என் மலர்
நீங்கள் தேடியது "IAF"
- பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கிறது.
- இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.
விமானங்களில் உலக அளவில் பிரபலமான 'பிராண்டு' ரபேல் விமானங்கள் ஆகும். பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் போர் விமானங்களும், சிவில் விமானங்களும் வருகின்றன. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் ரபேல் போர் விமானங்களை வாங்கியுள்ளன.
இந்நிலையில், சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான 114 புதிய ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் திட்ட அறிக்கையை இந்திய விமானப்படை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்துடன் இந்திய நிறுவனங்கள் இணைந்து உள்நாட்டில் தயாரிக்க திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- மொத்தம் 16 விமானங்களில் ஸ்பெயினிடம் இருந்து ஏர்பஸ் நிறுவனம் மூலம் வாங்க ஒப்பந்தம்.
- 40 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்க கடந்த 2021-ல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஸ்பெயினிடம் இருந்து இந்திய ராணுவம் C-295 போக்குவரத்தை விமானத்தை பெற்றுள்ளது. இந்திய ராணுவத்தில் உள்ள ஆவ்ரோ (Avro) பழைய விமானத்தை மாற்றுவதற்காக சமகால தொழில்நுட்பத்தை கொண்ட ஏர்பஸ் விமானத்தை பெற்றுள்ளது. இந்த விமானம் 5 முதல் 10 டன் எடைகளுடன் பறக்கும் திறன் கொண்டது.
ஸ்பெயினில் உள்ள இந்திய தூதர் தினேஷ் கே. பட்நாயக் மற்றும் மூத்த விமானப்படை அதிகாரிகள் இந்த விமானத்தை பெற்றுக்கொண்டனர். மொத்தம் 16 விமானங்களில் இதுதான் கடைசி விமானம் ஆகும்.
திட்டமிட்டதை விட இரண்டு மாதங்கள் முன்னதாகவே இந்த விமானம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதில் ஒரு முக்கியமான மைல்கல்லை விளங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்ப அடங்கியதுடன், தொடர்ந்து 11 மணி நேரம் பறக்கும் திறன் கொண்டது. செப்டம்பர் 2021 இல், இந்திய விமானப்படைக்காக 56 C-295MW போக்குவரத்து விமானங்களை வாங்குவதற்காக ஒப்பந்தம் கையெழுத்தானது.
16 விமானங்கள் ஏர்பஸ் தயாரித்து ஸ்பெயின் மூலம் இந்தியாவிடம் ஒப்படைக்கவும், 40 இந்தியாவிலேயே தயாரிக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
- இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் ராஜஸ்தானில் விபத்தில் சிக்கியது.
- இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தானில் உள்ள ரத்னகார் மாவட்டத்தில் உள்ள பனுடா கிராமத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் கீழே விழுந்தது. வழக்கமான பயிற்சியின்போது இந்த விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானி உள்பட 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.
இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், திடீரென பயங்கர சத்தம் கேட்டதாகவும், வயல் வெளியில் கரும்புகை வெளிப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
தகவலறிந்து போலீசார் மற்றும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். விமான விபத்து குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
- ஊகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் மற்றவர்களுக்கு பகிருவதை தவிருங்கள்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.
இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.
இந்நிலையில், ஆபரேசன் சிந்தூர் தொடர்கிறது என்று இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அந்த பதிவில், "இந்திய விமானப்படை ஆபரேசன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆபரேசன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். ஊகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் மற்றவர்களுக்கு பகிருவதை தவிருங்கள்.
சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- குஜராத்தில் ஜாகுவார் போர் விமானத்தில் விமானிகள் பயிற்சி செய்துகொண்டிருந்தனர்.
- ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் திடீரென வெடித்துச் சிதறியது.
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் 2 விமானிகள் ஜாகுவார் போர் விமானத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்தனர். ஜாம்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் இரவு 9.30 மணியளவில் திடீரென வெடித்துச் சிதறி வயல்வெளியில் விழுந்தது.
தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு படுகாயங்களுடன் கிடந்த ஒரு பைலட்டை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாயமான மற்றொரு விமானியை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு நேரத்தில் பயிற்சி விமானம் வெடித்துச் சிதறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பல்வேறு விமானப்படை தளங்களில் சார்ஜிங் வசதி உள்பட உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
- மின்சார வாகன இயக்கத்தை விமானப்படை தலைமை தளபதி தொடங்கி வைத்தார்.
சுற்றுச் சூழல் மேம்பாட்டு நடவடிக்கையாகவும், கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்காகவும், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை, தமது போக்குவரத்துப் பயன்பாடுகளுக்கு டாடா நெக்ஸான் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள விமானப்படைத் தலைமை அலுவலகமான வாயு பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மூத்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் முன்னிலையில் 12 மின்சார வாகனங்களின் பயன்பாட்டை விமானப்படை தலைமை தளபதி வி.ஆர்.சௌத்ரி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. பல்வேறு விமானப்படை தளங்களில் சார்ஜிங் வசதி உள்பட உள்கட்டமைப்பை நிறுவுதல் உள்ளிட்ட மின்-வாகனங்களுக்கான பயன்பாட்டிற்கான சூழல் அமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின்சார பேருந்துகள் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவது தொடர்பாக, இந்திய விமானப்படை ஏற்கனவே இந்திய ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகள், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற போக்குவரத்து இயக்கத்தை நோக்கிய பயணத்தில், இந்திய விமானப் படையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது என்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- நீர்மூழ்கி வாகனம் பதிவுசெய்த படங்களை ஆய்வு செய்ததில் விமான பாகங்கள் உறுதி செய்யப்பட்டன.
சென்னை:
சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி புறப்பட்டுச் சென்ற இந்திய விமானப்படை விமானம் வங்கக் கடல் பகுதியில் பறந்தபோது திடீரென மாயமானது. இதில் விமான ஊழியர்கள் 6 பேர், 11 விமானப்படை வீரர்கள், 2 ராணுவ வீரர்கள், இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படையைச் சேர்ந்த தலா ஒரு வீரர், கடற்படை ஆயுதக் கிடங்கு ஊழியர்கள் 8 பேர் என 29 பேர் பயணம் செய்தனர்.
தொடர்பு துண்டிக்கப்பட்டதும் விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ராடாருடன் கூடிய செயற்கைக்கோள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு படம்பிடிக்கப்பட்டது. எந்த முன்னேற்றமும் இல்லாததால் செப்டம்பர் 15-ம் தேதி தேடும் பணி கைவிடப்பட்டு, அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுக்குப் பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் மூலம் சமீபத்தில் அனுப்பப்பட்ட நீர்மூழ்கி வாகனம் பதிவுசெய்த படங்களை ஆய்வு செய்ததில், சென்னை கடற்கரையில் இருந்து 310 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் 3.4 கி.மீ. ஆழத்தில் கிடக்கும் பாகங்கள் காணாமல் போன ஏஎன்-32 விமானத்தின் பாகங்கள் என்பதை உறுதிப்படுத்துவதாக உள்ளது என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- கர்நாடகாவின் சித்ரதுர்கா ஏவுதளத்தில் நடைபெற்ற புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றது.
- புஷ்பக் ஏவுகலன் சோதனை வெற்றி பெற்றதற்கு இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டியது.
பெங்களூரு:
விண்ணுக்கு செயற்கைக்கோள்களை சுமந்துசென்று மீண்டும் பூமிக்கு திரும்பி வரும் வகையில் ஆர்.எல்.வி. புஷ்பக் என்ற ஏவுகலனை இஸ்ரோ ஏற்கனவே 2 முறை சோதனை செய்திருந்தது.
இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஏவுதளத்தில் இன்று காலை 7.10 மணிக்கு 3-வது முறையாக சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வெற்றி பெற்றது.
புஷ்பக் என பெயரிடப்பட்ட இறக்கைகள் கொண்ட ஆர்.எல்.வி. வாகனம் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான சினூக் ஹெலிகாப்டரில் இருந்து 4.5 கி.மீ. உயரத்தில் இருந்து விடுவிக்கப்பட்டது.
இதன்மூலம் செயற்கைக்கோள்களையோ அல்லது விண்கலன்களையோ விண்ணுக்கு சுமந்து சென்று மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் ஏவுகலன் திட்ட பரிசோதனையை வெற்றிகரமாக செய்துகாட்டி உள்ளோம் என இஸ்ரோ தெரிவித்தது.
எதிர்காலத்தில் இதுபோன்ற பல வெற்றிகரமான மைல்கற்களை அடைய வாழ்த்துக்கள் என இஸ்ரோவை இந்திய விமானப்படை பாராட்டி உள்ளது.
- இந்நிகழ்ச்சிக்காக மெரினா கடற்கரையில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் குவிந்தனர்.
- இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது.
சென்னை:
இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது. இந்த நிகழ்ச்சியை பார்க்க சென்ற 5 பேர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்களுக்கு குடிநீர், உணவு, கழிப்பிடம், போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். கடும் வெயிலால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, விமான சாகச நிகழ்ச்சிக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க.ஸ்டாலின் அரசுக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், விமான சாகசத்துக்கு நிர்வாக ரீதியில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் வலைதளத்தில் தெரிவித்துள்ளதாவது:
சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாக ரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காக தலைமைச் செயலாளர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத்துறை அலுவலர்களுடன் ஒருமுறையும், பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன.
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப்படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது. இதுமட்டுமின்றி இந்திய ராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதுதவிர, அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன.
ராஜீவ்காந்தி அரசுப் பொதுமருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
- வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர்.
- 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை:
சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர். இதனால் மெரினா கடற்கரையே திக்குமுக்காடியது.
கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட வாந்தி, மயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்திய விமானப்படை சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான வான் சாகசக நிகழ்ச்சியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தும், 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளையும், போதுமான போக்குவரத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் தி.மு.க. அரசு, பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு ஒரே காரணம்.
முதலமைச்சர் ஸ்டாலின், தனது சுய விளம்பரங்களுக்காக மேற்கொள்ளும் ஏற்பாடுகளைக்கூட, பல லட்சம் பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யவில்லை என்பது அவரது நிர்வாகத்தின் முழுமையான தோல்வியைக் காட்டுகிறது. 5 உயிர்களை இழந்திருப்பது, ஒரு விபத்து என்று கடந்து செல்ல முடியாது. இதற்கு அடிப்படை ஏற்பாடுகளைக் கூடச் செய்யாமல் புறக்கணித்த தி.மு.க. அரசே முழு பொறுப்பு.
தன் குடும்பத்துக்காக மட்டுமே ஆட்சி நடத்தி, பொதுமக்கள் உயிரைக் குறித்து எந்தக் கவலையும் இல்லாமல், 5 பேர் உயிரிழப்புக்கும், பல நூறு குடும்பங்களின் பரிதவிப்புக்கும் காரணமான முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், தி.மு.க. அரசையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பொதுமக்களுக்கு முதலமைச்சர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
- பயிற்சிக்காக போர் விமானம் ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.
- மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல.
மிக்-29 போர் விமானம், உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது எனவும் விபத்தின் போது விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்றும் இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து பயிற்சிக்காக போர் விமானம் ஆக்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்துக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
மிக்-29 போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடிப்பது இது முதல் முறையல்ல. செப்டம்பர் 2ஆம் தேதி ராஜஸ்தானின் பார்மரில் மிக்-29 போர் விமானம் தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது. விபத்திற்கு முன் விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன.
- விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள ‘எச்.டி.டி.-40’ என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது.
இந்திய விமானப்படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு 92-ம் ஆண்டு நிறைவடைந்து 93-ம் ஆண்டில் இந்திய விமானப்படை அடியெடுத்து வைத்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் விமானப்படை தினம் நாட்டில் உள்ள வெவ்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், அதிநவீன போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளுடன் இந்த ஆண்டுக்கான விமானப்படை தினம் சென்னையில் கடந்த அக். 6-ந்தேதி மிகப்பெரிய விமான வான் சாகச நிகழ்ச்சியுடன் நடந்தது.
மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சி மதியம் 1 மணி வரை 2 மணி நேரம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்பட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்டு களித்தனர்.
இந்த விமான சாகச கண்காட்சியில் இந்திய விமானப்படையின் பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. முதல் நிகழ்வாக, ஆக்ரா விமானப்படை பிரிவின் கீழ் செயல்படும் பாராசூட் பயிற்சி பள்ளியைச் சேர்ந்த 5 வீரர்கள் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்தனர்.
அதற்கு அடுத்ததாக, எம்.ஐ.70 ரக ஹெலிகாப்டரில் இருந்து 28 கமாண்டோ வீரர்கள் மெரினா கடற்கரை மணல் பகுதியில் குதித்தனர். அங்கு தேசவிரோத சக்தியால் பிடித்து வைத்திருந்த பணயக்கைதிகளை மீட்கும் சாகச நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு சாகச நிகழ்ச்சியை நடத்தி காண்பித்தனர்.
இதில், விமானப்படையின் ஆகாஷ் கங்கா அணி வானில் குட்டிக்கரணம் அடித்தும், சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி 'ஸ்கை டைவிங்' கலையில் விமானங்களுடன் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்தும் சாகசங்களை நிகழ்த்தின. சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனமும் நடைபெற்றது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகு ரக விமானமான தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் 1971-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்ட 'டகோட்டா' மற்றும் 'ஹார்வர்ட்' ஆகிய பழங்கால விமானங்களும், அதிநவீன போர் விமானமான ரபேல் விமானம், கார்கில் போரில் பங்கேற்ற விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்று வானில் சாகசத்தை வெளிப்படுத்தின.
தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து 'சேத்தக்' ரக ஹெலிகாப்டர்கள் மூலம் வீரர்கள் மூவர்ணக்கொடியை ஏந்தியபடி பாராசூட் மூலம் கீழே குதித்து சாகசம் செய்து அசத்தினர். அடுத்ததாக, இந்திய விமானப்படையில் அதிவேகமாக செல்லும் போர் விமானமான ரபேல் வானில் தீப்பிழம்புகளை கக்கியபடி சாகசத்தில் ஈடுபட்டது காண்போரை கவர்ந்திழுக்க செய்தது.
இந்திய விமானப்படையின் பழமையான விமானமான 'டகோட்டா', 'ஹார்வர்டு' விமானங்கள் பட்டாம்பூச்சிகள் போல் பறந்து வந்து தங்களது திறமையை பறைசாற்றின. இந்தவகை விமானங்களில் 1947-ம் ஆண்டில் இருந்து 1989-ம் ஆண்டு வரை இந்திய விமானப்படையில் பணியாற்றின. பழமையான விமானம் தாழ்வாக பறந்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது, வர்ணணையாளர்கள், என்னதான் வயசானாலும், உன் அழகும், ஸ்டைலும் மாறவில்லை' என்றதும் பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

விமானப்படையில் சேர்க்கப்பட உள்ள 'எச்.டி.டி.-40' என்ற பயிற்சி விமானம் வானில் குட்டிக்கரணம் அடித்து சாகசத்தில் ஈடுபட்டது. மிராஜ் போர் விமானம் பின்னால் வந்த இரு விமானங்களுக்கு நடுவானில் எரிபொருளை நிரப்பி காட்டி சாகசத்தில் ஈடுபட்டன. அத்துடன் இதய வடிவை வானில் வரைந்து காண்பித்தது வேறுவிதமாக அமைந்தது.

சென்னையை கலக்கிய விமான சாகச நிகழ்ச்சி குறித்து, விமானப்படை அதிகாரி ஏர் கமோடர் எச்.அசுதானி, கூறும்போது, 'சென்னையில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடத்துவது குறித்து 2 மாதங்களுக்கு முன்பே மெரினா கடற்கரைக்கு வந்து ஆய்வு செய்தோம். இந்த நிகழ்ச்சியை நடத்த தமிழக அரசும், சென்னையில் உள்ள இந்திய விமான ஆணையமும் முழு ஒத்துழைப்பு வழங்கியது. சாகச நிகழ்ச்சியில் 72 விமானங்கள் தாம்பரம் அரக்கோணம், கோவை சூலூர், தஞ்சாவூர், பெங்களூரு மற்றும் சென்னை விமான நிலையம் ஆகிய 7 இடங்களில் இருந்து புறப்பட்டு வந்து சாகசத்தில் ஈடுபட்டன. 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சாகச நிகழ்ச்சி எங்களுக்கு சவாலாக இருந்தது. காரணம், விமானிகளின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு இந்த சாகச நிகழ்ச்சி சிறப்பாக நடத்தப்பட்டது' என்றார்.
இந்த சாகச நிகழ்ச்சியை முன்னிட்டு, 6 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டு இருப்பார்கள் என்று பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறினர்.

சென்னை மெரினா கடற்கரையில் சுமார் 2 மணி நேரம் நடந்த விமானப்படையினரின் சாகச நிகழ்ச்சியை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், நெல்லூர் மாவட்டம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து வந்த சுமார் 15 லட்சம் பேர் நேரில் கண்டுகளித்ததாக தகவல் வெளியானது. இதன் மூலம் உலகிலேயே அதிக பொதுமக்கள் பங்கேற்ற ராணுவ நிகழ்ச்சி என்று லிம்கா சாதனை புத்தகத்தில் சென்னை விமான சாகச நிகழ்ச்சி இடம்பெற்றது.
இதற்காக நிகழ்ச்சி முடிவடைந்ததும், லிம்கா புத்தகத்திற்கு அனுப்புவதற்காக கழுகு பார்வையில் ஹெலிகாப்டரில் வந்த வீரர்கள் மெரினா கடற்கரையில் இருந்து பொதுமக்களை புகைப்படம் எடுத்தனர். இதுகுறித்த அறிவிப்பு வெளியானதும் பொதுமக்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த குடை, குடிநீர் பாட்டில்களால் அசைத்து ஆரவாரம் செய்தனர்.
சென்னை மெரினாவில் விமான சாகசத்தை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டனர். காலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருந்தது. நேரம் செல்ல செல்ல வெயில் அதிகரித்து காணப்பட்டது. வெயிலின் தாக்கத்தாலும், குடிநீர் கிடைக்காததாலும் உடலில் நீர்ச்சத்து குறைந்து 100-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.
அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். மொத்தம் 63 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் 36 பேர் வீட்டுக்கு சென்றனர். 27 பேர் மட்டும் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. இதற்கிடையே வெயிலின் தாக்கத்தால் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.






