என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafale fighters"

    • பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கிறது.
    • இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.

    விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.

    இந்நிலையில், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் திட்ட அறிக்கையை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

    இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் தயாரிக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

    • டாடா நிறுவனம் ஐதராபாத்தில் ஒரு அதிநவீன தொழிற்சாலையை தொடங்க உள்ளது.
    • உற்பத்தி தொடங்கி வருகிற 2028-ம் ஆண்டு விமானத்திற்கான பாகங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    திருப்பதி:

    ரபேல் போர் விமானத்தின் உடற்பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக பிரெஞ்சு நிறுவனமான டசால்ட் ஏவியஸ்னுடன், டாடா அட்வான்ஸ் சிஸ்டத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

    இதற்காக டாடா நிறுவனம் ஐதராபாத்தில் ஒரு அதிநவீன தொழிற்சாலையை தொடங்க உள்ளது.

    ரபேல் போர் விமானத்தில் உடற்பகுதியான பக்கவாட்டு ஓடுகள் பின்புறப்பகுதி மத்திய உடற்பகுதி மற்றும் முன்பகுதியை தயாரிக்க உள்ளது.

    இந்த தொழிற்சாலை மாதத்திற்கு 2 உடற்பகுதிகள் தயார் செய்யும் திறனை கொண்டதாக இருக்கும். உற்பத்தி தொடங்கி வருகிற 2028-ம் ஆண்டு விமானத்திற்கான பாகங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பிரெஞ்சு நாட்டிற்கு வெளியே ரபேல் போர் விமான பாகங்கள் ஐதராபாத்தில் முதல் முறையாக தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே அதனை தயாரிப்பதற்கான உரிமத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது.
    • இதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன.

    புதுடெல்லி:

    விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.

    இந்த விமானங்கள் இதுவரை பிரான்ஸ் நாட்டில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தது. முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே அதனை தயாரிப்பதற்கான உரிமத்தை இந்திய நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி இந்தியாவில் அது தயாரிக்கப்பட உள்ளது. முழு விமானமும் இந்தியாவில் தயாரிக்கப்படாது. விமானத்தின் உடல்பாகம் மட்டும் இங்கே தயாரிக்கப்படும்.

    இதற்காக டசால்ட் ஏவியேஷன் நிறுவனமும், டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளன. உற்பத்தி பரிமாற்றம் தொடர்பான 4 ஒப்பந்தங்களில் அவை கையெழுத்திட்டுள்ளன. அதாவது விமானத்தின் கூம்பு வடிவ முன்பகுதி, மையப்பகுதி, பின்புற பகுதி மற்றும் பின்புற பக்கவாட்டு பகுதி ஆகியவற்றுக்காக 4 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தத்தில் விமானத்தின் கூண்டு பகுதி இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளது.

    இந்தியாவில் தயாரிக்கப்படும் விமான உடல் பாகங்களின் முதல் பகுதி 2028-ம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மாதம் 2 உடல்பகுதிகள் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.

    ரபேல் விமானங்கள் பிரான்சுக்கு வெளியே இந்தியாவில் முதல்முறையாக தயாரிக்கப்பட இருப்பது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்திருக்கிறது. இந்திய அரசின் 'மேன் இன் இந்தியா' மற்றும் ஆத்ம நிர்பார் முயற்சிகளுக்கு டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் உறுதுணை புரிந்துள்ளது.

    பாலகோட் தாக்குதலின்போது ரபேல் விமானங்கள் இருந்திருந்தால் முடிவு இன்னும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கும் என்று விமானப்படை தளபதி தனோவா கூறினார். #RafaleFighter #Balakot #Dhanoa
    புதுடெல்லி:

    காஷ்மீர் புலவாமாவில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பிப்ரவரி 26-ந் தேதி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பாலகோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை வான் தாக்குதல் நடத்தியது.

    இந்நிலையில் டெல்லியில் இந்திய விமானப்படை சார்பில் மறைந்த மார்ஷல் அர்ஜன் சிங் நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி ‘2040-ல் விண்வெளி சக்தி; தொழில்நுட்பத்தின் தாக்கம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாலகோட் தாக்குதலில் நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி துல்லியமாக தாக்கக்கூடிய ஆயுதங்கள் மூலம் மிகச்சரியாக இலக்கு தாக்கப்பட்டது. மிக்-21, பைசன்ஸ் மற்றும் மிராஜ்-2000 போர் விமானங்களை நாம் மேம்படுத்துவதன் மூலம் அடுத்தடுத்த நிகழ்வுகளில் நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.



    நாம் உரிய நேரத்தில் ரபேல் போர் விமானங்களை நமது படையில் இணைத்திருந்தால் இந்த முடிவு இன்னும் நமக்கு சாதகமாக அமைந்து இருக்கும். ரபேல் மற்றும் தரையில் இருந்து விண்ணில் சென்று தாக்கும் ஏவுகணை எஸ்-400 ஆகியவற்றை நமது படையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதன்மூலம் அடுத்த 2 முதல் 4 ஆண்டுகளில் தொழில்நுட்பம் மேலும் நமக்கு சாதகமாக மாறும். இது 2002-ம் ஆண்டு நடைபெற்ற பராகராம் சம்பவத்தின்போது நடைபெற்றதைப்போல இருக்கும்.

    நமது ராணுவத்தின் அனைத்து படைகளையும் விட நம்மை தான் தொழில்நுட்பம் மிகவும் பாதிக்கிறது. தரையில் உள்ள படைகள் குறிப்பாக வீரர்களுடன் போரிடும்போது கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் கருவிகளை இயக்குகிறார்கள். ஆனால் போர் விமானத்தில் இது மிகச்சிறிய கருவிகளாக இருக்கும்.

    மோசமான வெப்பநிலை மற்றும் காற்றழுத்த நிலைமை ஆகியவற்றையும் பொருத்ததாக இது இருக்கும். தொழில்நுட்ப மாற்றத்திலும் விமானப்படையின் சக்தி மிகவும் பிரச்சினைக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியா பிரான்சிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டிருப்பதுபோல, கடந்த ஆண்டு ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஏவுகணை 400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் போர் விமானம், ஏவுகணை, ஏன் ஆளில்லா குட்டி விமானங்களையும் (டிரோன்) அழிக்கும் திறன் படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.  #RafaleFighter #Balakot #Dhanoa
    ×