மதிய சாதத்திற்கு ஊறுகாய், வெங்காயம் சேர்க்காமல் காரம் குறைந்த காய்கறி ஏதாவது சேர்த்துக் கொள்ளலாம்.
*ஓம் சரவணபவ, ஓம் முருகா, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வேலும் மயிலும் துணை போன்ற மந்திரங்களை மனதுக்குள் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். பணிக்கு செல்பவர்கள் டீ, காபியைத் தவிர்ப்பது நல்லது. பால் அருந்தலாம்.
சஷ்டி விரதத்திலேயே முக்கியமானது உணவு கட்டுப்பாடுதான். உணவு கட்டுப்பாட்டை வளர்த்துக் கொண்டால் மனக்கட்டுப்பாடு தானாக வரும்.
மனம் கட்டுப்பட்டால், உலக வாழ்வில் துன்பமே இருக்காது. குழந்தை இல்லாத பெண்கள் முருகன் கோவில்களில் தங்கி, விரதம் மேற்கொள்வது உடனடி பலன் தரும்.
பெண்களின் பாதுகாப்புக்கு கந்தசஷ்டி கவசம் படியுங்கள்!
ஒரு வீரனுக்கு, அவனது மார்பிலுள்ள கவசம் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு தருகிறது. அதுபோல், பக்தர்களைக் காப்பதற்காக கந்தசஷ்டி கவசம் உள்ளது.
கந்த சஷ்டி கவம் தேவராய சுவாமியால் பாடப்பட்டது. சஷ்டி விரதம் இருப்பவர்கள் அதற்காக ஆறுநாளும் இதனைப் படித்து வருவர்.
இதனைப் படித்தால் கிடைக்கும் நன்மையைப் பற்றி தேவராய சுவாமிகளே சொல்லியுள்ளார்.
கவசத்தின் முதல் பாடலில், "துதிப்போருக்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும், நிஷ்டையும் கைகூடும்" என்கிறார். அதாவது கந்த சஷ்டி கவசம் படிப்பவர்களுக்கு தீவினையும், துன்பமும் நீங்குவதோடு செல்வ வளம் பெருகும்.
காலை, மாலையில் பக்தியுடன் படித்து, திருநீற்றினை நெற்றியில் அணிவோருக்கு நவக்கிரகங்களால் நன்மை உண்டாகும்.
மன்மதன் போல பேரழகும், வாழ்வில் பெற வேண்டிய பதினாறு பேறுகளும் கிடைக்கும்.
சஷ்டி விரத காலம் மட்டுமின்றி, தினமும் இதைப் படிப்போருக்கு சிறந்த பாதுகாப்பு கிடைக்கும்.
குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பாற்ற நிலை நிலவும் இந்தக் காலத்தில், சஷ்டி கவசம் சிறந்த பாதுகாப்பைத் தரும்.
- வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.
- ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரிசங்கு.
செல்வம் தரும் வலம்புரி சங்கு
கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு.
சிறியதாக குறுகிய அளவானவை பெண் சங்குகள். சற்றுபருத்த திடசங்குகள் ஆண் சங்குகள்.
சங்குகளின்மேல் உள்ள வரிகளை (கோடுகள்) வைத்து வலம்புரிச்சங்கு, இடம்புரிச்சங்கு என்று கூறுவார்கள்.
ஒரு சங்கின் சுருள்பகுதி அதனுடைய வாய்பகுதியில் ஆரம்பித்து சுருள் முனைக்கு வலது புறமாக சுற்றி வந்தால் அது வலம்புரி சங்கு எனப்படும்.
ஒரு சங்கின் சுருள்பகுதி அதன் வாய்பகுதியில் இருந்து இடதுபுறம் வந்தால் அது இடம்புரி சங்கு.
வலம்புரி சங்கு, இடம்புரி சங்கு அகியவற்றில் வலம் புரிச்சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும்.
இந்த வலம்புரி சங்கு பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது. எனவே இதற்கு அரிய தெய்வீக சக்தி உண்டு.
தூய்மையான வெண்ணிறத்துடன் நீண்டு மூன்றில் ஒருபங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருப்பது சிறப்பு நீளம் அதிகமாக இருந்தால் மிகச் சிறப்பு.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் இடது கையில் உள்ளது வலம்புரி சங்கு. இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் "ஓம்" என்ற சப்தம் கேட்கும்.
வலம்புரிச்சங்கை வீட்டில், வியாபார இடங்களில் சுத்தமாக வைத்து பூஜை செய்தால் செல்வம் பெருகும் மற்றும்பலவித நன்மைகள் கிடைக்கும்.
மாமிசம் சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச்சங்கைத்தொடக்கூடாது.
சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்லது வெள்ளி தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர்சில்வர் தட்டில் வைக்கக்கூடாது.
செல்வத்திற்கு அதி தெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடிமாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வணங்குகிற புரட்டாசி பவுர்ணமியிலும், ஆனி மாதம் சுக்லபட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பவுர்ணமியிலும்
வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களால் சங்கினையும், லட்சுமியையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகியவைகளை பசு நெய்யில் செய்துபால்பாயசம் செய்துபசு நெய் ஊற்றி விளக்கேற்றி இரவு 10.00 மணியிலிருந்து 1.00 மணிக்குள் பூஜை செய்ய வேண்டும்.
இப்படி செய்தால் எல்லாவித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சங்கிற்கு பூஜை செய்யலாம்.
ஒவ்வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய்,பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது நீரைக்குடித்துவிட்டு, சிறிது நீரை விட்டு வாசற்படியில் தெளிக்கவும்.
இப்படி 90 நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும்.
ஆண், பெண் ஆகியோருக்கு இருக்கும் திருமண தோஷம், செவ்வாய் தோஷம் நீங்க சங்கில்பசும்பால் விட்டு 27 செவ்வாய்கிழமை அம்மனை பூஜித்து வந்தால் தோஷம் நீங்கி திருமணம் நடைபெறும்.
குழந்தைகளுக்கு இதில்பசும்பால் ஊற்றி வைத்துப்பாலாடையாகப் புகட்ட நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.
வலம்புரிசங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதைகள் நெருங்காது.
இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய்து அதை அருந்தினால் வியாதிகள் குணமடையும்.
- இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.
- மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள்
மகாலட்சுமியின் பெருமை
மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள்.
சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள்.
மந்தகாச முகமுடையவள். தங்க பிராகாரங்களைக் கொண்டது இவள் பவனம், கருணையுடையவள்.
வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள்.
அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால் திருப்தியுடையவள் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.
தாமரைமலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதார குணமுடையவள்.
இவள் "ஈம்" என்ற பீஜாட்சரத்தை உடையவள் இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள்.
இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.
தரித்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள்.
மகாலட்சுமி சூரியன் போன்றும் பிரகாசிப்பாள் இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது.
இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் கீர்த்தி என்பவளும் பக்தன் வீடு தேடி வந்தடைவர்.
இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம். இவளே செழிப்பைத் தருபவள் கோமியத்தில் வாசம் செய்பவள்.
சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈஸ்வரி. ஆசையை நிறைவேற்றி, வாக்குக்கு சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருள்களுக்கு ருசியையும் அளிப்பவள்.
மகாலட்சுமியின் திருக்குமாரர் கர்தமர் சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே.
இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள்.
செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள். இந்த பெருமைகளை யெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மைவிட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும்.
- குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.
- இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.
இரு யானைகளுடைய லட்சுமி
யானைகள் இரு புறமும் கலச நீராட்டும் லட்சுமியே எங்கும் சாதாரணமாகத் தென்படும் உருவம்.
முதன் முதல் இந்த கஜலட்சுமியின் வடிவிலேயே சிற்பியின் கனவு எழுந்தது.
ஸ்ரீசுக்தத்தின் வருணனையே இதற்கு அடிப்படையாகும்.
வேத காலத்திலேயே வேரூன்றிப்போன இந்தக் கற்பனையை கல்லில் எங்கும் காணலாம்.
லட்சுமி வழிபாடும் பூஜையும்
பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.
தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்து கும்பிடுகின்றனர்.
குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.
ஆனால் நம் ரீதியில் அன்று லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.
சுக்ரநீதி சாரத்தில் வீணை ஏந்திய தியான ஸ்லோகம் வருகிறது.
மகாராஷ்டிரத்தில் உழவர்கள் லட்சுமியைத் தொழுகின்றனர்.
பயிர் வளத்தைக் காட்டும் தேவதை அவள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர்.
மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள்.
அத்துடன் துணியில் மறைத்து ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.
ராஜபுதனத்தில் லட்சுமியை அன்ன பூரணியாக உபசரிக்கின்றனர்.
தாணியம் அளக்கும் "காரி" என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்து தாமரைப் பூக்களால் அலங்கரிப்பார்கள்.
இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.
அவள் தலையில் முத்துக் கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள்.
மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள்.
கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந் நாட்டு வழக்கம்.
தெலுங்கரும், தமிழகத்தில் ஸ்மார்த்த மரபினரும் வரலட்சுமி விரதத்தைக்கொண்டாடுவார்கள்.
கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜை.
- வளர்பிறை அஷ்டமியில் இந்த பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.
- பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம்.
பிரச்சனைகளை தீர்க்கும் ஞாயிற்றுக்கிழமை காலபைரவர் வழிபாடு
ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் அல்லது ராகு காலத்தில் ருத்திர அபிஷேகம், மிளகு வடை மாலை சாற்றி ஒரு பூசணி மிளகு தீபம் அல்லது மற்ற பழங்களில் மிளகு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் பாக்கியம் கிட்டும்.
ஜாதக கர்ம வினைகள் அகலும், காரியத்தடைகள் நீங்கும், நினைத்தது கைகூடும், எதிரி வசியமாவார், மறைமுக எதிரிகளும் பைரவரை பூஜிப்பதால் மறைந்து விடுவார்கள்.
கடன் தொல்லை தீர
கடன் வாங்கி வட்டி, அசல் கட்ட இயலாதவர்கள் ஞாயிறு ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரி பருப்பு மாலை கட்டி, செந்தாமரை பூ அணிவித்து, கேரட் அல்வா, கோதுமை அரிசி பலகாரம், அவல், கேசரி, சிவப்பு ஆப்பிள் படையலிட்டு, புனுகு சாற்றி வெண்பொங்கல் நைவேத்யமிடவும்.
ஒரு தலைவாழை இலை வைத்து அதன் மீது நெல் 1 படி பிரப்பி அதன் மீது ஒரு தலைவாழை இலை வைத்து பச்சரிசி 1 படி குங்குமம் சிறிதளவு மஞ்சள்பொடி, நெய் கலந்து பரப்பி அதைச்சுற்றிலும் ஐந்து எண்ணெய், சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து முப்பது பழங்களில் மிளகு தீபம் ஏற்றி ஸ்ரீ சொர்ண பரைவரை வழிபடலாம்.
இந்த வழிபாட்டை செய்யும் போதுபைரவி தேவி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபித்து, ஸ்ரீபைரவரை ஒன்பது வாரம் தொடர்ந்து அஷ்டோத்திர அர்ச்சனை செய்து வழிபட செல்வ செழிப்பைப்பெறலாம்.
பணம் குவியும், அஷ்ட ஐஸ்வர்யமும் பெறலாம்.
பெரிய பழங்களில் தீபம் ஏற்ற முடியவில்லை என்றால் சிறிய பழங்களில் ஏற்றலாம். அல்லது சிறிய வெங்கல கிண்ணத்தில் முப்பது மிளகைத்தூள் செய்து தீபம் ஏற்றலாம் அல்லது ஒரு பூசணியில் மிளகு தீபம் ஏற்றலாம்.
இந்த விசேஷ பரிகாரத்தை மாதம் ஒரு முறை வரும் ஜனம அல்லது த்ரிஜன்ம நஷத்திரம் அன்றும் செய்வது சாலச்சிறந்தது.
மற்றும் பவுர்ணமியும், வளர்பிறை அஷ்டமி நாளிலும் இந்தப் பூஜையை செய்வதால் நிம்மதியாக வாழலாம்.
நமது கவலைகள் பிரச்சினைகள், ஏக்கங்கள், சோகங்கள், இப்படி அனைத்தையும் போக்குவதற்கு ஓர் அரிய உபாயம் இந்த பூஜை.
ஸ்ரீ ஸ்வர்ணபைரவர் மந்திரம் ஜபிக்கும்போது, ஏலக்காய் சிறிதளவு குங்குமம், மஞ்சள், நெய் கலந்து முத்துக்களால்பைரவர் திருவடியில் அர்ச்சனை செய்யலாம்.
பைரவருக்கு ஏலக்காய் மாலை செலுத்தலாம். ஒரு பிடி ஏலக்காயை பைரவர் பாதத்தில் வெற்றிலை மேல் வைக்கலாம் கடன் தீர்ந்து பலன் உடனே கைகூடும்.
- பைரவர் வழிபாடு செய்வது பயத்தைப் போக்கி, வாழ்வில் தன்னம்பிக்கையைத் தரும்.
- மாலை 4.30- 6 மணிக்குள் திருவிளக்கேற்றி வீட்டிலேயே இந்த போற்றியை சொல்லலாம்.
ஸ்ரீ பைரவர் 108 போற்றி
ஓம் பைரவனே போற்றி
ஓம் பயநாசகனே போற்றி
ஓம் அஷ்டரூபனே போற்றி
ஓம் அஷ்டமித் தோன்றலே போற்றி
ஓம் அயன்குருவே போற்றி
ஓம் அறக்காவலனே போற்றி
ஓம் அகந்தையழிப்பவனே போற்றி
ஓம் அடங்காரின் அழிவே போற்றி
ஓம் அற்புதனே போற்றி
ஓம் அசிதாங்க பைரவனே போற்றி
ஓம் ஆனந்த பைரவனே போற்றி
ஓம் ஆலயக்காவலனே போற்றி
ஓம் இன்னல் பொடிப்பவனே போற்றி
ஓம் இடுகாட்டில் இருப்பவனே போற்றி
ஓம் உக்ர பைரவனே போற்றி
ஓம் உடுக்கை ஏந்தியவனே போற்றி
ஓம் உதிரம் குடித்தவனே போற்றி
ஓம் உன்மத்த பைரவனே போற்றி
ஓம் உறங்கையில் காப்பவனே போற்றி
ஓம் ஊழ்வினை தீர்ப்பவனே போற்றி
ஓம் எல்லை தேவனே போற்றி
ஓம் எளிதில் இரங்குபவனே போற்றி
ஓம் கபாலதாரியே போற்றி
ஓம் கங்காளமூர்த்தியே போற்றி
ஓம் கர்வ பங்கனே போற்றி
ஓம் கல்பாந்த பைரவனே போற்றி
ஓம் கதாயுதனே போற்றி
ஓம் கனல்வீசும் கண்ணனே போற்றி
ஓம் கருமேக நிறனே போற்றி
ஓம் கட்வாங்க தாரியே போற்றி
ஓம் களவைக் குலைப்போனே போற்றி
ஓம் கருணாமூர்த்தியே போற்றி
ஓம் கால பைரவனே போற்றி
ஓம் காபாலிகர் தேவனே போற்றி
ஓம் கார்த்திகையில் பிறந்தவனே போற்றி
ஓம் காளாஷ்டமிநாதனே போற்றி
ஓம் காசிநாதனே போற்றி
ஓம் காவல்தெய்வமே போற்றி
ஓம் கிரோத பைரவனே போற்றி
ஓம் கொன்றைப்பிரியனே போற்றி
ஓம் சண்ட பைரவனே போற்றி
ஓம் சட்டை நாதனே போற்றி
ஓம் சம்ஹார பைரவனே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பவனே போற்றி
ஓம் சிவத்தோன்றலே போற்றி
ஓம் சிவாலயத்து இருப்போனே போற்றி
ஓம் சிக்ஷகனே போற்றி
ஓம் சீர்காழித்தேவனே போற்றி
ஓம் சுடர்ச்சடையனே போற்றி
ஓம் சுதந்திர பைரவனே போற்றி
ஓம் சிவ அம்சனே போற்றி
ஓம் சுவேச்சா பைரவனே போற்றி
ஓம் சூலதாரியே போற்றி
ஓம் சூழ்வினை அறுப்பவனேபோற்றி
ஓம் செம்மேனியனே போற்றி
ஓம் ளக்ஷத்ரபாலனே போற்றி
ஓம் தட்சனை அழித்தவனே போற்றி
ஓம் தலங்களின் காவலனே போற்றி
ஓம் தீது அழிப்பவனே போற்றி
ஓம் துர்சொப்பன நாசகனே போற்றி
ஓம் தெற்கு நோக்கனே போற்றி
ஓம் தைரியமளிப்பவனே போற்றி
ஓம் நவரச ரூபனே போற்றி
ஓம் நரசிம்ம சாந்தனே போற்றி
ஓம் நள்ளிரவு நாயகனே போற்றி
ஓம் நரகம் நீக்குபவனே போற்றி
ஓம் நாய் வாகனனே போற்றி
ஓம் நாடியருள்வோனே போற்றி
ஓம் நிமலனே போற்றி
ஓம் நிர்வாணனே போற்றி
ஓம் நிறைவளிப்பவனே போற்றி
ஓம் நின்றருள்வோனே போற்றி
ஓம் பயங்கர ஆயுதனே போற்றி
ஓம் பகையளிப்பவனே போற்றி
ஓம் பரசு ஏந்தியவனே போற்றி
ஓம் பலிபீடத்து உறைவோனே போற்றி
ஓம் பாபம் தீர்ப்பவனே போற்றி
ஓம் பால பைரவனே போற்றி
ஓம் பாம்பணிந்த தெய்வமே போற்றி
ஓம் பிரளயகாலனே போற்றி
ஓம் பிரம்ம சிரச்சேதனே போற்றி
ஓம் பூஷண பைரவனே போற்றி
ஓம் பூதங்களின் நாதனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பைராகியர் நாதனே போற்றி
ஓம் மல நாசகனே போற்றி
ஓம் மகோதரனே போற்றி
ஓம் மகா பைரவனே போற்றி
ஓம் மலையாய் உயர்ந்தவனே போற்றி
ஓம் மகா குண்டலனே போற்றி
ஓம் மார்த்தாண்ட பைரவனே போற்றி
ஓம் முக்கண்ணனே போற்றி
ஓம் முக்தியருள்வோனே போற்றி
ஓம் முனீஸ்வரனே போற்றி
ஓம் மூலமூர்த்தியே போற்றி
ஓம் யமவாதனை நீக்குபவனே போற்றி
ஓம் யாவர்க்கும் எளியவனே போற்றி
ஓம் ருத்ரனே போற்றி
ஓம் ருத்ராட்சதாரியே போற்றி
ஓம் வடுக பைரவனே போற்றி
ஓம் வடுகூர் நாதனே போற்றி
ஓம் வடகிழக்கு அருள்வோனே போற்றி
ஓம் வடைமாலைப் பிரியனே போற்றி
ஓம் வாரணாசி வேந்தே போற்றி
ஓம் வாமனர்க்கு அருளியவனே போற்றி
ஓம் விரும்பியதை அருள்வோனே போற்றி
ஓம் விபீஷண பைரவனே போற்றி
ஓம் வீழாமல் காப்பவனே போற்றி போற்றி!
- பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு
- குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள்.
பதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்
குலதெய்வ கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செலுத்த முடியாதவர்களை, ஏதேனும் காரணத்தினால் தீர்த்த யாத்திரை, விரதம் போன்ற அனுஷ்டானங்களை கடைபிடிக்க முடியாதவர்களை, பித்ருக்களுக்கு உரிய நீத்தார் கடனை நிறைவேற்ற இயலாதவர்களை சில தோஷங்கள் பீடிக்கும் என்பார்கள்.
இதற்கு பரிகாரமாக சித்தர்கள் சில வழிமுறைகளை கூறியுள்ளனர்.
அந்த வகையில், அகத்தியர், ''சிதைந்திட்ட சிரார் தமது பெரும் பிணியீயுமப்பா பிண்டமதனை காலத்தீயாது விடின் வரும் வாட்டம் வம்சத்தையும் அழிக்குமாதலின் ஆதி சிவனவன் பைரவ வடிவேந்தி விளங்க யவரை யுரிய காலத்திலாராதித்து விமோசனங் காண்பீரே'' என்கிறார்.
பித்ரு தோஷத்தைப் போக்கவல்லது பைரவர் வழிபாடு என்று சொன்ன அகத்தியர் அந்த பைரவர் கோயில் கொண்டிருக்கும் தலங்களையும் விவரிக்கிறார்.
''அஞ்சருவி சலத்தருகு யடுத்தே வரகலூராம் காரையான் பட்டியிலுமே நின்ற சோழ மண்டலத்துக் கோட்டை செங்கனூராம் முழு மண்டலமே.
தோணியப்பனருள் கொண்ட விக்கிரமனும் சுங்காஸ்தமனத்தில் வந்திருந்து அருள் செய்ய சித்தங் கண்டோமே. ஈலுக்குடிவடம் பின்னே சட்டநாதனை கண்டோமே: குறுங்குடி பைரவனை அயனுந்தொழப் பார்த்தோமிது சத்தியமே'' என்கிறார்.
இப்பாடலின் பொருள்:
குற்றாலத்தில் குடி இருப்பவர் கால பைரவர். ஆறகழூரில் அஷ்ட பைரவர்கள். காரைக்குடியில் பைரவர்.
சோழபுரத்தில் பைரவ சேசுவரர். அதியமான் கோட்டையில் கால பைரவர், திருச்செங்கோட்டில் பைரவ நாத மூர்த்தி, இலுப்பை குடியில் பைரவ மூர்த்தி, குண்டடத்தில் கொங்கு வடுகநாதன், சீர்காழியில் சட்டநாதர் என்று பக்தர்களுக்கு அருள்பரிபாலிக்கிறார் பைரவ மூர்த்தி.
திருக்குறுங்குடி பைரவரை விஷ்ணுவும் பிரம்மனும் இந்திரனும் மற்றும் நவகோள் நாயகர்களும் பூஜித்து வருகின்றனர்.
அனுதினமும் & கலியுகம் முற்றும் காலம் வரையிலும் வாயுபகவான் இந்த திருக்குறுங்குடி பைரவரை உபாசனை செய்து வருவார் என்கிறது சித்தர் வாக்கு.
வெள்ளிக்கிழமை இரவு பைரவரை தொழுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அதுவும் சீர்காழியில், ஆடி வெள்ளி இரவு பைரவரை தொழுதால் பில்லி, சூனிய, ஏவல் பாதிப்புகள் அகலும்; தீராத பிணி போகும் என்கிறார் சிவவாக்கியர்.
பைரவ பூஜை மகத்தானது. மகிமை வாய்ந்தது. பெரிய பதவிகளையும் புகழையும் அளிக்கவல்லது.
செவ்வரளி அல்லது சிவப்பு நிற பூக்களினால் ஞாயிற்றுக்கிழமை ராகு காலங்களில் பைரவரை ஆராதனை செய்வதும் பைரவருக்குப் பிடித்த கோதுமை பாயசம் படைத்து, வினியோகம் செய்வதும், இழந்த பொருளை மீட்டுத்தரும் என்கிறது அகத்தியர் நாடி.
''போன பொருள் கை கூடும். பகையான உறவும் நட்பாகும்.
பைரவர் படத்தை வீட்டில் வடக்குப்புறம் வைத்தால் & வாஸ்து தோஷத்தினால் வரக்கூடிய பீடை அகலும் என்கிறார் காக புஜண்டர்
- சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் மாதம் ஒரு பைரவராகக் காட்சி தருகிறார்.
- ஆவணி விஸ்வான் -ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
ஒவ்வொரு மாதமும் வழிபட வேண்டிய பைரவர்கள்
சர்வேஸ்வரனின் திருவடிவமான பைரவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பைரவராகக் காட்சி தருகிறார்.
எந்தெந்த மாதத்தில் எந்த பைரவர் ஆட்சி புரிகிறாரோ அந்த பைரவரை வழிபட்டு நன்மை அடையலாம்.
சித்திரை அம்சுமான் - சண்ட பைரவர்
வைகாசி தாதா - ருரு பைரவர்
ஆனி ஸவிதா - உன்மத்த பைரவர்
ஆடி அரியமான் - கபால பைரவர்
ஆவணி விஸ்வான் - ஸ்வர்ணாகர்ஷண பைரவர்
புரட்டாசி பகன் - வடுக பைரவர்
ஐப்பசி பர்ஜன்யன் - க்ஷத்ரபால பைரவர்
கார்த்திகை துவஷ்டா - பீஷண பைரவர்
மார்கழி மித்திரன் -அசிதாங்க பைரவர்
தை விஷ்ணு - குரோதன பைரவர்
மாசி வருணன் - ஸம்ஹார பைரவர்
பங்குனி பூஷா - சட்டநாத பைரவர்.






