என் மலர்
நீங்கள் தேடியது "செல்வம்"
- இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.
- மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள்
மகாலட்சுமியின் பெருமை
மகாலட்சுமி பொன் நிறத்தை உடையவள். தங்கம், வெள்ளி இவற்றாலான மாலைகளை அணிந்திருப்பாள்.
சந்திரன் போன்று இருப்பவள் இவளுடைய திருவருளால்தான் பொன், பசுக்கள் குதிரைகள், பணியாட்கள் இவைகளை நிறையப் பெற முடியும். ரத, கஜ, துரகம் முதலியவற்றையும் அளிப்பவள்.
மந்தகாச முகமுடையவள். தங்க பிராகாரங்களைக் கொண்டது இவள் பவனம், கருணையுடையவள்.
வஸ்திரம், ஆபரணம், அழகு இவற்றால் மிகவும் பிரகாசிப்பவள்.
அனைத்தும் தன்னிடம் நிரம்பியிருப்பதால் திருப்தியுடையவள் பக்தர்களையும் திருப்திப்படுத்துபவள்.
தாமரைமலரில் அமர்ந்திருப்பவள். தேவர்களால் சேவிக்கத் தகுந்தவள் மிக்க உதார குணமுடையவள்.
இவள் "ஈம்" என்ற பீஜாட்சரத்தை உடையவள் இவள் பக்தர்கள் சரணடையத் தகுந்தவள்.
இவளை வணங்குபவர்களை, அதிகப்பசி, அதிக தாகம் என்ற லட்சுமி அடையமாட்டாள்.
தரித்திரத்தையும் குறைவையும் இவள் அகற்றும் சக்தி படைத்தவள்.
மகாலட்சுமி சூரியன் போன்றும் பிரகாசிப்பாள் இவளுடைய தவத்திற்காகவே வில்வமரம் தோன்றியது.
இவளை உபாசனை செய்ய குபேரனும் அவன் கஜானா அதிபதியான மணிபத்ரனும், சிந்தாமணி ரத்னத்துடன் கீர்த்தி என்பவளும் பக்தன் வீடு தேடி வந்தடைவர்.
இவள் வருவதற்கு வழியாகின்றது சுகந்தம். இவளே செழிப்பைத் தருபவள் கோமியத்தில் வாசம் செய்பவள்.
சர்வ தேவதைகளுக்கும் இவளே ஈஸ்வரி. ஆசையை நிறைவேற்றி, வாக்குக்கு சத்தியத்தை அளித்து, ரூபமளித்து, உண்ணும் பொருள்களுக்கு ருசியையும் அளிப்பவள்.
மகாலட்சுமியின் திருக்குமாரர் கர்தமர் சிக்லீதர் என்பவரும் இவள் அன்புக்குமாரரே.
இவள் கையில் பிரம்பு வைத்திருப்பாள்.
செங்கோல் செலுத்தும் ராஜலட்சுமி இவள். இந்த பெருமைகளை யெல்லாம் பெற்ற ஸ்ரீமகாலட்சுமி நம்மைவிட்டு அகலாதிருக்க வேண்டும் எனப் பிரார்த்திக்க வேண்டும்.
- குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.
- இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.
இரு யானைகளுடைய லட்சுமி
யானைகள் இரு புறமும் கலச நீராட்டும் லட்சுமியே எங்கும் சாதாரணமாகத் தென்படும் உருவம்.
முதன் முதல் இந்த கஜலட்சுமியின் வடிவிலேயே சிற்பியின் கனவு எழுந்தது.
ஸ்ரீசுக்தத்தின் வருணனையே இதற்கு அடிப்படையாகும்.
வேத காலத்திலேயே வேரூன்றிப்போன இந்தக் கற்பனையை கல்லில் எங்கும் காணலாம்.
லட்சுமி வழிபாடும் பூஜையும்
பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.
தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்து கும்பிடுகின்றனர்.
குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும்.
ஆனால் நம் ரீதியில் அன்று லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.
சுக்ரநீதி சாரத்தில் வீணை ஏந்திய தியான ஸ்லோகம் வருகிறது.
மகாராஷ்டிரத்தில் உழவர்கள் லட்சுமியைத் தொழுகின்றனர்.
பயிர் வளத்தைக் காட்டும் தேவதை அவள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர்.
மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள்.
அத்துடன் துணியில் மறைத்து ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.
ராஜபுதனத்தில் லட்சுமியை அன்ன பூரணியாக உபசரிக்கின்றனர்.
தாணியம் அளக்கும் "காரி" என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்து தாமரைப் பூக்களால் அலங்கரிப்பார்கள்.
இந்தோ சீனாவிலும் திருமகளின் வழிபாடு நிலவுகிறது.
அவள் தலையில் முத்துக் கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள்.
மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள்.
கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந் நாட்டு வழக்கம்.
தெலுங்கரும், தமிழகத்தில் ஸ்மார்த்த மரபினரும் வரலட்சுமி விரதத்தைக்கொண்டாடுவார்கள்.
கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜை.
- திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
- பிரபஞ்சசக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பலமடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.
திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.
இங்கு கோரகர் சித்தா ஜீவசமாதி அடைந்ததால்தான் இக்கோயில் பிரபலம் அடைந்தது என சொல்வோரும் உண்டு.
ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் சிலர்.
கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினைதோஷம் வறுமை போக்கும், சந்ததி விருத்தி உண்டாகும் என்கிறது.
பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம்மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது.
இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.
வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமாக மலைகள் உள்ளன.
வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல் குவியும் என்று கௌரு திருப்பதி ரெட்டி தனது வாஸ்து நுலில் எழுதி உள்ளார்.
உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான்.
சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சியுடன் உள்ளார்கள்.
அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.
சந்திரன் சக்தி மிகுந்த கோவில் என்பதால் மன நிம்மதி உண்டாகிறது.
மூலிகைகள் அதிகம் இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.
மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசி நிறைந்து காணப்படுகிறது.
திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சினை தீர்ந்து கல்யாணம் உடனே ஆனது என்ற கதைகள் உண்டு.
இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும்.
துக்கம் சந்தோசமாய் மாறும். சோதனைகளை, சாதனைகள் ஆகும்.
திருப்பதி கோவில் மகாலட்சுமிக்கு உண்டான கோவில் என பார்க்கப்படுவதால் தான் இவ்வளவு கூட்டம்.
பெருமாளின் சிரித்த ஆனந்தமான பார்வை அனைவரையும் ஆனந்தபடுத்தும்.
அங்கு சென்று வந்தால் மனம், சிந்தனை, குடும்பம் அனைத்தும் அமைதி ஆவதை உணரலாம்.
குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.
நடந்து நாம் மலை ஏறினால், அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்கியத்திற்கு உதவும்.
நிமிர்ந்து மலை ஏறுவதால், நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன.
- குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.
- 21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.
நாகை மாவட்டம் திருவெண்காட்டில் உள்ள சுவேதாரணேஸ்வரர் ஆலயம் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 11வது தலமாகும்.
காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.
21 தலைமுறையில் வருகின்ற பிதுர் சாபங்கள் நீங்கும்.
இதன் பெயர் ருத்ர கயா. காசியில் இருப்பது விஷ்ணு கயா.
பூர்வ ஜென்ம பாவங்கள் நீங்கும்.
குழந்தைப் பேறு , திருமண வரம் ஆகியவை இத்தலத்தில் கைகூடுகிறது.
மேலும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் குணமாகும்,கல்வி மேன்மை, நா வன்மை ஆகியவை கிடைக்கும்.
பேய் ,பிசாசு தொல்லைகள் நீங்கும்.
இத்தலத்தில் வழிபடுவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும்.
மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
- நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.
- பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.
காசிக்கு சமமான தலங்கள் ஆறு. அதில் ஒன்று திருவெண்காடு.
இத்தலத்தில் மூர்த்தி, தீர்த்தம், தலவிருட்சம் எல்லாமே மூன்று.
நவக்கிரகங்களில் இது புதனுக்குரிய ஸ்தலமாகும்.
51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று.
சிவனின் 64 மூர்த்தங்களுள் ஒன்றான அகோர மூர்த்தியை இத்தலத்தில் மட்டுமே காணலாம்.
இவர் நவதாண்டவம் புரிந்தார். எனவே, இதை ஆதி சிதம்பரம் என்பார்கள்.
இத்தலத்தின் தன்னிகரில்லா தலைவியாக பிரம்ம வித்யாம்பிகை திகழ்கிறார்.
திருவெண்காடரின் சக்தி வடிவம் இவள்.
மாதங்க முனிவருக்கு மகளாகத் தோன்றி மாதங்கி என்ற பெயருடன் சுவேதாரண்யரை நோக்கி தவம் இருந்து தன் கணவனாக பெற்றார்.
பிரம்மனுக்கு வித்தை கற்பித்ததால் பிரம்ம வித்தயாம்பிகையானாள்.
கல்வியில் சிறந்து விளங்க இவளை வழிபாடு செய்வது சிறப்பு.
நான்கு திருக்கரங்களில் இடது மேற்கரத்தில் தாமரைப்பூ (செல்வச் செழிப்பு) வலது மேற்கரத்தில் அக்கமாலை (யோகம்) அணி செய்வதைக் காணலாம்.
கீழ்க்கரம் அபய கரம். இடது கீழ்கரம் திருவடிகளின் பெருமையை பேசுவதாகும். பணிந்தார் எவரும் தெய்வம் போல உயரலாம் என்பதாகும்.
பெருமை வாய்ந்த சக்தி பீடங்களுள் இதுவும் ஒன்று.
- ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.
- சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.
நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.
இவருக்கு திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலத்தில் தனி சன்னதி உள்ளது.
புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.
ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.
அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.
இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.
புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.
எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.
நவக்கிரகங்களில் புதன் பகவான், கல்வி, அறிவு, பேச்சுத்திறமை, இசை, ஜோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிகளில் புலமை ஆகியவற்றை தர வல்லவர்.
இவருக்கு திருவெண்காடு பிரம வித்யாம்பிகை தலத்தில் தனி சன்னதி உள்ளது.
புதனின் தந்தையான சந்திரனின் சன்னதியும், சந்திர புஷ்கரணி தீர்த்தமும், புதன் சன்னதிக்கு எதிரில் அமைந்துள்ளது.
ஜாதகத்தில் புதன் சரியாக அமையாவிட்டால் புத்திரபாக்கியம் கிடைக்காது.
அத்துடன் அறிவுக்குறைபாடும், நரம்புத்தளர்ச்சியும் ஏற்படும்.
இப்படி குறைபாடுகள் உள்ளவர்கள் இங்கு வந்து சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடி புதன் பகவானை வழிபட்டால் தோஷ நிவர்த்தி பெறலாம்.
புதன் தலமான திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் கோயிலில் அகோர சிவபெருமானுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணியளவில் சிறப்பு பூஜை நடைபெறும்.
எல்லாவிதமான துன்பங்களையும் அழிக்கும் சக்திகொண்டது இந்த அகோர பூஜை.
- ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர்.
- மேலும் அழகு, ஆயுள், உடல் நலம் வளம் பெறும்.
ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவதை துலா ஸ்நானம் என்பர்.
உலகத்தில் உள்ள சகல தீர்த்தங்களும், தங்களிடம் நீராடி மகள் போக்கிக் கொண்ட பாவங்கள் நீங்க,
துலா மாதத்தில் காவிரி நதியில் நீராடி புனிதம் பெறுகின்றன என்று சாஸ்திரம் கூறுகிறது.
பக்தர்களிடம் மிகவும் கருணை கொண்டவள். தட்சிண கங்கை என்ற சிறப்பு பெயரைக் கொண்டவள்.
சம்சார சாகரத் துன்பங்களிலிருந்து விடுவிப்பவள். மோட்சம் அளிக்கும் அன்னை என்று காவிரி அஷ்டகம் கூறுகிறது.
தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் அஞ்ஞானத்தையும் போக்கி,
சகல பாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்று காவிரி புஜங்கம் கூறுகிறது.
துலா மாதத்தில் காவிரியில் நீராடினால் எல்லா பாவங்களும் நசித்து விடும்.
மேலும் அழகு, ஆயுள், உடல் நலம் வளம் பெறும்.
செல்வச்செழிப்பு கிட்டும் என்று காவிரி மகாத்மியம் என்ற நூல் கூறுகிறது.
கங்கையை விட காவிரி புனிதமானது என்பதால், துலா மாதம் ஐப்பசி அமாவாசை அன்று கங்காதேவி,
மயூரத்துக்கு வந்து, நந்திக் கட்டத்தில் நீராடி, மக்கள் தன்னிடம் கரைத்தப் பாவங்களைப் போக்கிக் கொள்கிறாள் என்கிறது சாஸ்திரம்.
ஐப்பசி அமாவாசையில் காவிரியில் நீராடி, நீர்க்கடன் செலுத்தினால், அவர்களின் முன்னோர்கள் சுர்க்கலோகம் சொல்வார்கள் என்பது நம்பிக்கை.
துலா மாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது.
இயலாத நிலையில், கடைமுகம் என்று சொல்லப்படும் ஐப்பசி 30ந்தேதி நீராடி பலன் பெறலாம்.
அன்றும் நீராட முடியாதவர்கள், முடவன் முழுக்கு என்று சொல்லப்படும் கார்த்திகை முதல் தேதி நீராடினாலும் புனிதம் பெறலாம் என்கிறது சாஸ்திரம்.
துலாமாதத்தில் பிரம்மா, சரஸ்வதி, பார்வதி, லட்சுமி, இந்திராணி, தேவ மாதர்கள், சப்த கன்னியர்கள் முதலியோர், ஒவ்வொரு நாளும் காவிரியில் நீராடுவதாக ஐதீகம்.
புராணங்களில் சந்தனு மகாராஜா துலா காவிரி ஸ்நானம் செய்து, ஸ்ரீரங்க நாதரை வழிபட்டு பீஷ்மரைப் புத்திரனாக அடைந்தார் எனவும்,
அர்ஜுனன் காவிரியில் துலாஸ்நானம் செய்து, ஸ்ரீரங்கநாதரை துதி செய்து சுபத்ராவை மணம் புரிந்தார் என்றும் குறிப்பு உள்ளது.
மக்களுக்கு புத்தியும் முக்தியும் அளிக்கும் துலா மாதத்தில், காவிரியில் நீராடுபவர்கள் தன்னையும் தங்கள் குடும்பத்தினரையும்,
முன்னோர்களின் பாவங்களையும் போக்கிக் கொள்வதுடன் வளமான வாழ்வு காண்கிறார்கள் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.
துலா காவிரி நீராடல், அழகு, ஆயுள், ஆரோக்கியம், செல்வம், கல்வி, மாங்கல்ய பாக்கியம், குழந்தைப்பேறு, வலிமை ஆகியவற்றைத் தரும்.
எனவே, காவிரியை நினைத்தாலும், சிறப்பைக் கேட்டாலும் பாவங்கள் விலகும் என்கிறார் பிரம்மா, நதிதேவதைகளிடம்.
எனவே, பகலும் இரவும் சமமாக இருக்கும் ஐப்பசியில் (துலா மாதம்), நியமம் தவறாமல், பூஜைகளைச் செய்தும், விரதம் மேற்கொண்டும், காவிரி நதியில் நீராடினால் கட்டாயம் பலன் உண்டு.
- இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு.
- மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒரு மாதத்தின் வளர்பிறையில் வரும் சனிக்கிழமையில் இந்த விரதத்தை தொடங்கலாம். இந்த விரதம் 11 வாரம் முதல் 51 வாரங்கள் வரை கடைப்பிடித்தால் அது நன்மையை தரும் என்பது நம்பிக்கை. நவக்கிரகங்களில், சனிபகவானை 'ஆயுள்காரகன்' என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும்.
இந்த சனிக்கிழமை விரதத்தை அனுசரிப்பவர்கள், காலையில் எழுந்து புனித நீராடி கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் உடையணிந்து கொள்ளலாம். இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு. பூஜையின்போது கருமையை ஒட்டிய மலர்கள், எள்ளு, கருப்பு வஸ்திரம் ஆகியவற்றை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த அரிசியையும் வைக்கலாம்.

இந்த பூஜையை அனுசரிக்கும் பக்தர்கள், அனுமன் அல்லது பைரவர் கோவிலுக்குச் செல்லலாம். ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின் உணவை உட்கொள்ளலாம். பகலில் பழமும், நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் தொடங்குவது மிகவும் விசேஷம். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால், சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவரை லாரான்ஸ் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார்.
- மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜீஆர், லாரன்ஸுக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு ஓவியம் இருந்தது.
சென்னை:
நடிகர் ராகவா லாரன்ஸ் 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள் மற்றும் ஏழை எளிய மாணவ மாணவிகள் படிப்பதற்கு உதவி செய்து வருவதோடு, கொடிய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்து வருகிறார்.
அவரால் படித்து ஆளாக்கப்பட்ட மாணவர்கள் தற்போது நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதை அடுத்து அவர்களும் ராகவா லாரன்ஸ் வழியில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய தயாராகி இருக்கிறார்கள். இதன் காரணமாக அவர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு மாற்றம் என்ற பெயரில் மே ஒன்றாம் தேதி முதல் சேவை அமைப்பு மூலம் ராகவா லாரன்ஸ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த ஓவிய ஆசிரியர் ஒருவரை லாரான்ஸ் நேரில் சந்தித்து பாராட்டி உள்ளார். அவரது ஓவிய திறமையை சமூக வலைதளங்கள் மூலம் கண்டு ரசித்த லாரன்ஸ் அவரது திறமையை பாராட்ட விரும்பியதாக கூறினார்.
லாரன்ஸை சந்தித்த அந்த ஓவிய ஆசிரியர் ஒரு சிறப்பு பரிசை அவருக்கு வழங்கினார். அந்த ஓவியத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜீஆர், லாரன்ஸுக்கு முத்தம் கொடுப்பது போல ஒரு ஓவியம் இருந்தது. இதனை மகிழ்ச்சியுடன் லாரன்ஸ் ஏற்றுக் கொண்டார். பதிலுக்கு லாரன்ஸ் அந்த ஓவிய ஆசிரியருக்கு நிதி உதவி வழங்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வணக்கம் நண்பர்களே, ரசிகர்களே, அவர் மணலூர்பேட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய ஆசிரியர் செல்வம். அவரது அற்புதமான ஓவியத் திறமையை உங்கள் அனைவராலும் சமூக ஊடகங்கள் மூலம் அறிந்து கண்டேன். அவரை நேரில் சந்தித்து அவரது திறமையைப் பாராட்ட விரும்பினேன். இன்று, நான் அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய பரிசை மிகவும் கவர்ந்தேன்! #Serviceisgod #Maatram
இவ்வாறு அவர் கூறினார்.






