என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில்வே துறை"
- பயணிகள் ரயிலை, நாகர்கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க கேட்டுக்கொள்கிறோம்.
- நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜனவரி 1ம் தேதி முதல் அமலாக இருக்கும் ரெயில்வேயின் புதிய கால அட்டவணைக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த்பல்வேறு கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை முன் வைத்துள்ளார்.
இந்திய ரெயில்வே நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் ரெயில்களின் கால அட்டவணையை பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் நிர்வாக மேம்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அமல்படுத்தி வருகிறது.
01 ஜனவரி 2025 அன்று முதல் புதிய அட்டவணை செயல்பட்டு வருவதை தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டிற்கான ரெயில் அட்டவணை ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகின்றது. அதற்காக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் கீழ்கண்ட கோரிக்கைகள் மற்றும் பரிந்துரைகளை ரெயில்வே நிர்வாகத்திடம் முன் வைத்துள்ளார்.
பயணிகள் ரெயில்கள் இணைப்பு மற்றும் நீட்டிப்பு:
56305/56310 நாகர்கோவில் – திருவனந்தபுரம் வடக்கு பயணிகள் ரயில் மற்றும் 56708/56707 திருநெல்வேலி – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் ஆகியவற்றை ஒன்றாக இணைத்து திருநெல்வேலி – நாகர்கோவில் டவுன் (NJT) வழியாக – திருவனந்தபுரம் வடக்கு எனும் ஒரே பயணிகள் ரயிலாக இயக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். அல்லது 56306/56309 திருவனந்தபுரம் – நாகர்கோவில் பயணிகள் ரயிலை, நாகர்கோவில் டவுன் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க கேட்டுக்கொள்கிறோம்.
புதிய நேர அட்டவணை அலுவலகப் பயணிகளுக்குத் தகுந்தவாறு வடிவமைக்கப்பட வேண்டும்.
திருநெல்வேலி – நாகர்கோவில் டவுன் – திருவனந்தபுரம் – கொல்லம் – புனலூர் – செங்கோட்டை – திருநெல்வேலி மற்றும் மாற்று திசையில் சர்குலர் பயணிகள் ரயில்களை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தற்போது காலை நேரத்தில் 66305/66306 கொல்லம் – கன்னியாகுமரி மற்றும் 56705/56706 புனலூர் – கன்னியாகுமரி எனும் இரண்டு பயணிகள் ரயில்கள் கன்னியாகுமரிக்கு. செல்கின்றன. ஆனால் நாகர்கோவில் – திருநெல்வேலி வழித்தடத்தில் பகல் நேர பயணிகள் ரயில் இல்லை எனவே, இவற்றில் ஏதாவது ஒன்றை நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், 16347/16348 மங்களூரு சென்ட்ரல் – திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலை, நாகர்கோவில் வரை நீட்டிக்கவும் கேட்டுக்கொள்கிறோம். தற்போது மங்களூரு மற்றும் வடகேரளா நோக்கி பயணிக்கும் பயணிகளுக்கான இரவு ரயில்கள் கிடைப்பதில்லை, எனவே இந்நீட்டிப்பு பயணிகளுக்கு பெரிதும் உதவும்.
நேர அட்டவணை மாற்றங்கள்:
66305/66306 கொல்லம் – கன்னியாகுமரி MEMU ரயிலின் ஓய்வு நாளை வெள்ளிக்கிழமையிலிருந்து இருந்து செவ்வாய் அல்லது புதன்கிழமை என மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது வார இறுதியில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
17235/17236 நாகர்கோவில் – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் பெங்களூரு காலை 06:00 – 07:00 மணிக்குள் சென்றடையவும், மற்றும் அங்கிருந்து புறப்படும் நேரம் 18:00 மணிக்கு மாற்றப்படுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தை இரவு 22:00 மணி என முன்னேற்றி, நாகர்கோவில் வருகை காலை 10:00 மணிக்குள் வருமாறு பரிந்துரைக்கிறோம்.
22667/22668 கோயம்புத்தூர் – நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் புறப்படும் நேரத்தை நாகர்கோவிலில் இரவு 20:30 மணிக்கு முன்னேற்றி, கோயம்புத்தூரில் காலை விரைவில் வருமாறு மாற்ற பரிந்துரைக்கிறோம்.
16339/16340 நாகர்கோவில் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை அதிகரித்து மக்கள் பயன்படும் விதத்தில் தாமதமாக புறப்பட்டு முன்னதாக வந்தடையும் வகையில் நேரம் திருத்துவதின் மூலம் நாகர்கோவில் நிலையத்தில் நீண்ட நேரம் நிற்கும் வண்டிகள் குறைந்து, நிலைய நெரிசல் குறையும்.
மேலும் 16649/16650 கன்னியாகுமரி – மங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலின் வேகத்தை உயர்த்தி, கன்னியாகுமரியில் இருந்து காலை 05:00 மணிக்கு புறப்பட்டு, மாலை 20:30 மணிக்குள் திரும்பி வருமாறு நேரம் மாற்ற பரிந்துரைக்கிறோம். இது பயணிகளின் வசதிக்கும் இயக்கத்திறனுக்கும் உதவும்.
20635/20636 சென்னை எக்மோர் – கொல்லம் ஆனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலில் நாகர்கோவில் டவுன் நிலையத்தில் 5 நிமிடம், மற்றும் குளித்துறை நிலையத்தில் 3 நிமிடம் என இரு திசைகளிலும் நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
நிறுத்தங்கள் தொடர்பான வேண்டுகோள்கள்:
22627/22628 இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஏரணியல் நிலையத்தில் தற்காலிக நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
19577/19578 திருநெல்வேலி – ஜாம்நகர் இருவாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் 16335/16336 நாகர்கோவில் – காந்திதாம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு குளித்துறை நிலையத்தில் நிறுத்தம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
முனைய மாற்றங்கள் மற்றும் நாகர்கோவில் நெரிசல் குறைப்பு:
22657/22658 நாகர்கோவில் – தாம்பரம் எக்ஸ்பிரஸ், 12667/12668 நாகர்கோவில் – சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ், மற்றும் 12689/12690 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் ரேக்குகள் நாகர்கோவிலில் நீண்ட நேரம் நிற்பதால் நிலைய நெரிசல் ஏற்படுகிறது.
எனவே இவற்றை நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வடக்கு வரை நீட்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது ரேக் பயன்பாட்டை மேம்படுத்தி, நாகர்கோவில் முனைய நெரிசலை குறைக்கும்.
அது போன்று 16353/16354 நாகர்கோவில் – காசேகுடா எக்ஸ்பிரஸ் ரயிலின் ரேக்குகள் பல நாட்கள் நாகர்கோவிலில் நிற்கின்றன. இதை நாகர்கோவில் டவுன் வழியாக திருவனந்தபுரம் வடக்கு வரை நீட்டிக்கவும், மேலும், 16331/16332 திருவனந்தபுரம் – மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலுடன் ரேக் பகிர்வு (rake sharing) நடைமுறைப்படுத்தி, அதன் இயக்க நாள்களை மறுசீரமைக்கவும் பரிந்துரைக்கிறோம். இதன் மூலம் ரேக் பயன்பாடு மேம்பட்டு, நாகர்கோவில் நிலைய நெரிசல் குறையும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
- மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.
சென்னை:
மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய ரெயில்வே துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
*தமிழ் புறக்கணிப்பு*
*இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரெயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்?*
மத்திய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரெயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். மத்திய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.
ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக ரெயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்.
- புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கிய பயனர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
- இது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும்.
முன்பதிவு அல்லாத டிக்கெட்டுகளை எடுத்துவிட்டு, முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறும் பயணிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அவ்வாறு பயணம் செய்யும் பயணிகள், முன்பதிவு செய்த பயணிகளிடம் வாக்குவாதத்திலும் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பான புகார்கள் அவ்வப்போது வந்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கு ரெயில் பெட்டிகள், ரெயில் ஓட்டுநர்கள் மற்றும் டிக்கெட் பரிசோதகர்களின் பற்றாக்குறை காரணமாக கூடுதலாக பெட்டிகளை அல்லது கூடுதலாக ரெயில்களை இயக்குவது என்பது ரெயில்வேயால் இயலாததாக மாறி உள்ளது.
இந்த நிலையில், ஸ்லீப்பர் பெட்டியில் அதற்குரிய டிக்கெட் எடுக்காமல் நிறைய பேர் பயணம் செய்த புகைப்படத்தை ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். இப்புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கிய பயனர்கள் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டனர்.
இது ரெயில்வே அமைச்சகத்தின் ரெயில்வே சேவா சமூக ஊடகக் கணக்கின் கவனத்திற்கு சென்றது. இதை தொடர்ந்து, ரெயில் சேவா தனது சமூக வலைத்தள பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், "இது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும். உங்கள் விவரங்களை நாங்கள் கேட்கிறோம்... DM மூலம்... விரைவான தீர்வுக்காக 139 என்ற எண்ணை டயல் செய்யலாம்" என்று கூறியுள்ளது.
- 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர்.
- படுகாயம் அடைந்த 5 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தானே ரெயில் நிலையத்தில் இருந்து மும்பை ரெயில் நிலையத்துக்கு புறநகர் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதிகமான கூட்டம் காரணமாக படிக்கட்டுகளில் அதிக அளவிலான பயணிகள் தொங்கியபடி பயணம் செய்தனர்.
தானேயை அடுத்த திவா மற்றும் கோபர் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டுகளில் தொங்கிய 10-க்கும் மேற்பட்டோர் தவறி கீழே விழுந்தனர்.
படுகாயத்துடன் கிடந்த அவர்களை ரெயில்வே போலீசார் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் 5 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர்.
பலியானவர்களுக்கு 30 முதல் 35 வயதே இருக்கும். படுகாயம் அடைந்த 5 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் ரெயில் பயணிகள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரெயில் படிக்கட்டில் பயணித்த 5 பேர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, புதிதாக தயாரிக்கப்படும் புறநகர் ரெயில் பெட்டிகளில் தானியங்கி கதவுகளை பொருத்த ரெயில்வே துறை முடிவு செய்துள்ளது.
தற்போது இயக்கப்படும் ரெயில்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை சேர்க்கும் வகையில் மாற்றியமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
- தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தின் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு ரெயில் திட்டங்கள் முடக்கப்பட்டு, நிதி சரண்டர் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
"தமிழ்நாட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய ரெயில்வே திட்டங்கள் மீண்டும் சர்வே செய்ய ஏன் மாற்றப்பட்டது?" என்று நான் எழுப்பிய கேள்வியின் உண்மை இப்பொழுது வெளியாகியுள்ளது.
தெற்கு ரெயில்வேயின் பொது மேலாளர் ரெயில்வே வாரியத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம் முழுமையாக அம்பலமாகியுள்ளது.
தமிழக ரெயில் வளர்ச்சித் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே பொது மேலாளரின் கடிதத்தின் மூலம் உண்மை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
தமிழக ரெயில் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பிங்க் புத்தகம் சென்ற ஆண்டு நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த பின் தான் வெளியிட்டார்கள். இந்த ஆண்டு பிங்க் புத்தகத்தையே ஒழித்து விட்டு தொகுக்கப்பட்ட பட்ஜெட் விவரங்கள் என்று நீண்ட நாள் கழித்து வெளியிட்டார்கள்.
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு வெறும் ஆயிரம் ரூபாய் தான் ஒதுக்கி உள்ளார்கள் என்பதை நான் விமர்சித்த பின்பும் எவ்வளவு ஒதுக்கீடு என்பதையே மறைத்து வந்தார்கள்? சில திட்டங்களை சர்வே திட்டத்திற்கு ஏன் மாற்றியுள்ளார்கள் என்று நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
இப்போது தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் ரெயில்வே வாரியத்துக்கு எழுதிய (மே 14 தேதி) கடிதத்தில் முழு உண்மையும் வெளிவந்துவிட்டது. இந்த திட்டங்களை அமல்படுத்தாமல் முடக்கவே இந்த குளறுபடிகளை செய்கிறார்கள் என்று நான் விமர்சித்தது உண்மையென்றாகிவிட்டது.
தெற்கு ரயில்வேயின் பொதுமேலாளர் எழுதியுள்ள கடிதத்தில் ரயில்வே வாரியம் 26. 9 .2019 கடிதம் மூலம் தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதாகவும் (freeze )அந்த திட்டங்களுக்கு இப்போது ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அந்த நிதியை திரும்பவும் சரண்டர் செய்வதாகவும் தெற்கு ரயில்வே கூறி உள்ளது.
திண்டிவனம்- செஞ்சி- திருவண்ணாமலை; அத்திப்பட்டு- புத்தூர் ஆகிய இரு புதிய பாதை திட்டங்களும் ஏற்கனவே முடக்கப்பட்டதாகவும் அதனை விடுவித்தால் தான் (டிஃப்ரீஸ் )பணம் செலவு செய்ய முடியும் என்றும் எனவே இரு திட்டங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தலா ரூபா 42.70 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் எழுதியுள்ளார். வேறு சில திட்டங்களை முடக்க பட்டியலில் இருந்து விடுவிக்கவும் கோரி உள்ளார்.
ஈரோடு- பழனி புதிய பாதை திட்டம். இந்தத் திட்டம் செயல்படுத்த முடியாதது என்றும் அதனை கைவிட வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே கடிதம் எழுதியுள்ளது. இதற்காக ஒதுக்கிய 52.135 கோடியை சரண்டர் செய்துள்ளார்கள்.
மதுரை அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி புதிய பாதை திட்டத்தையே ஏற்கனவே முடக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது எனவும் அதற்கான ஒதுக்கீடு ரூ 55.1667 கோடியை சரண்டர் செய்வதாகவும் கூறியுள்ளார்கள்.
ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்தை சுற்றுச்சூழல் காரணமாக கைவிட வேண்டும் என்று தமிழக அரசு கோரி உள்ளது. அதனால் அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாததால் அதற்கான ஒதுக்கீடு ரூபாய் 5.1239 கோடியை சரண்டர் செய்கிறோம் என்றும் கூறியுள்ளார்கள்.
அதைப்போல மூன்று இரட்டை பாதை திட்டங்களான காட்பாடி -விழுப்புரம்; சேலம்- கரூர்- திண்டுக்கல்; ஈரோடு -கரூர் ஆகியவை இன்னமும் திட்ட தயாரிப்பு கட்டத்தில் தான் உள்ளன எனவே இவற்றுக்கான ஒதுக்கீடு முறையே 200 கோடி 100 கோடி 100 கோடி ஆகியவற்றை செலவு செய்ய முடியாது என்றும் அதனை சரண்டர் செய்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த திட்டங்கள் மூன்றும் சர்வேக்கு மாற்றப்பட்டுள்ளது ஏன் என்று நான் கேட்டது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. எனவே தமிழகத்தின் முக்கிய புதிய பாதை மற்றும் இரட்டை பாதை திட்டங்களையும் ஒன்றிய அரசு முடக்கியதை மறைக்கவே பிங்க் புத்தகம் வெளியிடுவதையே தவிர்த்தார்கள்.
தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதை மறைக்க ரயில்வே அமைச்சகம் தமிழக அரசு நிலம் கையகப்படுத்த வில்லை என்று பொய்யான குற்றச்சாட்டு சொன்னதை நாம் பார்த்தோம். தமிழக ரயில் வளர்ச்சி திட்டங்களை முடக்கியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். முடக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப் படுத்த வேண்டும் என கோருகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார்.
- தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தெற்கு ரயில்வே உதவி லோகோ பைலட் 493 பணியிடங்களுக்கு 2ஆம் கட்டத்தேர்வு மார்ச் 19ல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்வு அருகாமை மையங்களில் நடந்த நிலையில், 2ஆம் கட்ட தேர்வுக்கு தெலங்கானாவில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "இன்று(15.03.2025) திருப்பெரும்புதூர் விழா ஒன்றில் பேசிய ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்கள், தமிழ் கலாச்சாரத்தை மிகவும் மதிக்கின்றோம் என்று வார்த்தை பந்தல் கட்டியிருக்கிறார். ஆனால், ஒன்றிய அரசு எப்போதும் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது என்பது இவர்களின் செயல்பாடுகளை கவனித்தால் புரியும்.
தமிழ்நாட்டிற்கு கல்விக்கு, பேரிடர்நிதி தராமல் வஞ்சிப்பது, தமிழர்களை அவதூறாக பேசுவது, வரிவருவாயில் குறைந்த அளவு நிதிஒதுக்குவது, தமிழ்மொழிக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவது, சென்னை வழியாக செல்லும் அனைத்து ரயில்களிலும் உள்ள முன்பதிவில்லாத பெட்டிகளை ஒன்றிய ரயில்வே துறை குறைக்க நடவடிக்கை எடுத்தது என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணிக்கான முதற்கட்ட தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 6315 பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் இரண்டாம் நிலைத்தேர்வுக்கு இவர்களில் பலருக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்துள்ளதாக தகவல் வருகிறது.
தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் தேர்வு எழுதி ஒன்றிய அரசு பணிகளுக்கு வராமல் தடுப்பதே இவர்களின் நோக்கம் என்று புரிகிறது. ஒன்றிய ரயில்வே துறையின் இச்செயலுக்கு எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெளிமாநிலங்களில் தேர்வு மையம் அமைத்திருப்பதை உடனடியாக ரத்து செய்து தமிழ்நாட்டில் அவர்களை தேர்வு எழுத ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- முன்பதிவு செய்து பயணிக்கிற பயணிகள் பிரிவில் இந்த கால கட்டத்தில் 53 கோடியே 65 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.
- ஏப்ரல் 1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையில் முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் மொத்தம் 352 கோடியே 73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
புதுடெல்லி:
நமது நாட்டில் கொரோனா பெருந்தொற்று முற்றிலுமாய் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரெயில் பயணிகள் போக்குவரத்து துறை சூடுபிடித்துள்ளது.
குறிப்பாக கடந்த 8 மாத காலத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கையில் நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
இதை ரெயில்வே விடுத்துள்ள அறிக்கை காட்டுகிறது.
இந்த அறிக்கையில் கூறி உள்ள முக்கிய விஷயங்கள்:-
* ஏப்ரல்-1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையிலான கால கட்டத்தில் ரெயில் பயணிகள் எண்ணிக்கை 76 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரெயில்வேயின் வருமானம் ரூ.43 ஆயிரத்து 324 கோடி ஆகும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரெயில்வே பயணிகள் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631 கோடிதான்.
* முன்பதிவு செய்து பயணிக்கிற பயணிகள் பிரிவில் இந்த கால கட்டத்தில் 53 கோடியே 65 லட்சம் பேர் பயணித்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் முன் பதிவு செய்து பயணித்த பயணிகள் எண்ணிக்கை 48 கோடியே 60 லட்சம் ஆகும்.
* முன்பதிவு பயணிகள் பிரிவில் மேற்கூறிய 8 மாத கால வருமானம் ரூ.34 ஆயிரத்து 303 கோடி ஆகும். கடந்த ஆண்டு இது ரூ.22 ஆயிரத்து 904 கோடி ஆகும். இது 50 சதவீதம் அதிகரிப்பு ஆகும்.
* ஏப்ரல் 1 தொடங்கி நவம்பர் 30, 2022 வரையில் முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் மொத்தம் 352 கோடியே 73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 138 கோடியே 13 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த ஆண்டில் 155 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டுள்ளது.
* முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் கடந்த 8 மாத காலத்தில் வருமானம் ரூ.9 ஆயிரத்து 21 கோடி. கடந்த ஆண்டு இது ரூ.1,728 கோடிதான். அந்த வகையில் இந்த வருமானம் 422 சதவீதம் அதிகரித்துள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.
- தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாக மத்திய ரெயில்வே மந்திரி தெரிவித்தார்.
ஐதராபாத்:
செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் நேற்று நடந்த வந்தே பாரத் ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொண்டார்.
பின்னர் ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது, 'பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், இந்திய ரெயில்வேத்துறை உலகத்தரம் வாய்ந்த நிலையங்கள், ரெயில்கள் மற்றும் புதிய பாதைகள், இரட்டிப்பு மற்றும் மின்மயமாக்கல் என புதிய திட்டங்களை முடிப்பதில் விரைவான முன்னேற்றத்துடன் அனைத்து வளர்ச்சியையும் கண்டு வருகிறது' என்று பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கடந்த 9 ஆண்டுகளில் இந்திய ரெயில்வேத்துறையை பிரதமர் மோடி மாற்றி விட்டதாக கூறிய அஸ்வினி வைஷ்ணவ், தெலுங்கானாவில் ரெயில்வே கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அரசு தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
- ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர்.
- சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.
நாகர்கோவில் :
புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் பிரவிதா (வயது 29). இவர் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனக்கு ஐரேனியபுரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஜோயல் தேவா (37) என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும்
தங்களுக்கு ரெயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினர். ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள். ரூ.56 லட்சம் மோசடி
இதனை நம்பி நான் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளையை சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளையை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர். அந்த வகையில் 4 பேரிடமும் மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள்.
ஆனால் அவர்கள் கூறியது போல ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் பணத்தை திரும்பத் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டனர். இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.3 பேர் கைது
இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தார். அப்போது சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று ஜோயல் தேவா, அபிஷா மற்றும் முரளி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது.
- நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் புதுக்கடை ஐரேனியபுரம் கோணத்துவிளையை சேர்ந்தவர் பிரவிதா (வயது 29). இவர் நாகர்கோவில் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எனக்கு ஐரேனிய புரத்தைச் சேர்ந்த அபிஷா (33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், தற்போது பெங்களூரு கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த மத்திய அரசு ஊழியர் ஜோயல் தேவா (37) என்பவரை திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அபிஷாவும், அவருடைய கணவர் ஜோயல் தேவாவும், தங்களுக்கு ரெயில்வே துறையில் முக்கிய அதிகாரிகளை தெரியும் என்றும், அவர்கள் மூலமாக ரெயில்வேயில் வேலை வாங்கி தர முடியும் என்றும் என்னிடம் கூறினர். ஆனால் வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறினார்கள்.
இதனை நம்பி நான் ரூ.20 லட்சம் கொடுத்தேன். இதே போல கிள்ளியூர் பண்டாரவிளையை சேர்ந்த பிறைஜா என்பவரிடம் ரூ.10 லட்சமும், முள்ளுவிளையை சேர்ந்த அரவிந்த் என்பவரிடம் ரூ.14 லட்சமும், ராஜ்குமார் என்பவரிடம் ரூ.12 லட்சமும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்கள் வாங்கினர். அந்த வகையில் 4 பேரிடமும் மொத்தம் ரூ.56 லட்சம் வாங்கினார்கள். ஆனால் அவர்கள் கூறியது போல ரெயில்வேயில் வேலை வாங்கித் தரவில்லை. எனவே நாங்கள் பணத்தை திரும்பத் தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணத்தை கொடுக்கவில்லை. வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை வாங்கி மோசடி செய்துவிட்டனர். இந்த மோசடியில் தேனியை சேர்ந்த முரளி (24) என்பவர் உள்பட மேலும் 3 பேருக்கு தொடர்பு உள்ளது. எனவே இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் விசாரணை நடத்தி ஜோயல் தேவா, அவருடைய மனைவி அபிஷா, முரளி உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வந்தார். அப்போது சம்பந்தப்பட்ட 3 பேரும் பெங்களூருவில் இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சார்லெட் தலைமையிலான போலீசார் பெங்களூர் சென்று ஜோயல் தேவா, அபிஷா மற்றும் முரளி ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
- புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர்.
திருத்தணி:
திருத்தணி முருகன்கோவில் முருகப்பெருமானின் 5-வது படைவீடாக உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் முகூர்த்த நாட்களிலும், கிருத்திகை, தைப்பூசம் போன்ற நாட்களிலும் வெளி மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
இதனால் திருத்தணி நகரின் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து திருத்தணி நகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அரக்கோணம் சாலைக்கு 30 மீட்டர் அகலம் 3.24 கி.மீ. தூரத்துக்கு ரூ.46 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. மேலும் 2021-ம் ஆண்டு பட்டாபிராமபுரம் நந்தி ஆற்றின் குறுக்கே ரூ.5 கோடியில் உயர்மட்ட பாலமும், திருத்தணி எம்.ஜி.ஆர். நகர் அருகே ரூ.10 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் ரெயில் தண்டவாளத்திற்கு அருகே உயர்மட்ட பாலமும் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் ரெயில்வே தண்டவாளத்திற்கு அருகே கட்டப்படும் பாலப்பணியை ரெயில்வே நிர்வாகத்திடம் நெடுஞ்சாலைத்துறையினர் ஒப்படைத்தனர். கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த பணி இன்னும் முடியவில்லை. ஆமைவேகத்தில் நடைபெற்று வருகிறது. ஆனால் நந்தி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலம் பணி முடிந்து சுமார் ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகிறது. ரெயில்வே பாலப்பணி முடியாததால் அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
ரெயில்வே நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ள பாலத்தை இணைக்கும் பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் திருத்தணி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் மற்றும் திருமண விழாக்களுக்கு வரும் வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நீண்டநேரம் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே ரெயில்வே துறையினர் மேற்கொள்ளும் பாலப்பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
திருத்தணியில் புறவழி சாலை பகுதியில் உள்ள ஆற்றுப்பால பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து முடித்துவிட்டனர். தற்போது ரெயில்வே தண்டவாளங்களுக்கு இடையில் உள்ள பணிகள் மட்டுமே நடைபெறாமல் உள்ளது. இந்தப் பணி இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
- ரெயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.
காஞ்சிபுரம்:
சென்னையின் 2-வது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்காக சுமார் 4791 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் மற்றும் இதற்கான இடம் தேர்வு மற்றும் பூர்வாங்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு மாநில அரசின் நிர்வாக அனுமதி இன்னும் 2 வாரத்தில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னர் நிலம் கையகப்படுத்துதல், எல்லைகள் நிர்ணயம் செய்வது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது.
இதற்கிடையே பரந்தூரில் விமான நிலையம் அமையும்போது போக்குவரத்து வசதியையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
பரந்தூர் புதிய விமான நிலையம் சென்னை நகரில் இருந்து சுமார் 67 கி.மீட்டர் தூரத்தில் வருகிறது. அரக்கோணம்-காஞ்சிபுரம் ரெயில் பாதையில் திரிசூலம் ரெயில் நிலையத்தில் இருந்து 10 கி.மீட்டர் தூரத்தில் அமைய உள்ளது.
இதைத்தொடர்ந்து ரெயில் திட்ட பாதையை பரந்தூர் புதிய விமான நிலையம் வரை நீட்டிக்க ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது. பரந்தூரில் புதிய ரெயில் நிலையம் அமையும்போது ரெயில் பாதை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்படவேண்டும். இதற்கான ஆய்வு பணியை செங்கல்பட்டு-அரக்கோணம் ரெயில்வே பாதையில் விரைவில் மேற்கொள்ள ரெயில்வே துறை முடிவு செய்து உள்ளது.
ரெயில்வே வாரியம் ஏற்கனவே மாநிலத்தில் 390 கி.மீட்டர் தூரத்துக்கு 7 வழித்தடங்களில் புதிய ரெயில்வே பாதை அமைக்க அனுமதி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.






