என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தலைமை ஆசிரியை இடமாற்றம்"

    • சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.
    • மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தனக்கு கால் அமுக்கி விடுமாறு கூறி வந்ததாக தெரிகிறது. சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் இது தொடர்பான சில வினாடிகள் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    இது சம்பந்தமாக தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை கலைவாணியை அந்த பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆசிரியை தமிழ்வாணி கடந்த ஆண்டுகளில் மாணவிகள் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கினார்.
    • தலைமை ஆசிரியை தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டுள்ளார்.

    சேலம்:

    சேலம் கோட்டையில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள்.

    நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவிகள் வகுப்பை புறக்கணித்து 3 மணிநேரத்திற்கும் மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர், கழிப்பறை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் உள்பட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை.

    குடிநீர் தொட்டியில் புழுக்கள் இருப்பதாக புகார் கூறிய மாணவிகளை தலைமை ஆசிரியை மிரட்டியதுடன் கணவரை வைத்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுப்பதாகவும், முட்டிபோட வைத்து கொடுமை படுத்தியதாகவும் புகார் கூறினர். இதனால் தலைமை ஆசிரியை தமிழ்வாணியை பணிநீக்கம் செய்ய வேண்டும். வேறு தலைமை ஆசிரியையை இப்பள்ளிக்கு அரசு நியமிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த கல்வி அதிகாரிகள் மோகன், சந்தோஷ்குமார், மற்றும் வருவாய்துறையினர், போலீசார் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அடிப்படை வசதிகளை செய்து தருவதாகவும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். இதையடுத்து தலைமை ஆசிரியையும் மாணவிகளிடம் என்மீது தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள் என்று கூறினார். தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். தலைமை ஆசிரியை தமிழ்வாணியை இளம்பிள்ளை அரசு ஆண்கள் பள்ளிக்கு மாற்றி மாவட்ட கல்வி அதிகாரி கபீர் உத்தரவிட்டுள்ளார்.

    ஆசிரியை தமிழ்வாணி கடந்த ஆண்டுகளில் மாணவிகள் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூலித்த புகாரில் சிக்கினார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் முகப்பு பக்கங்களை தைக்கும் பணிகளில் மாணவிகளை ஈடுபடுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சஸ்பெண்டு செய்யப்பட்டு பின்னர் மீண்டும் இதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×