search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gelatin sticks"

    • கேரளாவில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் தினமும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
    • சந்தேகப்படும் நபர் ஒருவரின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் தினமும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    அதன்படி இன்று அதிகாலை காசர்கோடு பகுதியில் உள்ள மூழியார் பகுதிக்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும் நபர் ஒருவரின் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.

    அங்கு ஏராளமான பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதனை திறந்து பார்த்தபோது அதில் ஏராளமான ஜெலட்டின் குச்சிகள் மற்றும் பயங்கர வெடிமருந்துகள் இருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் உடனடியாக இதுபற்றி காசர்கோடு வெடிமருந்து தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து வீட்டில் மறைத்து வைத்திருந்த வெடிபொருள்களை கைப்பற்றினர்.

    இதில் 2800 கிலோ ஜெலட்டின் குச்சிகள், 7 ஆயிரம் டெட்டனேட்டர்கள் மற்றும் வெடிபொருள்கள் இருந்தன. இதையடுத்து அந்த வீட்டில் இருந்த முஸ்தபா என்பரை போலீசார் கைதுசெய்தனர்.

    அவரிடம் விசாரித்தபோது, அவர் ஏற்கனவே குவாரி நடத்தி வந்ததாகவும், இந்த வெடிபொருள்களை குவாரிக்கு விற்பனை செய்ய வைத்திருந்தததாகவும் கூறினார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாராய வேட்டைக்கு சென்று அங்கு பயங்கர வெடிபொருள்கள் பறிமுதல் செய்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தொண்டி அருகே கடற்கரையில் ஜெலட்டின் குச்சிகளை பதுக்கியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • மீன் பிடிப்பதற்காக அதற்கான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தொண்டி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பாசிப்பட்டிணம் கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் வெடிவைத்து மீன் பிடிப்பதற்காக அதற்கான பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதாக தொண்டி கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி இன்று கடலோரப் பாதுகாப்பு குழும பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், தேவிபட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார், தொண்டி மரைன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் முஸ்தபா ஆகியோர் தலைமையிலான போலீசார்கள் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்

    அப்போது கடற்கரையில் குழிதோண்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்த 239 ஜெலட்டின் குச்சிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தொண்டி புதுக்குடியை சேர்ந்த கோட்டைராஜா மகன் கண்ணன் மற்றும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலில் வெடிகளை வெடிக்கச்செய்து மீன் பிடிப்பதற்காக ஜெலட்டின் குச்சிகளை பதுக்கியி ருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    மோட்டார் கொட்டகையில் அனுமதிபெறாமல் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எம்.அகரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் புதிதாக கிணறு வெட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கந்தன் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள மோட்டார் கொட்டகையில் அனுமதி பெறாமல் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சனுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் மற்றும் மங்கலம் பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ராஜேந்திரனின் விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையை ஆய்வு செய்தபோது அங்கு அட்டை பெட்டிகளில் எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அட்டை பெட்டிகளில் இருந்த 164 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும், 155 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் தொழிலாளி கந்தன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக கந்தனின் மனைவி விஜயாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் கொட்டகையில் அனுமதிபெறாமல் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
    ×