search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறநகர் ரெயில் சேவை"

    • பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • ஆறு மணி நேரம் வரை ரெயில் சேவை ரத்து.

    சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி - கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    மூர்மார்க்கெட்டில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.05 மணி, 9.00 மணி, 9.30 மணி, 10.30 மணி மற்றும் 11.35 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து இதே தேதிகளில் காலை 9.55 மணி, 11.25 மணி, மதியம் 12.00 மணி, 1.00 மணி, 2.30 மணி மற்றும் மாலை 3.15 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.35 மணி, 10.15 மணி, மதியம் 12.10 மணி,1.05 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதே தேதியில் காலை 11.45 மணி, மதியம் 1.15 மணி, 3.10 மணி மற்றும் இரவு 9.00 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல் சென்னை கடற்கரையில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.40 மணி, மதியம் 12.40 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் மறுமார்க்கத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    சூலூர்பேட்டையில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதே தேதியில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை - கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி - சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.

    • தெற்கு ரெயில்வேயின் மின்சார ரெயில் சேவை நிறுத்தம்.
    • சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது.

    சென்னையில் நாளை மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுவதால் மெட்ரோ ரெயில்கள் கூடுதலாக இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    பராமரிப்பு பணிகள் காரணமாக தெற்கு ரெயில்வே சேவைகள் நாளை காலை 10.18 மணி முதல் மதியம் 14.45 மணி வரை மின்சார ரெயில் சேவை நிறுத்தப்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்படுவதை குறைக்கும் நோக்கில், சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கூடுதலாக இயக்கப்படுகிறது.

    நீட்டிக்கப்பட்ட சேவை விவரம்:

    நீல வழித்தடம்: விம்கோ நகர் பணிமனை - விமான நிலையம் மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - வண்ணாரப்பேட்டை மெட்ரோ வரை காலை 08.00 முதல் 11.00 முதல், மாலை 05.00 முதல் இரவு 08.00 மணி வரை 3 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

    பச்சை வழித்தடம்: அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ - புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 6 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் - பரங்கிமலை மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் ரெயில் இயக்கப்படுகிறது.

    புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி. ராமசந்திரன் சென்ட்ரல் நிலையம் - விமான நிலையம் (வழி- கோயம்பேடு) மெட்ரோ வரை காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை 12 நிமிடங்கள் இடைவெளியில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

    • ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.
    • இரவு நேரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ரத்து செய்யப்படும்.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் இன்று (ஜூலை 23) துவங்கி ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை பராமரிப்பு பணிகளுக்காக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை தினமும் சுமார் இரண்டு லட்சம் பயணிகள் ரெயில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதில் 55 ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு பயணிகளை அதிர்ச்சி அடைய செய்தது.

    இந்த நிலையில், இன்று முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை ரெயில் சேவைகள் ரத்து செய்யும் முடிவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக இன்று வழக்கம் போல் ரெயில் சேவைகள் இயங்கும்.

    எனினும், இரவு 10.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணி வரை மட்டும் புறநகர் ரெயில்கள் முன்பு அறிவித்தப்படி இயங்காது. வருகிற சனிக்கிழமை (ஜூலை 27) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 28) புறநகர் ரெயில் சேவைகள் காலை மற்றும் இரவு நேரங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ரத்து செய்யப்படும்.

    ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை புறநகர் ரெயில் சேவைகள் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏற்கனவே அறிவித்தது போல் ரத்து செய்யப்படும். 

    • சென்ட்ரல் - திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
    • கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையேயான மின்சார ரெயில் சேவை இன்று (ஆகஸ்ட் 30) மாலை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

    சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி பழுது காரணமாக மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

    கோளாறு ஏற்பட்டத்தை அடுத்து ரெயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, பாதிப்பை சரி செய்தனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் வரை ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது கோளாறு சரி செய்யப்பட்டு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    • பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
    • அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை.

    தாம்பரம் - கடற்கரை இடையே இன்று காலை 7 முதல் மாலை 4 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டதை அடுத்து, இந்த வழித்தடத்தில் கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்படுவதாக சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை மாநகர் போக்குரவத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (05.01.2025) தாம்பரம் ரெயில் நிலையத்தில் புதிய நடை மேம்பால பணிகள் நடைபெறுவதால் காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை கடற்கரை முதல் தாம்பரம் வரை இயக்கப்படும் ரெயில்கள் பல்லாவரம் வரையிலும், அதேபோல் செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரெயில்கள் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 வரை செங்கல்பட்டிலிருந்து கூடுவாஞ்சேரி வரையிலும் இயக்கப்படும் என்று தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    எனவே, இவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மாநகர போக்குவரத்து கழகம் 05.01.2025 அன்று ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு 10 பேருந்துகளையும், பல்லாவரம் பேருந்து நிலையத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 10 பேருந்துகளையும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து தி.நகர் மற்றும் பிராட்வேக்கு கூடுதலாக 20 பேருந்துகள் என மொத்தம் 40 பேருந்துகளை இயக்க உள்ளது.

    மேலும் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    • சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை புறநகர் ரெயில்கள் ரத்து.
    • சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு.

    சிக்னல் சீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி ரெயில்கள் நாளை காலை 9.50- மதியம் 3.50 மணி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    கணிசமான அளவில் சென்னை சென்ட்ரல்- பொன்னேரி வரை மட்டும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று புறநகர் ரெயில் சேவை ரத்து.
    • தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

    சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே புறநகர் மின்சார ரயில் சேவை வரும் 9ம் தேதி ஞாயிறன்று காலை 5.10 முதல் மாலை 4.10 வரை ரத்து செய்யப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் ரெயில்கள் தாம்பரம் வரை இயக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

    மேலும், பயணிகள் வசதிக்காக, தாம்பரம் - கோடம்பாக்கம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    ×