என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian airforce"

    • ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
    • இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் சுமார் 24 ஆண்டுகளாக சேவையில் உள்ளது.

    துபாய்:

    துபாயில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள துபாய் வேர்ல்டு சென்டிரல் பகுதியில் விமான கண்காட்சி நடந்தது.

    இதில் இந்தியா, அமெ ரிக்கா, ரஷியா, சீனா உள் பட 115 நாடுகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட விமான தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றன.

    இதற்கிடையே 5 நாள் கண்காட்சியின் நிறைவு நாளான நேற்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய ராணுவத்தின் தேஜஸ் போர் விமானம் பங்கேற்றது. அப்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளானது.

    திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் மோதி வெடித்து சிதறியது. இதில் விமானி நமன் சியால் உயிரிழந்தார்.

    இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமான விபத்துக்கான காரணம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் தேஜஸ் போர் விமான விபத்துக்கான காரணம் குறித்து நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் கூறியதாவது:-

    வான் சாகசத்தின்போது தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதை விமானி, பேரல் ரோல் எனப்படும் ஒரு சுழன்று செல்லும் செயல் முறையை செய்ய முயற்சித்ததாக தெரிகிறது.

    இதில் விமானம் திரும்பப்பட்டு மீண்டும் மேலே சென்று தனது முழு சுழற்சியை நிறைவு செய்யும். இது ஒரு சிக்கலான சூழற்சி இல்லை என்றாலும், விமானி சிறிது நேரம் தலை கீழாக இருந்த பின்னர் விமானம் தரையில் மோதியது. விமானம் தலைகீழாக இருந்து மீண்டும் மேலே எழுப்ப வேண்டும். ஆனால் அதுபோன்று நடக்கவில்லை.

    விமானம் மீண்டும் மேலே செல்ல முயன்ற போது தரைக்கு மிக அருகில் இருந்திருக்கலாம். மேலும் விமானம் மீண்டும் உயரும் வேகத்தைக் கொண்டிருக்கவில்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்கலாம். ஒரு போர் விமானம் அதிக வேகத்தில் இத்தகைய சூழற்சிகளை செய்வது மிகவும் கடினம்.

    ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றனர். மேலும் திடீரென்று உந்துதல் சக்தியை இழந்திருக்கலாம் அல்லது கட்டுபாட்டு கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.

    விமான விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா அல்லது வேறு காரணமா என்பது முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

    இந்தியாவின் முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் சுமார் 24 ஆண்டுகளாக சேவையில் உள்ளது.

    விமானம் கட்டுப்பாட்டை இழந்தாலும் விமானி உடனடியாக விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் வெளியேறும் வசதி உள்ளது. ஆனாலும் விபத்தில் விமானியான விங் கமாண்டர் நமன் சியால் உயிரிழந்து உள்ளார். இவர் இமாச்சல பிரதேச மாநிலம், கங்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவியும் இந்திய விமானப்படை அதிகாரியாக உள்ளார்.

    நமன் சியால் கடந்த 2009-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் பயிற்சியை தொடங்கினார். நமன் தன் பெற்றோர் மற்றும் குழந்தையுடன் கோவை சூலூர் விமானப்படை தளம் வளாகத்தில் வசித்து வந்தார். அவரது மனைவி கொல்கத்தாவில் பயிற்சியில் இருந்து வருகிறார்.

    நமன் சியாலின் தந்தை ஜெகன்நாத் இந்திய ராணுவத்தின் மருத்துவ பிரிவில் சிறிது காலம் பணியாற்றினார்.

    • வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
    • இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

    துபாயில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்தது. கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.

    சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.

    இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தது, விமானப்படை விங் கமாண்டர் நமான் சயால் என்பது தெரியவந்துள்ளது. இவர் இமாச்சல பிரதேசத்தில் கான்ங்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

    அவரின் மறைவுக்கு இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    அவர் வெளியிட்ட பதிவில், "நாடு ஒரு துணிச்சலான, அர்ப்பணிப்பு கொண்ட விமானியை இழந்துவிட்டது. துயரமடைந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நமன் சியால் ஜியின் தைரியம் மற்றும் தேச சேவைக்கான அர்ப்பணிப்புக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கிடையே, துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. 

    • வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்து.
    • கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் உயிரிழப்பு.

    துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின்போது வானில் பறந்த இந்திய போர் விமானம் தேஜஸ் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் செய்து கொண்டிருந்தபோது விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்நிலையில், விமான கண்காட்சியின் போது தேஜஸ் விமானத்தை இயக்கிய விமானி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.

    கண் இமைக்கும் நேரத்தில் தேஜஸ் விமானம் கீழே விழுந்து தீப்பிடித்ததால் அதனை இயக்கிய விமானி தப்ப முடியாமல் போனது.

    சர்வதேச விமான கண்காட்சிக்காக துபாய் சென்ற தேஜஸ் விமானம் கோவை சூலூரில் இருந்து சென்றுள்ளது.

    மேலும், துபாய் ஏர் ஷோவில் நடந்த விபத்துக்கான காரணம் குறித்து விமானப்படை விசாரணை நடத்தும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

    • 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்தது.
    • இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும்.

    பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி இந்திய விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி நேற்று விளக்கம் அளித்தார்.

    அப்போது ஆபரேசன் சிந்தூர நடவடிக்கையின் போது ரஃபேல் விமானம் உட்பட ஏதேனும் தளங்களை இந்தியா இழந்ததா என்று ஏ.கே.பாரதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த அவர், "நாம் கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அவர்களின் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நமது இலக்கை நாம் அடைந்துவிட்டோமா? என்பது தான். அதற்கான பதில் ஆம். இழப்புகள் என்பது போரின் ஒரு பகுதியாகும். நாம் இன்னும் போர் சூழ்நிலையில் இருப்பதால், நாம் இழந்தது குறித்து நான் ஏதாவது கருத்து தெரிவித்தால், அது எதிரிக்கு மட்டுமே சாதகமாக இருக்கும்.

    நாங்கள் குறிவைத்த இலக்குகளை அடைந்துவிட்டோம், எங்கள் அனைத்து விமானிகளும் வீடு திரும்பிவிட்டனர் என்பதை மட்டுமே நான் சொல்ல முடியும் என்று தெரிவித்தார்.

    இதனிடையே இந்தியா தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மூன்று ரஃபேல் ஜெட் விமானங்கள், ஒரு மிக் -29 மற்றும் ஒரு எஸ்யூ -30 போர் விமானம் உட்பட ஐந்து இந்திய விமானப்படை ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.
    • எல்லையில் நடந்த பீரங்கி தாக்குதலில் 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்கள் தாக்கப்படுவதற்கு முன்பு, பின்பு வீடியோ, படங்களை வெளியிட்டு அதிகாரிகள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

    பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது குறித்து படங்களை காட்டி விமானப்படை அதிகாரி ஏ.கே.பாரதி விளக்கினார்.

    இந்திய ராணுவத்தின் திட்டமிட்ட துல்லிய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட சேதங்கள் குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து இந்திய ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி கூறியதாவது:-

    பாகிஸ்தானில் ஏராளமான பயங்கரவாத முகாம்கள் இருந்தன. இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து முன்கூட்டியே சில முகாம்கள் காலி செய்யப்பட்டன.

    இந்தியா பதில் தாக்குதல் நடத்தியபோது பயணிகள் விமானத்தை பாகிஸ்தான் தவறாக பயன்படுத்தியது.

    மே 10ம் தேதி பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. பாகிஸ்தான் நடத்திய அனைத்து தாக்குதல்களையும் முறியடித்துள்ளோம்.

    பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியது.

    எல்லையில் நடந்த பீரங்கி தாக்குதலில் 35 முதல் 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    பாகிஸ்தானில் உள்ள பஸ்ரூர் வான் பாதுகாப்பு ரேடார் இந்தியாவால் அழிக்கப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பல விமானப்படை தளங்களை இந்தியா தாக்கி அழித்துள்ளது.

    பாகிஸ்தானின் முக்கிய விமானப்படை தளமான ரஹீம் யார் கான் இந்தியாவால் தாக்கி அழிக்கப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆபரேசன் சிந்தூர் தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
    • ஊகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் மற்றவர்களுக்கு பகிருவதை தவிருங்கள்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா தாக்கி அழித்தது. இதற்கு ஆபரேசன் சிந்தூர என்று இந்திய ராணுவம் பெயரிட்டது.

    இதனையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் தலையீட்டால் இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடியாக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்பு கொள்வதாக அறிவித்தது. நாளை இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

    இந்நிலையில், ஆபரேசன் சிந்தூர் தொடர்கிறது என்று இந்திய விமானப்படை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

    அந்த பதிவில், "இந்திய விமானப்படை ஆபரேசன் சிந்தூரில் தனக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாகவும், தொழில்முறையுடனும் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. தேசிய நோக்கங்களுக்காக விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    ஆபரேசன் சிந்தூர் செயல்பாடுகள் இன்னும் தொடர்கிறது. இது தொடர்பாக சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். ஊகங்கள் அடிப்படையில் பரவும் தகவல்களை சரிபார்க்காமல் மற்றவர்களுக்கு பகிருவதை தவிருங்கள்.

    சரிபார்க்கப்படாத தகவல்களை நம்புவதையும் பரப்புவதையும் தவிர்க்குமாறு இந்திய விமானப்படை அனைவரையும் கேட்டுக்கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள விண்ணப்பிக்கலாம்.
    • 27-6-2003 முதல் 27-12-2006வரைக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

    திருப்பூர்:

    இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறஉள்ளது. இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள இருபாலர்களும் 17-8-2023 வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்திடலாம்.எழுத்துத்தேர்வு 13-10-2023 பின் நடைபெறவுள்ளது.

    இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேருவதற்கு தகுதியான வயது 27-6-2003 முதல் 27-12-2006வரைக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் இரு பாலரும் கலந்துகொள்ளலாம்.மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள தகுதியான இருபாலர்கள் ஆட்சேர்ப்புக்கு பதிந்து முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபடிக் குழு விமான சாகசத்தில் ஈடபடவுள்ளது.
    • இந்திய விமானப்படையின் சாகச ஒத்திகை வீடியோக்கள் வைரல்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (நவம்பர் 19) மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபடிக் குழு நாளை மதியம் 1.30 மணியளவில் விமான சாகசத்தில் ஈடபடவுள்ளது.

    இதற்கான ஒத்திகை நேற்று துவங்கிய நிலையில், இன்றும் விமானப்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்திய விமானப்படையின் சாகச ஒத்திகை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

    • வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார்.
    • கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒரு உயிரிழந்துள்ளார்.

    திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வான் சாகச நிகழ்ச்சயை பார்த்துவிட்டு நிகழ்ச்சி முடிந்து, வீடு திரும்பியபோது அவருக்கு திடீரென வாந்தி எடுத்து மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    அவரை உடனடியாக அவரது மனைவி ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

    கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (60) என்பவர் வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார்.

    மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் குமார் (36) என்பவர் உயிரிழந்துள்ளார். இதனால், உயிரிழப்பின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

    முன்னதாக, வெயில் தாக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    4 பேர் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீர்சத்து குறைபாடு காரணமாக 9 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார்.
    • கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை மெரினா கடற்கரையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்து உடல் நலம் பாதித்து இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

    திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வான் சாகச நிகழ்ச்சயை பார்த்துவிட்டு நிகழ்ச்சி முடிந்து, வீடு திரும்பியபோது அவருக்கு திடீரென வாந்தி எடுத்து மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    அவரை உடனடியாக அவரது மனைவி ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

    கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    முன்னதாக, சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (60) என்பவர் வான் சாகச நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வீடு திரும்பியபோது வெயில் தாக்கத்தால் உயிரிழந்தார்.

    மேலும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷ் குமார் (36) என்பவர் உயிரிழந்துள்ளார்.

    தொடர்ந்து, பெருங்குளத்தூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் நிகழ்ச்சியின்போது மயக்கம் அடைந்து ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

    இதுவரை நான்கு நபர்கள் உயிர் இழந்த நிலையில் தற்போது ஐந்தாவதாக ஒரு நபர் உயிரிழந்துள்ளார். பார்த்தசாரதி என்பவர் ஆர்ச் வழியாக நின்று கொண்டு வான்வழி சாகசங்களை கண்டு களித்துள்ளார்.

    அப்போது திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்துள்ளனர்.ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும், பலர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்பட்டுகிறது.

    • கடும் வெயிலின் தாக்கம் காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்தார்.
    • மயங்கியவரின் இடத்தில் உடனடியாக வந்து நின்ற மற்றொரு வீரர்.

    இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை சாகச நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.

    இந்நிலையில், இந்திய விமானப்படையின் 92து ஆண்டு விழாவை கொண்டாடும் விதமாக தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    அப்போது கடும் வெயிலின் தாக்கம் காரணமாக விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்த சக வீரர்கள் மயங்கி விழுந்த விமானப்படை வீரரை தூக்கி சென்ற முதலுதவி அளித்தனர்.

    மயங்கி விழுந்தவரின் இடத்தில உடனடியாக மற்றொரு வீரர் வந்து நின்றதால் அணிவகுப்பு தடைபடாமல் நடைபெற்றது. 

    விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் பகுதியில் விழுந்தபோதும், எதிரிகள் மத்தியில் தைரியமாக நின்ற இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். #Abhinandan
    புதுடெல்லி:

    இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தபோது இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இதில் ஒரு விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது.

    அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த பைலட் அபினந்தன் பாகிஸ்தான் பிடியில் உள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விமானம் சுடப்பட்டது.

    இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிம்பர் மாவட்டம் ஹரோன் என்ற கிராமத்தில் விமானம் கீழே விழுந்தது. பைலட் அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார்.

    இதை அந்த பகுதியினர் பார்த்துவிட்டு அவர் கீழே குதித்த இடத்தை நோக்கி சென்றனர். அப்போது அபினந்தன் பத்திரமாக கீழே இறங்கினார். அந்த இடத்தை இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். அவர் விழுந்த இடம் பாகிஸ்தானா? இந்தியாவா? என்பது அபினந்தனுக்கு சரியாக தெரியவில்லை.



    எனவே அந்த இளைஞர்களிடம் இது பாகிஸ்தானா இந்தியாவா என்று கேட்டார். இது பாகிஸ்தான் என்று கூறிய அவர்கள் அபினந்தனை தாக்குவதற்கு முயன்றனர். எதிரிகள் மத்தியில் நின்றாலும் நெஞ்சுறுதியுடன் அவர் செயல்பட்டார்.

    விமான பைலட்டுகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம். எனவே அந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். அதையும் மீறி இளைஞர்கள் கற்களால் அவரை தாக்கினார்கள். இருந்தபோதும் வீரத்தை கைவிடாத அபினந்தன் துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி எச்சரித்தார்.

    பின்னர் அங்கிருந்து பின்னோக்கி சென்ற அபினந்தன் தன்னிடம் இருந்த ஆவணங்களை அருகில் இருந்த குட்டையில் வீசி அழித்தார். இதற்குள் ஏராளமான இளைஞர்கள் அங்கு திரண்டு விட்டனர். அவர்கள் அபினந்தனை பிடித்துக் கொண்டார்கள்.

    பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து சென்று ஹாலில்சவுத் என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்தனர். #Abhinandan
    ×