search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric train"

    • ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
    • பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல உயர்மட்ட மேம்பாலம், சுரங்கநடைபாதை வசதிகள் இல்லை. இதனால் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் நடைமேடைகளுக்கு செல்ல தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் ரெயில் நிலையத்தில் அடிக்கடி ரெயில்மோதி அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப் பாதை பணிகளை மீண்டும் தொடங்கி உடனடியாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மேம்பால பணிகள் மற்றும் ரெயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்எச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் ஒலிபெருக்கி மற்றும் காவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ரெயில்வே மேம்பாலம் பணிக்கு நிலம் எடுப்புக்கான தடை நீக்கப்பட்டது.


    இந்த பணியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க கூடுதலாக ரூ.24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஆனால் அங்கு பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்படவில்லை. கட்டி முடிக்காமல் பாதியில் நிற்கும் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் புதர் மண்டியும், கழிவுநீரால் சூழப்பட்டும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து. இதுவரை ரூ.38 லட்சம் செலவிடப்பட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த பணியை முழுமையாக செய்வதற்கும், நில எடுப்பு தொடர்பாகவும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவுரைகள் வழங்கிய நிலையில் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

    எனவே கழிவு நீர் சூழ்ந்து காணப்படும் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போதும், இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஸ்வநாதன் கூறும்போது"வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணி நிறுத்தப்பட்ட பின்னர் தற்போது 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. ஆனால் வேப்பம்பட்டு ரெயில் நிலைய சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போட்டு உள்ளனர். இதனால் ரெயில்நிலையத்திற்கு வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே சுரங்கப்பாதை சுரங்கப்பாதை பணியை விரைவில் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    • இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது.
    • மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

    சென்னை:

    சென்னை கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே கடந்த சில வாரங்களாகவே ஞாயிற்றுக்கிழமைகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இன்றும் கோடம்பாக்கம்-தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்தது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பணிகள் பிற்பகல் 3.15 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக அந்த நேரத்தில் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இதையடுத்து அவர்கள் மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணம் செய்தனர். இதன் காரணமாக மெட்ரோ ரெயில்கள் மற்றும் மாநகர பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்ப ட்டது. 44 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் வசதிக்காக மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் இன்று கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன. மின்சார ரெயில் செல்லும் வழித்தடங்களான தாம்பரம், கிண்டி, தி.நகர், சென்ட்ரல், சென்னை கடற்கரை வரை வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 150 பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதனால் அந்த பஸ்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்தனர். மெட்ரோ ரெயில்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இன்று கூடுதலாக மெட்ரோ ரெயில்களும் இயக்கப்பட்டன. காலை 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. அதன் பிறகு காலை 10 மணி முதல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் சிரமம் இன்றி பயணம் செய்தனர். இன்று இரவு 8 மணி வரை கூடுதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. பின்னர் இரவு 8 மணி முதல் 10 மணி வரை, 10 நிமிட இடைவெளியிலும், இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    • மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
    • காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    காஞ்சிபுரம்:

    திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே செங்கல்பட்டு வழியாக பயணிகள் மின்சார ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் ஆயிரக்காணக்கான பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பொது மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு இந்த ரெயில் பெரிதும் பயன்உள்ளதாக உள்ளது. காலை நேரத்தில் குறித்த நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்குசெல்ல ஏராளமான பயணிகள் திருமால்பூர் - சென்னை கடற்கரை ரெயிலில் பயணம் செய்வதால் எப்போதும் கூட்டம் நிரம்பி இருக்கும்.

    மேலும் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரெயில் நிலையங்களில் சரக்குகளை கையாள முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் தென்னக ரெயில்வேக்கு வருமானம் கிடைத்து வருகிறது.

    இதனால் சரக்கு ரெயில்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் பயணிகள் மின்சார ரெயில்களை நிறுத்தி தாமதமாக இயக்கி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 6.15 மணிக்கு காஞ்சிபுரம் ரெயில் நிலையத்திற்கு வர வேண்டிய திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் தாமதமாக 6.45 மணிக்கு வந்தது. இதனால் ரெயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். திடீரென அவர்கள் மின்சார ரெயில் முன்பு நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தினமும் தாமதமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுவதை கண்டித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் காஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் ரெயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்சார ரெயிலை குறித்த நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மின்சார ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதுகுறித்து பயணிகள் கூறும்போது, திருமால்பூர் - சென்னை கடற்கரை மின்சார ரெயில் தினமும் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்வோர் பொதுமக்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதனை தவிர்க்க காஞ்சிபுரம்- செங்கல்பட்டு இடையே இரு வழிப்பாதை திட்டத்தை உடனடியாக கொண்டு வரவேண்டும் என்றனர்.

    • மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த ரெயில்கள் மாற்று பாதையில் சென்றன.
    • பிரேக் பழுதுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    வேலூர் கன்டோன் மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இன்று காலை மின்சார ரெயில் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. ஏராளமான பயணிகள் அதில் பயணம் செய்தனர்.

    திருவள்ளூர் அருகே செஞ்சிபனம்பாக்கம் - கடம்பத்தூர் ரெயில் நிலையத்திற்கு இடையே மின்சார ரெயில் வந்து கொண்டு இருந்த போது அதில் பயன்படுத்தும் பிரேக்கில் கோளாறு இருப்பது தெரிந்து.

    மேலும் ஒரு பெட்டியின் கீழ்ப்பகுதியில் சக்கரம் சரிவர சுற்றாமல் உரசி புகையும் வந்தது. இதைத்தொடர்ந்து நடுவழியிலேயே மின்சார ரெயில் நிறுத்தப்பட்டது.

    தகவல் அறிந்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து பிரேக் கோளாறை சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். காலை நேரம் என்பதால் பணிக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர். இதைத்தொடர்ந்த மின்சார ரெயிலில் இருந்த பயணிகள் பெரும்பாலானோர் அங்கிருந்து கடம்பத்தூர், மற்றும் திருவள்ளூருக்கு நடந்தும் வாகனங்களிலும் வந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து வேறு மின்சார ரெயில்களில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றனர்.

    வேலூரில் இருந்து வந்த மின்சார ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த ரெயில்கள் மாற்று பாதையில் சென்றன. சுமார் 1/2 மணி நேரத்திற்கு பின்னர் பிரேக் பழுது சரிபார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த மின்சார ரெயில் சென்னை கடற்கரை நோக்கி மெதுவாக சென்றது. பிரேக் பழுதுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சரியான நேரத்தில் மின்சார ரெயில் நிறுத்தப்பட்டு பிரேக் பழுது பார்க்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.

    தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்க நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே நிர்வாகம் மற்றொரு புதிய ஏற்பாடு செய்துள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வரும்போதும் போகும்போதும் எச்சரிக்கும் விதமாக ஒலிபெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. விரைவு வண்டி ரெயில் நிலையத்தை கடக்கும்போது எச்சரிக்கும் விதமாக ஒலி பெருக்கி மூலம் ஒலி எழுப்பப்படுகிறது. ரெயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தற்காலிக ஏற்பாடு செய்த போதிலும், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும்.

    • பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
    • தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெண் பயணிகள் கூட்டம் ஆண்களை விட அதிகம் காணப்படும்.
    • பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    சென்னை தாம்பரம் கடற்கரை வழித்தடத்தில் பல்லாவரம் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் பல்லாவரம் பயணிகள் மட்டுமின்றி, பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை, குன்றத்தூர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.

    இப்பகுதியில் தனியார் பல்கலைக்கழகம், கல்லூரிகள், மேல்நிலை பள்ளிகள் அதிக அளவில் இருப்பதால் மாணவ மாணவிகள் பல்லாவரம் ரெயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற திருநீர்மலை ரங்கநாதர் கோவிலும் இங்கு உள்ளது.

    பெண்கள் அதிக அளவில் வேலை செய்யும் தொழில் கூடங்கள், புதிய குடியிருப்பு அதிக அளவில் இருப்பதால், பல்லாவரம் ரெயில் நிலையத்தில், அதிகாலையில் இருந்து, நள்ளிரவை தாண்டியும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. பெண் பயணிகள் கூட்டம் ஆண்களை விட அதிகம் காணப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல்லாவரம் ரெயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றன.

    கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்தடை, இரவு 9:30 மணிக்கு மேல் தான் மீண்டும், மின்சாரம் வந்தது. அதற்கு முந்தைய வாரத்திலும் இதேப்போல் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பல்லாவரம் ரெயில் நிலையம் இருளில் மூழ்கி தத்தளிக்கிறது.

    இதனால் ரெயில் பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சிலர், பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.


    இதனால் பல்லாவரம் ரெயில் நிலையத்தில் பெண் பயணிகள் பலர், ரெயிலை விட்டு இறங்கியதும் தங்கள் செல்போன்களில் உள்ள டார்ச் லைட்டை ஒளிர செய்து, அந்த வெளிச்சத்தில் நடந்து செல்கின்றனர். அதேப்போல் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கடைகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பிளாட்பாரத்தில் வருகின்ற ரெயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் போன்ற இடங்களுக்கு செல்கிறது என்பதை காட்டும் டிஸ்ப்ளே போர்டில், விளக்குகள் எரியாமல், இருள் அடைந்து விடுவதால், வருகின்ற ரெயில் எங்கு செல்வது செல்கிறது என்பது தெரியாமல், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    படிக்கட்டுகள் இருளடைந்து கிடப்பதால், வயதானவர்கள் படிகளில் ஏறி வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கடந்த 2016 -ம் ஆண்டு சுவாதி என்ற இளம் பெண் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக அமைக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால் பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரெயில் நிலையங்களில், இதுவரையில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படவில்லை.

    பல்லாவரம் ரெயில் நிலையத்தில் அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை, சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாததை மர்ம கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால் இரவு நேரங்களில் ரெயில் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் பெண் பயணிகள், பீதியில், தினமும் பயணித்து வருகின்றனர்.

    எனவே ரெயில்வே நிர்வாகம், உடனடியாக பல்லாவரம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பதோடு, இரவு நேரங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர காலங்களில் உபயோகிப்பதற்கான இன்வெர்ட்டர் அல்லது ஜெனரேட்டரை அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்தில், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை, பாதுகாப்புக்காக பெண் போலீசார் உள்ளிட்ட காவலர்களை, பணியில் அமர்த்த வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • பறக்கும் ரெயிலில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம்.
    • மாணவன் சீருடையில் இருந்துள்ளான்.

    சென்னையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பஸ், ரெயில்களில் மீது ஏறி சாகசம் என்ற பெயரில் ஆபத்தான செயலில் ஈடுபடும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரித்தும் வழக்குப் பதிவு செய்தும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தும் அபாயகரமான பயணம் அவ்வப்போது தொடர்கிறது.

    உயிரை பொருட்படுத்தாமல் சக பயணிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடக்கும் இது போன்ற சம்பவத்தால் சில நேரங்களில் விபத்தில் சிக்கி உயிர் இழப்பும் நேர்ந்து விடுகிறது. பஸ், ரெயில் நிலையங்களில் மாணவர்களின் இத்தகைய செயல்களை போலீசார் கண்காணித்த போதும் திடீரென பயணத்தின் போது பஸ், ரெயில்கள் மீது ஏறி தொங்கி ஆட்டம் போடுகிற சம்பவம் சென்னையில் தொடர் கதையாக நடக்கிறது.

    அந்த வகையில் தற்போது பறக்கும் ரெயிலில் பள்ளி மாணவன் ஒருவன் உயிரையும் பொருட்படுத்தாமல் தொங்கியபடி பயணம் செய்த காட்சி பொது மக்களை பதற வைத்துள்ளது. சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையே இயக்கப்படும் பறக்கும் ரெயிலில் மயிலாப்பூரில் இருந்து ஏறிய பள்ளி மாணவன் ஒருவன் திடீரென பதறவைக்கும் வகையில் ஜன்னலில் தொங்கிய படி பயணம் செய்தார்.

    100 கி.மீ வேகத்திற்கு மேல் சென்ற அந்த ரெயிலில் மாணவன் தன் உயிரை பொருட்படுத்தாமல் ஜன்னல் மீது நின்றும் தொங்கியும் பயணம் செய்ததை பார்த்து பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை ஒரு பயணி செல்போனில் படம் எடுத்து அதை வலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    பல ரெயில்களை கடந்து மாணவன் தொங்கிய படி சாகச செயலில் ஈடுபட்டது. மெய்சிலிர்க்க வைத்தது. சாகச செயலில் ஈடுபட்ட மாணவன் சீருடையில் இருந்துள்ளான். இந்த சம்பவம் சனிக்கிழமை நடந்திருக்கலாம் என்று தெரிகிறது.

    விபத்தை உணராமல் சிறிதும் அச்சமின்றி சினிமாவை மிஞ்சும் வகையில் செயல்பட்ட மாணவனின் செயல் சிறிது நேரம் அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளுக்கு அடுத்து என்ன நடக்குமோ? ஏதாவது விபரீதம் நடந்து விடுமோ என்ற பயத்தையும், பீதியையும் பயணிகள் மத்தியில் ஏற்படுத்தியது.

    மாணவர்களின் சாகச நிகழ்ச்சியை படம் பிடித்து வெளியிட்ட பயணி அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இது போன்ற சம்பவங்கள் ரெயில் பயணத்தில் நடப்பதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

    இதனை தொடர்ந்து ரெயில் பாதுகாப்பு படை போலீசார் அந்த ரெயில் எண், பயண நேரம், நிலையம் போன்றவற்றை ஆய்வு செய்து நடவடிக்கையை தொடங்கி உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்
    • ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.

    தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்க நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.


    இதற்கிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே நிர்வாகம் புதிய ஏற்பாடு செய்துள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வரும்போது போகும்போதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. விரைவு வண்டி ரெயில் நிலையத்தை கடக்கும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. ரெயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரெயில்வே போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    தற்காலிக ஏற்பாடு செய்த போதிலும், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தால் மட்டுமே நிரந்த தீர்வு ஏற்படும்.

    • ரெயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
    • வருகிற 6 மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் கடந்த 19-ந் தேதி தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை-2 மகள்கள் மின்சார ரெயில் மோதி பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் நிலையத்தில் முடிக்கப்படாத சுரங்கநடைபாதை பணி மற்றும் மேம்பாலப்பணியே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் 3 பேர் பலியான இடத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார். அப்போது வருவாய்த்துறை மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.

    அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் பிரபு சங்கரிடம் கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் குறித்து சரமாரியாக குற்றம் சாட்டினர்.

    இதைத்தொடர்ந்து கலெக்டர் பிரபு சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகள் முழுமையாக செய்வதற்கு நில எடுப்பு சம்பந்தமான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

     


    மேம்பால பணிகள், ரெயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்எச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் காவலர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

    இதேபோல் மாவட்டத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் மனித உயிரிழப்பு மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகளை தடுக்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். சுரங்கப்பாதை அமைப்பதற்கு தனிநபரிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை பணிகளுக்கு அதற்கான நில உரிமையாளரிடம் கலந்தாலோசித்து வருகிற 6 மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்கள் செல்வ நம்பி, கணேசன், ரெயில்வே துறை கோட்ட பொறியாளர் ஜம்ஷீர், உதவி கோட்ட பொறியாளர் சரவணன் பவன், திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ் குமார் உடன் இருந்தனர்.

    • பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.
    • மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.

    பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்கநடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடை மேம்பாலம் இல்லை.

    இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர். தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்கநடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதற்கிடையே நேற்று மதியம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மனோகரன், அவரது மகள்கள் தாரணி, தேவதர்ஷினி ஆகியோர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து சென்றபோது மின்சார ரெயில் மோதி பலியானர்கள். இவர்களில் தாரணி தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டும், தேவதர்ஷினி 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். பல்வேறு எதிர்கால கனவுகளுடன் இருந்த மாணவிகள் 2 பேரின் வாழ்க்கையும் நொடிப்பொழுதில் முடிந்து போனது.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து, இதுவரை ரூ.38 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளது.


    ஆனால் அந்த சுரங்கப்பாதை பணி பாதியில் நிறுத்தப்பட்டது. தற்போது அந்த இடம் தண்ணீர் நிறைந்து குப்பைகளால் சுரங்கப்பாதை இருக்கும் இடமே தெரியாத அளவிற்கு உள்ளது. பணிகள் நடைபெற்றதற்கான எந்த அடையாளமும் அங்கு இல்லை. ரெயில்வே அதிகாரிகளின் அலட்சியத்தால் சுரங்கநடைபாதை மற்றும் மேம்பாலம் இல்லாததால் வேப்பம்பட்டு ரெயில் நிலைத்தில் தண்டவாளத்தை கடந்து செல்பவர்கள் ரெயிலில் அடிபட்டு பலியாகும் சம்பவம் தொடர்கதையாக உள்ளது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு யார் பொறுப்பு ஏற்பார்கள்? என்பதே பொதுமக்களின் ஆவேசமாக உள்ளது.

    வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணிக்காக அங்கிருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியின் பெரும்பகுதியை கடந்த 2009-10-ம் ஆண்டுகளில் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு முடித்துள்ளது.

    ஆனால், மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில் முதல் கட்டமாக ரெயில்வே கேட்டின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடந்தன. மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்தது. இதற்காக 5-க்கும் மேற்பட்ட தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோர்ட்டில் நடைபெற்ற வழக்குகளில் சாதகமான உத்தரவு வந்த பின்னரும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது. இப்படி 10 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரெயில் பயணி தியாகராஜன் கூறியதாவது:-

    வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட்டு நீக்கியும் மேம்பால பணி கிடப்பில் உள்ளது.

    தியாகராஜன்

    தியாகராஜன்

    வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானது மிகவும் சோகமானது. ரெயில் நிலையத்தில் பயணிகளின் தேவையை அறிந்த அதற்கேற்ப வசதிகள் செய்துதர வேண்டும். ரெயில் நிலையத்தில் நடை மேம்பாலம், சுரங்கப்பாதை இல்லை என்று பல ஆண்டுகளாக ரெயில் பயணிகள் கூறிவருகிறார்கள்.

    ஆனால் இதுபற்றி எந்த நடவடிக்கையும் ரெயில்வே நிர்வாகம் எடுக்கவில்லை. இப்போது ஒரே விபத்தில் 3 பேர் தங்களது வாழ்க்கையை இழந்து விட்டனர். இதற்கு யார் பொறுப்பு? அதிகாரிகள் தான் இதற்கு முழுகாரணம் ஆகும்.

    வேப்பம்பட்டு ரெயில்வே கேட்டை தாண்டி பெருமாள்பட்டு மற்றும் வேப்பம்பட்டு பகுதிகளுக்கு மட்டும் இல்லாமல், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருமழிசை, பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழியாக இருக்கின்றன. ரெயில்வே மேம்பால பணி கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். ரெயில்வே மேம்பாலம் மற்றும் சுரங்கப்பாதை பணியை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் இது போன்ற விபத்து பலிகள் தொடரத்தான் செய்யும் என்றார்.

    ஜோதி விஸ்வநாதன்(வேப்பம்பட்டு):-

    தினமுன் ஏராளமானோர் பயன்படுத்தும் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் சுரங்கநடைபாதை இதுவரை அமைக்காதது மிகப்பெரிய தவறு. வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பிற எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 100 கி.மீட்டருக்கும் மேல் வேகத்தில் செல்கின்றன. ஆனால் தண்டவாளத்தை கடந்து செல்ல எந்த முன்எச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை. இதேபோல் பல ரெயில் நிலையங்களில் ரெயில்வே நடை மேம்பாலம், சுரங்கநடைபாதை இல்லாத நிலையே காணப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இனியாவது ரெயில்வே வாரியம் விரைந்து எடுக்க வேண்டும்.

    ஜோதி விஸ்வநாதன்

    ஜோதி விஸ்வநாதன்

    இதேபோல் இந்த பகுதியில் ரெயில்வே மேம்பால பணி 10 ஆண்டுக்கு மேல் கிடப்பில் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

    மருத்துவ மனைக்கு உடனடியாக அழைத்து செல்லவேண்டிய நிலையில் உள்ள நோயாளிகள், கர்ப்பிணிப் பெண்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சுமார் ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மற்றொரு ரெயில்வே கேட்டை கடந்துதான் செல்ல வேண்டி இருக்கிறது. மேம்பால பணியை விரைவில் முடிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.
    • பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்

    திருவள்ளூர்:

    வேப்பம்பட்டு அருகே உள்ள பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் மனோகரன் (வயது48). இவரது மகள்கள் தர்ஷினி (வயது18), தாரணி (12).

    மனோகரனின் மனைவி உடல்நிலைபாதிக்கப்பட்டு வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரை பார்ப்பதற்காக இன்று காலை மனோகரன் தனது 2 மகள்களுடன் மின்சார ரெயிலில் செல்ல வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

    காலை 11.30 மணி அளவில் அவர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற மின்சார ரெயில் அவர்கள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மனோகரன், அவரது மகள்கள் தர்ஷினி, தாரணி ஆகிய 3 பேரும் கை, கால் மற்றும் முகம் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் நின்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலியான 3 பேரின் உடல்களும் தண்டவாளம் அருகே சிதறி கிடந்தன.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியானவர்களில் தர்ஷினி கல்லூரி மாணவி ஆவார். அவர் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவரது தங்கை தாரணி 12-ம் வகுப்பு படித்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் தாயை சந்திப்பதற்காக இருவரும் தந்தையுடன் மின்சார ரெயிலில் செல்ல தண்டவாளத்தை கடந்த போது ரெயில் மோதி பலியாகிவிட்டனர்.

    இதற்கிடையே ரெயில் மோதி ஏற்படும் உயிர் பலிக்கு வேப்பம்பட்டு பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பால பணிகள் தாமதம் என்று கூறி பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர்-ஆவடி சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வட்டாட்சியர் சுரேஷ்குமார், செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே மேம்பால பணி கடந்த 15 ஆண்டுகளாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு ரெயில்வே சுரங்கப் பாதை இல்லாததால் பயணிகள் தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். இதனால் இதுபோன்ற கோர விபத்துக்கள் ஏற்பட்டு உயிர்பலிகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

    ×