என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "explosives"

    • நாய் படை நடத்திய தேடுதலின் போது, ​​புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன
    • கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    உத்தரகாண்டில் உள்ள ஒரு பள்ளி அருகே மொத்தம் 20 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள 161 ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உத்தரகாண்டில் அல்மோரா மாவட்டத்தின் சுல்ட் பகுதியில் உள்ள தபாரா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகிலுள்ள புதர்களில் இருந்து 161 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் மீட்டுள்ளனர்.

    பள்ளி முதல்வர் சுபாஷ் சிங் முதலில் புதர்களில் சந்தேகத்திற்கிடமான பொட்டலங்களைக் கவனித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

    இரண்டு போலீஸ் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தன. வெடிகுண்டு அகற்றும் படை மற்றும் நாய் படையும் வரவழைக்கப்பட்டன.

    நாய் படை நடத்திய தேடுதலின் போது, புதர்களில் சில ஜெலட்டின் குச்சி பாக்கெட்டுகள் காணப்பட்டன, மற்றவை 20 அடி தொலைவில் காணப்பட்டன. மொத்தம் 161 ஜெலட்டின் குச்சிகள் பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டு வெடிகுண்டு அகற்றும் படையினரால் சேமிக்கப்பட்டன.

    கட்டுமானம் மற்றும் சுரங்கப் பணிகளில் பாறைகளை வெடிக்கச் செய்ய ஜெலட்டின் குச்சிகள் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இவ்வளவு பெரிய அளவில் ஏன் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டன என்பது குறித்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சமீபத்தில் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு மற்றும் அரியானாவில் அதிக அளவு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து நாடு முழுவதும் போலீசார் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பட்டாசுகள் வெடித்ததில் யாசின், சுனில் உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
    • விபத்தில் வீடு முழுவதும் சேதமான நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள பட்டாபிராம் பகுதியில் விற்பனை செய்வதற்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்து 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்ததில் யாசின், சுனில் உள்ளிட்ட 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

    விபத்தில் வீடு முழுவதும் சேதமான நிலையில், தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெய்டபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது
    • வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின.

    அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள வெடிபொருள் உற்பத்தி ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

    மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க நேரப்படி காலை 7.45 மணிக்கு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

    வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின. உள்ளூர் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

    சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 18 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.   

    • பத்திரிகையாளர் ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் வெடிப்பொருள் வீசியுள்ளனர்.
    • நாயின் இந்த செயலால் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் உயிர் பிழைத்தனர்.

    பெரு நாட்டில் வளர்ப்பு நாய் வெடிப்பொருளை வாயிலேயே கடித்து அணைத்ததால் குடும்பமே உயிர் தப்பிய நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

    பத்திரிகையாளர் ஒருவரின் வீட்டில் மர்மநபர்கள் வெடிப்பொருள் வீசியுள்ளனர். இதனை பார்த்த உரிமையாளரின் வளர்ப்பு நாய், தனது உயிரை பணயம் வைத்து வெடிப்பொருளை வாயிலேயே கடித்து அணைத்தது.

    நாயின் இந்த செயலால் பத்திரிகையாளரின் குடும்பத்தினர் உயிர் பிழைத்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • கழிப்பறை அருகே அந்தப் பையைக் கண்டெடுத்தனர்.
    • கலசிபாளையம் மத ரீதியாக முக்கியமான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாகும்.

    கர்நாடக மாநிலம் பெங்களூருவின் பரபரப்பான கலசிபாளையம் பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு பொது கழிப்பறைக்கு வெளியே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், அங்கு வைக்கப்பட்டிருந்த பைகளில், ஆறு ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டிட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

    சந்தேகத்திற்கிடமான பை குறித்து தகவல் கிடைத்ததும், பெங்களூரு போலீசார் பேருந்து நிலையத்திற்கு விரைந்து சென்று வெடிபொருட்களை மீட்டனர். அவை தனித்தனி பைகளில் வைக்கப்பட்டு இருந்ததாக மேற்கு மண்டல துணை ஆணையர் எஸ். கிரிஷ் உறுதிப்படுத்தினார்.

    அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியாளர்கள் சுமார் 1:15 மணியளவில் கழிப்பறை அருகே அந்தப் பையைக் கண்டெடுத்து அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாக FIR கூறுகிறது.

    ஆரம்பகட்ட விசாரணையில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் சாதாரணமாக கல் குவாரிகளில் பயன்படுத்தப்படுபவையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

    கலசிபாளையம் மத ரீதியாக முக்கியமான மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக இருப்பதால், இந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வாரம் பெங்களூருவில் 40க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

    • நாழிக்கிணறு பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக் கூடிய மர்ம பொருள் ஒன்று கிடந்தது.
    • அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நாழிக்கிணறு பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக் கூடிய மர்ம பொருள் ஒன்று கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மர்மபொருளை கைப்பற்றினர். அது நாட்டு வெடிகுண்டா? அல்லது திருவிழாவின் போது போடப்பட்ட வெடி பொருளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தடுப்பு பிரிவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பனங்காடுகளில் சோதனை நடத்தினர்.
    • வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டுகள் கிடைத்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஊராட்சி பகுதிக்குட்பட்ட அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் பனங்காடுகள் மற்றும் தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு வெடிகுண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று அக்காள்மடம் வடக்கு கடற்கரை பகுதியில் உள்ள பனங்காடுகளில் சோதனை நடத்தினர்.

    அப்போது வெடிகுண்டுகளை தேடி கண்டுபிடிக்கும் டிடெக்டர் கருவி மூலம் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் 1 அடி ஆழத்தில் குழிகளை தோண்டி வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என்று போலீசார் சோதனை செய்தனர்.

    இதுபற்றி தகவல் வெளியானதும் உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். இதன் காரணமாக நேற்று மாலை 3 மணியுடன் போலீசார் தங்கள் சோதனைகளை முடித்து கொண்டு புறப்பட்டு சென்றனர். இன்று 2-வது நாளாக மீண்டும் சோதனை நடத்திய இடங்களில் போலீசார் வெடிகுண்டுகள் புதைக்கப்பட்டுள்ளதா? என்று தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, இலங்கையில் கடந்த 2006-ம் ஆண்டில் ராணுவத்திற்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த போரின் போது இலங்கையில் இருந்து ராமேசுவரம் வந்த விடுதலை புலிகள் அமைப்பை சேர்ந்த சிலர் பாம்பன் தங்கச்சிமடம் வடக்கு கடற்கரை பகுதிகளில் வெடிகுண்டுகள் மற்றும் பயங்கர ஆயுதங்களை புதைத்து விட்டு சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தி வருகிறோம். இதுவரை வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. வெடிகுண்டுகள் கிடைத்தால் அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    ஏற்கனவே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தங்கச்சிமடம் கடற்கரை பகுதியில் மீனவர் ஒருவர் வசித்த வீட்டின் அருகில் இருந்து ஏராளமான துப்பாக்கி தோட்டாக்கள், வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    இது மட்டுமின்றி அந்த பகுதியில் சமூக விரோதிகள் மற்றும் கடத்தல் காரர்கள் போதை பொருட்களும் பதுக்கி வைத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதன் அடிப்படையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    • பாலத்தை தகர்ப்பதற்கு சுமார் 150 கிலோ வெடிபொருட்கள் தேவைப்பட்டன.
    • பாழடைந்த பாலம் சில நொடிகளில் துளி படுக்கையில் இடிந்து விழும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

    ஜெர்மனியில் மோட்டார் பாதை பாலம் ஒன்று வெடி மருந்து கொண்டு வெடித்து வெற்றிகரமாக தகர்க்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

    கடந்த 7ம் தேதி அன்று ஜெர்மனியின் லுடென்ஷெய்டில் உள்ள 450 மீட்டர் நீளமுள்ள ரஹ்மேட் பள்ளத்தாக்கு பாலம் சில நொடிகளில் இடிந்து விழுந்தது.

    1965 மற்றும் 1968 க்கு இடையில் கட்டப்பட்ட பாலத்தை தகர்ப்பதற்கு சுமார் 150 கிலோ வெடிபொருட்கள் தேவைப்பட்டன. இதைதவிர, அண்டை கட்டிடங்களை பாதுகாக்க ஒரு தடையை உருவாக்க 50 அடுக்கப்பட்ட கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கிடையில், தாக்கத்திலிருந்து சேதத்தைத் தடுக்க ஜன்னல்களில் கூடுதல் சாதனங்கள் பொருத்தப்பட்டன.

    பாழடைந்த பாலம் சில நொடிகளில் இடிந்து விழும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

    • வெடிபொருட்கள் உரசியதில் திடீரென பட்டாசு வெடித்து குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது.
    • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், திருப்பதி மாவட்டம், வரதைய்ய பாலம் மண்டலம், குவ்வகுளி பகுதியில் கல்யாண் குமார் என்பவர் பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.

    பட்டாசு தயாரிக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் அருகில் உள்ள குடோனில் சேமித்து வைக்கப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது வெடிபொருட்கள் உரசியதில் திடீரென பட்டாசு வெடித்து குடோனில் இருந்த பட்டாசுகள் மீது விழுந்தது.

    இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பூமி அதிர்ந்தது. வெடி விபத்தில் வீடுகள் குலுங்கின.

    அப்போது பட்டாசு சேமிப்பு கிடங்கில் வேலை செய்து கொண்டிருந்த சாது நாகேந்திரா (வயது 31), எல்லக்கட்டாவை சேர்ந்த சங்கரய்யா (30), ஏழுமலை (45) ஆகியோர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    மற்றொரு தொழிலாளி வீரராகவ் மற்றும் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் கல்யாண் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தொழிலாளர்களின் உடல் பாகங்கள் அங்குள்ள மரக்கிளைகளில் தொங்கியது. இது வெடி விபத்தின் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தியது.

    விபத்தில் காயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு திருப்பதி உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் விபத்தில் பலியானவர்களின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பட்டாசு தொழிற்சாலையில் பட்டாசு தயாரிக்க அனுமதி இல்லை. பட்டாசு சேமித்து வைக்க மட்டுமே அனுமதி உள்ளது. பட்டாசு சேமிப்பு தொடங்கியதற்கான உரிமம் ஏற்கனவே காலாவதியாகி விட்டது தெரியவந்துள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்யாமலேயே பட்டாசு தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.

    அடிக்கடி பட்டாசு தொழிற்சாலைகளை ஆய்வு செய்வதில்லை எனவும் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர்.

    பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.
    • 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள மஜ்ரா கொல்லப்பட்டி சடையாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவர் சர்கார் கொல்லப்பட்டி பூதநாச்சி அம்மன் கோவில் அருகில் விவசாய தோட்டத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார்.

    கந்தசாமி மகன் சதீஷ்குமார் (வயது 41), மஜ்ரா கொல்லப்பட்டியில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வந்தார். இதை கந்தசாமி கவனித்து வந்ததால் பட்டாசு ஆலையை தற்போது கந்தசாமியின் மகன்களான வெங்கடேசன், சதீஷ்குமார் ஆகியோர் நடத்தி வந்தனர்.

    பட்டாசு ஆலையில் நாட்டு வெடிகள் மற்றும் வாண வேடிக்கை பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தன. இந்த ஆலை தினமும் காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்தது. தற்போது பண்டிகை காலம் என்பதால் ஆர்டர் அதிகமாக இருந்ததால் பட்டாசுகள் கூடுதலாக தயாரிக்கப்பட்டு வந்தன.

    இந்நிலையில் பட்டாசு ஆலையில் நேற்று சதீஷ்குமார் மற்றும் 6 பெண்கள் உட்பட 12 பேர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இதில் 3 பேர் மதியத்துக்கு பிறகு சாப்பிட சென்றுவிட்டனர். இதனால் ஆலையில் 9 பேர் மட்டுமே வேலை பார்த்தனர்.

    அப்போது ஆலையில் பட்டாசுக்கு மருந்து கலவையை சதீஷ்குமார் தயார் செய்தபோது பட்டாசு ஆலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

    இதில் பட்டாசு ஆலை தரை மட்டமானதுடன் அந்த இடமே புகை மண்டலமாக காட்சியளித்தது. மேலும் அங்கு கொழுந்து விட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    பட்டாசு ஆலை வெடித்ததில் 9 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடி படி ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மற்றும் இரும்பாலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் மகன் சதீஷ்குமார் 41, நடேசன் 40, எம்.கொல்லப்பட்டி அருகே உள்ள சடையாண்டி ஊரைச் சேர்ந்த பானுமதி (55) ஆகியோர் உடல் சிதறி இறந்தனர்.

    3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்தில் மஜ்ரா கொல்லப்பட்டியைச் சேர்ந்த மோகனா (38), வசந்தா (45), மகேஸ்வரி (34), எஸ்.கொல்லப் பட்டியை சேர்ந்த மணிமேகலை (36), பிரபாகரன்(30), பிருந்தா (28) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

    அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த அனைவரும் 40 முதல் 60 சதவீதம் உடல் கருகிய நிலையில் உள்ளதால், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த இடத்தை மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    தடயவியல் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினரும், காயம் அடைந்த 6 பேரின் உறவினர்களும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் குவிந்தனர். அவர்கள் காயமடைந்தவர்களை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த விபத்தில் இறந்த சதீஷ்குமாரின் கை 500 அடி தூரத்தில் உள்ள விவசாய நிலத்தில் கிடந்தது. அதேபோல பானுமதி என்ற பெண்ணின் தலையும் துண்டானது. இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுது புரண்டனர்.

    இதற்கு இடையே சேலம் இரண்டாவது நீதித்துறை நடுவர் அரசு மருத்துவமனைக்கு வந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரிடமும் வாக்குமூலம் பெற்றார்.

    அப்போது, விபத்தில் படுகாயம் அடைந்த பிருந்தா (28) கூறுகையில், எல்லோரும் வேலை செய்து கொண்டிருந்தோம். நான் பட்டாசுகளை அடுக்கிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. என்ன ஆனது? எப்படி ஆனது என்று தெரியவில்லை. ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. என் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டு கண் கலங்கினார்.

    பட்டாசு தயாரிப்பதற்கு 10 சதவீதம் கார்பனும், 75 சதவீதம் பொட்டாசியம் நைட்ரைட்டும், 15 சதவீதம் சல்பரும் பயன்படுத்தப்படுகிறது. இதனை சரியான அளவில் கலக்க வேண்டும். இதில் ஏதாவது ஒரு பொருள் அதிக அளவில் கலந்தால், இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கலவை செய்யும்போது தான் இந்த விபத்து நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதனை சதீஷ்குமார் கலந்த போது தான் வெடி விபத்து நடந்துள்ளதால் அவர் கைதுண்டானதும், அவர் அருகில் நின்ற பெண்ணுக்கும் தலை துண்டாகிய கொடூர சம்பவம் நடந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

    • தொழிற்சாலையில் 1,300 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
    • உக்ரைனில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பல தொழிற்சாலைகள் ரஷ்யாவில் முழு வேகத்தில் இயங்கி வருகிறது.

    ரஷ்யாவின் மத்திய பகுதியான சமாராவில் வெடிபொருள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

    ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ராம்சிந்தெஸ் தொழில்துறை வெடிமருந்துகளின் முக்கிய உற்பத்தியாளர்களில் ஒன்றாகும்.

    தொழிற்சாலைக்கு சொந்தமான நிறுவனம் 1997ல் உருவாக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் 1,300 பேர் பணியில் உள்ளனர்.

    இதேபோல் கடந்த மாதம், மாஸ்கோவின் தென்கிழக்கில் உள்ள டாம்போவ் பகுதியில் உள்ள துப்பாக்கித் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

    சப்பாயிவெஸ்க் நகரில் உள்ள புராமின்தெஸ் ஆலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டது. இதில், எட்டு பேர் காயமடைந்தனர். அவர்களில் ஆறு பேர் இறந்தனர்.

    பழுதுபார்க்கும் பணியின் போது உபகரணங்கள் அகற்றப்பட்டதன் விளைவாக வெடி விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

    உக்ரைனில் தாக்குதல் தொடங்கியதில் இருந்து பல தொழிற்சாலைகள் ரஷ்யாவில் முழு வேகத்தில் இயங்கி வருகிறது என்பது குறுிப்பிடத்தக்கது.

    • வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் உள்ள பட்டாசு குடோனில் நேற்று திடீரென்று வெடிவிபத்து நடந்து 9 பேர் இறந்தனர். இந்த சம்பவத்தால் 15 பேர் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும், வெடிவிபத்தால், பட்டாசு குடோனை சுற்றி இருந்த 5 கட்டிடங்கள் இடிந்து சேதமானது. இதேபோல் அந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் விரிசல் ஏற்பட்டும், சுவர் உடைந்து சேதமானது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரிகள் பழையபேட்டை பகுதியில் விபத்த இடத்தில் சுற்றியுள்ள குடியிருப்பு வீடுகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த வெடிவிபத்து குறித்து மாவட்ட எஸ்.பி. தலைமையில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெடிவிபத்தில் காயமடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு இன்று அமைச்சர் சக்கரபாணி அரசு அறிவித்த நிதிஉதவிக்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    கிருஷ்ணகிரி பழையபேட்டையில் நடந்த பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து தருமபுரி மாவட்ட தடயவியல் நிபுணர்கள் நேற்று தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து ஆய்வறிக்கை இன்று அவர்கள் தாக்கல் செய்தனர். அதில் இந்த வெடிவிபத்துக்கு ஒட்டலில் உள்ள சிலிண்டர் வெடித்ததால் தான் அருகில் இருந்த பட்டாசு குடோன் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டுள்ளளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×