என் மலர்
நீங்கள் தேடியது "southern railways"
- செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
- பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அறிவிப்பை திரும்பப் பெற்றது.
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் புதிய நடைமேம்பாலம் அமைத்தல், அடிப்படை வசதிகள் மேம்படுத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால், செப். 11 முதல் தாம்பரத்தில் இருந்து ரெயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு தெற்கு ரெயில்வே அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றது.
இதனால், சென்னை எழும்பூர்-திருச்சி ராக்போர்ட், எழும்பூர்-மதுரை பாண்டியன், எழும்பூர் - திருச்சி சோழன் ஆகிய 3 விரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து வழக்கம் போல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
- சென்ட்ரல் - திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
- கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல் - ஆவடி இடையேயான மின்சார ரெயில் சேவை இன்று (ஆகஸ்ட் 30) மாலை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் இடையேயான மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது.
சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி பழுது காரணமாக மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
கோளாறு ஏற்பட்டத்தை அடுத்து ரெயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, பாதிப்பை சரி செய்தனர். இதன் காரணமாக சுமார் அரை மணி நேரம் வரை ரெயில்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது கோளாறு சரி செய்யப்பட்டு வழக்கம்போல் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் 2 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடற்கரை-தாம்பரம் இடையே நாளை பல ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி மின்சார ரெயில்கள் இன்றும், கடற்கரை-திருவள்ளூர் மதியம் 1.05 மணி, கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 1.50 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05 மணி ரெயில்கள் நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15 மணி ரெயில் கடற்கரை-திருவள்ளூர் இடையேயும், திருவள்ளூர்-வேளச்சேரி மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-வேளச்சேரி இடையேயும், வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 12.55 மணி ரெயில் கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் இடையேயும் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளூர்-கடற்கரை மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-கடற்கரை இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 12.10, 2.40 மணி ரெயில்கள் இன்றும், கடம்பத்தூர்-கடற்கரை மதியம் 12.05 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 12.10, 2.40 மணி ரெயில்கள் நாளையும் மூர்மார்க்கெட் மார்க்கமாக இயக்கப்படும்.
வேளச்சேரி-திருத்தணி காலை 11.20 மணி ரெயில் வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று மதியம் 12.15 மணிக்கும், வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 1.35 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், வேளச்சேரி-சூலூர்ப்பேட்டை மதியம் 1.55 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து 2.45 மணிக்கும் புறப்படும்.
கடற்கரை-திருத்தணி மதியம் 12.10 மணி ரெயில் கடற்கரைக்கு பதிலாக மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மதியம் 12.15 மணிக்கும், கடற்கரை-அரக்கோணம் மதியம் 2.25 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், கடற்கரை-சூலூர்ப்பேட்டை மதியம் 2.40 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கும் புறப்படும்.
ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 2.20 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் 2 நாட்களும் இயக்கப்படும்.
கடற்கரை-செங்கல்பட்டு பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கடற்கரை-தாம்பரம் காலை 9.12, 9.25, 9.42, 10, 10.20, 10.40, 10.45, 10.50, 11.10, 11.20, 11.40, 11.50, 12.10, 12.20, 12.40, 12.50 மணி ரெயில்கள், தாம்பரம்-கடற்கரை காலை 9.50, 10, 10.20, 10.40, 10.50, 11.10, 11.20, 11.50, 12, 12.30, 12.50, 1.15, 1.30, 2, 2.15 மணி ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
கடற்கரை-தாம்பரம் காலை 10.30, 11.30, 1 மணி, கடற்கரை- செங்கல்பட்டு காலை 9.35, 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45 மணி, கடற்கரை-திருமால்பூர் காலை 9.50, 1.30 மணி ரெயில்கள், திருமால்பூர்- கடற்கரை காலை 8, 10.25 மணி, செங்கல்பட்டு- கடற்கரை காலை 9.40, 10.50, 11.50, 12.15, 1 மணி, தாம்பரம்-கடற்கரை காலை 10.10, 11, 11.30, 12.10 மணி ரெயில்கள் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #ElectricTrains #SouthernRailways






