என் மலர்
நீங்கள் தேடியது "Tambaram"
- நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
- இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது
நெல்லை:
தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரெயில்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். இதற்காக பண்டிகை காலங்கள் மட்டுமல்லாது சில நேரங்களில் சிறப்பு ரெயில்கள் இந்த வழித்தடங்களில் இயக்கப்படுவது வழக்கம்.
அதன்படி நெல்லையில் இருந்து தஞ்சாவூர் வழியாக சென்னை தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரெயில் ஒன்று இயக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுமார்க்கமாக சென்னையில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படாது என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரெயிலானது நாளை மறுநாள்(திங்கட்கிழமை) காலை 6.15 மணிக்கு தாம்பரம் சென்றடைகிறது.
மொத்தம் 16 பெட்டிகளுடன் ஓடும் இந்த ரெயிலானது கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட ரெயில்நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேஜஸ் ரெயில் தாம்பரத்தில் நிறுத்தப்படுமா? என்பதற்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் பதில் தெரிவித்தார்.
- தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா பதில் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.
மதுரை
மதுரை- சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இது திண்டுக்கல், திருச்சி ஆகிய 2 இடங்களில் மட்டும் நின்று செல்கிறது.
இந்த நிலையில் தேஜஸ் ரெயிலை தாம்பரத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்தார். அதற்கு தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையா பதில் தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார். அதில் மதுரை- சென்னை இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் தேஜஸ் ரெயிலுக்கு தாம்பரத்தில் நிறுத்தம் கொண்டு வருவது தொடர்பாக மத்திய ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
தாம்பரம்:
மேற்கு தாம்பரத்தில் ஜெருசலேம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் சிவா என்கிற கருப்பசாமி (45). இவர் வட்டி தொழில் செய்து வருகிறார். உறவினர் திருமணத்துக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்செந்தூர் சென்றிருந்தார். இன்று காலை திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.20 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ மூலம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை:
சென்னை ரெயில்வே கோட்டத்தில் உள்ள கடற்கரை, தாம்பரம், திருவள்ளூர் ஆகிய 3 ரெயில் நிலையங்களில் ‘எஸ்கலேட்டர்’ என்ற நகரும் படிக்கட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று ரெயில் நிலையங்களில் ரூ.11 கோடி செலவில் 11 நகரும் படிக்கட்டுகள் அமைக்கப்பட உள்ளது.
கடற்கரை ரெயில் நிலையத்தில் 5 நகரும் படிக்கட்டுகளும், தாம்பரம் ரெயில் நிலையத்தில் 4 படிக்கட்டுகளும், திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் 2 படிக்கட்டுகளும் அமைக்கப்படுகின்றன. எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
இதற்காக அடிக்கல் நாட்டுவிழா மூன்று ரெயில் நிலையங்களிலும் நடந்தது.
சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் எம்.பி.க்கள் டி.கே.ரங்கராஜன், நவநீதகிருஷ்ணன், சென்னை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் சுனில் சார்டே கலந்து கொண்டனர்.
தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் கே.என்.ராமச்சந்திரன் எம்.பி.யும், திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நடந்த விழாவில் வேணு கோபால் எம்.பி.யும் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர். இப்பணிகள் 6 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார்..
நேற்று மாலை பணி முடிந்ததும் மின்சார ரெயிலில் பெருங்களத்தூர் வந்தார். இங்கு ரெயிலில் இருந்து இறங்கிய அவர் வீட்டுக்கு புறப்பட்டார். அவர் செல்போனை பார்த்தபடியே நடந்து சென்றார்.
அப்போது கால் தடுக்கி தண்டவாளத்தில் விழுந்ததால் அவர் மீது ரெயில் மோதியது. இதனால் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அருகே புற வட்டச் சாலையில் நேற்று இரவு பீர்க்கன்கரணை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னை நோக்கி வந்த காரில் சோதனை செய்தபோது அதில் 250 கிலோ குட்கா, புகையிலை கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
காரில் இருந்த அனகாபுத்தூரைச் சேர்ந்த வியாபாரி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். வேலூரில் இருந்து குட்கா, புகையிலை வாங்கி வந்ததாக அவர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து குட்கா, புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். வேலூரில் தொடர்புடைய குட்கா வியாபாரிகள் யார்-யார்? இங்கு எந்தெந்த பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காயரம்பேடு கிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 53). காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் முத்தம்மாள். தேவராஜுக்கு 3 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். முத்தம்மாளுக்கு அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.
முத்தம்மாளை சரியாக கவனிக்காததால் தேவராஜுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகிவிட்டு முத்தம்மாளும், அவரது மகள் விஜயலட்சுமியும் நேற்று இரவு 7 மணி அளவில் தாம்பரம் பஸ் நிலையம் வந்தனர்.
பின்னர் குன்றத்தூர் அருகே உள்ள கோவூருக்கு செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் ஏறிய தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்தம்மாளையும், விஜயலட்சுமியையும் சரமாரியாக வெட்டினார்.
இதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த விஜயலட்சுமி சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில் சொத்துக்காக தனது தாயை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீபாவளி பண்டிகையையொட்டி கூட்டநெரிசலை சமாளிக்க சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து நெல்லை மற்றும் கோவைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
அதன்படி தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில் நேற்று காலை 9.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து பயணிகளுடன் நெல்லைக்கு புறப்பட்டு சென்றது. இதேபோல 5-ந் தேதி(திங்கட்கிழமை)யும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரெயில்கள், நெல்லையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி காலை 7.10 மணிக்கு புறப்பட்டு அதேநாள் இரவு 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.
இதேபோல சென்னை -கோவை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் நேற்று காலை 7.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 5-ந் தேதியும் இந்த சிறப்பு ரெயில் தாம்பரத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 7-ந் தேதி ஆகிய இரு நாட்களும் காலை 10 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் வந்துசேரும்.
நெல்லை மற்றும் கோவைக்கு தாம்பரத்தில் இருந்து தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டதால் 2 ரெயில்களிலும் கூட்ட நெரிசல் இன்றி பயணிகள் குடும்பத்தினரோடு சொந்த ஊர்களுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றனர்.
இதேபோல தாம்பரம் சானடோரியம் பஸ் நிலையத்தில் இருந்து விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அதிக பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் தீபாவளி பண்டிகையை கொண்டாட கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்தனர்.
தாம்பரம்:
தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் சுவாமி விவேகானந்தர் தெருவை சேர்ந்தவர் பொன்னையா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி காளிஸ்வரி. தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.
நேற்று வீட்டை பூட்டிவிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். மாலை திரும்பி வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து பீர்க்கன்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
தாம்பரம்:
கிழக்கு தாம்பரம் ஆனந்தா நகரில் வசித்து வருபவர் ஜான்காட்வின் (வயது 26) சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. ஜான் காட்வினுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்து வற்புறுத்தினர். ஆனால் அவர் திருமணம் செய்ய விருப்பம் இல்லை என்று கூறி வந்தார்.
இந்த நிலையில் ஜான் காட்வின் தனது பெற்றோருக்கு கடிதம் அனுப்பி விட்டு மாயமாகி விட்டார். அந்த கடிதத்தில் ‘‘எனக்கு திருமணம் செய்ய ஆசை இல்லை. திருமணத்துக்கு வற்புறுத்துவதால் நான் பிரிந்து செல்கிறேன். பரலோகத்தில் சந்திப்போம்’’ என்று எழுதப்பட்டு இருந்தது. இது குறித்து சிட்லபாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.