என் மலர்
நீங்கள் தேடியது "government school"
- பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் இருந்து வந்ததால் அதன் சுவர்கள் தண்ணீரில் ஊறி சேதமாகி இருந்தது.
- அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவர்களுக்கு கை, கால் மற்றும் இடுப்பிலும் காயமடைந்தனர்.
பாகூர்:
புதுச்சேரி தவளக்குப்பம் அடுத்த பூ.புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6 வகுப்பறைகள் மற்றும் சமையல் கூடம் மற்றும் கழிப்பிட கட்டிடம் இருந்து வருகிறது.
இந்தப் பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வந்த நிலையில் தற்போது குறைந்த அளவிலேயே மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
சுமார் 35 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட இப்பள்ளி கட்டிடங்கள் முற்றிலுமாக சேதமாகி உள்ளது. அனைத்து வகுப்பறைகளும் மழை காலங்களில் தண்ணீர் கசிகிறது. மேலும் தளத்தின் காரைகள் உடைந்தும் காணப்படுகிறது. இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அரசுக்கு பலமுறை ஒரு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தப் பள்ளியை தொடங்கிய காலத்தில் அப்போதிருந்த ஆசிரியர்கள், பொதுமக்கள் உதவியுடன் குடிநீருக்கும் மாணவர்கள் கை கழுவதற்கும் தொட்டி அமைக்கப்பட்டு குழாயும் இணைத்திருந்தனர்.
பல ஆண்டுகளாக இதை பராமரிக்கப்படாமல் இருந்து வந்ததால் அதன் சுவர்கள் தண்ணீரில் ஊறி சேதமாகி இருந்தது.
இதற்கிடையே அரசு மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் புதிதாக குடிநீருக்கும், கை கழுவதற்கும் மாற்று ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் பழைய குடிநீர் தொட்டியை அகற்றப்படாமல் இருந்து உள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு வந்த மாணவர்கள் பள்ளி வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பழைய குடிநீருக்காக போடப்பட்ட சுவர் திடீரென இடிந்து விழுந்தது.
இதில் அந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்த 3 மாணவர்களுக்கு கை, கால் மற்றும் இடுப்பிலும் காயமடைந்தனர். இதை கண்ட மற்ற மாணவர்கள் அலறிஅடித்துகொண்டு சிதறி ஓடினர்.
குடிநீர் தொட்டி கட்டிடம் இடிந்ததில் 4-ம் வகுப்பு படிக்கும் செந்தில்குமாரின் மகன் பவன்குமார் (வயது 8) செல்லக்கண்ணு மகன் பவின் (8), 5-ம் வகுப்பு படிக்கும் ரஜினியின் மகள் தேஷிதா (10) ஆகியோர் காயமடைந்தனர்.
இதை அறிந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உடனடியாக காயமடைந்த மாணவர்களை மோட்டார் சைக்கிளில் தவளக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு டாக்டர்கள் முதலுதவி செய்யப்பட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து மாணவ - மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை அறிந்தவுடன் கல்வித்துறை வட்ட ஆய்வாளர் லிங்கசாமி சம்பவ இடத்திற்கு பார்வையிட்டு ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது. தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் விபத்துக்கு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.
- மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம்
ராஜஸ்தான் அரசு பள்ளி தலைமையாசிரியர் ஒரு பெண் ஆசிரியையுடன் பள்ளியில் உள்ள தனது அலுவலக அறைக்குள் தகாத செயலில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சலேரா கிராமத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர், பலமுறை அந்த பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.
மற்றுமொரு காணொளியில், அதிபர் பாடசாலையில் தனது மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம். இந்த வீடியோக்கள் பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியரின் தகாத நடத்தைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பதிலளித்த மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திர சர்மா, "முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியை இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்
- செய்தியின் உண்மைத்தன்மையை அறியாது அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுகின்றனர்.
- மத்திய அரசு நிதியை தராத நிலையிலும் நிதிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
500 அரசு பள்ளிகளை தனியாருக்கு கொடுப்பதாக தகவல் வெளியான நிலையில் இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பள்ளிகளை தத்தெடுப்பு, தாரைவார்த்தல் என்ற வார்த்தையை நான் குறிப்பிடவில்லை.
* நம்ம ஸ்கூல் நம்ம ஊர் பள்ளியில் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பை அளித்தவர்களுக்கு நன்றி என்று தான் கூறினேன்.
* சிஎஸ்ஆர் நிதி மூலம் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நடவடிக்கைக்கு நன்றி என்றுதான் கூறியுள்ளேன்.
* அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்க்கவில்லை. எனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
* தொடர் வதந்திகளால் நாங்கள் சோர்வடைகிறோம், நம்பகத்தன்மையுடன் செய்தி வெளியிடுங்கள்.
* எங்களின் பிள்ளையான அரசுப்பள்ளியை மற்றொருவருக்கு தாரைவார்க்கும் அவசியம் எங்களுக்கு இல்லை.
* தேவையின்றி பிரச்சனைகளை கிளப்பி கண்டன அறிக்கைகளை வெளியிடுவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
* செய்தியின் உண்மைத்தன்மையை அறியாது அரசியல் கட்சியினர் கண்டன அறிக்கை வெளியிடுகின்றனர்.
* சிஎஸ்ஆர் நிதி மூலமாக தனியார் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
* தமிழ்நாட்டில் உயர்கல்வியை தொடரும் மாணவர்கள் தேசிய சராசரியை விட அதிகம்.
* கொள்கையை விட்டுக்கொடுத்து SSI நிதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்ற கூறியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
* மத்திய அரசு நிதியை தராத நிலையிலும் நிதிக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
* மாநில பட்டியலுக்கு எங்களின் கல்வியை தந்துவிடுங்கள். எங்கள் பிள்ளைகளை நாங்கள் பார்த்து கொள்கிறோம். நிதிச்சுமையை தமிழக அரசே ஏற்கும் என்று கூறினார்.
- உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ என்கிறார்கள்.
- சீனிவாசன் சாரும், மீனாட்சி மிஸ்சும் என்னை எதற்கு பள்ளிக்கு வர ? உனக்கு படிப்புலாம் ஏறாது..
கோடம்பாக்கத்தில் உள்ள பி.சி.கே.ஜி என்கிற அரசு பள்ளியில் பறை இசைத்த மாணவரை குறி வைத்து ஆசிரியர்கள் இருவர் படிக்க விடாமல் டார்ச்சர் செய்வதாக சமூக ஆர்வலர் குபேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுபோல் பல மாணவர்களை இந்த கோடம்பாக்கம் அரசு பள்ளியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட மாணவன் பேசும் வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட மாணவன் கூறியிருப்பதாவது:-
என் பெயர் தமிழ். பி.சி.கே.ஜி அரசு பள்ளியில் படிக்கிறேன். கலைத்திருவிழா சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்று பறையிசை வாசித்தேன்.
அதன்பிறகிலிருந்து, சீனிவாசன் சாரும், மீனாட்சி மிஸ்சும் என்னை எதற்கு பள்ளிக்கு வர ? உனக்கு படிப்புலாம் ஏறாது..
நீ பறை அடிக்கத்தான் லாயக்கு.. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ என்கிறார்கள்.
பள்ளிக்கு வந்தால் வகுப்பில் அனுமதிப்பதில்லை. என் சட்டையை கழட்டி சோதனை செய்கிறார்கள். பேண்ட் பேக்கெட்டுகளில் சோதனை செய்கிறார்கள். அசிங்கமாக பேசுகிறார்கள்.
வகுப்புக்கு போனால் வர வேண்டாம்.. உனக்கு பாடம் சொல்லித்தர மாட்டேன். கீழே சென்று ஹெட் மாஸ்டரை பாருன்னு சொல்றாங்க.. கீழே போனால் வகுப்புக்கு போ.. தேர்வு வருதுன்னு சொல்றாங்க.. திரும்ப வகுப்புக்கு போனா ஏன் வந்தேன்னு கேக்குறாங்க..
படிக்க விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்றாங்க..
இவ்வாறு அந்த மாணவர் குறிப்பிட்டுள்ளார்.
"பள்ளி விழாவில், பறையிசை அடித்தேன். அதிலிருந்து ஆசிரியர்கள் இருவர், 'நீ பறை அடிக்கத்தான் லாயக்கு.. உன் அப்பா மயானத்துலதானே வேலை பாக்குறாரு... அங்கேயே வேலைக்குப்போ' என்கிறார்கள். படிக்க விடாமல் தொடர்ந்து டார்ச்சர் செய்கிறார்கள்" என்று சொல்லும் இந்த மாணவனின் வீடியோ அதிரவைக்கிறது.… pic.twitter.com/GMX3rncZJp
— Arulmozhivarman (@arulmozhi_25) December 26, 2024
- கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
- ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பீகாரில் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் மஹுவா பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஜிதேந்திர குமார் சிங், குழைந்தை பெறும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பில் ஒரு வாரம் விடுமுறையில் இருந்துள்ளார்.
ஆன்லைனில் விடுப்புக்கு விண்ணப்பிக்கும் அரசு ஆசிரியர்களுக்காக அமைக்கப்பட்ட போர்ட்டலைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட விடுப்பு குறித்த ஸ்கிரீன் ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஆனால், இது ஒரு தொழில்நுட்பப் பிழை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப பிழையானது சரி செய்யப்படும் என மஹுவா தொகுதி கல்வி அதிகாரி அர்ச்சனா குமாரி தெரிவித்துள்ளார்.
ஆண்கள் கூட தங்கள் பிறந்த குழந்தைகளைக் கவனிக்க 'பித்ரித்வா அவகாஷ்' (தந்தையர் விடுப்பு) பெறுகிறார்கள் என்றும் அதனோடு மகப்பேறு விடுப்பு குழம்பியுள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் ஆண் ஒருவருக்கு மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்ட ஸ்க்ரீன் சாட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.
- ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது.
தெலுங்கானாவில் அரசு விடுதியில் தங்கி படித்து வரும் 10 வகுப்பு மாணவி தொடர்ந்து 15 முறை ஏற்பட்ட எலிக் கடி காரணமாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கம்மம், தானவாய்குடத்தில் பி.சி. நல விடுதியில் தங்கி அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லக்ஷ்மி பவானி கீர்த்தி என்ற மாணவியை, இந்த ஆண்டு மார்ச் முதல் நவம்பர் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.
ஒவ்வொரு முறை எலி கடித்த போதும் ரேபிஸ் தடுப்பு ஊசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து எலி கடித்ததால் லட்சுமிக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் புவ்வாடா அஜய் குமாரின் தலையீட்டுக்கு பின்னர், மாணவி தற்போது மம்தா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
A Xth class student residing at BC Welfare Residential Hostel in #Khammam #Telangana reportedly #BittenByRats 15 times between March & November, and administered anti-rabies vaccine, has been left paralysed in right leg & hand; other students also report rat bites #BeyondShocking pic.twitter.com/dt3qwJQ99b
— Uma Sudhir (@umasudhir) December 18, 2024
லட்சுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு, குணமடைந்து வரும் நிலையில், நரம்பியல் பிரச்சனையால் அவதிப்பட்டு வருவதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விடுதிகளில் நிலை குறித்து ஆளும் காங்கிரஸ் அரசை பிஆர்எஸ் கட்சி விமர்சித்துள்ளது.
- எஸ்.கே.சக்சேனா (55 வயது) கடந்த 5 வருடங்களாக தலைமை ஆசிரியராக இருந்து வந்தார்.
- நெற்றியில் குண்டு பாய்ந்த சக்சேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தான் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரை சுட்டுக் கொலை செய்து அவரது ஸ்கூட்டரிலேயே 12 ஆம் வகுப்பு மாணவன் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் [Chhatarpur] மாவட்டத்தில் தாமோரா [Dhamora] அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமை ஆசிரியராக கடந்த 5 வருடங்களாக எஸ்.கே.சக்சேனா (55 வயது) இருந்து வந்தார்.
இந்நிலையில் இன்று மதியம் 1:30 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்ற சக்சேனா மீது அதே பள்ளியில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவன் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளான். நெற்றியில் குண்டு பாய்ந்த சக்சேனா சம்பவ இடத்திலேயேஉயிரிழந்தார்.

சம்பவத்தின்பின் சக்சேனாவின் ஸ்கூட்டரிலேயே 12 ஆம் வகுப்பு மாணவனும் அவனுடன் வந்த கூட்டாளியும் அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் காவல் கண்காணிப்பாளர் அகம் ஜெயின் தெரிவித்துள்ளார். இதற்கிடையே தப்பியோடிவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தல்.
- ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் வீரகனூர் அருகே உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், பள்ளியில் கணித ஆசிரியராக ஜெயபிரகாஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர், மாணவர்களை கால் அழுத்திவிட சொல்லி ஓய்வெடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
இதனால், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோரும், கல்வி ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.
இந்நிலையில், மாணவர்களை கால் அழுத்த சொல்லி ஓய்வெடுத்த ஆசிரியர் ஜெயபிரகாஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட கணித ஆசிரியர் ஜெயபிரகாஷை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மாணவர்களை கால் அழுத்த சொல்லி, ஆசிரியர் தூங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆசிரியராக பணிபுரிந்த பாலாஜி, தனக்கு பதிலாக வேறொரு நபரை கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணி நீக்கம்.
- தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகிறார்களா? என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கேட்கப்பட்டது.
சென்னை:
அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் போலி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகளில் பாடம் நடத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் பரவின. இதனை பள்ளிக்கல்வித் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் ராமியாம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்த கே.பாலாஜி, தனக்கு பதிலாக வேறொரு நபரை கொண்டு வகுப்பறையில் பாடம் நடத்தியதால் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டு, ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளாமல் வெளிநபரை கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணி நடத்துவது குறித்து பள்ளி ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வையின் போது கண்டறியப்பட்டாலோ அல்லது இதுகுறித்து புகார்கள் ஏதேனும் பெறப்பட்டாலோ கண்டிப்பாக அந்த புகார் மீது தனிக்கவனம் செலுத்தி மாவட்ட கல்வி அலுவலரே விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு இறுதியாணை பிறப்பிக்க வேண்டும்.
தொடக்கக்கல்வியில் தகுதியுள்ள காலிப்பணியிடத்தில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் பெற்ற 6 ஆயிரத்து 53 எண்ணிக்கையில் உள்ள தற்காலிக ஆசிரியர்கள் தவிர, வேறு ஏதேனும் நபர்கள் பணிபுரிந்து வருகிறார்களா? என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களிடமும் அறிக்கை கேட்கப்பட்டது.
அதன் அடிப்படையில் மாவட்ட கல்வி அலுவலரின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் இருந்து வேறு நபர்களை கொண்டு கற்பித்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள் குறித்த விவர அறிக்கை எதுவும் பெறப்படவில்லை.ஆகையால் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் இருந்து எந்த வித அறிக்கையும் பெறப்படாத நிலையில், 10 ஆயிரம் போலி ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு கற்பித்தல் பணிகள் நடைபெறுவதாக சமூக ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி ஆகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.
- ஆசிரியர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
பள்ளிக்கூடம் கல்வியை மட்டுமல்ல... நல் ஒழுக்கம், பண்பாடு, நீதிபோதனை போன்றவற்றை கற்றுத்தரும் இடம். அங்கு மாணவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் உருவாக்கும் போற்றுதலுக்குரிய பணியை செய்து வருபவர்கள் ஆசிரியர்கள்.
எல்லோரும் அவ்வாறு ஆசிரியப்பணியை அறப்பணியாக செய்கிறார்களா என்றால் பதில் கேள்விக்குறிதான்.
எங்காவது ஒருவர் தங்களது பணிக்கு இழுக்கை தேடிக்கொண்டு விடுகிறார்கள். அப்படியொரு ஆசிரியர் செய்த காரியம் தர்மபுரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. பள்ளி மாணவ-மாணவிகள் முறையாக வகுப்புகளுக்கு வரவேண்டும், சிறப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் பட்ஜெட்டில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. அதில் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள், காலை உணவுத்திட்டம் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் எந்த அளவுக்கு இருக்கிறது? அவர்களுக்கான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் எந்த அளவில் உள்ளது? மாணவர்களுக்கான அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு கீழ் உள்ள கல்வி அலுவலர்கள் இந்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் முறையாக ஆய்வு செய்யாத வட்டாரக் கல்வி அலுவலர்களின் பட்டியலையும் கல்வித் துறை வெளிப்படையாக வெளியிட்டது.
இந்த நிலையில் ஆய்வின்போது, கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது கடந்த சில மாதங்களாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, கற்பித்தல் பணிக்கு செல்லாமல் நீண்டநாட்கள் விடுப்பில் இருப்பது, பள்ளிக்கு வந்தது போல் கணக்கு காண்பிப்பது என்பது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை கல்வித்துறை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து வருகிறது.
அந்த வரிசையில் தர்மபுரி மாவட்டம், அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட காரிமங்கலம் வட்டாரம், ராமியாம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் கே.பாலாஜி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் பள்ளிக்கே வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பிவிட்டது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, ஆசிரியர் பாலாஜி மீது தமிழ்நாடு அரசுப் பணி (ஒழுக்கம் மற்றும் மேல்முறையீடு) 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு முழுவதும் பல அரசு பள்ளிகளில் இதுபோன்ற நிலைதான் நீடிக்கிறது எனவும், கல்வித்துறை சார்பில் ஆய்வு, கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதிலும் பாரபட்சம் காட்டக் கூடாது எனவும் கல்வியாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்து இருக்கின்றனர்.
- மகாவிஷ்ணுவின் மூடநம்பிக்கை பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
- மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், மாற்றுத்திறனாளி ஆசிரியர் அவமதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர், பள்ளி தலைமை ஆசிரியர் ஆகியோர் 25ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு மாற்றுத் திறனாளிகள் ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
- வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
- மகாவிஷ்ணுவுக்கு செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகரில் உள்ள அரசு பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.
கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் ஜென்ம பாவம் தான் காரணம் என்று மகாவிஷ்ணு பேசியிருந்தார்.
இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி அனைத்து தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து இரு பிரிவினர் இடையே பகையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், அவமதித்தல், வதந்திகள், பொய்யான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
செப்டம்பர் 20 ஆம் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மகாவிஷ்ணுவை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் மகாவிஷ்ணுவை ஐந்து நாட்கள் விசாரிக்க அனுமதி அளிக்க அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து விசாாரணை நடத்தி வரும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அசோக் நகர் அரசு பள்ளியில் ஆசிரியர்களிடம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தினர். இதோடு, அந்த பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை தமிழரசியிடம் கண்ணப்பன் தொலைபேசியில் விசாரணை நடத்தினார்.
அப்போது, "மகாவிஷ்ணுவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது யார்? அனுமதி வழங்கியது யார்?" என்ற இரண்டு கேள்விகளுக்கும் நாளைக்குள் எழுத்துப்பூர்வமான பதில் வழங்க உத்தரவிட்டுள்ளார்.