search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indian airforce"

    • இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபடிக் குழு விமான சாகசத்தில் ஈடபடவுள்ளது.
    • இந்திய விமானப்படையின் சாகச ஒத்திகை வீடியோக்கள் வைரல்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நாளை (நவம்பர் 19) மதியம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இறுதிப் போட்டியை ஒட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்திய விமானப்படையின் சூர்யகிரண் ஏரோபடிக் குழு நாளை மதியம் 1.30 மணியளவில் விமான சாகசத்தில் ஈடபடவுள்ளது.

    இதற்கான ஒத்திகை நேற்று துவங்கிய நிலையில், இன்றும் விமானப்படை வீரர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். இந்திய விமானப்படையின் சாகச ஒத்திகை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 

    • இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள விண்ணப்பிக்கலாம்.
    • 27-6-2003 முதல் 27-12-2006வரைக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.

    திருப்பூர்:

    இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறஉள்ளது. இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேர விருப்பமுள்ள இருபாலர்களும் 17-8-2023 வரை https://agnipathvayu.cdac.in/AV/ என்ற இணையதளம் மூலம் பதிவு செய்திடலாம்.எழுத்துத்தேர்வு 13-10-2023 பின் நடைபெறவுள்ளது.

    இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் சேருவதற்கு தகுதியான வயது 27-6-2003 முதல் 27-12-2006வரைக்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும்.இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு பிரிவில் இரு பாலரும் கலந்துகொள்ளலாம்.மேலும் விபரங்கள் அறிந்து கொள்ள இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விருப்பமுள்ள தகுதியான இருபாலர்கள் ஆட்சேர்ப்புக்கு பதிந்து முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் பகுதியில் விழுந்தபோதும், எதிரிகள் மத்தியில் தைரியமாக நின்ற இந்திய விமானப்படை வீரர் அபினந்தனின் தைரியத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். #Abhinandan
    புதுடெல்லி:

    இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் விமானங்களை விரட்டியடித்தபோது இந்திய விமானத்தை பாகிஸ்தான் சுட்டது. இதில் ஒரு விமானம் பாகிஸ்தானுக்குள் விழுந்தது.

    அதில் இருந்த தமிழகத்தை சேர்ந்த பைலட் அபினந்தன் பாகிஸ்தான் பிடியில் உள்ளார். நேற்று காலை 8.45 மணியளவில் இந்த விமானம் சுடப்பட்டது.

    இந்திய எல்லையில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பிம்பர் மாவட்டம் ஹரோன் என்ற கிராமத்தில் விமானம் கீழே விழுந்தது. பைலட் அபினந்தன் பாராசூட் மூலம் கீழே குதித்தார்.

    இதை அந்த பகுதியினர் பார்த்துவிட்டு அவர் கீழே குதித்த இடத்தை நோக்கி சென்றனர். அப்போது அபினந்தன் பத்திரமாக கீழே இறங்கினார். அந்த இடத்தை இளைஞர்கள் சுற்றி வளைத்தனர். அவர் விழுந்த இடம் பாகிஸ்தானா? இந்தியாவா? என்பது அபினந்தனுக்கு சரியாக தெரியவில்லை.



    எனவே அந்த இளைஞர்களிடம் இது பாகிஸ்தானா இந்தியாவா என்று கேட்டார். இது பாகிஸ்தான் என்று கூறிய அவர்கள் அபினந்தனை தாக்குவதற்கு முயன்றனர். எதிரிகள் மத்தியில் நின்றாலும் நெஞ்சுறுதியுடன் அவர் செயல்பட்டார்.

    விமான பைலட்டுகள் எப்போதும் கைத்துப்பாக்கி வைத்திருப்பது வழக்கம். எனவே அந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டார். அதையும் மீறி இளைஞர்கள் கற்களால் அவரை தாக்கினார்கள். இருந்தபோதும் வீரத்தை கைவிடாத அபினந்தன் துப்பாக்கியை அவர்களை நோக்கி நீட்டி எச்சரித்தார்.

    பின்னர் அங்கிருந்து பின்னோக்கி சென்ற அபினந்தன் தன்னிடம் இருந்த ஆவணங்களை அருகில் இருந்த குட்டையில் வீசி அழித்தார். இதற்குள் ஏராளமான இளைஞர்கள் அங்கு திரண்டு விட்டனர். அவர்கள் அபினந்தனை பிடித்துக் கொண்டார்கள்.

    பின்னர் அவரை அங்கிருந்து அழைத்து சென்று ஹாலில்சவுத் என்ற இடத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்தனர். #Abhinandan
    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய விமான படை நடத்திய தாக்குதலுக்கு புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #Surgicalstrike2 #Narayanasamy
    புதுச்சேரி:

    புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவம் பயங்கரவா முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.

    ஜம்மு, காஷ்மீர் அருகே விமான படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமான பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய விமான படை வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    இதுகுறித்து புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில், ஜம்மு, காஷ்மீர் அருகிலுள்ள பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படைக்கு என் வணக்கங்களை தெரிவிக்கிறேன். உங்களால் நாட்டுக்கு பெருமை.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    புதுவை முன்னாள் எம்.பி. கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    இன்று அதிகாலை நேரத்தில் இந்திய ராணுவத்தின் விமானப் படையானது பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் மீது குறிப்பாக புல்வாமா தாக்குதல் நடத்திய ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது சரியான பதிலடி.

    நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன. இது இந்திய மக்களுக்கு மட்டுமல்ல பயங்கரவாதத்தை எதிர்க்கக் கூடிய மனிதாபிமானம் உடைய அத்தனை பேரும் வரவேற்கக்கூடிய செயலாகும்.

    இந்த தருணத்தில் நாம் அத்தனை பேரும் ஜாதி, மதம், பாகுபாடு அத்தனையும் மறந்து பயங்கரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கும், முப்படை தளபதிகளுக்கும், இந்திய பிரதமருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

    மேலும் இந்திய அரசுக்கும், இந்திய ராணுவத்துக்கும் துணை நிற்க வேண்டிய நேரம் என்பதை தெரியப்படுத்த வேண்டியது எனது தேசிய கடமை. உலகில் எந்த பகுதியில் பயங்கரவாதம் இருந்தாலும் எதிர்க்க வேண்டியது மனிதகுலத்தின் தலையாய கடமை. ஜெய் ஜவான், ஜெய்பாரத்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். #Surgicalstrike2 #Narayanasamy
    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய செய்தி மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் அமைந்துள்ளது என்று இல.கணேசன் கூறியுள்ளார். #Surgicalstrike2 #BJP #LGanesan
    மதுரை:

    பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இதனால் தமிழகத்தில் இளைஞர்களின் தேசபக்தி உணர்வு பீரிட்டு எழுந்ததை பார்த்தோம்.

    பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்தியது இதுவரை சந்தித்திராத பெரிய தாக்குதல். இந்திய தேசம் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருந்த இந்த நேரத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தரவேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார்.

    அதன்படி இன்று அதிகாலை இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல்களை நடத்தி விட்டு வெற்றிகரமாக திரும்பிவிட்டது. இதை யாரும் அரசியல் ரீதியாக பார்க்கக்கூடாது.

    இறந்தவர்களின் ஆன்மா நற்கதி அடையவும், இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டால் ஒட்டுமொத்த தேசமே ஆர்த்தெழுந்து பதிலடிதரும் என்பதை பாகிஸ்தானுக்கு உணர்த்தும் வகையிலும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்திய செய்தி மனதுக்கு ஆறுதல் அளிப்பதாகவும், உற்சாகம் தருவதாகவும் அமைந்துள்ளது.

    பா.ஜனதாவை பொறுத்தவரை காஷ்மீர் பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்பட வேண்டும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீர் மீட்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.



    தேசிய அளவில் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. பிரதமர் மோடி தமிழகத்தில் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி 5 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தோம் என்பதை எடுத்துச்சொல்லி பிரசாரம் செய்து வருகிறார்.

    ஆனால் காங்கிரஸ் கட்சி தனி நபருக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார் என்பதை மறந்து கீழ்த்தரமான வார்த்தைகளால் ராகுல்காந்தி அர்ச்சித்து வருகிறார். இது தரமான அரசியலுக்கும், தரமற்ற அரசியலுக்கும் இடையே நடக்கும் தேர்தல்.

    இது லோட்டசுக்கும் (தாமரை), லூட்டர்சுக்கும் (கொள்ளையர்கள்) இடையே நடக்கும் தேர்தல். காங்கிரஸ் என்றாலே ஸ்கேம் (ஊழல்) என்று அர்த்தம். மோடி என்றால் ஸ்கீம் (திட்டம்) என்று அர்த்தம். பிரதமர் மோடிக்கு தேசமே சக்தி. ராகுல்காந்திக்கு குடும்பமே சக்தியாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #Surgicalstrike2 #BJP #LGanesan
    எல்லையில் போர் நடந்து இந்தியா தனது பலத்தை காட்டினாலும் பாரதிய ஜனதா வாக்கு வங்கி உயராது என்று முத்தரசன் கூறினார். #Mutharasan #BJP #Surgicalstrike2
    கோவை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கோவையை சேர்ந்த அருணாசலம் முருகானந்தம் குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்டு வாழ்த்து தெரிவித்து கொள்கிறது.

    வருகிற தேர்தல் மிக பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. பிரதமர் மோடி தேர்தல் வாக்குறுதியில் 100 நாளில் கருப்பு பணத்தை மீட்போம் என்றார். தற்போது இந்த வாக்குறுதி குறித்து பேச மறுக்கிறார்.

    ஜி.எஸ்.டி. மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

    இயற்கை சீற்றத்தால் தமிழ்நாடு தொடர்ந்து பாதிக்கப்பட்ட போது மத்திய அரசு தேவையான நிதி ஒதுக்கவில்லை.

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக பேசினார். ஆனால் அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கிறது.

    அவர்களுடன் தற்போது பா.ம.க. கூட்டணி வைத்துள்ளது. எங்கள் அணி கொள்கை அடிப்படையிலான அணி. மாநில உரிமைகளை காக்க தி.மு.க., ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து செயல்படுகிறோம்.

    கோவையில் நாளை 7 கட்சிகளின் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து எங்கள் குழு பேசி உள்ளது. முதல் கட்ட பேச்சு வார்த்தையில் திருப்தி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.

    நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். தி.மு.க.வுடன் இணைந்து பல்வேறு போராட்டம் நடத்தி உள்ளோம். இந்த கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல. பாரதிய ஜனதாவை தோற்கடிக்க சேர்ந்த கூட்டணி.

    மாயமாகி உள்ள சமூக ஆர்வலர் முகிலனை மாநில அரசு தேடி கண்டுபிடித்து கொடுக்க வேண்டும்.

    இந்தியா-பாகிஸ்தான் போர் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும். எல்லையில் போர் நடந்து இந்தியா தனது பலத்தை காட்டினாலும் பாரதிய ஜனதா வாக்கு வங்கி உயராது. இது தேர்தலில் எதிரொலிக்காது.

    தேர்தல் சமயத்தில் இது போன்று பல சாகசங்களை பாரதிய ஜனதா மேற்கொண்டாலும் தேர்தலில் பலிக்காது. அ.தி.மு.க. கூட்டணி மர்ம கூட்டணி. எங்களது கூட்டணி பகிரங்கமான வெளிப்படையான கூட்டணி.

    இவ்வாறு முத்தரசன் கூறினார். #Mutharasan #BJP #Surgicalstrike2
    ×