என் மலர்
நீங்கள் தேடியது "government school"
- நாய் படை நடத்திய தேடுதலின் போது, புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன
- கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்டில் அல்மோரா மாவட்டத்தின் சுல்ட் பகுதியில் உள்ள தபாரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் இருந்து 161 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் மீட்டுள்ளனர்.
பள்ளி முதல்வர் சுபாஷ் சிங் முதலில் புதர்களில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்களைக் கவனித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
இரண்டு போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தன. வெடிகுண்டு அகற்றும் படை மற்றும் நாய் படையும் வரவழைக்கப்பட்டன.
நாய் படை நடத்திய தேடுதலின் போது, புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன, மற்றவை 20 அடி தொலைவில் காணப்பட்டன. மொத்தம் 161 ஜெலட்டின் குச்சிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வெடிகுண்டு அகற்றும் படையினரால் சேமிக்கப்பட்டன.
கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் ஏன் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் அரியானாவில் அதிக அளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் போலீசார் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
- மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேலியபுட்டி மண்டலத்தில் பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
இங்கு பாட நேரத்தில் ஆசிரியை ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, மாணவிகள் அவருக்குக் கால்கள் பிடித்துவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் தான் முழங்கால் வலியால் அவதிப்பட்டதாகவும், அன்றைய தினம் கீழே விழுந்ததாகவும், மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.
இதுதொடர்பாக விசாரணை முடியும் வரை அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவர்களைத் தனது காரைக் கழுவவும் பிற தனிப்பட்ட வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தியதற்காகவும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
- ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும் போது தனியாகப் பிரித்து வைக்கப்படுவதாகவும் கூறினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் 8 வயது தலித் மாணவனை கொடூரமாக நடத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தலைநகர் சிம்லாவில் ரோஹ்ரு பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள், சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் தேவேந்திரா மற்றும் ஆசிரியர்கள் பாபு ராம், கிருத்திகா தாக்கூர் ஆகிய மூவர் மீதும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாக்கப்பட்டதால், அந்தச் சிறுவனின் காதில் இரத்தம் வந்துள்ளதுடன், செவிப்பறையும் சேதமடைந்துள்ளது என்று சிறுவனின் பெற்றோர் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதோடு மட்டுமில்லாமல், ஆசிரியர்கள் சிறுவனைப் பள்ளி கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவனது காற்சட்டைக்குள் ஒரு தேளைப் போட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களை வெளியே சொன்னால், கைது செய்யப்படுவாய் அல்லது சுட்டுக் கொல்லப்படுவாய் என்று ஆசிரியர்கள் சிறுவனை மிரட்டியதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பெற்றோர் இது குறித்து புகார் அளித்தாலோ அல்லது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாலோ வாழ்க்கையையே தொலைத்துவிடுவீர்கள் என மிரட்டப்பட்டுள்ளனர்.
பள்ளியில் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகவும், ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும் போது தனியாகப் பிரித்து வைக்கப்படுவதாகவும் சிறுவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
- மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது
ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்ததை கிராம மக்கள் பள்ளி ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பள்ளி முதல்வர் ஆசிரியரை பணிநீக்கம் செய்தார்.
முன்னதாக, ஆசிரியர் தனது மொபைல் எண்ணை ஒரு மாணவியின் நோட்டில் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் அவரைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
- கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 6-ம் தேதி ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
அப்போது கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், தற்போது இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- பெற்றோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- 3 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்சால் பைல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
நேற்று மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற 17 மாணவ, மாணவிகளுக்கு இரவு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மூன்று மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.
இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் சேர்க்கை 3 மாணவர்களாகக் குறைந்ததால், அந்தப் பள்ளி மூடப்படும் நிலையை எதிர்கொண்டது.
- இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள கேட் தாலுகாவில் உள்ள ஜலிந்தர் நகர் ஜில்லா பரிஷத் பள்ளி, உலகளாவிய கல்வி அமைப்பான T4 கல்வியால் நிறுவப்பட்ட மதிப்புமிக்க உலகின் சிறந்த பள்ளி பரிசுகள் 2025-ல் சமூக தேர்வு விருதைப் பெற்றுள்ளது. இந்த பள்ளி பட்டியலிடப்பட்ட 50 பள்ளிகளை தாண்டி இந்த விருதை பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் மூடப்படும் நிலையில் இருந்த இந்த பள்ளி அதன் புதுமை, சமூக தாக்கம் மற்றும் மாணவர்களுக்கு ஏற்ற நடைமுறைகளுக்காக சர்வதேச அங்கீகாரத்தை பெற்றது ஒரு எடுத்துக்காட்டாகி உள்ளது. இந்த ஆண்டு T4 கல்வியால் கௌரவிக்கப்பட்ட இந்தியாவிலிருந்து ஒரே அரசு மராத்தி-நடுத்தர பள்ளி இதுவாகும்.
2 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் சேர்க்கை 3 மாணவர்களாகக் குறைந்ததால், அந்தப் பள்ளி மூடப்படும் நிலையை எதிர்கொண்டது. மாநில விதிமுறைகளின்படி, 10க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் பொதுவாக மூடப்படுகின்றன.
இருப்பினும், உள்ளூர் சமூகத்தின் கூட்டு மற்றும் தொலைநோக்கு முயற்சிகள் மூலம், தப்பிப்பிழைத்தது மட்டுமல்லாமல் செழித்து வளர்ந்தது. இன்று இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை 120 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
விருது பெற்ற இந்த பள்ளியை அம்மாநில துணை முதல்வர் அஜித் பவார் பாராட்டி உள்ளார். இந்த சாதனை மகாராஷ்டிராவிற்கு பெருமையான தருணம். மேலும், ஜலிந்தர்நகர் ஜில்லா பரிஷத் பள்ளி ஏற்றுக்கொண்ட 'மாணவர்கள்-கற்பித்தல்-மாணவர்கள்' மாதிரி புரட்சிகரமானது.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், பள்ளி மாநிலத்திற்கு மட்டுமல்ல, முழு நாட்டிற்கும் ஒரு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து பள்ளியின் முதல்வர் தத்தாத்ரே வேர் கூறுகையில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள், சமூக தன்னார்வலர்கள் மற்றும் பலரின் கூட்டு முயற்சியால் பள்ளி அங்கீகாரம் பெற்றது. அவர்கள் புதிய உயரங்களை அடைய எங்களுக்கு உதவினர். எந்தவொரு சமூகத் திட்டமும் வெற்றிபெற, நம்பிக்கை முக்கியமானது. மேலும் நேர்மையான, தன்னலமற்ற வேலையிலிருந்து மட்டுமே நம்பிக்கை வருகிறது என்று அவர் கூறினார்.
- சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.
- மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாவேரிப்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக கலைவாணி என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்த பள்ளியில் 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தனக்கு கால் அமுக்கி விடுமாறு கூறி வந்ததாக தெரிகிறது. சில மாணவிகள் பள்ளி வளாகத்தில் அவருக்கு கால் அமுக்கி விட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இது தொடர்பான சில வினாடிகள் ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று பரவியது. இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் மற்றும் அதிகாரிகள் நேற்று அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
இது சம்பந்தமாக தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியை கலைவாணியை அந்த பள்ளியில் இருந்து இடமாற்றம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் அரூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
- அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை கட்டுவதற்கு ரூ.54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு.
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து குமரி மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் செட்டிகுளம் அரசு பள்ளியில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு வகுப்பறை கட்டுவதற்கு ரூ.54 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் எம்.பி பங்கேற்று பூஜையை தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் அழகுமீனா, மாவட்ட கல்வி துறை அதிகாரி பாலதண்டாயுதபாணி, மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார், மாநில காங்கிரஸ் செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் டாக்டர் சிவகுமார், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்கியராஜ், வட்டார தலைவர் அசோக்ராஜ், முன்னாள் மாவட்ட தலைவர் ராதா கிருஷ்ணன், வார்டு தலைவர் வர்கீஸ், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் மற்றும் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும், தக்கலையில் வசந்த் அன்கோவின் 130-வது கிளை இன்று திறக்கப்பட்டது. வசந்த் அன்கோ பார்ட்னர் விஜய்வசந்த் எம்.பி. புதிய கிளையை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், தாரகை கத்பட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
- கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த ஆலங்குடி பூனாயிருப்பு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 5-ம்வகுப்பு வரை மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் இன்று காலை பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதனை மாணவர்கள் சாப்பிட்டனர். அப்போது சில மாணவர்கள் சாம்பாரில் பல்லி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர்.
இதையடுத்து காலை உணவை சாப்பிட்ட 8 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை ஆசிரியர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.
- நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
இன்று துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டோம்.
நேற்று நடந்த மாணவரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவரும் கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுடனும், அப்பள்ளி மாணவர்களுடனும் கலந்துரையாடினோம்.
நேற்று முதல் மாணவர்களுக்காக நடைபெறும் உளவியல் ஆலோசனைகள் குறித்து கேட்டறிந்தோம்.
மேலும், அவ்வகுப்பில் பயிலும் மற்ற மாணவர்களின் பெற்றோர்களையும் அழைத்து நம்பிக்கையளிக்கும் விதமாக உரிய ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
- தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.
- இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் துவாக்குடியில் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்று வந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வட்டம் எம்.வி.குப்பம் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தேன். யுவராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாணவர் யுவராஜ் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக ஆயிரமாயிரம் மர்மங்கள் எழுந்துள்ள நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, மாணவனின் உயிரிழப்பை மூடி மறைக்க முயற்சிகள் நடக்கின்றன. மாணவர் யுவராஜ் அவரது விடுதி அறையின் கதவைப் பூட்டிக் கொண்டு, கேபிள் ஒயரைக் கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான பொய் என்றும், அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் கூறப்படுகிறது.
துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி கிருத்திகா கடந்த ஜூன் 11-ஆம் நாள் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாயின. அதைத் தொடர்ந்து அனைத்து அறைகளிலும் உள்புறமாக தாழிடும் வசதி அகற்றப்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது மாணவர் யுவராஜ் எவ்வாறு விடுதி அறையின் கதவை உள்புறமாக பூட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும்? என்று சக மானவர்களும், யுவராஜின் பெற்றோரும் எழுப்பும் வினாக்களுக்கும் பள்ளி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் இல்லை.
அதுமட்டுமின்றி, மாணவர் யுவராஜ் மர்மமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் தினத்திற்கு முந்தைய நாள் இரவு, அவர் தமது தாய், தந்தையருடன் தொலைபேசியில் மகிழ்ச்சியாக உரையாடியிருக்கிறார். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் அவரிடம் சிறிதும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இத்தகைய சூழலில் மாணவர் யுவராஜ் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் கூறப்படுவதை ஏற்க முடியவில்லை.
தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் மாதிரி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தான் பல்வேறு தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதிரி பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அதிலும் குறிப்பாக இந்த மாதிரிப் பள்ளி, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்தத் தொகுதியில் அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளியை கடந்த மே மாதம் 8-ஆம் தேதி தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பள்ளியில் அனைத்து சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்டு, மாணவர்கள் மன மகிழ்ச்சியுடன் கல்வி கற்பதற்கான சூழல் உறுதி செய்யப்பட வேண்டும். ஆனால், அத்தகைய சூழல் அங்கு இல்லை.
திருவெறும்பூர் துவாக்குடி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இரு மாதங்களில் இரு மாணவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்தது இயல்பானதாகத் தோன்றவில்லை. இதன் பின்னணியில் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அதற்காக மாணவர் யுவராஜ் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் மாணவர் யுவராஜின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






