என் மலர்
நீங்கள் தேடியது "government school"
- அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்பற்றதாக இருக்கவேண்டும்
- இந்த முடிவு எதிர்காலத்தில் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும்
கேரளாவில் அரசு சார்பில் இனிமேல் தொடங்கப்படும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு
மதம் சார்ந்த பெயர்கள் வைக்கப்படாது என கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச்சார்பற்றதாக இருப்பதையும், சமத்துவம் மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளை பிரதிபலிப்பதையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முடிவு எதிர்காலத்தில் தொடங்கப்படும் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், தற்போதுள்ள அரசு கல்வி நிறுவனங்களின் பெயர்களைப் பாதிக்காது என்றும் கூறப்படுகிறது.
- திவாகர் நேர்காணல்களில் பேசிய விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பின.
- பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார்.
திவாகர் என்பவர் இணையத்தில் ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு பிரபலமானார். குறிப்பாக கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை நடித்து காட்டி தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கொண்டு தொடர்ந்து வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்தார்.
தனக்கு மிகப்பெரிய நடிப்பு திறமை இருப்பதாகவும் தான் மிகப்பெரிய ஹீரோ மெட்டீரியல் என்று அவர் நினைத்துக்கொண்டு அவர் நேர்காணல்களில் பேசிய விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பின.
இதனிடையே, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பெண்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டார் என்றும் சாதி ரீதியாக பேசினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து சில வாரங்களிலேயே அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், அரசு பள்ளி ஒன்றில் சிறப்பு விருந்தினராக திவாகர் கலந்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அரசுப்பள்ளியில் மாணவர்களிடையே செல்பி வீடியோ எடுத்த திவாகர் நடிப்பு அரக்கன் என்று கத்த மாணவர்களும் நடிப்பு அரக்கன் என்று கூச்சலிடும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீப காலமாக இன்ஸ்டா பிரபலங்களை பள்ளி, கல்லூரிகளில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இந்த புதிய நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 12,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது.
- உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பட்டுள்ளன.
இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 18,727 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 12,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. இது கல்வித் துறையில் தனியார் மயமாக்கல் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டுவதும் இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
அரசுப் பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நவீனக் கல்வி முறைகளைச் செயல்படுத்துவதில் உள்ள தொய்வு போன்றவை அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கு அடிப்படையாக அமைந்துள்ளன.
பாஜக ஆட்சியில் உள்ள உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருப்பது தரவுகளில் தெரியவந்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் (RTE) நடைமுறையில் இருந்தும், ஏழை மாணவர்களுக்கான தரமான கல்வியை தரும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
- பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
- மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் வகுப்பறையில் வைத்து 1 ஆம் வகுப்பு மாணவியை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
திகம்கர் மாவட்டம் பலேரா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை பள்ளிக்குச் சென்ற அந்த 6 வயது சிறுமியை ஆசிரியர், பள்ளியில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மாலையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமி, அழுதுகொண்டே பெற்றோரிடம் ஆசிரியர் செய்த செயலைக் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் பலேரா காவல் நிலையத்தில் திரண்டு புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போக்சோவின் கீழ் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
- மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
- இதுதான் உங்கள் நல்லாட்சியா? என அங்கு ஆளும் பாஜக அரசிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.
மத்திய பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இங்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவானது நோட்டு, புத்தக பேப்பரில் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் காகிதங்களில் உணவை வைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது.
மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திரிபாதி மற்றும் மதிய உணவுப் பிரிவு பொறுப்பாளருக்கு மெத்தனமாகச் செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மோகன் யாதவ் தலைமையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்த அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா, "இதுதான் உங்கள் நல்லாட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்த்தின் ஷீயோபுர் பகுதியிலும் இதேபோல பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
- மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
- பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மதிய உணவு இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவன் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
பள்ளி சுவர் இடிந்து விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாய் படை நடத்திய தேடுதலின் போது, புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன
- கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரகாண்டில் அல்மோரா மாவட்டத்தின் சுல்ட் பகுதியில் உள்ள தபாரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் இருந்து 161 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் மீட்டுள்ளனர்.
பள்ளி முதல்வர் சுபாஷ் சிங் முதலில் புதர்களில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்களைக் கவனித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
இரண்டு போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தன. வெடிகுண்டு அகற்றும் படை மற்றும் நாய் படையும் வரவழைக்கப்பட்டன.
நாய் படை நடத்திய தேடுதலின் போது, புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன, மற்றவை 20 அடி தொலைவில் காணப்பட்டன. மொத்தம் 161 ஜெலட்டின் குச்சிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வெடிகுண்டு அகற்றும் படையினரால் சேமிக்கப்பட்டன.
கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் ஏன் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமீபத்தில் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் அரியானாவில் அதிக அளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் போலீசார் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
- மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், மேலியபுட்டி மண்டலத்தில் பந்தபள்ளி பெண்கள் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி அமைந்துள்ளது.
இங்கு பாட நேரத்தில் ஆசிரியை ஒருவர் நாற்காலியில் அமர்ந்தபடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்க, மாணவிகள் அவருக்குக் கால்கள் பிடித்துவிடும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்கப்பட்ட நிலையில் தான் முழங்கால் வலியால் அவதிப்பட்டதாகவும், அன்றைய தினம் கீழே விழுந்ததாகவும், மாணவிகள் உதவுவதாகக் கூறி அச்செயலை செய்ததாகவும் ஆசிரியை விளக்கமளித்தார்.
இதுதொடர்பாக விசாரணை முடியும் வரை அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னர் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, மாணவர்களைத் தனது காரைக் கழுவவும் பிற தனிப்பட்ட வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தியதற்காகவும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
- ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும் போது தனியாகப் பிரித்து வைக்கப்படுவதாகவும் கூறினார்.
இமாச்சலப் பிரதேசத்தில் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் 8 வயது தலித் மாணவனை கொடூரமாக நடத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தலைநகர் சிம்லாவில் ரோஹ்ரு பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில், தலைமை ஆசிரியர் உட்பட மூன்று ஆசிரியர்கள், சுமார் ஒரு வருடமாக 1 ஆம் வகுப்பு பயின்று வரும் அந்த சிறுவனைத் தொடர்ந்து அடித்துத் துன்புறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர் தேவேந்திரா மற்றும் ஆசிரியர்கள் பாபு ராம், கிருத்திகா தாக்கூர் ஆகிய மூவர் மீதும், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து தாக்கப்பட்டதால், அந்தச் சிறுவனின் காதில் இரத்தம் வந்துள்ளதுடன், செவிப்பறையும் சேதமடைந்துள்ளது என்று சிறுவனின் பெற்றோர் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதோடு மட்டுமில்லாமல், ஆசிரியர்கள் சிறுவனைப் பள்ளி கழிவறைக்கு அழைத்துச் சென்று, அவனது காற்சட்டைக்குள் ஒரு தேளைப் போட்டுள்ளனர். இந்தச் சம்பவங்களை வெளியே சொன்னால், கைது செய்யப்படுவாய் அல்லது சுட்டுக் கொல்லப்படுவாய் என்று ஆசிரியர்கள் சிறுவனை மிரட்டியதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் பெற்றோர் இது குறித்து புகார் அளித்தாலோ அல்லது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டாலோ வாழ்க்கையையே தொலைத்துவிடுவீர்கள் என மிரட்டப்பட்டுள்ளனர்.
பள்ளியில் சாதி ரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகவும், ராஜபுத்திர சமூக மாணவர்களிடமிருந்து தலித் மாணவர்கள் உணவருந்தும் போது தனியாகப் பிரித்து வைக்கப்படுவதாகவும் சிறுவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
- மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்தார்.
- இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது
ராஜஸ்தான் மாநிலம் பார்மேர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் குடிபோதையில் பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலை 6 மணியளவில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் குடிபோதையில் மயங்கி விழுந்து கிடந்ததை கிராம மக்கள் பள்ளி ஊழியர்களுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் இதனை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பள்ளி முதல்வர் ஆசிரியரை பணிநீக்கம் செய்தார்.
முன்னதாக, ஆசிரியர் தனது மொபைல் எண்ணை ஒரு மாணவியின் நோட்டில் எழுதியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், முதல்வர் அவரைக் கண்டித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
- கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறையில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 6-ம் தேதி ரூ.34 லட்சம் செலவில் புதிய சுகாதார வளாகம் மாணவிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.
அப்போது கழிப்பறையின் குறுக்கே தடுப்புச்சுவர் இன்றி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், தற்போது இளநிலை பொறியாளர் ரமேஷ், செயல் அலுவலர் கமலக்கண்ணன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- பெற்றோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர்.
- 3 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கண்சால் பைல் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
நேற்று மதியம் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவை சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டிற்க்கு சென்ற 17 மாணவ, மாணவிகளுக்கு இரவு திடீரென வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மாணவ, மாணவிகளை சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் மூன்று மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகன் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகளின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார். மேலும் மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.
இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






