search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dharmapuri"

    • பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
    • பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

    இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    • பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
    • பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை.

    மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.

    இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

    மேலும், "மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது. 500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.

    • பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை
    • ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு

    மாட்டிறைச்சி கொண்டு சென்றதால் பேருந்திலிருந்து மூதாட்டி இறக்கிவிடப்பட்ட விவகாரத்தில், பணியிடைநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் சசிகுமார், நடத்துநர் ரகு இருவர் மீதும் இன்று வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.

    இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், நேற்று பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    • மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை
    • பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    தருமபுரி மாவட்டம் அரூர் அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த பாஞ்சாலை என்கிற மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, மூதாட்டியை பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை அரங்கேறியுள்ளது.

    பட்டியல் பிரிவைச் சேர்ந்த பாஞ்சாலை என்கிற மூதாட்டியை நடுவழியில் இறக்கிவிட்டதால் அடுத்த பேருந்து நிலையம் வரை நடந்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.மூதாட்டி மாட்டிறைச்சி எடுத்துச்சென்றதாக கூறி, பாதுகாப்பின்றி நடுவழியில் இறக்கிவிட்ட தீண்டாமை கொடுமை

    இது சம்பந்தமாக, வீடியோ வெளியான நிலையில், பேருந்து ஓட்டுநர் சசிக்குமார், நடத்துநர் ரகு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    • சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
    • ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

    தருமபுரியிலிருந்து சேலம் நோக்கி நெல் மூட்டை ஏற்றி சென்ற லாரி தொப்பூர் கணவாய் பகுதியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்று கொண்டிருந்த இரண்டு லாரி மற்றும் மூன்று கார்கள் மீது மோதியது. விபத்தில் சிக்கிய ஒரு லாரி பாலத்திற்கு கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தின் போது இரண்டு கார்கள் மற்றும் லாரியின் மீது தீ பரவியதில் வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகின.

    இந்த விபத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று, மீட்பு பணியிலும் போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கார் தீ பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த மூன்று பேர் உடல் கருகி உயிரிழந்தனர். 

    அரசு கல்லூரியில் படிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்துள்ள வேலாவள்ளி பகுதியை சேர்ந்தவர் சின்னமாதன். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு மங்கம்மாள் (வயது 17) என்ற மகள் உள்ளார்.

    இவர் இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி பெற்றதை தொடர்ந்து அவரது தந்தை சின்னமாதன் தருமபுரி தனியார் கல்லூரியில் படிப்பதற்காக விண்ணப்பம் பெற்று வந்தார்.

    ஆனால் மங்கம்மாள் அரசு கல்லூரியில் தான் படிப்பேன், அங்குதான் எனது நண்பர்கள் படிக்கப் போகிறார்கள் என்று சின்னமாதனிடம் கூறினார். எனவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மங்கம்மாள் நேற்று மதியம் அவரது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மங்கம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரியில் ஜெயில் சூப்பிரண்டு-இன்சூரன்ஸ் அதிகாரி வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரி:

    தர்மபுரி அன்னசாகரம் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சண்முகம். இவர் சிறை துறை சூப்பிரண்டாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கலைச்செல்வி. நேற்று இரவு வீட்டின் ஒரு அறையில் சண்முகம், ஹாலில் அவரது மனைவியும் தூங்கி கொண்டு இருந்தனர்.

    நள்ளிரவு 1 மணி அளவில் கொள்ளை கும்பல் திறந்து இருந்த ஜன்னல் வழியாக கையைவிட்டு கதவின் தாழ்பாளை திறந்து உள்ளே புகுந்தனர். கலைச்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் செயினை வெட்டி எடுத்தனர். அவர் மஞ்சள் கயிற்றில் தாலிச்சரடு அணிந்து இருந்தார். அதை வெட்டி எடுக்க முயன்றபோது அவர் விழித்துக்கொண்டு சத்தம் போட்டார். உடனே கொள்ளைளயர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் கணவன்-மனைவி இருவரும் வந்து பார்த்தபோது வீட்டின் வெளியே யாரும் இல்லை.

    இதே கொள்ளையர்கள் கலைச்செல்வி வீட்டில் கொள்ளையடிப்பதற்கு முன்பு இவர்களது வீட்டிற்கு எதிரே குடியிருந்த செல்வம் என்பவரின் வீட்டு கதவையும், பூட்டையும் உடைக்க முயற்சி செய்தனர் முடியவில்லை.

    தர்மபுரி பாரதிபுரத்தில் நியூ இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரி அசோகன் வீட்டில் கொள்ளை நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    பாரதிபுரம் டி.ஏ.எம்.எஸ். காலனி அருகே வசிப்பவர் அசோகன் (52). இவரது மனைவி கர்லின்ராஜ். இவர் மத்திய கூட்டுறவு வங்கியில் மானேஜராக பணியாற்றி வருகிறார். கணவன்-மனைவி இருவரும் கீழ்வீட்டில் தூங்கி கொண்டு இருந்தனர். மாடியில் நள்ளிரவு 2.30 மணிக்கு கொள்ளையர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த ஹோம் தியேட்டர் பிளேயர், 2 கைக்கடிகாரங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம் ஆகும்.

    இவர்கள் வீட்டில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு 6 பவுன் நகை கொள்ளை போனது. இதேபோல இவர்களது பக்கத்து வீடுகளில் வசித்த 2 பேரின் வீடுகளிலும் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையில் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை. தற்போது மீண்டும் கொள்ளை நடந்து உள்ளது.

    இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தருமபுரியில் பெய்துவரும் தொடர் மழையால் சாக்பீஸ் தயாரிப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. #Rain

    தருமபுரி:

    தமிழத்தில் 2018-19-ம் கல்வி ஆண்டின் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது.

    இந்த நிலையில் கோடை விடுமுறை முடிந்து வருகிற ஜூன் மாதம் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தருமபுரி மாவட்டத்தில் ஏமக்குட்டியூர், மாரண்ட அள்ளி, பாலக்கோடு பகுதிகளில் சாக்பீஸ் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    சாக்பீஸ், ‘ஜிப்சம் பவுடரை தண்ணீரில் கரைத்து அச்சுகளில் வார்த்து, நாளொன்றுக்கு ஏறத்தாழ ஒரு டன் சாக்பீஸ்கள் தயாரிக்கப்படுகிறது. ஒரு முறை அச்சில் ஊற்றப்படுவதில் 1,110 சாக்பீஸ்கள் தயாரிக்கப்படுகிறது.

    இங்கு வெள்ளை சாக்பீஸ்களுடன், பச்சை, வெளிர் பச்சை, மஞ்சள், நீலம், சிவப்பு, ஆரஞ்சி ஆகிய வண்ணங்களில் சாக்பீஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. பிறகு சிறிய பெட்டிக்குள் 100, 120, 140 பீஸ்களாக அடுக்கி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இதன் விலை ரூ.13 முதல் ரூ.25 வரை விற்பனையாகிறது. வண்ண சாக்பீஸ் சற்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இங்கு தயாரிக்கப்படும் சாக்பீஸ்கள் தமிழ்நாட்டில் தருமபுரி, கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களுக்கும், கர்நாடகத்துக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

    தற்போது சாக்பீஸ் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால் கடந்த 5 நாட்களாக தருமபுரி மாவட்டத்தில் தினமும் தொடர்ந்து மழை பெய்து வருவதால், உற்பத்தி செய்யப்பட்ட சாக்பீஸ்களை உலர வைக்க முடியாமல் தார்பாய் போட்டு பாதுகாத்து வைத்துள்ளனர்.

    மேலும், தினமும் மழை வருவதால் உற்பத்தி செய்ய முடியவில்லை என சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். #Rain

    தர்மபுரி ஒன்றியம் கடகத்தூர் கிராமத்தில் இரவில் பிரசாரத்துக்கு சென்ற அன்புமணி ராமதாஸ், அந்த பகுதி மக்களின் வரவேற்பை கண்டு திடீரென தேம்பி, தேம்பி அழுதார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
    தர்மபுரி:

    தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    தர்மபுரி ஒன்றியம் கடகத்தூர் கிராமத்தில் இரவில் பிரசாரத்துக்கு சென்ற டாக்டர் அன்புமணி ராமதாசை அந்த பகுதி பொதுமக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், சிறுவர்-சிறுமிகள் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், என் மீது இவ்வளவு பாசம் கொண்ட இந்த பகுதி பொதுமக்கள் வரவேற்பை கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன். உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக, மகனாக இருந்து கடமையாற்றுவேன், என்றார். அப்போது அவர் திடீரென தேம்பி, தேம்பி அழுதார். இதைபார்த்ததும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அவரை அழ வேண்டாம், என்று ஆறுதல் கூறினர். தொடர்ந்து அவர் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
    தர்மபுரியில் இன்று அதிகாலை 2 லாரிகள் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தர்மபுரி:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து முலாம் பழம் லோடு ஏற்றிக்கொண்டு மினிலாரி சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    இந்த லாரி இன்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலை பழைய தர்மபுரி அருகேயுள்ள தனியார் பள்ளி முன்பு வரும்போது டிரைவரின் கட்டுபாட்டை இழந்து சாலை நடுவே உள்ள சென்டர் மீடியன் மீது மோதியது.

    அப்போது மோதிய வேகத்தில் மினி லாரி மறு பக்கத்தில் சேலம்-கிருஷ்ணகிரி நோக்கி சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மினிலாரியில் இருந்த ஆந்திர மாநிலம், சித்தூர் அடுத்துள்ள பகை மாரகுட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது20), சந்தம் (20) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த லாரி டிரைவர்களான சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்துள்ள பூலாம்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (40), அய்யன்துரை (35) ஆகிய 2 பேருக்கும் பலத்த படுகாயம் ஏற்பட்டது.

    இதனை பார்த்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே படுகாயம் அடைந்த சிவக்குமார், அய்யன்துரை ஆகிய 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர். மினிலாரியில் இருந்த முலாம் பழம் சாலையில் சிதறி கிடந்தது. மேலும் மினிலாரியின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. லாரியின் முன் பகுதியில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் பலியான ரமேஷ், சந்தம் ஆகிய 2 பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் சேலம்-கிருஷ்ணகிரி சாலையில் இன்று அதிகாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விபத்தில் சிக்கிய 2 வாகனத்தையும் மீட்டு அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்தை சரி செய்து வைத்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தர்மபுரியில் 4 ரோடு சந்திப்பு வழியாக உழவர் சந்தைக்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயிகள், நடைபாதை வியாபாரிகளிடம் ஓட்டு கேட்டார். #LSPolls #MKStalin
    தர்மபுரி:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோட்டில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அதன் பிறகு தர்மபுரி நகருக்கு வந்து ஓட்டலில் தங்கி இருந்தார்.

    இன்று காலை அவர் டி-சர்ட் மற்றும் பேன்ட் அணிந்து நடை பயிற்சி மேற்கொண்டார். ஓட்டலில் இருந்து புறப்பட்ட அவர், 4 ரோடு சந்திப்பு வழியாக உழவர் சந்தைக்கு சென்றார். அங்கு விவசாயிகளிடம் ஓட்டு கேட்டார்.

    அப்போது விவசாயிகள் சிலர் தர்மபுரி மாவட்டத்தில் மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளம் வந்தபோது அந்த நீர் தேவையில்லாமல் கடலில் கலந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து நீரை பம்பிங் செய்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்பி விவசாயிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதை அவர் பொறுமையுடன் கேட்டார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நீங்கள் செயல்படுத்தினாலும், அந்த திட்டத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் வரவில்லை என்றும் சிலர் கூறினர். அதையும் அவர் கேட்டுக்கொண்டார்.



    அதன் பிறகு அங்குள்ள ஆவின் பாலகத்துக்கு வந்தார். அங்கு தொண்டர்களுடன் சேர்ந்து டீ சாப்பிட்டார். பின்னர் 4 ரோடு சந்திப்பு பகுதிக்கு வந்தார். அங்கு நடைபாதை வியாபாரிகளிடம் ஓட்டு கேட்டார். அதன் பிறகு நடந்து ஓட்டலுக்கு சென்றார். வழிநெடுக பெண்களும், மாணவர்களும், இளைஞர்களும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். அவரும் மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் போஸ் கொடுத்தார்.

    இன்று பிற்பகலில் அவர் அரூர் கச்சேரி மேட்டில் தி.மு.க. பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். முன்னதாக நேற்றும், இன்றும் அவர் விவசாயிகள், வியாபாரிகள் ஆகியோரிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிகள் திடீரென்று ரத்துசெய்யப்பட்டது. #LSPolls #MKStalin

    தர்மபுரி-கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரே நாளில் நடந்த சோதனையில் ரூ. 3 லட்சத்து 64 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வே.முத்தம்பட்டி பிரிவு சாலையில் சுரேஷ் குமார் தலைமையிலான பறக்கும்படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 83 ஆயிரத்து 100 ரூபாய் கொண்டு வந்தது தெரியவந்தது. இது குறித்து காரில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் தர்மபுரி அருகே உள்ள ஜருகு பகுதியை சேர்ந்த பஞ்சாட்சரம் (வயது 39), அவரது நண்பர் அன்பழகன் (40) என்பது தெரியவந்தது. பைனான்ஸ் நடத்தி வரும் பஞ்சாட்சரம் டிராக்டர் வாங்குவதற்காக பணத்தை கொண்டு வந்ததாக கூறினார். ஆனால், உரிய ஆவண் இல்லாததால், அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.

    தேர்தல் அறிவித்தவுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்தை தடுக்கும் வகையில் அரூர் தொகுதியில் திப்பம்பட்டி கூட்ரோடு, ஆண்டியூர், அனுமன்தீர்த்தம் ஆகிய இடங்களில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்துடன் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு சோதனை செய்து வருகின்றனர்.

    நேற்று இருமத்தூர் அருகே பறக்கும் படையை சேர்ந்த நெடுஞ்சாலை துறை அதிகாரி பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி, நாவலன், ரவிகுமார், ராம்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மினிடோர் வாகனத்தை சோதனை செய்ததில் சித்தன் கொட்டாயை சேர்ந்த கணேசன் (30) என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 73 ஆயிரத்து 900 பணத்தை பறிமுதல் செய்தனர். இவர் பட்டுகூடு விற்பனை செய்து வருகிறார். பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆர்.டி.ஒ. புண்ணியகோடியிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கிருஷ்ணகரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி அருகே கும்மளாபுரம் சோதனை சாவடியில், வாகன சோதனை அலுவலர் குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், காவலர் அனிதா ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது உலிவீரனப் பள்ளி கிராமத்தை சேர்ந்த முனிராஜ் என்ற விவசாயி வந்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 950 பணம் இருப்பதை கண்டறிந்த போலீசார் அதை பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முரளியிடம் ஒப்படைத்தனர்.

    ×