search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "king"

      புதுக்கோட்டை:

      மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவினையொட்டி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், மன்னர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

      அமைச்சர்கள் எஸ்.ரகுபதி , சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமை வகித்தார். பின்னர் உதயநிதி ஸ்டாலினிடம் மன்னர் குடும்பத்தினர் மற்றும் நூற்றாண்டு விழாக்குழுவினர், புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு அருங்காட்சியகத்துடன் கூடிய நினைவு மணிமண்டபம் அமைத்திட அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர்அ வர்களுக்கும், தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொண்டனர்.

      • மதுரையில் நாளை மின்தடை ஏற்படுகிறது.
      • காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் ஏற்படுகிறது.

      மதுரை

      சமயநல்லூர் மின்வாரிய செயற்பொறியாளர் ஆறுமுக ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      சமயநல்லூர் துைண மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (10-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் ஏற்படுகிறது. எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் சரவணா நகர், பாலாஜி பவர் ஹவுஸ், மகாகணபதி நகர், அன்னை மீனாட்சி நகர், எஸ்.எஸ்.மகால், வித்ய வாகினி அபார்ட்மெண்ட், ஆகாஷ் கிளப் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      மேற்கு திருநகர் அரசரடி மின்வாரிய செயற்பொறியாளர் பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      ஆனையூர் துணை மின்நிலையங்களில் உள்ள சோலையழகுபுரம் பகுதியில் உயர் அழுத்த மின் பாதைகளின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (10-ந் தேதி) காலை மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் சங்கீத்நகர், சஞ்சீவி நகர், ஆனையூர் மெயின் ரோட, செல்லையா நகர் 1-வது தெரு முதல் 4-வது தெரு வரை, குட்செட்தெரு, அன்புநகர், அசோக் நகர், அப்பாத்துரை நகர் 1-வது தெரு, மல்லிகை நகர், ஆபீசர் டவுன், சிலையனேரி, வைகை அப்பார்ட்மெண்ட், பிரசன்னா காலனி, கூடல்புதூர், கருப்பசாமி நகர், இந்திரா நகர், ஜானகி நகர் 2-வது தெரு உள்ளிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      மதுரை பெருநகர் மின்வாரிய செயற்பொறியாளர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

      கோவில் துணை மின்நிலையம் பகுதியில் மழைக்கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (10-ந் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

      எனவே மேற்குறிப்பிட்ட நேரத்தில் கீழமாசி வீதி, கீழ ஆவணி மூல வீதி, தாசில்தார் பள்ளி வாசல் தெரு, தளவாய் தெரு, வெங்கலக்கடைத்தெரு, சாமி சன்னதி, கீழவடம்போக்கித்தெரு, கீழ பெருமாள் மேஸ்திரி வீதி, கொத்தவால் சாவடி, ஜடாமுனீஸ்வரர் கோவில் தெரு, ஆதிமூலம் பிள்ளை சந்து உள்ளிட்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.

      இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

      ×