என் மலர்

    தர்மபுரி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அரூர் பேரூராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி மராத்தான் போட்டி நடைபெற்றது.
    • மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டம், அரூர் பேரூராட்சியில்  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 18 வார்டு களிலும் தூய்மையே சேவை தலைப்பில் தூய்மை பணி நடைபெற்றது.

    இது குறித்த விழிப்பு ணர்வுக்காக மராத்தான் போட்டி நடைபெற்றது. இதனை அரூர் பேரூராட்சி தலைவர் இந்திராணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் துணைத்தலைவர் சூர்யா, தனபால், செயல் அலுவலர் விஜயசங்கர் மற்றும் நியமன குழு உறுப்பினர் முல்லை ரவி, வார்டு உறுப்பினர்கள், தன்னார்வ லர்கள், நாட்டு நலப்பணி  மாணவிகள், தூய்மை பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

    பேரூராட்சி அலுவல கத்தில் பேரணி தொடங்கி கடைவீதி, பஸ் நிலையம், வர்ண தீர்த்தம், பைபாஸ் சாலை மற்றும் முக்கிய வழியாக சென்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • காரிமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.
    • அதிகாலையில் சம்பவம்

    கிருஷ்ணகிரி பழையபேட்டை சேர்ந்தவர் அக்பர். இவரது மகன் அசிம் (வயது20) இவர்கள் கால்நடைகளை வாங்கி வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை அசிம் தனது மோட்டர் சைக்கிளில் காரிமங்கலத்தில் நடைபெறும் வர சந்தைக்கு கால்நடைகளை வாங்க வந்துள்ளார்.

    அப்போது மொரப்பூர் சாலையில் உள்ள செல்லம்பட்டி பகுதிக்கு அசிம் மோட்டர் சைக்கிளில் வந்தபோது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அசிம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் உடலை மீட்டு தருமபுரி அரசு மருத்துவ மனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடத்தூர் அருகே பா.ம.க கொடியேற்று விழா நடைபெற்றது.
    • 200க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் மேற்கு ஒன்றியம் சில்லாரள்ளி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்று விழா நடைபெற்றது. கொடியை மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஏற்றிவைத்தார்.

    கிளை செயலாளர் முருகன் சதீஷ், கிளைத்தலைவர் சத்தியப்பன் வேடியப்பன் மூத்த முன்னோடிகள் முருகன், தங்கராஜ், குப்புசாமி, வெங்கட்ராமன், சிவராஜ், பரசுராம் ,நவீன், சதீஷ், சக்தி ,பாலாஜி, அரிகிருஷ்ணன், பெருமாள், அஜித் ,ராமன், பச்சையப்பன், சிவா, வெங்கடேஷ், ராஜ்குமார், தமிழ்மணி, ஏ.வி.இமயவர்மன் மாநில செயற்குழு உறுப்பினர் முத்துசாமி, உழவர் பேரிக்க மாவட்ட தலைவர் கலைமணி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, இன்பம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாஸ்கர் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் மற்றும் 200- க்கு மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் தூய்மைப் பணிகள் நடந்து வருகிறது.
    • மாணவர்கள் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர்

     தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நீதிமன்ற வளாகத்தில் மாநிலத் திட்ட இயக்குனர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மத்திய கல்வி அமைச்ச கத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பாரத திட்டத்தின் அடிப்படையில் செப். 15-ந்தேதி முதல் அக்டோபர் 2 வரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு தூய்மை பணிகள் என்எஸ்எஸ் முகாம் நடைபெற்றது.

    இதில் பென்னாகரம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் மகாத்மா காந்தி பிறந்த தினமான நேற்று நீதிபதி நாகலட்சுமி(எ) விஜயராணி தலைமையில் தூய்மை பணி களை மேற்கொண்டனர்.

    இதில் குள்ளனூர், பி.அக்ரஹாரம், பண்டஹள்ளி , மாங்கரை, உள்ளிட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த பணியில் மாண வர்களோடு இணைந்து நீதிமன்றப் பணியா ளர்கள், சிவக்குமார், சரவணன், வக்கீல்கள், என்எஸ்எஸ் திட்ட ஒருங்கி ணைப்பா ளர்கள் ஜி.அன்பரசு, முருகேசன், பிரபாகரன், யோ கேஷ்வரன், அசோக்கு மார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தூய்மை பணி நடைபெற்றது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தருமபுரி அருகேயுள்ள அரசுப்பள்ளியில் 10 வருடமாக மாணவர்களுக்கு கழிவறை இல்லை என்று தலைமையாசிரியர் புகார் தெரிவித்தார்.
    • அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட இருசன்கொட்டாய் பகுதியில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் சிறப்பு பார்வையாளராக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டு கூட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார். அப்பகுதியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக மாணவர்களுக்கு கழிவறை இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுவதாகவும் இதனால் சேர்க்கை விகிதமும் குறைந்து விட்டதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.

    மேலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் உள்ளிட்ட வற்றில் ஆசிரியர்கள் மாணவர்கள் சிறப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பள்ளியில் பயின்ற மாணவர்கள் 500 மதிப்பெண்களுக்கு 490 மதிப்பெண் பெற்றுள்ளனர் என தெரிவித்தார். ஆனால் மாணவர்க ளுக்கான அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் கூறினார்.

    மாவட்ட கலெக்டர் நபார்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் கட்டிடம் கட்ட அனுமதி தருகிறோம் என்று தெரிவித்தார். இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்க ளுக்கு தன்னு டைய சொந்த நிதியில் இருந்து தலா ரூ. 10 ஆயிரம் வீதம் பரிசுத் தொகையை ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட கலெக்டர் மூலம் வழங்கினார்.

    இந்த கிராம சபை கூட்டத்தில் தருமபுரி எம்எல்ஏ வெங்க டேஸ்வரன், தாசில்தார் ஆறுமுகம், பி.டி.ஓ ஆறுமுகம், மற்றும் துறை சார்ந்த அலுவலர் பெருமக்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், ஊராட்சி பொதுமக்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மணியம்பாடி கோவிலில் பக்தர்கள் நேர்ந்து விட்ட மாடு, கன்றுகள் ஏலம் விடப்பட்டன.
    • சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

    தருமபுரி மாவட்டம் மணியம்பாடி ஊராட்சி யில் வெங்கட்டரமண சுவாமி கோவில் உள்ளது. இந்து அறநிலை துறை கட்டுபாட்டில் உள்ள இந்த கோவிலில் சனி கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

    புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமைகளில் வேண்டுதல் நிறைவேற்ற பக்தர்கள் மாடுகளை காணிக்கையாக கொண்டு வந்து விட்டு வருவது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த புரட்டாசி மாதம் இரண்டு சனிக்கி ழமைகளில் ஒரு மாடு உள்பட 15 கன்றுகள் கோயிலுக்கு நேர்ந்து விடப்பட்டது. இதனை ஆயிரத்துக்கு ஏலம் விட்டனர்.

    பக்தர்கள் நேர்த்திகடனாக விடும் மாடுகளை கோசாலைகள் அமைத்து பாதுகாத்து வளர்க்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.
    • அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த கோத்தகோட்டா கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் (வயது40) என்பவர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.

    இதனால் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு மூளை செயல் இழந்தது தெரிய வந்தது.

    பின்னர் உறுதி செய்து கொண்ட மருத்துவ குழுவினர் அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கோவிந்தராஜ் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர் முன் வந்தனர்.

    இதனை தொடர்ந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ குழுவி னர், உடல் உறுப்புக்கள் தானமாக பெற்றனர். முதலில் தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் முதலில் இருதயம் பிரத்தேயகமாக தயார் செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தில் காவல் துறை பாதுகாப்புடன் சென்னையில் உள்ள எம் ஜி எம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் அவரது உடலில் இருந்து 2 சிறுநீரகங்களில், ஒன்று சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் கோவை மருத்துவமனைக்கும், கல்லீரல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

    மேலும் 2 கண்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே கண் பார்வை வேண்டி பதிவு செய்தவர்களுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இதனை தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்தவுடன் கோவிந்தராஜன் உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்பொழுது பிரேத பரிசோதனை கூடம் அருகே மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், உடலுக்கு மலர் மாலை வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதனை அடுத்து பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து அமரர் ஊர்திக்கு எடுத்துச் செல்கின்ற வரை, சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இருபுறமும், அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அதேப்போல் பயின்று வருகின்ற மருத்துவ, செவிலியர் மாணவ, மாணவிகள் நீண்ட வரிசையில் நின்று, இறந்தாலும், சில உயிர்களை வாழ வைக்கு உடல் உறுப்புகளை தானம் செய்த கோவிந்தராஜனின் உடலுக்கு மலர் தூவி மரியாதை செய்து, வழி அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதயம் அறுவை சிகிச்சை செய்துவுடன், போதிய பாதுகாப்பு வசதிகள், ஏற்படுத்தப்பட்டு, காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் சென்னைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டது.

    தமிழக அரசின் உடல் உறுப்பு தானம் செய்பவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வெளியிட்ட அறிவிப்புகள் இனி வரும் காலங்களில் பல உயிர்களை காப்பாற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடல் தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து கோவிந்தராஜின் உடல் அவரது சொந்த ஊரான போச்சம்பள்ளிக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு உடல் உறுப்பு தானம் செய்த கோவிந்தராஜூக்கு அரசின் சார்பாக இன்று கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தருமபுரியில் நில அளவைத்தறையின் கழிவு வாகனம் நாளை ஏலம் விடப்படுகிறது.
    • அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும்

    தருமபுரி நில உதவி இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்ட நில அளவை உதவி இயக்குநர் பயன்பாட்டில் இருந்த வாகனம் எண். மகேந்திரா ஜீப் கழிவு செய்யப்பட்ட தையடுத்து அந்த வாகனம் நாளை 3-ந்தேதி காலை 11 மணியளவில் தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது.

    மேற்படி ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு விலைப்புள்ளியைக் கோரலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் அரசு நிர்ணயித்துள்ள ஏலத் தொகையில் 10 சதவீதம் முன் பிணைத்தொகையாகவோ அல்லது வரைவோலையாக செலுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்கு பின் வருபவர்கள் ஏலம் கேட்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    ஏலத்தில் அதிக தொகை கோருபவருக்கு ஏலம் முடிவு செய்யப்படும். அரசு நிர்ணயித்த தொகைக்கு குறைவாக ஏலம் கோரப்படின் ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வேறு தேதியில் நடத்தப்படும்.

    ஏலம் எடுத்தவர் உடன் பணத்தை செலுத்தி பின் பொருளினை எடுத்து செல்ல வேண்டும். ஏலம் எடுத்தவர் நீங்கலாக மற்றவர்களின் முன்பிணைத் தொகை மீள வழங்கப்படும்.

    இந்த ஏலத்தை ரத்து செய்வதற்கோ, ஏலத்தை நிறுத்தி வைக்க, ஏலத்தை முடித்து வைப்பதற்கு துறை தலைவருக்கு முழு அதிகாரம் உண்டு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தருமபுரி மாவட்டத்தில் நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • நிலக்கடலை விலை அதிகரிக்க வாய்ப்பு.

    தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தருமபுரி, காரிமங்கலம் உள்ளிட்ட வட்டங்களில் மானா வாரி நிலங்களில் மழைக் காலங்களில் விவசாயிகள் பெரும்பாலும் நிலக்கடலை சாகுபடியை அதிக அளவில் மேற்கொள் கின்றனர். பாசன வசதியுள்ள விவசாயிகள் இறவை முறையிலும் நிலக்கடலை சாகுபடியில் ஈடுபடுகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், நிலக்கடலைக்கு தண்ணீர் இன்றி காய்ந்தன. ஆனால் கடந்த, 2 மாதங்களாக இப்பகுதிகளில் கன மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், நிலக்கடலை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளன.

    தற்போது, நிலக்கடலை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், அறுவடை செய்யும் பணியில் விவ சாயிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

    கடந்த ஆண்டை விட இம்முறை நிலக்கடலை விளைச்சல் குறைந்து உள்ளதால், நிலக்கடலை விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போது, ஒரு கிலோ நிலக்கடலை, ரூ.30 முதல் ரூ.50 வரை கொள்முதல் செய்யப்பட்டு, ரூ.40 முதல், ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கிருந்து நிலக்கடலையை, மூட்டைகளாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா பகுதிகளுக்கும் விவசாயிகள் விற்பனைக்காக அனுப்பி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தருமபுரி மாவட்டத்திறகு 59-வது பிறந்த நாள் கொண்டாப்பட்டது.
    • எம். ஏல்.ஏக்கள் அதியமான்- அவ்வை சிலைகளுக்கு மாலை அணிவித்தனர்

    தருமபுரி மாவட்டம் சேலம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக இன்று தருமபுரி மாவட்டத்திற்கு 59-வது பிறந்தநாள் மாவட்டம் முழுவதும் கொண்டா டப்பட்டு வருகிறது.

    அதனை கொண்டாடும் வகையில் அதியமான் கோட்டை பகுதியில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் அதியமான் அவ்வையார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி மற்றும் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் அதியமான் மற்றும் அவ்வையார் சிலை களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்திற்கான 59-வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி கொண்டாடினர். பின்னர் நிகழ்ச்சிக்காக வந்திருந்த கட்சித் தொண் டர்கள் மற்றும் இப்பகுதி வளாகத்தில் போட்டித் தேர்வுக்காக பயின்று வரும் மாணவர்கள் உள்ளிட்ட வருக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
    இந்நி கழ்ச்சியில் நல்லம் பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, பா.ம.க. அமைப்பு செயலாளர் சண்முகம், மாநிலத் துணைத் செயலாளர் சாந்தமூர்த்தி, பாகலஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய செய லாளர் ஓ.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய தலைவர்கள் வெங்கடே சன், சிவபிரகாசம் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் முத்து வேல், குப்பன், சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print