என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரபேல் போர் விமானம்"

    • 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.
    • பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.

    குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று முன்தினம் அரியானாவில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

    அவருடன் புகைப்படத்தில் இருந்த இந்தியாவின் ஒரே பெண் ரஃபேல் விமானி ஷிவாங்கி சிங் கவனம் பெற்றுள்ளார்.

    அம்பாலா விமானப்படை தளத்தில் உள்ள 'கோல்டன் ஆரோஸ்' என்ற 17வது ஸ்க்வாட்ரனின் ஸ்க்வாட்ரன் லீடராக ஷிவாங்கி சிங் பணியாற்றி வருகிறார்.

    பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவாங்கி, பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். 2017-ல் விமானப்படையின் இரண்டாவது பெண் போர் விமானிகள் பிரிவில் இணைந்தார்.

    ஆரம்பத்தில் அவர் கடினமான மிக்-21 பைசன் விமானங்களை ஓட்டினார். 2020-ல் ரஃபேல் போர் விமானியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதை இயக்கிய இயக்கிய முதல் இந்தியப் பெண்மணி ஆனார்.

    பாகிஸ்தான் ஊடகங்கள் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது ஷிவாங்கி சிங் பிடிபட்டதாகத் தவறான தகவலைப் பரப்பியிருந்தன.

    இதன் பின்னணியில் ஜனாதிபதி முர்முவுடன் ஷிவாங்கி சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் கவனம் ஈர்த்து வருகிறது.

    இன்று டெல்லியில் நடந்த ஆர்ய சமாஜ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நமது நாட்டின் மகள்கள் போர் விமானங்களை இயக்குகின்றனர்" என சிவிங்கி சிங்கை குறிப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.  

    • பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கிறது.
    • இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.

    விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.

    இந்நிலையில், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் திட்ட அறிக்கையை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

    இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் தயாரிக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

    • டாடா நிறுவனம் ஐதராபாத்தில் ஒரு அதிநவீன தொழிற்சாலையை தொடங்க உள்ளது.
    • உற்பத்தி தொடங்கி வருகிற 2028-ம் ஆண்டு விமானத்திற்கான பாகங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    ரபேல் போர் விமானத்தின் உடற்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியஸ்னுடன், டாடா அட்வான்ஸ் சிஸ்டத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இதற்காக டாடா நிறுவனம் ஐதராபாத்தில் ஒரு அதிநவீன தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

    ரபேல் போர் விமானத்தில் உடற்பகுதியான பக்கவாட்டு ஓடுகள் பின்புறப்பகுதி மத்திய உடற்பகுதி மற்றும் முன்பகுதியை தயாரிக்க உள்ளது.

    இந்த தொழிற்சாலை மாதத்திற்கு 2 உடற்பகுதிகள் தயார் செய்யும் திறனை கொண்டதாக இருக்கும். உற்பத்தி தொடங்கி வருகிற 2028-ம் ஆண்டு விமானத்திற்கான பாகங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரெஞ்சு நாட்டிற்கு வெளியே ரபேல் போர் விமான பாகங்கள் ஐதராபாத்தில் முதல் முறையாக தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரபேல் போர் விமானம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
    • வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல் போன்ற நவீன அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.

    புதுடெல்லி:

    பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தன. விமானங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவை முறைப்படி இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன.

    அதன்பின்னர் ஒவ்வொரு தொகுப்பாக விமானங்கள் அனுப்பப்பட்டன. இதுவரை 35 விமானங்கள் வந்து சேர்ந்த நிலையில், இறுதிக்கட்டமாக 36வது ரபேல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது.

    அனைத்து ரபேல் விமானங்களும் வந்து சேர்ந்த நிகழ்வைக் கொண்டாடும் வகையில், இந்திய விமானப்படை தனது டுவிட்டர் பக்கத்தில் "பேக் இஸ் கம்ப்ளீட்" என குறிப்பிட்டுள்ளது.

    இந்த ரபேல் போர் விமானம் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஆயுதம் தயாரிப்பு நிறுவனமான மீட்டோர் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களான வானிலிருந்தே இலக்கைக் குறிவைத்துத் தாக்குதல், ஏவுகணைகளை இடைமறித்துத் தாக்குதல் போன்ற அதிநவீன அம்சங்கள் இந்த விமானத்தில் உள்ளன.

    ரபேல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. #RafaleDeal #RafaleReview
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்த நடைமுறைகளில், முறைகேடு எதுவும் நடக்கவில்லை என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14-ம் தேதி தீர்ப்பு வழங்கியது.  இந்த தீர்ப்பை எதிர்த்து யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் பூஷண், அருண்ஷோரி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தனர். 

    இந்த சீராய்வு மனுக்களுடன், பத்திரிகைகளில் வந்த செய்திகளில் குறிப்பிட்டுள்ள சில ஆவணங்கள், ஆதாரமாக தாக்கல் செய்யப்பட்டன. மத்திய அரசு தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதாடினார். அப்போது, தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் போர் விமானங்கள் கொள்முதல் தொடர்பாக அனைத்து விவரங்களையும் வெளியிடுவது சரியாக இருக்காது என அவர் தெரிவித்தார். 

    ரபேல் ஒப்பந்தத்தில் மத்திய அரசு பல்வேறு தகவல்களை மறைத்ததாக மனுதாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். #RafaleDeal #RafaleReview
    உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    விமானப் படைக்கு, ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சீராய்வு மனுக்களுடன், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பத்திரிகைகளில் வந்த சில செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த கூடுதல் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.



    இந்நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன், ரபேல் சீராய்வு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்வதற்கு 4 வாரம் அவகாசம் வழங்கும்படி மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதிகள், மே 6-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் மே 6-ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    ரபேல் விசாரணை நடைபெற இருக்கும் மே 6-ம் தேதி ஐந்தாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019
    சர்ச்சைக்குரிய ரபேல் ஒப்பந்தம் குறித்து பொறுமையுடன் பேசுங்கள் என பா.ஜனதாவுக்கு, சிவசேனா அறிவுரை கூறியுள்ளது. #RafaleDeal #BJP #ShivSena
    மும்பை :

    சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஜல்காவ் பகுதியில் மராட்டிய மந்திரி கிரிஷ் மகாஜன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் மோதிக்கொண்ட அதிர்ச்சிகரமான வீடியோவை மக்கள் நாடு முழுவதும் கண்டுள்ளனர். தங்கள் கட்சியில் இணைந்தால் குண்டர்கள் கூட வால்மீகியாக மாறிவிடுவார்கள் என பா.ஜனதா கூறியது. ஆனால் இந்த வன்முறை சம்பவம் மூலம் வால்மீகிகள் குண்டர்களாக மாறிய தருணத்தை அனைவரும் உணர்ந்தனர்.

    இது பா.ஜனதா- சிவசேனா கூட்டணிக்கு ஏற்பட்ட கறை மட்டும் அல்ல. பா.ஜனதா தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டிய தருணம் ஆகும். பா.ஜனதா தன்னைத்தானே மாறுப்பட்ட கருத்துடைய கட்சியாக கூறிக்கொள்கிறது. இந்த வன்முறையையும் வேறுபட்ட கருத்துகளை பிரதிபலிக்கும் நிகழ்வு என கூறி நியாயப்படுத்த முடியாது.



    ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து பதிலளிக்கும்போது குறைந்தபட்சம் பொறுமையுடன் பதில் அளியுங்கள். பா.ஜனதாவில் ராணுவ மந்திரியில் இருந்து அனைத்து தலைவர்களும் வாய்க்கு வந்தபடி இந்த பிரச்சினை குறித்து பேசுகிறார்கள்.

    இது கட்சியில் பிரச்சினையை அதிகரிக்க செய்யும். எனவே முடிந்தவரை இதுகுறித்து பேசுவதை குறைத்துகொள்வது நல்லது என்பது எங்களுடைய அறிவுரையாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    நமோ டி.வி.க்கும் தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்காதது குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதில், “ஒன்று அல்லது இரண்டு சேனல்களை தவிர மற்ற அனைத்து சேனல்களும் “நமோ டி.வி.”யாக தான் உள்ளது. அவற்றில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. எனவே “நமோ டி.வி.”க்கு தடை விதிப்பதை தவிர்க்க முடியாது” என்று கூறப்பட்டு உள்ளது. #RafaleDeal #BJP #ShivSena
    உண்மையிடம் பிடிபடாமல் பிரதமர் நரேந்திர மோடி ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். #Modicanthide #Rahul #Rafalescam
    புதுடெல்லி:

    பிரபல இந்தி செய்தி நிறுவனம் ஒன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட நேர்காணல் பேட்டியை நேற்றிரவு ஒளிபரப்பியது. இந்த பேட்டியின்போது ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு நீங்கள் உதவி செய்ததாக வரும் தகவல்கள் தொடர்பாக... என்று நேர்காணல் செய்த பெண்மணி கேள்வி எழுப்பினார்.

    அதற்குள் இடைமறித்த பிரதமர் மோடி, நீங்கள் சுப்ரீம் கோர்ட் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்களா, இல்லையா? என்று மறுகேள்வி கேட்டார். 

    ரபேல் விவகாரத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது. பாராளுமன்றத்தில் இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தை சுப்ரீம் கோர்ட்டும் ஏற்று கொண்டது. ஆனால், ரபேல் விவகாரம் தொடர்பாக சிலர் தொடர்ந்து கூறிவரும் பொய்களை ஊடகங்கள் செய்திகளாக வெளியிடுகின்றன.

    சமூக வலைத்தளங்கள் மூலம் பரப்பப்படும் சில தவறான தகவல்களையும் உங்கள் நிறுவனம் தலைப்பு செய்தியாக்கி விடுகிறது. ஆனால், வெளிச்சத்துகு வர வேண்டிய உண்மைகளை நீங்கள் இருட்டடிப்பு செய்து விடுகிறீர்கள் எனவும் மோடி வேதனையுடன் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், இந்த பேட்டியின் ஒரு பகுதியை தனது டுவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோ பதிவின் அடிக்குறிப்பாக, ‘திரு.மோடி அவர்களே நீங்கள் ஓடலாம். ஆனால், ஒளிய முடியாது.  உங்களது ‘கர்மா’ (முன்வினைகள்) உங்களை காட்டிக்கொடுத்து விடும். அதை இந்த பேட்டியின்போது உங்களின் குரல் மூலம் இந்த நாட்டால் கேட்க முடிகிறது. 

    உண்மை என்பது மிகவும் வல்லமையான ஆயுதம். இந்த ஊழல் தொடர்பாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா? என சவால் விடுகிறேன்’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  #Modicanthide #Rahul #Rafalescam
    கர்நாடக மாநிலம், கலபருகியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ரபேல் பேரத்தில் சிக்கி கொண்ட பிரதமர் மோடி தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிவிட்டதாக தெரிவித்தார். #Rafaledeal #chowkidarModi #Rahul
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், கலபருகியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.

    முன்னதாக, மறைந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கருக்கு மவுன அஞ்சலி செலுத்தும் வகையில் மேடையில் இருந்த பிரமுகர்கள் அனைவரும் 2 நிமிடங்கள் அமைதியாக நின்றனர்.

    பின்னர், பேசிய ராகுல் காந்தி ரபேல் பேரத்தில் சிக்கி கொண்ட பிரதமர் மோடி தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிவிட்டதாக தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் செய்த நரேந்திர மோடி, என்னை இந்த நாட்டின் பிரதமராக்கினால் உங்களது காவலாளியாக இருந்து உழைப்பேன் என்றார். பிரதமரான பிறகு யாருக்கு அவர் காவலாளியாக இருந்திருக்கிறார்? அனில் அம்பானிக்கா, மெகுல் சோக்சிக்கா, நிரவ் மோடிக்கா, லலித் மோடிக்கா? விஜய் மல்லையாவுக்கா? யாருக்காக அவர் காவல் காத்தார்?

    உலகிலேயே மிகப்பெரிய தொகைக்கான ரபேல் போர் விமான பேரத்தில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு 30 ஆயிரம் கோடி ரூபாயை தாரைவார்த்து தந்தார். நாட்டின் காவலாளி நான் மட்டுமே என்று முன்னர் மார்தட்டி வந்த பிரதமர் மோடி, ரபேல் விவகாரத்தில் திருடனாக மாட்டிக் கொண்டார். 

    இதில் சிக்கி கொண்ட பின்னர் தன்னை மட்டும் நாட்டின் காவலாளி என்று பேசிவந்த அவர் தற்போது ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் காவலாளி ஆக்கிவிட்டார். அவர் காவலாளி அல்ல ஒரு திருடன் என்பது இந்த நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து வைத்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #Rafaledeal #chowkidarModi #Rahul
    முதல் ரபேல் போர் விமானம் இன்னும் 7 மாதங்களில் (செப்டம்பரில்) இந்திய விமானப்படையில் சேரும் என இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் தெரிவித்துள்ளார். #RafaleDeal #FranchAmbassador #India
    புதுடெல்லி:

    இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் வேளையில் முதல் ரபேல் விமானம் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வந்து விடும் என தெரிய வந்துள்ளது.



    இது தொடர்பாக இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “பெங்களூருவில் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்கான சிறப்புரிமை எனக்கு கிடைத்தது. அப்போது ராணுவ ஒத்துழைப்பு தொடர்பாக கருத்து பரிமாற்றம் செய்தோம். மேலும், சர்வதேச அரங்கில் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், எல்லா வடிவத்திலுமான பயங்கரவாதத்தையும் எதிர்ப்பதற்கு இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை அளிக்கும் என்று குறிப்பிட்டேன்” என கூறி உள்ளார்.

    டி.வி. சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “ரபேல் போர் விமானங்களை இந்தியா தேர்வு செய்தது, எங்களுக்கு கவுரவம். இன்னும் 7 மாதங்களில் (செப்டம்பரில்) முதல் விமானம் இந்திய விமானப்படையில் சேரும்” என குறிப்பிட்டார்.

    பெங்களூருவில் விமான கண்காட்சியில் ரபேல் போர் விமானம் கலந்து கொண்டு சாகசம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது.
    ரபேல் போர் விமானம் ஊழல் தொடர்பாக ராகுல் காந்தியின் கருத்தை ஆதரிப்பதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். #RafaleDeal #Rahulgandhi

    மும்பை:

    பா.ஜனதாவின் நீண்டகால கூட்டணி கட்சியாக சிவசேனா திகழ்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இக்கட்சி மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணி ஆட்சியிலும் இடம் பெற்றுள்ளது.

    இருந்தாலும் சமீபகாலமாக இந்த இரு கட்சிகளிடையே கருத்து மோதல்கள் இருந்து வருகின்றன. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகிறார்.

    இதனால் பா.ஜனதா- சிவசேனா கட்சிகளுக்கு இடையே கூட்டணி உடையும் அபாயம் ஏற்பட்டது. அதை விரும்பாத சிவசேனா கட்சி எம்.பி.க்கள் பா.ஜனதா கூட்டணியில் தொடர உத்தவ் தாக்கரேயிடம் வலியுறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்த நிலையில் ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆதரவு தெரிவித்து வருகிறார்.

    ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக தலையிட்டு அனில் அம்பானி நிறுவனத்துக்கு பெற்றுக் கொடுத்தது என ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அது குறித்து பிரதமர் அலுவலகம் ரபேல் நிறுவனத்துக்கு அனுப்பியதாக ஒரு கடிதத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இதுகுறித்து சிவசேனா தனது கட்சியின் அதிகாரப்பூர்வமான ‘சாம்னா’ பத்திரிகையில் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-

    “ரபேல் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவரது பேச்சில் தேச பக்தி வெளிப்பட்டது. ராணுவத்தை வலுப்படுத்த காங்கிரஸ் கட்சி விரும்ப வில்லை என்றார். மறுநாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆவணங்களை வெளியிட்டார். அதில் இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் நேரடியாக தலையிட்டிருப்பது தெரிகிறது.

    இதற்கு மோடி பதில் அளிக்க வேண்டும். ரபேல் ஒப்பந்தம் விமான படையை பலப்படுத்துவதற்கா? அல்லது நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தொழில் அதிபரை காப்பாற்றுவதற்கா? .

    மேலும், ரபேல் ஒப்பந்தம் குறித்து இந்தியா- பிரான்ஸ் இடையே நடந்த ஆலோசனையின் போது பிரதமர் அலுவலகம் தலையிட்டதாக கூறியிருப்பதை பாதுகாப்பு துறை அமைச்சகம் மறுத்தது. பிரதமர் மோடியும் திட்டவட்டமாக மறுத்தார். அப்போது பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.

    ஆனால் ராகுல் காந்தி வெளியிட்ட ஆவணங்கள் அவர்களின் தேசபக்தி கோ‌ஷங்களையும், மேஜையை தட்டி எழுப்பிய ஆரவாரத்தையும் அமைதி அடைய செய்து விட்டது.

    இந்த ஒப்பந்த விவகாரத்தில் மோடி நேரடியாக தலையிட்டுள்ளார். முக்கிய பிரமுகர்களான ராணுவ மந்திரியும், ராணுவ அமைச்சக செயலாளரும் இடம் பெறவில்லை. மோடியே தன்னிச்சையாக செயல்பட்டு இருக்கிறார். ரபேல் போர் விமானத்தின் விலை மற்றும் காண்டிராக்டை யார் பெற வேண்டும் என அவரே தீர்மானித்து இருக்கிறார்.

    எனவே இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்களை மோடி எதிர் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. #RafaleDeal #Rahulgandhi

    126 போர் விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்கியதால் ரபேல் ஒப்பந்தத்தில் 41.42 சதவீதம் விலை உயர்த்தப்பட்டதாக ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். #Rafalejet #Rafalescam #PChidambaram
    புதுடெல்லி:

    நாட்டின் எல்லைப்பகுதிகளில் ரோந்துப்பணிக்காகவும் விமானப்படையின் பிற தேவைகளுக்காகவும் பிரான்ஸ் நாட்டில் இருந்து 126 (7 ஸ்குவார்டன்) ரபேல் ரக போர் விமானங்களை வாங்குவதற்கு மத்தியில் முன்னர் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தீர்மானித்தது. விற்பனைக்கு பின்னர் இவ்விமானங்களை பராமரிக்கும் பொறுப்பும் ரபேல் நிறுவனமே ஏற்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    இதற்கான பேரம் நடந்துவந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மத்தியில் அமைந்தது.

    முன்னர் பரிசீலனையில் இருந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களை செய்த இந்த அரசு 36 போர் விமானங்களை வாங்குவதற்கு ரபேல் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தது. இந்த விமானங்களை பராமரிக்கவும் பழுது பார்க்கவும் அனில் அம்பானிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு உள்ஒப்பந்தத்துடன் புதிய பேரம் பேசி முடிக்கப்பட்டது.

    புதிதாக வாங்கும் இந்த போர் விமானங்களை பராமரிக்கும் பொறுப்பை மத்திய அரசுக்கு சொந்தமான ‘ஹெச்.ஏ.எல்.’ நிறுவனத்துக்கு அளிக்காமல் முன் அனுபவம் இல்லாத தனியார் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    இதன் மூலம் தனது நண்பரான அனில் அம்பானிக்கு தனிப்பட்ட முறையில் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஆதாயம் தேடித்தந்ததாக பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம்சாட்டினார்.

    526 கோடி ரூபாயாக இருந்த ரபேல் போர் விமானத்தின் விலை 1600 கோடி ரூபாயாக உயர்வதற்கு காரணம் என்ன, உயர்த்தியவர்கள் யார்? என ராகுல் காந்தி கேள்வியெழுப்பி இருந்தார்.

    இந்த பிரச்சனையை மையமாக வைத்து சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை எதிர்க்கட்சிகள் ஸ்தம்பிக்க வைத்தன.



    இந்நிலையில், 126 போர் விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 போர் விமானங்களை வாங்கியதால் புதிய ரபேல் ஒப்பந்தத்தில் 41.42 சதவீதம் விலை உயர்த்தப்பட்டதாக மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் இன்று தெரிவித்துள்ளார்.

    பிரபல ஆங்கில நாளேட்டில் சமீபத்தில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டியுள்ள ப.சிதம்பரம், விமானப்படைக்கு தேவையான 7 ஸ்குவார்டன் (ஒரு ஸ்குவார்டன் என்பது 18 விமானங்களை கொண்ட தொகுப்பாகும்) போர் விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 (2 ஸ்குவார்டன்) போர் விமானங்களை வாங்கியதால் அவற்றின் விலையில் 41.42 சதவீதம் உயர்ந்ததற்கு இந்த அரசு காரணமாகி விட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், விமானப்படையின் அத்தியாவசிய தேவையான 126 விமானங்களுக்கு பதிலாக வெறும் 36 விமானங்களை வாங்கிய வகையில் நாட்டின் பாதுகாப்பில் இந்த அரசு சமரசம் செய்துகொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #Rafalejet #Rafalescam #PChidambaram

    ×