என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "train service"

    • உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்
    • குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

    பராமரிப்பு காரணமாக சென்னை எழும்பூருக்கு கீழ்கண்ட ரெயில்கள் செல்லாது என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    1. உழவன் எக்ஸ்பிரஸ் நவம்பர் 10 முதல் 29 வரை தஞ்சாவூர் தாம்பரம் இடையே இயக்கப்படும்

    2. கொல்லம் - சென்னை அனந்தபுரி அதிவிரைவு ரெயிலும் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    3. ராமேஸ்வரம் - சென்னை சேது அதிவிரைவு ரெயிலும் இயக்கப்படும்10 முதல் 29 வரை தாம்பரம் மட்டுமே இயக்கப்படும்.

    4. ராமேஸ்வரத்தில் இரவு 8.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.35 மணிக்கு வரும்

    5. ராமேஸ்வரம் - சென்னை விரைவு ரெயில் நவம்பர் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

    6. ராமேஸ்வரத்தில் மாலை 17.50க்கு புறப்படும் ரெயில் தாம்பரத்திற்கு காலை 6.45 மணிக்கு வரும்

    7. மறு அறிவிப்பு வரும் வரை குருவாயூர் விரைவு ரெயில் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்

    8. சென்னை எழும்பூர் மும்பை சிஎஸ்எம்டி அதிவிரைவு ரெயில் எழும்பூருக்கு பதில் சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்

    • ஜோக்பானி வரை வாராந்திர ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது.
    • மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஜோக்பானிக்கு சென்றடையும்.

    ஈரோடு:

    குறைந்த கட்டணத்தில் நீண்ட தொலைவுக்கு குளிர்சாதன வசதி இல்லாத ரெயில் பெட்டிகளுடன் இயக்கப்படும் அம்ரீத் பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரெயில்வே வாரியத்தால் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக ஈரோட்டில் இருந்து பீகார் மாநிலம் ஜோக்பானி வரை வாராந்திர ரெயில் இயக்க தென்னக ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

    இதற்கான உத்தரவு கடந்த 4-ந்தேதி பிறப்பிக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை தோறும் ஈரோட்டில் இருந்தும், ஞாயிற்றுக்கிழமை தோறும் ஜோக்பானியில் இருந்தும் இந்த ரெயில் இயக்கப்பட உள்ளது.

    ஈரோடு- ஜோக்பானி இடையில் இயக்கப்படும் ரெயில் எண் (16601) வியாழக்கிழமைதோறும் ஈரோட்டில் இருந்து காலை 7 மணிக்கு கிளம்பி சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டை, கூடூர், விஜயவாடா, கம்மம், வாரங்கல் சென்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் வழியாக சனிக்கிழமை இரவு 7 மணியளவில் ஜோக்பானிக்கு சென்றடையும்.

    மறுமார்க்கத்தில் ஜோக்பானி- ஈரோடு இடையிலான ரெயில் எண் (16602) ஞாயிற்றுக்கிழமை மதியம் 3:15 மணிக்கு ஜோக்பானியில் இருந்து கிளம்பி புதன்கிழமை காலை 7:30 மணி அளவில் ஈரோடு வந்தடையும்.

    இரண்டாம் வகுப்பு பயணிகள் இருக்கை மற்றும் லக்கேஜ் கொண்டு செல்லும் வசதியுடன் 8 பெட்டிகளும், இரண்டாம் வகுப்பு பயணிகள் இருக்கையுடன் கூடிய 11 பெட்டிகள் உட்பட மொத்தம் 22 பெட்டிகள் இதில் இணைக்கப்பட்டிருக்கும்.

    மொத்தம் 3300 கி.மீ. பயணிக்கும் இந்த ரெயில் 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிறுத்தங்களில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வேயின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன.
    • தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரான நிலையில் நேற்று முதல் மெதுவாக ரெயில்கள் இயக்கப்பட்டன.

    சென்னை மணலியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் இருந்து (ஐ.ஓ.சி.) பெட்ரோல், டீசல் ஆகியவை சரக்கு ரெயில்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

    அதுபோல் 52 வேகன்களில் டீசல் நிரப்பிய சரக்கு ரெயில் ஒன்று நேற்றுமுன்தினம் அதிகாலை மணலியில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. அதிகாலை 5.30 மணியளவில் திருவள்ளூர் ரெயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில் வந்தபோது ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது டீசல் டேங்கரில் உராய்வு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. அடுத்தடுத்து 18 டேங்கர்களில் தீ பரவி கொழுந்து விட்டு எரிந்ததால் வானுயரத்திற்கு புகை மூட்டம் சூழ்ந்தது.

    இதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து வெளியூர் சென்று வரும் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.

    தீ விபத்து குறித்து அறிந்ததும் ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள் தீ அடுத்தடுத்த வேகன்களுக்கும் பரவி, மளமளவென பற்றி எரிந்தது. யாரும் அதன் அருகே செல்ல முடியாத அளவுக்கு தீ பயங்கரமாக எரிந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பகுதியில் மின்சார ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும், எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு 2 தண்டவாளங்களும் உள்ளன. முதலில் ஒரு தண்டவாளத்தை சரி செய்து மின்சார ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, சரக்கு ரெயில் விபத்துக்குள்ளான இடத்தில் தண்டவாளம் 3 மற்றும் 4 முழுவதும் சீரான நிலையில் நேற்று முதல் மெதுவாக ரெயில்கள் இயக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து, 46 மணி நேரம் நடைபெற்ற சீரமைப்பு பணிக்கு பிறகு ரெயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது. இதனால் அரக்கோணம் மார்க்கமாக ரெயில் போக்குவரத்து இயக்கப்படுகிறது. 

    • ரெயில் பயணிகள் இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை.
    • ‘ரெயில்ஒன்’ செயலி, பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே தீர்வாக இருக்கும்.

    தற்போது, ரெயில் சேவைகளை பெற வெவ்வேறு செல்போன் செயலிகள் இருக்கின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 'ரெயில் கனெக்ட்' என்ற செயலி உள்ளது.

    புறநகர் ரெயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற 'யு.டி.எஸ்.' செயலி உள்ளது. இதுதவிர, தனியார் துறை செயலிகளும் இயங்கி வருகின்றன.

    இதற்கிடையே, இந்திய ரெயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் 'ரெயில்ஒன்' என்ற செல்போன் செயலியை ரெயில்வே அமைச்சகம் உருவாக்கி வந்தது.

    இந்நிலையில், நேற்று அந்த செயலியை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். ரெயில்வே தகவல்சேவை மையத்தின் 40-ம் ஆண்டு விழாவில் அவர் அதை அறிமுகப்படுத்தினார்.

    எனவே, ரெயில் பயணிகள் இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை. இந்த செயலி, ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.

    இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    'ரெயில்ஒன்' செயலி, பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே தீர்வாக இருக்கும். இந்த செயலியில், முன்பதிவு ரெயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரெயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, பயண திட்டமிடல், ரெயில் உதவி சேவைகள், ரெயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.

    சரக்கு தொடர்பான விசாரணை வசதியும் அதில் இடம்பெற்றுள்ளது. டிக்கெட் முன்பதிவுக்கான பணத்தை போட்டு வைக்கும் 'ரெயில்வே இ-வாலெட்' வசதியும் உள்ளது.

    பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை அளிப்பதுதான் செயலியின் அடிப்படை நோக்கம். பயன்பாடு எளிதாக இருக்கும்.

    செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, ஏற்கனவே உள்ள 'ரெயில்கனெக்ட்' மற்றும் 'யு.டி.எஸ்.' செயலிகளின் பயனர் ஐ.டி. விவரங்களை பயன்படுத்தி, உள்ளே நுழையலாம். இதனால், எண்ணற்ற பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

    எண்களை கொண்ட 'எம்பின்' மற்றும் பயோமெட்ரிக் லாகின் வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

    முதல்முறையாக ரெயில்வே செயலியை பயன்படுத்துபவர்கள், குறைவான தகவல்களை அளித்து பதிவு செய்து கணக்கை உருவாக்கலாம்.

    விசாரணை மட்டும் மேற்கொள்ள விரும்புபவர்கள், தங்கள் செல்போன் எண் மற்றும் ஓ.டி.பி.யை பயன்படுத்தி, 'கெஸ்ட் லாகின்' வசதி மூலம் உள்ளே நுழையலாம்.

    'ரெயில்ஒன்' செயலி அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டிருப்பது மட்டுமின்றி, ஒவ்வொரு சேவைக்கும் இடையே ஒருங்கிணைந்த தொடர்பை கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டி சென்றார்.
    • ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் ஷங்கர்பள்ளி ரயில்வே கேட் அருகே ரெயில் தண்டவாளத்தில் காரை ஓட்டி சென்ற இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

    உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ரெயில் தண்டவாளத்தில் கார் ஒட்டியதை கண்ட ரெயில்வே அதிகாரிகள் அந்த காரை துரத்தி சென்றனர்.

    அதன் பின் ரயில்வே ஊழியர்கள், பொது மக்களுடன் இணைந்து காரை நிறுத்தி அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியே அழைத்து வந்தனர்.

    தண்டவாளத்தில் காட்டிய பெண் குடிபோதையில் உள்ளாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதனிடையே அவ்வழியே வந்து கொண்டிருந்த பெங்களூரில் இருந்து ஐதராபாத் நோக்கி வந்துகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலின் லோகோ பைலட்டை எச்சரிக்கை செய்து ரெயிலை ரெயில்வே அதிகாரிகள் நடு வழியிலேயே நிறுத்தினர். மேலும் இந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த 15 ரெயில்கள் திருப்பி விடப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
    • 15, 22 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.

    அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16127) நாளை (ஞாயிற்றுக்கிழமை), 15, 22 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் சேவையை தொடங்குவதற்காக தாம்பரம் பணிமனையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
    • சிறப்பு விருந்தினரின் தேதிக்காக ரெயில் தொடக்க விழா நிறுத்தி வைக்கப்பட்டது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை - தாம்பரம், கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

    ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்காக மின்சார ரெயில் தயாரிக்கப்பட்டு கடந்த மாதம் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்றபோது ஏ.சி. பகுதியில் அதிர்வு பிரச்சனை எழுந்தது. இதையடுத்து அது சரி செய்யப்பட்டது. தற்போது ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் சேவையை தொடங்குவதற்காக தாம்பரம் பணிமனையில் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைத்தபோது அதனுடன் சேர்த்து சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையையும் தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது தொடக்க விழா நடத்தப்படவில்லை.

    நேற்று முன்தினம் நாடு முழுவதும் ஏ.சி. வசதி கொண்ட 14 புதிய புறநகர் ரெயில் சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டன. ஆனால் அப்போதும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படவில்லை. சென்னையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்கும் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், "இந்தியா முழுவதும் உள்ள பல நகரங்களில் குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் ஏ.சி. வசதி கொண்ட மின்சார ரெயில் முதல் முறையாக இயக்கப்பட உள்ளது. தற்போது சிறப்பு விருந்தினரின் தேதிக்காக ரெயில் தொடக்க விழா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என கூறினர்.

    இந்நிலையில், நாளை முதல் தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன மின்சார ரயில் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. 12 பெட்டிகள் கொண்ட சென்னையின் முதல் குளிர்சாதன மின்சார புறநகர் ரயில் கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் விரைவில் இயக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் 29 கிமீ பயணத்திற்கு ரூ.95 ஆகவும், 9 கிமீக்கு ரூ.35 ஆகவும், 24 கிமீக்கு ரூ.70 ஆகவும், 34 கிமீக்கு ரூ.95 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • ரெயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
    • உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.

    துபாய்:

    இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் மக்கள் பெரும்பாலும் விமான போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு விமானத்தில் செல்ல குறைந்தது 4 மணி நேரம் ஆகும். இரு நாடுகளுக்கும் போக்குவரத்து சேவை இன்னும் அதிகமாகவே தேவைப்படுகிறது.

    இந்தநிலையில் தற்போது ஐக்கிய அரபு அமீரகம்-இந்தியா இடையே கடலுக்கு அடியில் ரெயில் சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக ஐக்கிய அரபு அமீரக தேசிய ஆலோசனை குழு புதிய திட்டம் ஒன்றை பரீசிலனையில் வைத்துள்ளது. அதன்படி துபாய் மற்றும் மும்பை இடையே கடலுக்கு அடியில் செல்லும் ரெயில் பாதையை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.


    இந்த ரெயில் பாதை உருவாக்கப்பட்டால் அதில் ஓடும் ரெயில் மணிக்கு 600 முதல் 1000 கி.மீ. வேகம் வரை இயங்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துபாயில் இருந்து 2 ஆயிரம் கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள மும்பைக்கு, விமானங்களும், கப்பல்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில், புதிதாக அதில் கடலுக்கு அடியில் ரெயில் போக்குவரத்தும் இணையவுள்ளது.

    இந்த ரெயில் சேவை தொடங்கப்பட்டால் துபாயில் இருந்து இந்தியாவின் மும்பைக்கு 2 மணி நேரத்தில் சென்றடைய முடியும்.

    இந்த பாதை கடலுக்கு அடியில் அமைக்க வேண்டியது இருப்பதால் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டிய தேவை இருக்கும். இதில் நிறைய சவால்களும் உள்ளன.

    ரெயில் வேகமாக பயணிக்கும் போது ரெயில் பாதையில் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்க வேண்டும். இந்த பாதையில் ரெயில் பயணிக்கும் போது கடலின் அடியில் உள்ள ரம்மியமான காட்சிகளை பயணிகள் பார்க்கும் வகையில் ரெயில்களை கண்ணாடி மூலம் கட்டமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த ரெயில்கள் பயணிகள் போக்குவரத்திற்கு மட்டுமின்றி இரு நாடுகளுக்கும் இடையேயான சரக்கு போக்குவரத்துக்கும் பயன்படும்.

    துபாய் மற்றும் இந்தியா இடையே விரைவாக சரக்கு போக்குவரத்தை கையாள முடியும். இது கச்சா எண்ணை உள்ளிட்ட முக்கியமான மூலப்பொருட்களை துபாயில் இருந்து இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ய புதிய மற்றும் குறைந்த செலவிலான வழியை ஏற்படுத்தும்.

    இந்த திட்டத்திற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு தேவைப்படும். இதை திட்ட ரீதியாக தயார் செய்துவிட்டார்கள்.

    இதற்கான ஒப்புதலும் நிதியும் ஒதுக்கப்பட்டு இந்தியா-துபாய் இடையே கடலுக்கு அடியில் போக்குவரத்து பாதை அமைக்கப்பட்டால் நிச்சயம் இது உலகின் மிகப்பெரிய சாதனையாக மாறும்.

    பின்னர் பல முக்கிய நகரங்களை இதேபோன்று இணைப்பதற்கான முயற்சிகளும் நடைபெறும். இந்த திட்டம் 2030-ம் ஆண்டுக்குள் பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
    • ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு மற்றும் சென்னை சென்ட்ரல் - ஆவடி - திருவள்ளூர் வழித்தடங்களில் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், கும்மிடிப்பூண்டி மார்க்கமாக புறப்படும் ரெயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஆனதால், பணி முடிந்து வீடுகளுக்கு செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    சிக்னல் கோளாறு காரணமாக இந்த ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இருப்பினும், ஆத்திரமடைந்த பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • லட்சக்கணக்கானோர் தங்கள் அன்றாட பணிகளுக்காக ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
    • திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் நடைபெறுகிறது.

    நெல்லை:

    தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக ரெயில் போக்குவரத்து உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் தங்களின் அன்றாட பணிகளுக்காக இந்த ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.

    உத்தியோகம், மருத்துவ சிகிச்சை, குடும்ப நிகழ்ச்சி உள்பட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் ரெயில்களில் பயணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், திருநெல்வேலில் இரண்டாம் ரெயில் வழித்தடத்தில் முழுமையான பாதை புதுப்பித்தல் பணிகள் காரணமாக பின்வரும் ரெயில்கள் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13 வரை என மொத்தம் 25 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.

    இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் மற்றும் திருச்செந்தூர்– திருநெல்வேலி இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயிலும் மார்ச் 20 முதல் ஏப்ரல் 13ம் தேதி வரை ரத்துசெய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது.

    • குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 18 நாட்கள் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும்.
    • மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும்.

    சென்னை:

    கொல்லம்-கோட்டயம்-ஈட்டுமண்ணூர், எர்ணாகுளம்-திருச்சூர் மார்க்கத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் காரணமாக ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதோடு மாற்று வழியிலும், தாமதமாகவும் இயக்கப்பட உள்ளன.

    சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 18 நாட்கள் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். திருவனந்தபுரம்-குருவாயூர் இடையே சேவை ரத்து செய்யப்படுகிறது.

    மறுமார்க்கத்தில் குருவாயூரில் இருந்து எழும்பூர் வரை இயக்கப்படும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் நவம்பர் 2-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும். குருவாயூர்-திருவனந்தபுரம் இடையே சேவை ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    • பயணிகள் ரயில் சேவை 2 நாள் ரத்து செய்யப்பட்டுள்ளது
    • பராமரிப்பு பணிகள்

    கரூர்:

    சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: கரூர்-திருச்சி ெரயில்வே வழித்தடத்தில் மாயனுார் பகுதியில் பராமரிப்பு பணிகள் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (செவ்வாய் கிழமை) நடைபெற உள்ளது. இதனால், கரூர்-திருச்சி பயணிகள் ெரயில் (எண்-06882) மதியம், 3:55 மணிக்கு கரூரில் இருந்து புறப்பட்டு, மாலை, 5:55 மணிக்கு திருச்சிக்கு செல்லும் ெரயில் சேவையும், திருச்சி-கரூர் பயணிகள் ெரயில் (எண்-06123) திருச்சியில் மாலை 6:20 மணிக்கு புறப்பட்டு, இரவு, 8:30 மணிக்கு கரூருக்கு வரும் ெரயில் சேவையும் மேற்கண்ட இரு தினங்களுக்கு ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    ×