search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hide"

    சென்னை அமைந்தகரையில் பதுங்கி இருந்து ஆஸ்பத்திரியில் வேலை பார்த்த நக்சலைட் பயங்கரவாதியை போலீசார் கைது செய்தனர். #Naxalitearrested

    சென்னை:

    சென்னை அமைந்தகரையில் தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த நக்சலைட் பயங்கரவாதி ஒருவன் பணி புரிந்து வருவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு சிலிகுரி என்ற இடத்தில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதாக கூறி அம்மாநில போலீசாரால் இவன் கைது செய்யப்பட்டவன் என்றும், அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்து யாருக்கும் தெரியாமல் ரகசியமாக ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியில் வேலைக்கு சேர்ந்திருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் பிடிபட்ட அந்த வாலிபரை போலீசார் அமைந்தகரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது அவனது பெயர் கந்தர்பதாஸ் (24) என்பது தெரிய வந்தது. அசாம் மாநிலத்தை சேர்ந்த இவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் இருந்தது தெரிய வந்தது. இதுபற்றி போலீசார் அவனிடம் விசாரணை நடத்தினர். அப்போது கந்தர்பதாஸ் எனக்கும் பயங்கரவாத இயக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளான்.

    ஆனால் பயங்கரவாத செயல்பாட்டில் ஈடுபட்ட சிலருடன் கந்தர்பதாஸ் கைது செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

    இதையடுத்து கியூ பிரிவு போலீசாரும் கந்தர்பதாசிடம் விசாரணை நடத்தினர். சென்னை போலீசார் மேற்கொண்ட விசாரணைக்கு பின்னர், நக்சலைட் பயங்கரவாதியான கந்தர்பதாஸ், கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

    மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற கந்தர்பதாஸ், ஜாமீனில் விடுதலையான பின்னர் சென்னைக்கு வந்துள்ளான்.

    கடந்த 20 நாட்களுக்கு முன்னர்தான் அமைந்தகரையில் உள்ள ஆஸ்பத்திரியில் வேலைக்கு சேர்ந்துள்ளான். இவன் சென்னைக்கு வந்ததன் பின்னணி என்ன? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    குற்ற வழக்கில் தொடர்புடைய நக்சலைட் அமைப்பை சேர்ந்த நபர் பிடிபட்ட சம்பவம் சென்னை போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்கு பின்னர் கந்தர்பதாஸ் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் மேற்குவங்காள போலீசாரிடம் ஒப்படைக்கப்படுவான் என்று தெரிகிறது.

    அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்தான் கந்தர்பதாஸ் பணிபுரிந்து வந்துள்ளான். இங்கு வட மாநிலத்தவர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள், ஆஸ்பத்திரியில் நடைபெறும் கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத்தவர்களுடன் கந்தர்பதாஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவன் நான் ஒரு பயங்கரவாதி என்று மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

    இதனை தொடர்ந்து ஆஸ்பத்திரி பாதுகாப்பு அதிகாரியான ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ராமதாஸ் அவர் பற்றிய தகவல்களை சேகரித்தார். யூடியூப்பில் தேடிப்பார்த்த போதுதான் கந்தர்பதாஸ் பற்றிய தகவல்கள் தெரிய வந்தது. இதன் பின்னர்தான் அதிகாரி ராமதாஸ் பயங்கரவாதியை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளார்.

    கந்தர்பதாஸ் உல்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே கந்தர்பதாஸ் சட்டை அணியாமல் வெற்று உடம்புடன் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு போஸ் கொடுக்கும் காட்சி சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து சென்னைக்கு வரும் வெளி மாநிலத்தவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். #Naxalitearrested 

    உண்மையிடம் பிடிபடாமல் பிரதமர் நரேந்திர மோடி ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். #Modicanthide #Rahul #Rafalescam
    புதுடெல்லி:

    பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியை நேற்றிரவு ஒளிபரப்பியது. இந்த பேட்டியின்போது ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு நீங்கள் உதவி செய்ததாக வரும் தகவல்கள் தொடர்பாக... என்று நேர்காணல் செய்த பெண்மணி கேள்வி எழுப்பினார்.

    அதற்குள் இடைமறித்த பிரதமர் மோடி, நீங்கள் சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா, இல்லையா? என்று மறுகேள்வி கேட்டார். 

    ரபேல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று கொண்டது. ஆனால், ரபேல் விவகாரம் தொடர்பாக சிலர் தொடர்ந்து கூறிவரும் பொய்களை ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன.

    சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் சில தவறான தகவல்களையும் உங்கள் நிறுவனம் தலைப்பு செய்தியாக்கி விடுகிறது. ஆனால், வெளிச்சத்துகு வர வேண்டிய உண்மைகளை நீங்கள் இருட்டடிப்பு செய்து விடுகிறீர்கள் எனவும் மோடி வேதனையுடன் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், இந்த பேட்டியின் ஒரு பகுதியை தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோ பதிவின் அடிக்குறிப்பாக, ‘திரு.மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது.  உங்களது ‘கர்மா’ (முன்வினைகள்) உங்களை காட்டிக்கொடுத்து விடும். அதை இந்த பேட்டியின்போது உங்களின் குரல் மூலம் இந்த நாட்டால் கேட்க முடிகிறது. 

    உண்மை என்பது மிகவும் வல்லமையான ஆயுதம். இந்த ஊழல் தொடர்பாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா? என சவால் விடுகிறேன்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  #Modicanthide #Rahul #Rafalescam
    திருச்சி அருகே பள்ளி தங்கும் விடுதியில் ஏழை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாளாளர் தலைமறைவானார். அவரை போலீஸ் தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் கருணைபுரி இல்லம் என்ற ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கான தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது.

    இந்த விடுதியில் தங்குவதற்கும், உணவும் இலவசம் என்பதால் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். பெரும்பாலும் ஏழை மாணவிகளே இந்த விடுதியில் அதிகம் தங்கியுள்ளனர்.

    இந்த கருணைபுரி இல்லத்தில் தர்மராஜ் (வயது 65) தாளாளராக உள்ளார். இவர் அவ்வப்போது விடுதிக்கு வந்து ஆய்வு நடத்துவார். அவ்வாறு வரும் சமயங்களில் குறிப்பிட்ட சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து குடிநீர் எடுத்து வரச் சொல்வது, அறையினை சுத்தம் செய்ய சொல்வது, வேண்டிய பொருட்களை எடுத்துக் கொடுக்குமாறு கூறுவது உள்ளிட்ட பணி விடைகள் செய்யுமாறு கூறுவாராம்.

    அவ்வாறு வரும் மாணவிகளிடம் அவர்களின் ஏழ்மையினை பயன்படுத்தியும், மறுத்தால் கல்வி பாதிக்கப்படும், கொலை செய்து விடுவேன் என கூறி பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். பல மாணவிகள் எதிர்காலம் கெட்டுவிடும் என்பதால் சகித்துக்கொண்டு, வெளியே யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய தர்மராஜின் பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாளாளர் தர்மராஜ் தொழுதூர் பகுதியில் இருந்து விடுதியில் தங்கி பயின்று வரும் 8-ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி தாளாளரின் அறையினைவிட்டு வெறியேறி, விடுதியில் உள்ள அறைக்கு சென்று கதறி அழுதுள்ளார்.

    மேலும் வாழ்வில் விரக்தி அடைந்த மாணவி விடுதி அறையில் தற்கொலைக்கும் முயன்றுள்ளார். சக மாணவி கள் அவரை தடுத்து நிறுத்தினர். மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அவரது பெற்றோர் சிறுகனூரில் உள்ள விடுதிக்கு வந்தனர். அப்போது மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை கண்ணீர் விட்டு கதறியபடி பெற்றோரிடம் கூறினார்.

    அப்போது விடுதியில் தங்கியுள்ள வேறு சில மாணவிகளுக்கும் விடுதி தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதனை பாதிக்கப்பட்ட மாணவிகள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்கள் சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கருணைபுரி இல்ல தாளாளர் மீது கடுமையான சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


    தகவல் அறிந்த லால்குடி ஆர்.டி.ஓ. பாலாஜி, மண்ணச்சநல்லூர் சமூக நலத்துறை தாசில்தார் சாந்தி மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று மாணவிகளிடம் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து லால்குடி மகளிர் போலீசாரும் வழக்குப்பதிவு செய்தனர்.

    விசாரணையில் விடுதியில் தங்கி பயின்று வந்த 5 மாணவிகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதற்கிடையே தாளாளர் தர்மராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மாணவிகள் விடுதியில் ஏழ்மையில் வாடும் மாணவிகளுக்கு தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மோட்டார் கொட்டகையில் அனுமதிபெறாமல் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள எம்.அகரத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் புதிதாக கிணறு வெட்டப்பட்டு வருகிறது. இந்த பணியில் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கந்தன் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அங்குள்ள மோட்டார் கொட்டகையில் அனுமதி பெறாமல் வெடிப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சனுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு ராபின்சன் மற்றும் மங்கலம் பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் ராஜேந்திரனின் விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்குள்ள மோட்டார் கொட்டகையை ஆய்வு செய்தபோது அங்கு அட்டை பெட்டிகளில் எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    அட்டை பெட்டிகளில் இருந்த 164 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்களும், 155 ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்தனர். போலீசார் வருவதை அறிந்ததும் தொழிலாளி கந்தன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக கந்தனின் மனைவி விஜயாவை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மோட்டார் கொட்டகையில் அனுமதிபெறாமல் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சம்பவம் விருத்தாசலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
    ×