என் மலர்
நீங்கள் தேடியது "மின்சார ரெயில்"
- திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
- பட்டாபிராம்-திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரல்-அரக்கோணம் வழித்தடத்தில் உள்ள திருநின்றவூர் ரெயில்வே பணிமனையில் வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் (8 மணி நேரம் 40 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
* சென்னை கடற்கரையில் இருந்து காலை 5.40, 6.10, 9.55, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 2.25 மணிக்கு அரக்கோணம் செல்லும் மின்சார ரெயிலும், கடற்கரையில் இருந்து மதியம் 12.10 மணிக்கு திருத்தணி செல்லும் மின்சாரரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்டிரலில் இருந்து காலை 6.50, 7.45, 8.05, 8.40, 9.15, 9.35, 10.40, 11.30 மதியம் 12, 1, 1.50, 2.40 ஆகிய நேரங்களில் திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயில்களும், திருவள்ளூரில் இருந்து காலை 6.50, 7.30, 8.10, 8.20, 8.30, 9.10, 9.25, 10.05, 11.30 மதியம் 1.05, 2.40, 3.05 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்டிரலில் இருந்து காலை 9.55, 11.45 மதியம் 2.15 ஆகிய நேரங்களில் திருத்தணி செல்லும் மின்சார ரெயில்களும், மதியம் 12.40, 1.25 ஆகிய நேரங்களில் அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்களும், காலை 10.30 மணிக்கு கடம்பத்தூர் செல்லும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* அரக்கோணத்தில் இருந்து காலை 6.40, 7.10, 11.15, மதியம் 12, 1.40 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயிலும், திருநின்றவூரில் இருந்து காலை 7.55 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும், திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* எண்ணூரில் இருந்து காலை 6.35 மணிக்கு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 12 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயிலும், கடம்பத்தூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், திருவள்ளூரில் இருந்து மதியம் 1.30 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரெயிலும், ஆவடியில் இருந்து காலை 5 மணிக்கு எண்ணூர் வரும் மின்சார ரெயிலும் என மொத்தம் 49 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரை மற்றும் சென்டிரலில் இருந்து ஆவடி மற்றும் பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் ரெயில்கள் இருமார்க்கமாகவும் வழக்கமான அட்டவணைபடி இயங்கும்.
* வருகிற 23-ந்தேதி மதியம் 12.10 மணி முதல் மாலை 3.40 மணி வரையில் பட்டாபிராம்-திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.
இதன் காரணமாக அன்று காலை 6.30, 8.20, 11 மணிக்கு சென்டிரல் -அரக்கோணத்துக்கும், காலை 7, 7.25, 9.10 மணிக்கு சென்டிரல்-திருத்தணிக்கும், காலை 10.45 மணிக்கு சென்டிரல்-ஆவடிக்கும், காலை 9.50 மணிக்கு சென்டிரல்- திருப்பதிக்கும், காலை 8.15, 8.55, 10 மணிக்கு அரக்கோணம்- சென்டிரலுக்கும், காலை 7 மணிக்கு திருவள்ளூர்- சென்டிரலுக்கும், காலை 10.15 மணிக்கு திருத்தணி- சென்டிரலுக்கும், காலை 6.20, 7.35, 8 மணிக்கு அரக்கோணம்-கடற்கரைக்கும், காலை 8.50 மணிக்கு திருத்தணி-கடற்கரைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இதேபோல் காலை 11.15, மதியம் 12.55, 1.40, மாலை 3.45 மணிக்கு திருவள்ளூர்-திருத்தணிக்கும், மதியம் 12, 2.15 மாலை 3 மணிக்கு திருவள்ளூர்-அரக்கோணத்துக்கும், காலை 10.30, 11.15 மதியம் 12, 1.30, 2.15 மணிக்கு அரக்கோணம்-திருவள்ளூருக்கும், மதியம் 12.35 மணிக்கு திருத்தணி-திருவள்ளூருக்கும் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- புறநகர் ரெயில்களில் ஒழுங்கீன செயல்களை தவிர்க்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
- ரெயில்களில் உள்ள இருக்கைகள் ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சென்னை:
சென்னையில் புறநகர் மின்சார ரெயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். ஆனால் ரெயில் பயணத்தின் போது சிலர் செய்யும் அநாகரீகமான செயல்கள் மற்றவர்களுக்கு ஆபத்தையும், மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக தெற்கு ரெயில்வே கூறி உள்ளது. மேலும் புறநகர் ரெயில்களில் ஒழுங்கீன செயல்களை தவிர்க்குமாறு பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ரெயில் பயணத்தின்போது பயணிகள் தங்கள் எதிரே உள்ள இருக்கைகளில் கால்களை வைப்பதால், அந்த இருக்கைகள் அசுத்தமாவதுடன், மற்றவர்களுக்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்துகிறது.
ரெயிலில் பயணிக்கும் ஒருவர் தனது நண்பர் மற்றும் உறவினர்களுக்காக இருக்கைகளை பிடித்து வைக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கிறது. இதனால், முதலில் வரும் மற்ற பயணிகளுக்கு இருக்கை கிடைப்பதில்லை.
ஒரு சில பயணிகள் ரெயிலில் ஏறியவுடன் இருக்கைகள் காலியாக இருந்தாலும் அதில் அமராமல் ரெயில் பெட்டிகளின் நுழைவாயிலில் அமர்ந்து, மற்ற பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
ரெயில் நிலையங்களில் ரெயில் நிற்பதற்கு முன்பே இருக்கைகளை பிடிப்பதற்காக ஓடும் ரெயிலில் ஏறுவதும், இறங்குவோருக்கு இடையூறு செய்வதும் விபத்துகளுக்கு வழிவகுப்பதுடன் அவர்களுக்கும் அது ஆபத்தாக முடிய சாத்தியமுள்ளது.
எனவே ரெயில்களில் உள்ள இருக்கைகள் 'முதலில் வருபவருக்கே முன்னுரிமை' என்ற அடிப்படையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மற்றவர்களுக்காக இடம் பிடிப்பதும், காலியாக உள்ள இருக்கைகள் மீது கால்களை வைப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
ரெயில் பெட்டியின் வாசல்களில் அமர்வதும், மற்ற பயணிகள் ஏறவும், இறங்கவும், வழியை மறிப்பதும் பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.
- திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னையில் பறக்கும் ரெயில் திட்டம், 3 கட்டங்களாக திட்டமிடப்பட்டது. அதன்படி, முதல் கட்டமாக சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே கடந்த 1984-ம் ஆண்டு இதற்கான பணிகள் தொடங்கியது. 1995-ம் ஆண்டு இதற்கான பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. 2-ம் கட்ட பணிகள் மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே 1998-ம் ஆண்டு தொடங்கி, 2004-ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும், 2-ம் கட்ட பணி விரிவாக்கமாக கடந்த 2008-ம் ஆண்டு வேளச்சேரி-பரங்கிமலை இடையே ரூ.495 கோடி மதிப்பீட்டில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. இதில், 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், ஆதம்பாக்கம்-பரங்கிமலை இடையே எஞ்சியிருந்த ½ கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் முடிக்க முடியாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்த திட்டம் முழுமை அடையாததால் சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை மட்டுமே தற்போது பறக்கும் ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, 15 ஆண்டுகளுக்கு பின்பு கோர்ட்டு மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த ஆண்டு பணிகள் மீண்டும் தொடங்கியது. அப்போது, ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் மீது அமைக்கப்பட்ட ரெயில் பாலம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. தற்போது அந்த பாலம் சரிசெய்யும் பணி முடிவடைந்துள்ளது. எஞ்சிய ஒரு சில பணிகள் மட்டுமே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வரும் நவம்பர் மாதம் இந்த பணிகள் முழுமையாக முடிவடையும் எனவும் ரெயில்வே அதிகாரிகள் தொிவித்துள்ளனர்.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'வேளச்சேரி-பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் பணிகள் 85 சதவீதம் முடிந்துள்ளது. ரெயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறப்பட்ட பின்பு, இந்த வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்கும். அதன்படி, வரும் நவம்பர் மாதம் இறுதியில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் சேவை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றனர்.
- செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரெயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
- சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை:
எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் நடைபெற்று வரும் பணி காரணமாக செங்கல்பட்டு- கடற்கரை புறநகர் ரெயில் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
செங்கல்பட்டு- கடற்கரை இடையே இயக்கப்படும் ரெயிலும், செங்கல்பட்டு- கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரெயிலும் நாளை ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டு- கடற்கரை இடையே புறநகர் ரெயில் ரத்து செய்யப்பட்டதற்கு பதிலாக சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
- பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
- பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது.
சென்னை:
சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி வரை தற்போது பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் பாதை அமைக்கும் பணி 2008-ல் தொடங்கப்பட்டது. ரூ.495 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த விரிவாக்க திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பிரச்சனை காரணமாக இடையில் முடங்கியது.
கோர்ட்டு வழக்கு தீர்ப்புக்கு பிறகு தி.மு.க. ஆட்சி வந்ததும் 2022-ல் மீண்டும் பணிகள் தொடங்கப்பட்டது. சுமார் 500 மீட்டர் தூரம் அளவுக்கு இணைக்கப்பட வேண்டிய பணிகள் மீண்டும் வேகப்படுத்தப்பட்டு தூண்கள் அமைத்த போது அதன் மீது வைக்கப்பட்ட 'கார்டிடார்' பாரம் தாங்காமல் கீழே சரிந்து விழுந்தது.
பின்னர் அதை தூக்கி நிறுத்தி மீண்டும் பாலத்தின் மீது வைத்து சரி செய்தனர். இப்போது பரங்கிமலை ரெயில் நிலையத்துடன் இணைக்கும் பணி முடிந்து விட்டது. ஒரு சில பணிகள் மட்டுமே நடைபெற வேண்டி உள்ளது.
இந்த நிலையில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர் பகுதி மக்களின் குறை தீர்க்கும் முகாம் நங்கநல்லூரில் நடைபெற்றது.
இந்த முகாமில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பொது மக்களிடம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், 'வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் திட்டப்பணிகள் அனைத்தும் வேகமாக நடைபெறுவதால் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே பரங்கிமலை வரை பறக்கும் ரெயில் சேவை நவம்பர் மாதம் தொடங்கப்படும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை தொடங்கி வைப்பார் என்று கூறினார்.
- அரக்கோணம் அருகே சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
- சென்னையிலிருந்து அரக்கோணம் வழியே காட்பாடி செல்லும் அனைத்து ரெயில்சேவையும் நிறுத்தப்பட்டது.
சென்னை:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சென்னையில் இருந்து சென்ற மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது.
சித்தேரியில் இருந்து காட்பாடிக்குச் சென்ற 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் தடம் புரண்டுள்ளது. என்ஜினில் இருந்து 3-வது ரெயில் பெட்டியின் சக்கரங்கள் தண்டவாளத்தில் இறங்கின.
மின்சார ரெயில் தடம் புரண்டதால் சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக காட்பாடி செல்லும் அனைத்து ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
- சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஏ.சி. மின்சார ரெயிலில் ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
- செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு கட்டணம் ரூ.105 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே கடந்த ஏப்ரல் மாதம் புறநகர் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. கோடை காலத்தில் இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டதால் இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை வெயில் வறுத்தெடுத்து வரும் நிலையிலும் கூட ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகளிடம் வரவேற்பு இல்லை. இந்த ரெயிலில் பாதி இருக்கைகள் கூட நிரம்பவில்லை. 12 பெட்டிகளை கொண்ட இந்த ரெயிலில் 3,798 பேர் பயணம் செய்ய முடியும். ஆனால் சராசரியாக ஒரு நாளைக்கு 1,500 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர். சென்னையில் மெட்ரோ ரெயில்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் முழு அளவில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆனால் ஏ.சி. மின்சார ரெயிலில் 50 சதவீத பயணிகள் கூட பயணம் செய்யவில்லை. சென்னையில் பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது ஒரு ரெயில் மட்டுமே இயக்கப்படும் நிலையில் விரைவில் 2-வது மின்சார ரெயில் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகளிடையே வரவேற்பு இல்லாமல் போனதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதே காரணம் என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ஏ.சி. மின்சார ரெயிலில் ரூ.85 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு கட்டணம் ரூ.105 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள பூஜ் முதல் அஞ்சார் வரை இயக்கப்படும் வந்தே மெட்ரோ ரெயிலுடன் ஒப்பிடும்போது, அங்கு 42 கி.மீ. பயணத்திற்கு ரூ.55 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஆனால் தாம்பரம் - கடற்கரை இடையே 30 கி.மீ. பயணத்திற்கு கட்டணம் ரூ.85 ஆக உள்ளது.
10 கி.மீ. வரை குறைந்தபட்ச கட்டணம் ரூ.35 ஆக நிர்ணயிக்கப்பட்டாலும், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை மாதாந்திர சீசன் டிக்கெட் விலை ரூ.2,115 ஆகவும், கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை ரூ.1,705 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு
உள்ளது. ஏ.சி. மின்சார ரெயில், கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை நீண்ட வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. அதன் பயண நேரம் ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாகும். இது தினமும் 10 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகிறது.
இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு குறுகிய சேவைகளாக இயக்கப்பட வேண்டும். காலை மற்றும் மாலையில் நெரிசலான நேரங்களில், சாதாரண மின்சார ரெயில்களுக்கு இணையாக, கூடுதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவைகளை வழங்க வேண்டும். கட்டணத்தையும் குறைத்து கூடுதல் ரெயில் சேவைகளை இயக்கினால் ஏ.சி. மின்சார ரெயில்கள் பயணிகளின் வரவேற்பை பெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
- சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்ட்ரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று மற்றும் வருகிற 16, 19-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1,15, 3.10 இரவு 9 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.
சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
இந்த நாட்களில் சென்ட்ரல் -பொன்னேரிக்கு காலை 10.30 மணிக்கும், சென்ட்ரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணிக்கும், கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணிக்கும், பொன்னேரி-சென்ட்ரலுக்கு மதியம் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூர்-சென்ட்ரலுக்கு மதியம் 2.59 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
- பொன்னேரி-சென்ட்ரலுக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை:
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே நாளை (திங்கட்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முழுவதுமாக ரத்து
* சென்ட்ரலில் இருந்து காலை 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்ட்ரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* கடற்கரையில் இருந்து காலை 9.40 மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
* கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, மாலை 3.10, இரவு 9 மணிக்கு சென்ட்ரல் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
* செங்கல்பட்டில் இருந்து நாளை மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் நிறுத்தப்படும்.
* கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கடற்கரையில் இருந்து புறப்படும்.
சிறப்பு மின்சார ரெயில்கள்
இதன்காரமாக இந்த 2 தேதிகளிலும் காலை 10.30 மணிக்கு சென்ட்ரல்-பொன்னேரிக்கும், காலை 11.35 மணிக்கு சென்ட்ரல் -மீஞ்சூருக்கும், மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-பொன்னேரிக்கும், மதியம் 1.18 மணிக்கு பொன்னேரி-சென்ட்ரலுக்கும், மதியம் 2.56 மணிக்கு மீஞ்சூர்-சென்ட்ரலுக்கும், மாலை 3.33 மணிக்கு பொன்னேரி-சென்ட்ரலுக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர்.
- சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சென்னை:
தெற்கு ரெயில்வேயின் கீழ் நாள் தோறும் 350-க்கும் மேற்பட்ட ரெயில்கள் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதுபோக, சென்னை கோட்டத்தில் மின்சார ரெயில் சேவையும் இயக்கப்படுகிறது. இதனால், லட்சக்கணக்கான பயணிகள் பயனடைந்து வருகிறார்கள்.
இதற்கிடையே, பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு நீண்ட தூரத்தில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் இணைத்து இயக்கப்படுகிறது. இவ்வாறு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்களில் சிலர் ஆபத்தை உணராமல் சாகச பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது உயிரிழப்பையும் ஏற்படுத்தி விடுகிறது.
இதுபோன்ற சாகச பயணத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் அதை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ரெயில் படிக்கட்டில் அமர்ந்து பயணித்தாலோ அல்லது படிக்கட்டில் தொங்கியபடி சாகச பயணம் மேற்கொண்டாலோ ரூ.1,000 அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- ரெயில்கள் தாமதம், பராமரிப்பு பணி போன்ற பணிகளால் ரெயில் ரத்து உள்ளிட்ட காரணங்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
- இன்று 4 ரெயில்களும், நாளை 13 ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் மக்களின் தினசரி பயணத்திற்கு மின்சார ரெயில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் சென்னை கடற்கரை- தாம்பரம், சென்னை கடற்கரை- செங்கல்பட்டு, சென்னை கடற்கரை- வேளச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
மின்சார ரெயிலில் பயணிப்பது மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், சில சமயங்களில் ரெயில்கள் தாமதம், பராமரிப்பு பணி போன்ற பணிகளால் ரெயில் ரத்து உள்ளிட்ட காரணங்களால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பராமரிப்பு பணி நடைபெறும் நேரங்களில் ரத்து செய்யப்படும் ரெயில்கள் குறித்து அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன.
இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக வேளச்சேரி மார்க்கத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 8 மணி வரை மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேளச்சேரி- சென்னை கடற்கரை மார்க்கத்தில் இன்று 4 ரெயில்களும், நாளை 13 ரெயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
- நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏ.சி. வசதியுள்ள மின்சார ரெயில் சேவை கடந்த 19-ந்தேதி தொடங்கியது. சென்னையில் வெயில் கொளுத்தி வரும் வேலையில் ஏ.சி. மின்சார ரெயிலுக்கு பயணிகள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த ரெயில் காலை 7 மணிக்கு கடற்கரையில் இருந்து தொடங்கி துறைமுகம், பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கபெருமாள்கோவில், பரனூர் ஆகிய ரெயில் நிலையங்கள் வழியாக 8.35 மணிக்கு செங்கல்பட்டு செல்லும்.
மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணிக்கு கிளம்பி 10.30 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது.
பின்னர், கடற்கரையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்பட்டு 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும். மறுமார்க்கமாக செங்கல்பட்டில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு கடற்கரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. பின்னர், இரவு கடற்கரையில் இருந்து 7.35 மணிக்கு புறப்பட்டு 8.30 மணிக்கு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. நாள்தோறும் 3 சேவைகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இன்று மதியம் இயக்கப்படும் ஏ.சி. மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
பராமரிப்பு பணி காரணமாக கடற்கரை - செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.45 மணிக்கு செல்லும் ஏ.சி. பெட்டி கொண்ட மின்சார ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.






