என் மலர்
நீங்கள் தேடியது "இந்திய விமானப்படை"
- ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
- இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் சுமார் 24 ஆண்டுகளாக சேவையில் உள்ளது.
துபாய்:
துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள துபாய் வேர்ல்டு சென்டிரல் பகுதியில் விமான கண்காட்சி நடந்தது.
இதில் இந்தியா, அமெ ரிக்கா, ரஷியா, சீனா உள் பட 115 நாடுகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விமான தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.
இதற்கிடையே 5 நாள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. அப்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. இதில் விமானி நமன் சியால் உயிரிழந்தார்.
இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமான விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேஜஸ் போர் விமான விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:-
வான் சாகசத்தின்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதை விமானி, பேரல் ரோல் எனப்படும் ஒரு சுழன்று செல்லும் செயல் முறையை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது.
இதில் விமானம் திரும்பப்பட்டு மீண்டும் மேலே சென்று தனது முழு சுழற்சியை நிறைவு செய்யும். இது ஒரு சிக்கலான சூழற்சி இல்லை என்றாலும், விமானி சிறிது நேரம் தலை கீழாக இருந்த பின்னர் விமானம் தரையில் மோதியது. விமானம் தலைகீழாக இருந்து மீண்டும் மேலே எழுப்ப வேண்டும். ஆனால் அதுபோன்று நடக்கவில்லை.
விமானம் மீண்டும் மேலே செல்ல முயன்ற போது தரைக்கு மிக அருகில் இருந்திருக்கலாம். மேலும் விமானம் மீண்டும் உயரும் வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். ஒரு போர் விமானம் அதிக வேகத்தில் இத்தகைய சூழற்சிகளை செய்வது மிகவும் கடினம்.
ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றனர். மேலும் திடீரென்று உந்துதல் சக்தியை இழந்திருக்கலாம் அல்லது கட்டுபாட்டு கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
விமான விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா அல்லது வேறு காரணமா என்பது முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.
இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் சுமார் 24 ஆண்டுகளாக சேவையில் உள்ளது.
விமானம் கட்டுப்பாட்டை இழந்தாலும் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறும் வசதி உள்ளது. ஆனாலும் விபத்தில் விமானியான விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்து உள்ளார். இவர் இமாச்சல பிரதேச மாநிலம், கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவியும் இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார்.
நமன் சியால் கடந்த 2009-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பயிற்சியை தொடங்கினார். நமன் தன் பெற்றோர் மற்றும் குழந்தையுடன் கோவை சூலூர் விமானப்படை தளம் வளாகத்தில் வசித்து வந்தார். அவரது மனைவி கொல்கத்தாவில் பயிற்சியில் இருந்து வருகிறார்.
நமன் சியாலின் தந்தை ஜெகன்நாத் இந்திய ராணுவத்தின் மருத்துவ பிரிவில் சிறிது காலம் பணியாற்றினார்.
- வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
- இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
துபாயில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.
சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தது, விமானப்படை விங் கமாண்டர் நமான் சயால் என்பது தெரியவந்துள்ளது. இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.
அவரின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், "நாடு ஒரு துணிச்சலான, அர்ப்பணிப்பு கொண்ட விமானியை இழந்துவிட்டது. துயரமடைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமன் சியால் ஜியின் தைரியம் மற்றும் தேச சேவைக்கான அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
- வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.
- கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் உயிரிழப்பு.
துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்நிலையில், விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.
சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.
மேலும், துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
- பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கிறது.
- இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.
விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.
இந்நிலையில், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் திட்ட அறிக்கையை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் தயாரிக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- மொத்தம் 16 விமானங்களில் ஸ்பெயினிடம் இருந்து ஏர்பஸ் நிறுவனம் மூலம் வாங்க ஒப்பந்தம்.
- 40 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்க கடந்த 2021-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஸ்பெயினிடம் இருந்து இந்திய ராணுவம் C-295 போக்குவரத்தை விமானத்தை பெற்றுள்ளது. இந்திய ராணுவத்தில் உள்ள ஆவ்ரோ (Avro) பழைய விமானத்தை மாற்றுவதற்காக சமகால தொழில்நுட்பத்தை கொண்ட ஏர்பஸ் விமானத்தை பெற்றுள்ளது. இந்த விமானம் 5 முதல் 10 டன் எடைகளுடன் பறக்கும் திறன் கொண்டது.
ஸ்பெயினில் உள்ள இந்திய தூதர் தினேஷ் கே. பட்நாயக் மற்றும் மூத்த விமானப்படை அதிகாரிகள் இந்த விமானத்தை பெற்றுக்கொண்டனர். மொத்தம் 16 விமானங்களில் இதுதான் கடைசி விமானம் ஆகும்.
திட்டமிட்டதை விட இரண்டு மாதங்கள் முன்னதாகவே இந்த விமானம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லை விளங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப அடங்கியதுடன், தொடர்ந்து 11 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது. செப்டம்பர் 2021 இல், இந்திய விமானப்படைக்காக 56 C-295MW போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தானது.
16 விமானங்கள் ஏர்பஸ் தயாரித்து ஸ்பெயின் மூலம் இந்தியாவிடம் ஒப்படைக்கவும், 40 இந்தியாவிலேயே தயாரிக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ராஜஸ்தானில் விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் உள்ள ரத்னகார் மாவட்டத்தில் உள்ள பனுடா கிராமத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் கீழே விழுந்தது. வழக்கமான பயிற்சியின்போது இந்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் வெளியில் கரும்புகை வெளிப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
தகவலறிந்து போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விமான விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
- ஊகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் மற்றவர்களுக்கு பகிருவதை தவிருங்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், ஆபரேசன் சிந்தூர் தொடர்கிறது என்று இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "இந்திய விமானப்படை ஆபரேசன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆபரேசன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். ஊகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் மற்றவர்களுக்கு பகிருவதை தவிருங்கள்.
சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் 29-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
- தலைநகர் நய்பிடாஸ், மண்டாலே ஆகிய நகரங்கள் உருக்குலைந்து போனது.
அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் 29-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இடிந்து தரை மட்டமானது. தலைநகர் நய்பிடாஸ், மண்டாலே ஆகிய நகரங்கள் உருக்குலைந்து போனது. இந்த நில நடுக்கத்தில் சிக்கி 3 ஆயிரம் பேருக்கு மேல் பலியானார்கள்.
சைபர் தாக்குதல்
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன. ஆபரேஷன் பிரம்மா என்ற பெயரில் இந்திய பாதுகாப்பு படையினர் மியான்மரில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு மீட்பு பணியை மேற்கொண்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மீது சைபர் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சைபர் தாக்குதலால் நடுவானில் பறந்த விமானத்தின் விமானிகளுக்கு தவறான தகவல்கள் கிடைக்க தொடங்கியது. இதனால் விமானிகள் குழப்பம் அடைந்தனர். உடனே சுதாரித்துக்கொண்ட அவர்கள் அவசரகால சிக்னல்களை பயன்படுத்தி உண்மையான நிலவரங்களை கண்டறிந்தனர்.
இதையடுத்து இந்த சைபர் தாக்குதலை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்தனர்.
- போர் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம்.
- விபத்தில் பலியான விமானியின் குடும்பத்தினருடன் உடன் நிற்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் 2 விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தது.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒரு விமானியை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், விமானப் படையின் போர் பயிற்சி விமானம் கீழே விழுந்து வெடித்து சிதறிய விபத்தில் மாயமான விமானி பலியாகி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இந்திய விமானப்படை எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
போர் பயிற்சி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறே விபத்துக்கு காரணம். விமானிகளின் சாதுர்யத்தால் விமான தளம், உள்ளூர் மக்களுக்கு தீங்கு ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. விபத்தில் பலியான விமானியின் குடும்பத்தினருடன் உடன் நிற்பதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
- குஜராத்தில் ஜாகுவார் போர் விமானத்தில் விமானிகள் பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
- ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் திடீரென வெடித்துச் சிதறியது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் 2 விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தது.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒரு பைலட்டை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் பயிற்சி விமானம் வெடித்துச் சிதறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த கூட்டுப்பயிற்சி 6 வாரங்களுக்கு நடத்தப்படுகிறது.
- இரு நாட்டு விமானப்படைகளும் நவீன சாகச பயிற்சிகளில் ஈடுபடுகின்றனர்.
இந்திய விமானப்படையும், சிங்கப்பூர் விமானப்படையும் பங்கேற்றுள்ள 11வது கூட்டு போர்ப்பயிற்சி மேற்கு வங்க மாநிலம் கலைக்குந்தா விமானப்படைத் தளத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் இந்த கூட்டுப்பயிற்சி 6 வாரங்களுக்கு நடத்தப்படுகிறது.
இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக வரும் 9ம் தேதி முதல் 18ம் தேதி வரை இரு நாட்டு விமானப்படை வீரர்களும் நவீன சாகச பயிற்சிகளை மேற்கொள்கின்றனர்.

இந்த பயிற்சியில் இந்திய விமானப்படையின் எஸ்யு- 30 எம்கேஐ, ஜாக்குவார், எம்ஐஜி-29, இலகு ரக தேஜாஸ் உள்ளிட்ட விமானங்கள் பங்கேற்கின்றன, சிங்கப்பூர் விமானப்படை சார்பில் எப்-16 விமானம் பங்கேற்றுள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பல்வேறு விமானப்படை தளங்களில் சார்ஜிங் வசதி உள்பட உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
- மின்சார வாகன இயக்கத்தை விமானப்படை தலைமை தளபதி தொடங்கி வைத்தார்.
சுற்றுச் சூழல் மேம்பாட்டு நடவடிக்கையாகவும், கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காகவும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை, தமது போக்குவரத்துப் பயன்பாடுகளுக்கு டாடா நெக்ஸான் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள விமானப்படைத் தலைமை அலுவலகமான வாயு பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் 12 மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சௌத்ரி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. பல்வேறு விமானப்படை தளங்களில் சார்ஜிங் வசதி உள்பட உள்கட்டமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட மின்-வாகனங்களுக்கான பயன்பாட்டிற்கான சூழல் அமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின்சார பேருந்துகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவது தொடர்பாக, இந்திய விமானப்படை ஏற்கனவே இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து இயக்கத்தை நோக்கிய பயணத்தில், இந்திய விமானப் படையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






