என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "God"
- ஆவியில் சமைக்கப்பட்ட இட்லியை விட, பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது.
- இதனால் தான் விளக்கேற்றுவது முதல் வேள்வி வரை பசு நெய் சிறப்பாக கருதப்படுகிறது.
நமக்கு வருவாய் அளிக்க இயலாத மாடுகளை அடிமாடாக விற்காமல் நலிந்த மாடுகளையும் பராமரிக்கின்ற பசு மடங்களிலும் தொழுவங்களிலுமே சேர்ப்பிக்க வேண்டும்.
அவற்றின் இயற்கையான அந்திமக் காலம் வரை பராமரிக்க வேண்டும்.
பசுவிடமிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணி (கோமயம்), நீர் ஆகியன நமக்கு உணவாகவும், மருந்தாகவும், பாதுகாப்பு அரணாகவும் உள்ளன.
குழந்தைகளுக்குத் தேவையான அளவு தாய்ப்பால் ஊறாவிட்டாலும், தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பசும்பால் உயிர்ப்பாலாக குழந்தையை வளர்க்கிறது.
ஆவியில் சமைக்கப்பட்ட இட்லியை விட, பசும்பாலே மிக எளிதாக ஜீரணமாகி ஊட்டம் அளிக்க வல்லது.
அடுப்பில் காய்ச்சாமல் அப்படியே அருந்தவும் தக்கது. பிற பாலிலிருந்து உருவாகும் தயிர்களை விட பசுந்தயிரே நமக்கு மிக ஏற்புடையதாக உள்ளது.
பசு நெய் கொழுப்புச் சத்துக் குறைவாக இருப்பதோடு, அதை எரிக்கும் போது ஏற்படும் புகையும் பாதிப்பில்லை.
இதனால் தான் விளக்கேற்றுவது முதல் வேள்வி வரை பசு நெய் சிறப்பாக கருதப்படுகிறது.
பசுஞ் சாணிக்கும் பசு நீருக்கும் ஈடு வேறில்லை.
பசுஞ்சாணி, கிருமிநாசினியாக மட்டுமின்றி, பில்லி சூனியம், திருஷ்டி கெட்ட எண்ணம் ஆகியவற்றிலிருந்தும் நம்மை காக்கும் சக்தி உடையது.
இதனால்தான் வீட்டின் முன் வாசலிலும் பின் வாசலிலும் அன்றாடம் பசுஞ்சாணி கரைத்துத் தெளிக்க வேண்டும் என்பார்கள்.
புதிதாக வாங்கும் மனையில் ஆயிரக்கணக்கான வருடங்களாக நமக்குத் தெரிய வாய்ப்பின்றி ஏற்பட்டிருக்கக் கூடிய
தீவினைகள் மற்றும் மனைக்கடியில் இருக்கக் கூடிய தீயவற்றால் நாம் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக தொடர்ந்து
பல நாட்கள் பசுஞ்சாணி நீர் தெளிப்பது வழக்கமாக உள்ளது.
வீடுகளில் மட்டுமின்றி ஆலயத் திருக் குடமுழுக்கின் போதும் ஆலய வளாகத்தை நுண்ணிய சக்தி வாய்ந்த
மந்திர ஒலியால் உருவாக்குவதற்கு ஈடாக பசுஞ்சாணியையும் பயன்படுத்துவது இன்றும் வழக்கமாக உள்ளது.
பசு நீர் புற்று நோயைத் தீர்ப்பதில் ஒரு அருமருந்தாகும்.
அதோடு, பிறரின் தீய பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள், பசு நீரை எண்ணை போல தேய்த்துக் கொள்வதும், அதிகம் கிடைப்பின் பசு நீரிலேயே, அவ்வப்போது குளிப்பதும் மிகச் சிறந்த பாதுகாப்பாகும்.
- பசு உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
- நெய் விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும்.
பசு உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்வதாக ஐதீகம்.
எனவே கோமாதா பூஜை செய்யும் போது, முன்நெற்றி மற்றும் வால் பகுதியில் சந்தனம், குங்குமம் வைத்து, மலர் அணிவித்து வழிபட வேண்டும்.
பசுவின் சாணமும் லட்சுமி அம்சமாகும். எனவேதான் அதிகாலையில் சாணத்தை வீட்டு வாசலில் தெளிக்கிறார்கள். பசுவுக்கு பூஜை செய்வது பரராசக்திக்கு பூஜை செய்வதற்குச் சமமாகும்.
கோமாதா பூஜையை அனைவரும் செய்யலாம். எந்த ஜாதி, மதம் மொழியும் தடையாக இல்லை.
உருவ வழிபாடு இல்லை என சொல்லும் மதத்தினர் கூட கோமாதா பூஜையை மாதம் தோறும் செய்து செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள்.
கோ பூஜையை செய்வதால் பணக்கஷ்டம் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.
கெட்ட சக்திகள் நெருங்காது. முற்பிறவியல் செய்த பாவங்கள் விலகும்.
நீண்ட கால மனக்குறைகள் விலகும். கோமாதா பூஜையைச் செய்ய பக்தியும், நம்பிக்கையும் முக்கியமாகும்.
முதலில் பசுவை அழைத்து வர வேண்டும். அதன் மீது பன்னீர் தெளித்து மஞ்சள், குங்குமம் பொட்டு அதன் நெற்றியில் வைக்க வேண்டும். பசுவின் கழுத்தில் மாலை அணிவிக்க வேண்டும்.
பிறகு பசுவிற்கு புத்தாடை சாற்றி, அகத்திக்கீரை, சர்க்கரைப் பொங்கல், பழ வகைகள் போன்றவற்றை ஆகாரமாகத் தர வேண்டும்.
நெய் விளக்கில் பசுவிற்கு ஆரத்தி எடுத்துவிட்டு விழுந்து வணங்க வேண்டும்.
கோமாதா 108 போற்றியை பக்தியுடன் மனதை ஒரு முகப்படுத்திச் சொல்ல வேண்டும்.
108 போற்றி முடித்தவுடன் மீண்டும் ஒருமுறை நெய் தீபத்தால் ஆரத்தி செய்ய வேண்டும். பிறகு, 3 முறை பசுவை வலம் வந்து விழுந்து வணங்க வேண்டும்.
இப்படிச் செய்வதால், பல யாகங்கள் செய்த பலனும் பல புராதன கோவில்களுக்குச் சென்று தெய்வத்தை வணங்கிய பலனும் ஒரு சேரக்கிடைக்கும்.
வீட்டில் பசு இல்லாதவர் அன்றாடமும் ஒரு வேளையாவது ஏதாவது பசுவிற்கு ஒரு பிடி அருகம்புல்லோ, வாழைப்பழமோ, அகத்திக்கீரையோ, பிற தீவனமோ கொடுக்க வேண்டும்.
பசுவையும், கன்றையும் பார்வைக்கு அப்பாற்பட்டு பிரித்துக் காட்டக்கூடாது. பசு வழிப்பாட்டில் தாயைக் கன்றுடன் சேர்த்தே பூஜிக்க வேண்டும்.
- எல்லோருக்கும் தங்கள் வீட்டிலேயே பசு வழிபாடு செய்ய இயலாது.
- வீட்டில் கோமாதாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதும் இந்த வகையிலேயே அடங்கும்.
எல்லோருக்கும் தங்கள் வீட்டிலேயே பசு வழிபாடு செய்ய இயலாது.
எனவேதான் ஒவ்வொரு ஆலயத்திலும் பசுத்தொழுவம் அமைத்து அன்றாடம் கோபூஜை நடத்தும் மரபு ஏற்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆலயத்திலும் கோ சாலை (பசு மடம்) இருந்தால் மக்கள் அனைவரும் பசு பராமரிப்பிலும், பசு வழிபாட்டிலும் கலந்து கொள்ள முடியும்.
தினமும் பசு மடத்தில் விரிவான பூஜை செய்ய இயலாவிட்டாலும் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்வது மேன்மை.
அதோடு முக்கிய நாட்களில் அல்லது எல்லோரும் கலந்து கொள்ள வாய்ப்புள்ள நாட்களில், பெரிய அளவில் 108 கோ பூஜை, 1008 கோ பூஜை செய்யலாம்.
பசு மாடுகளை சந்தனம், குங்குமம் போன்றவற்றால் அலங்கரித்து, எல்லா மந்திரங்களும் கூறி, மலர்களால் அர்ச்சித்து, தூப, தீப நிவேதனங்களால் ஆராதிப்பது ஒரு முறை.
வீட்டில் கோமாதாவின் படத்தை வைத்து வழிபாடு செய்வதும் இந்த வகையிலேயே அடங்கும்.
- இந்து மதம் வேறு எதற்கும் அளிக்காத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் அளித்து வந்திருக்கிறது.
- பசுவை, வெறுமனே மாடு என்று விஷயம் தெரிந்தவர்கள் அழைக்க மாட்டார்கள்.
இந்து மதமும், இந்து மத பண்பாடும், கலாச்சாரமும் இந்தியாவில் ஆழமாக வேரூன்றி, அசைக்க முடியாத அளவுக்கு மக்கள் மனதில் பதிந்து விட்டதற்கு பலவித காரணங்கள் உள்ளன.
அத்தகைய காரணங்களில் முதன்மையாக இருப்பவைகளில் தனிச்சிறப்புடன் திகழ்வது பசுக்கள்.
இந்து மதம் வேறு எதற்கும் அளிக்காத ஒரு தனிப் பெருமையை பசுமாட்டிற்கு மட்டும் அளித்து வந்திருக்கிறது.
பசுவை, வெறுமனே மாடு என்று விஷயம் தெரிந்தவர்கள் அழைக்க மாட்டார்கள்.
அதற்கு பதில் பசுவை, பசுத்தாய், கோமாதா என்றே அழைப்பார்கள்.
பெற்ற தாய்க்கு ஈடாக கருதப்படும் ஒரே விலங்கு பசு மட்டுமே.
மிகச்சிறிய ஆலம் விதை பிரம்மாண்டமான ஆலமரத்தின் தன்மைகளை உள்ளடக்கியிருப்பது போல ஒவ்வொரு பசுவும் அனைத்து தேவரின் ஒரு வடிவாகும்.
- தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும். உள்ளே நுழைந்ததும் விநாயகர் சந்நிதி உள்ளது.
- கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.
மயிலம் அடிவாரத்தில் இருந்து குன்று நோக்கி வரும் சாலையில் வந்தால் கோவிலின் தெற்கு வாசல் வந்து சேருவோம்.
கோவிலின் பிரதான வாயில் கிழக்கு நோக்கித்தான் இருக்கிறது.
இது எப்போதும் அடைத்துக் கிடக்கும்.
எனவே தெற்கு கோபுர வாசல் வழியாகத்தான் கோவிலுக்குள் செல்ல வேண்டும்.
உள்ளே நுழைந்ததும் விநாயகர் சந்நிதி உள்ளது.
தெற்கு வளாகத்தில் விசாலாட்சி விஸ்வநாதர் இருக்கிறார்கள்.
இவர்களை பாலசித்தரை ஐக்கியப்படுத்திய கோலத்தில் காணலாம்.
கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி வள்ளி, தெய்வயானையுடன் காட்சி தருகிறார்.
இவருடைய வாகனமாகிய மயில் வடக்கு நோக்கி இருக்கிறது.
இங்கு உற்சவ மூர்த்திகள் மூன்று உண்டு.
வெளியே தென் பக்கத்தில் ஒரு மடம் இருக்கிறது.
அதில் பால சித்தர் சிலையை காணலாம்.
இங்கு பிரம்மமோற்சவக் காலம் பங்குனி மாதம்.
தைப்பூசப் பெருவிழாவும் உண்டு. பிரம்மோற்சவம் 5ஆம் நாளும் தைப்பூசத்திலும் முருகன், பெரிய தங்க மயில் வாகனத்தில் வீதி வலம் வருவார்.
இவை இரண்டும் பக்தர்களுக்குக் கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
- இது மிகவும் சிறிய மலை, மயிலைப் போல் காட்சி அளிக்கும் மலை.
- முருகனோடு அசுரனான சூரபத்மன் போர் செய்து தோற்றான்.
மயிலம் தலம் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் திண்டிவனத்துக்கு அருகில் இருக்கிறது.
திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் மயிலம் மலை முருகன் கோவில் இருக்கிறது.
இது மிகவும் சிறிய மலை, மயிலைப் போல் காட்சி அளிக்கும் மலை.
இதனால் இந்த மலைக்கு மயிலம் எனறு பெயர்.
கந்தபுராணத்தில் இது பற்றிய தகவல் ஒன்று உள்ளது.
முருகனோடு அசுரனான சூரபத்மன் போர் செய்து தோற்றான்.
அப்படித் தோற்றவன் நல் அறிவு பெற முருகனுக்கு வாகனமாக இருக்க விரும்பினான்.
அவன் தனது விருப்பத்தை முருகனிடம் தெரிவித்தான்.
உடனே முருகன், "நீ மயில் போன்ற மலையாகி வராக நதியின் வடகரையில் நின்று தவம் செய்.
உன் ஆசையைப் பூர்த்தி செய்கிறேன்" என்றார்.
அவனும் அதன்படியே நின்று தவம் செய்தான்.
அவன் மீது இரக்கப்பட்ட முருகன் இங்கே கோவில் கொள்ளக் காரணமாயிற்று என்கிறது தல புராணம்.
மயிலம் மலையில் கோவிலை நிர்மாணித்தவர்கள் பொம்மையபுரம் மடாதிபதி ஆவார்.
சூரபத்மன் வரலாறு தவிர மற்றொரு செய்தியும் இத்தலத்திற்கு உண்டு.
சிவகணத் தலைவர்களில் சங்கு கன்னர் என்பவரும் ஒருவர்.
இவர் செய்த ஒரு குற்றத்திற்காக சாபம் பெற்றார்.
அதன்படி அவர் பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தார்.
இவர் மயிலம் மலைக்கு கிழக்கேயுள்ள கடற்கரையில் பாலசித்தராக அவதாரம் எடுத்தார்.
பால யோகியான இவர் தன் சாப விமோசனம் வேண்டி மயிலம் மலையில் தவம் இருந்தார்.
முருகனோ, இவரை சிவ அபராதி என்று கூறி காட்சி தர மறுத்து விட்டார்.
இதையடுத்து வள்ளி, தெய்வயானையின் உதவியை நாடிய பால யோகி தனக்கு வழிகாட்டுமாறு மன்றாடி வேண்டுகோள் விடுத்தார்.
பாலயோகி மீது இரக்கப்பட்ட தேவியர் இருவரும் அவருக்கு கருணை காட்ட முடிவு செய்தனர்.
அதன்படி அவர்கள் பாலசித்தருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளினார்கள்.
முருகனிடம் முதலில் தேவியர் பால சித்தருக்கு பரிந்துரை செய்து பார்த்தனர்.
அவர்கள் வேண்டுகோளை ஏற்க முருகன் மறுத்தார்.
இதன் காரணமாக வள்ளி, தெய்வானை இருவரும் பாலசித்தரின் ஆசிரமத்திலேயே தங்கி விட்டனர்.
எத்தனை நாள்தான் முருகர் தன் தேவியரைப் பிரிந்து இருப்பார்?
எனவே, முருகன் வேட ரூபத்தில் சித்தர் ஆசிரமத்திற்கு வந்தார்.
அப்போது முருகனுக்கும், சித்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முடிவில் வாதம் மல்யுத்தமாக மாறியது.
இந்த நிலையில் சூரபதுமனுக்குக் காட்டிய தன் திருகோலக் காட்சியை சித்தருக்கும் முருகன் காட்டினார்.
பின் பால சித்தருடைய விருப்பப்படி கல்யாண கோலத்தில் மலைமீது தம்பதி சமேதராய் கோவில் கொண்டார்.
மயிலம் மலையில் முருகன் கோவில் கொண்டதற்கு இந்த நிகழ்வே காரணம் என்று கூறப்படுகிறது.
- ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம்.
- வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீ லட்சுமி வசிக்கிறாள்.
சுமங்கலிகள், பூரண கும்பம் மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை,
திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய லட்சுமிகரமான மங்கலப் பொருட்களில்
மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.
அழகு, தைரியம், அடக்கம், அறிவு, ஆற்றல், தர்மசிந்தனை, பொறுமை, தெய்வபக்தி, ஐம்புலன் அடக்கம்,
சத்துவ குணம் இத்தகைய மனோபாவம் உடைய மனிதர்களிடத்தும் திருமகள் நிலையாக வாசம் செய்கின்றாள்.
தேவர்களிடத்திலும் பிரம்ம ஞானியர்களிடத்திலும் பரமனடியார்களிடத்திலும் பக்தி உள்ளோர் கிருஹங்களிலும்,
கிருகஸ்தர்களிடத்திலும், பசுக்களிடத்திலும், அந்த பசுக்களை பராமரிக்கும் பெண்களிடத்திலும் ஸ்ரீதேவி நித்யவாசம் புரிகிறாள்.
வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் ஆகிய மரம் செடிகளிலும் ஸ்ரீ லட்சுமி வசிக்கிறாள்.
ஸ்ரீ லட்சுமியை வில்வத்தால் அர்ச்சித்து பூஜிப்பது மிகவும் விசேஷம்.
அவ்வாறு அர்ச்சிக்கும் போது, வில்வத்தை தளப் பக்கமாக பூஜிக்க வேண்டும்.
ஏன் என்றால் வில்வ தளத்தில் அமிர்த தாரையாக லட்சுமி வாசம் செய்கிறாள்.
அதேபோல் தாமரை மலரால் பூஜிக்கும் போதும் தாமரையின் பூ உள்ள பக்கமாக பூஜிக்க வேண்டும்.
ஸ்ரீ லட்சுமியை சாமந்திப் பூ, தாழம் பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.
ஸ்ரீ லட்சுமிக்கு வில்வம் விசேஷம்.
ஸ்ரீலட்சுமி தவம் செய்வதற்கு வில்வ மரத்தடியில் எழுந்தருளினாள் என்பதைப் பற்றி வாமன புராணம் சொல்கிறது.
வாமன புராணத்தில் திருமகளின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வில்வ பத்திரம் சிவ சொரூபம், வில்ப மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள்.
இப்பேற்பட்ட மந்திர சக்தி சொரூபமான வில்வ மரமே ஸ்ரீ லட்சுமி சொரூபமாக விளங்குகிறது என்பது புராணம்.
நெல்லி மரம் திருமாலின் பேரருளைப் பெற்றது.
அது காரணம் பற்றியே நெல்லி மரத்தை "ஹரி பலம்" என்று கூறுவர்.
நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் ஸ்ரீ லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள்.
இதேபோல் மஞ்சளிலும் ஸ்ரீ லட்சுமி வாசம் செய்கிறாள். மஞ்சள் செடியை வளர்ப்பதும் விசேஷம்.
மங்களகரமான பொருள் மஞ்சள் என்பதால், எல்லாவிதமான சுபமுகூர்த்தங்களுக்கும் மஞ்சள் உபயோகப்படுகிறது.
பெண்களின் நெற்றியிலும், வகிடிலும் இட்டுக் கொள்ளும் மஞ்சள் குங்குமம் பெண்களின் சவுபாக்கிய சின்னமாக விளங்குகிறது.
குங்குமத்துடன் விளங்கும் பெண்களை மகாலட்சுமி மாதிரி இருக்கிறாள் என்று கூறுவது நமது மரபு.
ஸ்ரீ வைஷ்ணவர்கள் அணிந்து கொள்ளும் திருமண், ஸ்ரீ சூர்ணம் அவற்றிலும் திருமாலும், ஸ்ரீமகளும் வாசம் செய்கின்றனர்.
மஞ்சளினால் செய்யப்பட்டது தான் ஸ்ரீ சூர்ணம். அதுவே ஸ்ரீ லட்சுமி.
அதேபோல் திருமண் என்றால் திவ்யமான மண் என்று பொருள்.
திருமண் திருமாலின் அம்சமாகக் கருதப்படுகிறது.
திருமண்ணையும் ஸ்ரீ சூர்ணத்தையும் சேர்த்து நெற்றியில் இட்டுக் கொள்வது தான் சிலாக்கியம்.
ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் இட்டுக் கொள்ளுதல் கூடாது.
இல்லங்களை ஸ்ரீ லட்சுமி கடாட்சத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
அப்போது தான் அவள் நம்முடன் வாசம் செய்வாள்.
அதிகாலையில் எழுந்து, நீராடி, சூரியன் உதயமாவதற்கு முன்னால் வீட்டு வாயிலை பசு சாணத்தால் மெழுகி, கோலமிட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும்.
ஸ்ரீ லட்சுமி தேவி தீபமங்கள ஜோதியாக விளங்குகிறாள்.
இல்லத்திலே விளக்கு எரிவதால் லட்சுமி நிரந்தரமாக வாசம் புரிவாள்.
- தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
- அப்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளித்தார்.
சிவன் - பார்வதி திருமணத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும்
கயிலை மலைக்கு சென்றதால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.
உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப் புறப்பட்டார்.
அப்போது, உமையவள் அகத்தியரிடம், தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க, அகத்தியர்
அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.
ஆனால், உண்மையில் அது வெறும் முத்தாரம் மட்டும்தானா..?
இல்லை.
பெண் எனப் போற்றும் நதியின் சில நீர்த்துளிகளே அந்த ஆரமாகி, அம்பிகையின் திருமார்பில் தவழ்ந்து கொண்டிருந்தன!
சிவபெருமானின் தேவியான பார்வதிதேவி லலிதை என்னும் ஞானசக்தியாகத் திகழ, இச்சா மற்றும் கிரியாசக்திகள்
ஞானசக்தியாகிய லலிதைக்குப் பணிவிடை செய்தனர்.
அதனால், மனம் நெகிழ்ந்த தேவி அவர்களிடம், 'வேண்டும் வரம் கேளுங்கள்' என்று கூறினர்.
அதற்கு அவர்கள், ''தேவி, தாங்கள் நாராயணனாக வந்து எங்களை மணந்துகொள்ளவேண்டும்'' என்று கூறினர்.
தன்னில் சரிபாதியை தனக்குத் தந்த தன்னுடைய நாயகனைப் பிரிய மனமில்லாத தேவி, அவர்களுடைய
விருப்பத்தை நிறைவேற்ற நாரணியாகவும் நாராயணனாகவும் வடிவெடுத்தாள்.
நாரணியாகத் தன் நாயகனிடம் இருந்துகொண்டு, நாராயணனாக அவர்கள் இருவரையும் மணந்துகொண்டாள்.
தம்முடன் இருந்த நாரணியுடன் ஈசன் நதிநீர்விளையாட்டில் விருப்பம் கொண்டவராக நீராடச் செல்ல,
அப்போது நதியின் சில நீர்த்துளிகள் அம்பிகையின் திருமார்பில் இருந்த குங்குமத்துடன் கலந்து
தாமிர நிறம் பெற்று முத்துக்களாக மாறியது.
அம்பிகை அந்த முத்துக்களைச் சேர்த்து ஆரமாக்கி அணிந்துகொண்டாள்.
நாரணியாகத் தோன்றியதற்கான அவசியம் முடிந்ததும், அந்த முத்துமாலை ஸ்ரீபுர நாயகியான பராசக்தியிடம் சேர்ந்துவிட்டது.
சிலகாலம் சென்றது.
தாட்சாயணியாக அவதரித்து சிவபெருமானை மணந்திருந்த நிலையில், தன் நாயகனை மதிக்காமல்
தன் தந்தை நடத்திய யாகத்தைத் தடுக்கச் சென்றவள், அது முடியாமல் போகவே பிராண தியாகம் செய்துகொண்டாள்.
பின்னர், இமவானின் மகளாகத் தோன்றி, இமவதி, பார்வதி என்ற பெயர்களைப் பெற்று, சிவபெருமானை மணம் செய்துகொள்ள விரும்பினாள்.
அதற்காக எந்த சக்தியின் அம்சமாகத் தோன்றினாளோ அந்த பராசக்தியைக் குறித்து தவம் இயற்றினாள்.
பராசக்தியும், தன் அம்சமான தேவியை ஆசீர்வதித்து, தான் அணிந்திருந்த முத்துமாலையையும் பார்வதிக்கு கொடுத்து அருளினாள்.
அந்த முத்தாரத்தைத்தான் தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியரிடம் பார்வதிதேவி வழங்கினாள்.
அகத்தியர் அந்த முத்துமாலையைக் கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது.
அதே வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர்.
பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும்,
உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்' என்றும் கூறி,
அவளையும் நதியுருவாக்கி கமண்டலத்தில் அடக்கிக்கொண்டு தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
தென்திசை நோக்கிப் புறப்பட்ட அகத்தியர், பொதிகை மலைக்கு வந்து சேர்ந்தார்.
கயிலை நாயகனின் கல்யாணக் கோலம் தரிசிக்கப் பெற்று உள்ளம் மகிழ்ந்தார்.
மகிழ்ச்சியான அந்த மனநிலையில், உலகைச் செழுமைப்படுத்த திருவுள்ளம் கொண்ட அகத்திய முனிவர்,
வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில்
இருந்த தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார்.
இதுதான் தாமிரபரணியின் சிலிர்ப்பூட்டும் வரலாறு.
- அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து அவரால் விடுவிக்கப்பட்டது தாமிரபரணி என்கின்றன புராணங்கள்.
- அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.
வேதங்களிலும், புராண இதிகாசங்களிலும், இலக்கியங்களிலும், வரலாற்றிலும் பெரிதும் போற்றப்படும் நதி
தாமிரபரணி, காவிரியை போல் இதுவும் அகத்திய முனிவரால் உருவான ஆறுதான்.
அகத்திய முனிவரின் கமண்டலத்தில் இருந்து, காக்கை வடிவில் வந்து விநாயகரால் தட்டிவிடப்பட்டு பரந்து விரிந்து பாய்ந்தது காவிரி.
அகத்தியரின் கமண்டலத்தில் இருந்து அவரால் விடுவிக்கப்பட்டது தாமிரபரணி என்கின்றன புராணங்கள்.
சிவன் பார்வதி திருமணத்தை தரிசிக்க, ரிஷிகளும், முனிவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும்
கயிலைக்கு சென்றதால், உலகின் வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது.
உலகத்தை சமநிலைக்குக் கொண்டுவர சிவபெருமானின் ஆணைப்படி அகத்தியர் தெற்கு நோக்கிப்
புறப்படும்போது, உமையவள் அகத்தியரிடம் தான் அணிந்திருந்த முத்து ஆரத்தை அளிக்க,
அகத்தியர் அதைத் தமது கமண்டலத்தில் வைத்துக்கொண்டு தெற்கு நோக்கி புறப்படுகிறார்.
அகத்தியர் அந்த முத்துமாலையை கையில் வாங்கியதுமே, அது பெண்ணாக உருமாறி, அகத்தியரைப் பணிந்து வணங்கியது.
அவ்வேளையில் அங்கிருந்த தேவர்கள் மலர்மாரி பொழிந்து, தாமிர வர்ணம் கொண்டு திகழ்ந்ததால் தாமிரபரணி என்று போற்றிக் கொண்டாடினர்.
பிறகு, சிவபெருமான் அகத்தியரிடம், 'தாமிரபரணி தேவியானவள் பெண் உருவம் கொண்ட நதி என்றும்,
உரிய காலத்தில் நதி வடிவம் பெற்று, உலகத்துக்குச் சிறந்த மேன்மையை வழங்குவாள்' என்று கூறி,
அவளையும் தென் திசைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
பொதிகைமலையில் அகத்தியர் சிவன்-பார்வதி திருமண காட்சியை கண்ட மகிழ்வில் இருக்கும்போது
வைகாசி மாதம் விசாக நட்சத்திர நன்னாளில், அதுவரை தம்முடைய கமண்டலத்தில் இருந்த
தாமிரபரணி நீரை குப்தசிருங்கம் எனப்படும் கொடுமுடியில் இருக்கும் ஒரு குகையில் விடுவிக்கிறார்.
கிழக்கு நோக்கிய அருவியாக கலம்பகர்த்தம் என்ற தடாகக் குழியில் விழுகிறாள் தாமிரபரணி.
அதுவே பாணதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்க் கடவுளான முருகப்பெருமானின் அவதார நட்சத்திரமான வைகாசி விசாகம்தான், தமிழ் வளர்த்த
தவமுனிவராம் அகத்தியரால் தோற்றுவிக்கப்பட்ட தாமிரபரணியின் நட்சத்திரம் என்பதும்
தாமிரபரணிக்குப் பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.
- நம்மை சிறப்புற இம்மையிலும், மறுமையிலும் உள்ள வாழ்க்கைக்கு தயார் செய்கிறார்கள்.
- இந்த காலகட்டத்திலாவது நதியை மாசுபடுத்தாதீர்கள்.
தாமிரபரணி ஆற்றில் நடக்கும் இந்த நிகழ்வில் நாம் ஏன் தீர்த்தம் ஆட வேண்டும் நாம் ஏன் பூஜைகள்
வழிபாடுகள் செய்ய வேண்டும் என்ற பல்வேறு கேள்விகள் நமக்குள் இருக்கும்.,
ஆனாலும் எல்லோரும் செய்கிறார்கள் நாமும் செய்வோம் என்று சிலரும் புராண இதிகாச கதைகளை
மேற்கோள்காட்டி சிலரும் கலந்து கொள்வார்கள்.
அதைவிட உண்மை நிகழ்வுகளை நன்கு புரிந்துகொண்டு செயல்படுவது என்பது மேன்மையுடையதாக இருக்கும்.
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களின் தொகுப்பே இப்பிரபஞ்சம்.
அதுபோலவே ஐந்து பூதங்களின் கலப்பினால் நம் உடல் உருவாகி இருக்கிறது எனவே தான் சித்தர்கள் அண்டத்தில்
உள்ளது பிண்டத்திலும் பிண்டத்தில் உள்ளது அண்டத்திலும் உள்ளது எனும் ஒரு விளக்கத்தை சொல்லி இருக்கிறார்கள்.
காரணம் என்னவென்றால் பஞ்சபூதங்களான இவை ஐந்தும் நம் உடலுக்குள் உள்ள முக்கிய உறுப்புகளுடன் தொடர்புகொண்டது
உதாரணமாக நீர் பூதம் சிறுநீரகம் சிறுநீர் பை கர்ப்பப்பை விதைப்பை ஆகியவற்றுடன் நேரடித் தொடர்பு உள்ளது
மேலும் எலும்புகள் மூட்டுகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் நீர்ச்சத்து குறைவே காரணம்
இப்படி ஒரு தொடர்பு உள்ள நம் உறுப்புகள் பலவீனம் அடைவதும் பாதிப்புகள் அடைவதும் நாம் பஞ்சபூதங்களில்
ஒன்றான நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவதாலும் அதை போற்றி பாதுகாக்காமல் இருப்பதாலும் மேற்கண்ட
தோஷத்தினால் உறுப்புகள் பாதிப்படையும்.
நீர் பூதம் உறுப்புகள் தோஷம் நீங்கி சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் நாம் வசிக்கும் பகுதியில் உள்ள
நீர் நிலைகளையும் அதை சார்ந்த பகுதிகளையும் பராமரித்து சுத்தமாகவும் வைத்திருத்தலே
நாம் நம் நீர் பூத உறுப்புகளை பாதுகாக்கும் வழிமுறையாகும்.
இது உடல் சார்ந்த தொடர்பு அது மட்டுமல்ல நம் மனதிற்கும் பஞ்சபூதங்களுக்கும் தொடர்பு உண்டு.
நீரை நாம் அசுத்தப்படுத்தினால் நம் மனதில் பயம் கூச்சம் தாழ்வுமனப்பான்மை போன்ற
எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் இது மனதில் ஏற்படும் மாற்றங்கள்.
மேலும் ஆன்ம ரீதியாக ஐம்பூதங்களை நாம் வணங்கி பாதுகாத்து வந்தால் அதன் பொருட்டு ஆண்மை தெளிவும் உறுதியும் ஏற்படும் என்பது சித்தர்களின் தெளிவு.
ஆகவே மனம், உடல் ஆன்மா இவை அனைத்திற்கும் நாம் செய்யும் இத்தகைய செயல்கள் நம்மை
மேன்மை அடைய வைக்கும் ஆகவேதான் சித்தர்கள் பஞ்சபூதத்திற்கான விழாவை நமக்கு கொடுத்து
நம்மை சிறப்புற இம்மையிலும், மறுமையிலும் உள்ள வாழ்க்கைக்கு தயார் செய்கிறார்கள்.
நவகோள்களில் ஒன்றான குரு பெயர்ச்சி அன்று தன் ஆற்றலை இந்நதியின் மூலக்கூறுகளுடன் கலந்து
நீரின் மூலக்கூறு சக்தியை பன்மடங்காக்கும் நிகழ்வுதான் இது.
இப்படி ஓர் அரிய நிகழ்வு நாம் வாழும் காலத்தில் கிடைத்திருக்கிறது.
அந்த சக்தி அடைந்த மூலக்கூறுகள் கொண்ட இந் நதியின் நீர் நம் உடலையும் மனதையும் தோஷம் நீக்கி
புத்துணர்ச்சி அடைய வைக்கிறது.
குரு கோளின் அதீத தெய்வ சக்தி அடைந்த இந்நதியை கோவிலின் கருவறையாகவே கருதவேண்டும்.
இந்த காலகட்டத்திலாவது நதியை மாசுபடுத்தாதீர்கள்.
நதியின் தூய்மை மற்றும் தெய்வீகத்தை காக்கும் பணியில் உறுதுணையாக நின்றவர்கள் கோவில் கும்பாபிஷேகம் செய்த பலனை அடைவார்கள்.
- நவகயிலாயங்களில் முதல் கயிலாயமாக திகழ்வது பாபநாசம்.
- நவ கயிலாயத்தின் இரண்டாவது கயிலாயமாகத் திகழ்வது சேரன்மாதேவி.
நவகயிலாயங்கள் அமைந்துள்ள கோவில்களைப் பற்றி இப்போது சுருக்கமாகப் பார்க்கலாம்.
நவகயிலாயங்களில் முதல் கயிலாயமாக திகழ்வது பாபநாசம்.
இங்குள்ள பாவநாதர் கோவில் மூலவர் ருத்ராட்சத்தினால் ஆனவர்.
அம்பாள் உலகாம்பிகை.
நெல்லையில் இருந்து சுமார் 45 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சூரிய தலமாக விளங்குகிறது.
நவ கயிலாயத்தின் இரண்டாவது கயிலாயமாகத் திகழ்வது சேரன்மாதேவி.
இங்குள்ள சிவன் கோவிலின் மூலவர் அம்மநாதர். அம்பாள் ஆவுடைநாயகி.
இத்தலம் நெல்லையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சந்திர தலமாகும்.
கோடகநல்லூர் மூன்றாவது நவ கயிலாயமாக விளங்குகிறது. இங்குள்ள இறைவன் கைலாசநாதர்.
இறைவி சிவகாமி அம்பாள், நெல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது கோடகநல்லூர்.
இது செவ்வாய் தலமாக விளங்குகிறது.
நவ கைலாயங்களில் நான்காவது தலமாக விளங்குகிறது குன்னத்தூர்.
இங்குள்ள சிவன் கோவில் மூலவர் கோதபரமேஸ்வரர். அம்பாள் சிவகாமி அம்மாள்.
நெல்லை பேட்டையில் இருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.
இது ராகு தலமாகப் போற்றப்படுகிறது.
நவ கயிலாயத்தின் ஐந்தாவது தலம் முறப்பநாடு.
இங்குள்ள கைலாசநாதர் கோவிலின் மூலவர் கைலாசநாதர். இறைவி சிவகாமி அம்பாள்.
நெல்லையில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ளது.
இது குரு தலமாக விளங்குகிறது.
நவ கயிலாயங்களில் ஆறாவது தலம் ஸ்ரீவைகுண்டம்.
இது பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் கைலாசநாதர். இறைவி சிவகாமி அம்பாள்.
குமரகுருபரர் அவதரித்த தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் இருந்து 22 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சனி தலமாகும்.
தென்திருப்பேரை நவகயிலாயங்களில் ஏழாவது தலமாகும்.
இங்குள்ள கோவில் மூலவர் கைலாசநாதர்.
இறைவி சிவகாமி அம்பாள்.
அழகிய பொன்னம்மாள் என்ற திருப்பெயரும் உண்டு.
நெல்லையில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ளது.
இது புதன் தலமாக விளங்குகிறது.
நவ கயிலாயங்களில் எட்டாவது கைலாயம் ராஜபதி.
இங்கிருந்த கோவில் இயற்கை சீற்றத்தால் அழிந்து விட்டது.
முன்பு கோவில் இருந்த இடத்தில் அடையாளமாக ஒரு கல் மட்டுமே உள்ளது.
அதுதான் இக்கோவிலில் இருந்தததாக கூறப்படும் நந்தி, தற்போது ஓட்டப்பிடாரம் உலகம்மன் கோவிலில் உள்ளது.
இது கேது தலமாகும்.
நவ கயிலாயங்களில் ஒன்பதாவது தலம் சேர்ந்தமங்கலம்.
இங்குள்ள கோவில் மூலவர் கைலாசநாதர்.
அம்பாள் சிவகாமி அம்மை.
இத்தலத்தில்தான் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகிறது.
நெல்லையில் இருந்து புன்னக்காயல் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது.
இது சுக்கிரன் தலமாக விளங்குகிறது.
- புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி.
- நதியில் உள்ளம் குளிர குனிந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும்.
1. நீராடப் போகிறவர்கள் செருப்பு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது.
2. நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்து தன் உடம்பில் பூசிக்கொண்டு, நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும்.
3. சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது.
4. புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி.
ஆனால், புனித நதிகளில் நீராடும் போது, நதியின் பிரவாகத்திற்கு (ஓட்டத்திற்கு) எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும்.
முதுகைக் காட்டக் கூடாது.
5. நதியில் உள்ளம் குளிர குனிந்து மூன்று முறை மூழ்கி எழ வேண்டும்.
ஒவ்வொரு முறையும் ''ஹரி, ஹரி'' என்று சொல்ல வேண்டும்.
6. ஆண்கள் அரைஞாண்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது. அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது.
இது வேஷ்டி இல்லாததற்குச் சமம்.
7. பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது.
8. நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ் வதும், சிறுநீர் கழிப்பதும் பாவச்செயலாகும்.
9. நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும்.
10. நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிர்களை உதறக் கூடாது.
11. நீராடி முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும்.
மேலாக எடுத்துப் போடக் கூடாது.
12. நெற்றியில் கோபி சந்தனம் பூசிக் கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை வணங்கி முடிக்க வேண்டும்.
சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் (96 நிமிடங்கள்) அருணோதய காலமாகும்.
இந்த 96 நிமிட காலத்தில் நீராடுவது மிக மிகப் புண்ணியமாம்.
திருமணமாகாத ஆண், பெண்கள் அதிகாலை வேளையில் நீராடினால் மட்டுமே நற்பலன் கிட்டும்.
திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம்.
சந்நியாசிகள் அதிகாலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் நீராடலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்